Friday, August 10, 2007

அணுசக்தி ஒப்பந்தம் - பின்னால் யாரோ யார் யாரோ?

முழு வீச்சாக இந்தியாவும் அமெரிக்காவும் 123 ஒப்பந்தம் எனும் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டாலும், இரு நாடுகளும் ஒன்றுக் கொன்று தங்கள் தரப்பு நியாயங்களை முன் நிறுத்தி தங்கள் நலனில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதில் கவனம் செலுத்தியதை பார்க்க முடிந்தது. இப்படிப்பட்ட முக்கியமான ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!



இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக இரு தரப்பிலும் இதற்கான முக்கிய பணியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று பார்ப்போமா?

இந்திய தரப்பு

எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்த ஒப்பந்தத்தில் முக்கியமான முடிவுகளை எடுத்தவர். வாஷிங்டனில் நடந்த நாரயணன்-ஹேட்லி சந்திப்பில் இந்திய தரப்பின் கவலைகளை அமெரிக்கா செவி கொடுக்கத் தொடங்கியது என்பதால், அதற்கான பெருமை எம்.கே.நாராயணனைச் சேரும்!

ரோனென் சென், அமெரிக்காவுக்கான இந்திய தூதர்

துதராக அனைத்து சந்திப்புகளையும் ஒருங்கிணைக்கும் முக்கியமான பொறுப்பை ஏற்றவர்.

ஷ்யாம் சரண், பிரதமரின் சிறப்பு தூதர்
கடைசி கட்டம் வரை, முக்கிய முடிவுகளுக்கு ஆலோசகராக செயல்பட்டார். NSG யின் உறுப்பினர் நாடுகளை சந்தித்து அவர்களுக்கு இந்திய தரப்பினை விளக்கியவர்.

அனில் ககோட்கர், அணுசக்தித் துறை தலைவர்

இவருடைய சம்மதம் இல்லாமல் எந்த அணுசக்தி ஒப்பந்தமும் நிறைவேறாது என்ற நிலையில், எப்போதுமே, இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தில் ஒரு சந்தேகக் கண்ணுடனே செயல்பட்டார். இதனாலேயே பல சந்தேகங்கள் எழுத்து பூர்வமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சிவ சங்கர் மேனன், வெளியுறவுத் துறை செயலர்

கடைசி நிலையில்தான் இவர் சேர்ந்து கொண்டார். அணுசக்தித் துறையில் பணிபுரிந்தவர் என்பதால், விஞ்ஞானிகளுக்கும் ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்படக் காரணமாய் இருந்தது. அணுசக்தி துறைத்தலைவர் அனில் ககோட்கருக்கு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் விரிவாக விளக்கினார்.

எஸ். ஜெய்சங்கர், தற்போது சிங்கபூருக்கான இந்திய தூதர்
ஒப்பந்தத்தின் எழுத்து பூர்வ வடிவத்திற்கு இவரும், இவருடைய அணியுமே பொறுப்பு. சின்ன சின்ன சந்தேகங்கள், சின்ன சின்ன நெருடல்களானாலும், அவற்றையெல்லாம் நேராக்கியவர். இவருடைய நேர்மையான அணுகுமுறைகள் அமெரிக்க தரப்பில் இவருக்கு பெரியதொரு நன்மதிப்பை ஏற்படுத்தியது.


அமெரிக்க தரப்பு

காண்டலீசா ரைஸ், Secretary of State

ரைஸ் அதிகமாக நேரடியான ஈடுபாட்டில் இறங்காவிட்டாலும், தனக்கு கீழுள்ளவர்கள் சரியாக பணிகளில் ஈடுபடுத்தி, ஒப்பந்தம் நிறைவேறும்படி பார்த்துக்கொண்டார்.

ஸ்டீபன் ஹேட்லீ, NSA
முக்கிய சந்திப்புகளுக்கு தலைமை தாங்கிய இவர், இந்தியாவின் கவலைகளை எடுத்துக்கொண்டு State Department க்கு எடுத்துச் செல்லும் கடினமான பணியை மேற்கொண்டார்.

நிக்கலோஸ் பர்ன்ஸ், Political Affairs, Department of State
ஒப்பந்தம் நிறைவேருவதில் தொய்வு ஏதும் ஏற்படாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டு அமெரிக்க தரப்பினையும் முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.

நிச்சர்ட் ஸ்டார்ட்போர்ட், அணுசக்தித் துறை, Department of State
இந்திய தரப்பில் இருந்து எந்தக் கேள்வி வந்தாலும், அதற்கான பதிலுடன் தயாராக இருந்தார். ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நடப்பும் பயனுள்ளதாக நிறைவேரும் படி பார்த்துக் கொண்டார்.

டேவிட் முல்போர்ட், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
தூதரக இரண்டு தரப்புக்கும் இடையே பாலமாக திகழ்ந்த இவர், தேவைப்பட்ட நேரத்தில் புஷ் மற்றும் மன்மோகன் சிங் இருவரையும் தொலைபேசியில் பேச வைத்து, ஒப்பந்தத்திற்கான அரசியல் தலையீடுகளை பார்த்துக் கொண்டார்.

ஆஷ்லி டெல்ஸ், Carnegie Endowment of International Peace
எஸ்.ஜெய்சங்கர் இவருடைய நிறுவனத்திற்கு வந்து, இந்தியாவின் தரப்பை விரிவுரையாய் கொடுத்த பின், அதன் சாரத்தை State Department க்கு எடுத்துச் சொன்னவர்.

ஜியோபெரி பயட், முன்னாள் அமெரிக்க தூதரக பணியாளர்
ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு இரண்டு நாள் முன் வரை, இந்திய தூதரகத்தில் செயல்பட்ட இவர், இந்திய தரப்பை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு வகித்தவர்.

12 comments:

  1. Anonymous9:43 AM

    no controversial points in this report???
    how can we read it when you don't blame india and its peoples' incompetence.....

    ReplyDelete
  2. :-D
    Are you blaming the bloggers who post only blaming posts just to get famous?
    Or
    Are you blaming the readers who get attracted only by blaming posts and thus read only those?
    :-D

    ReplyDelete
  3. நல்லப்பதிவு , ஆனால் இதன் சாதக ,பாதக அம்சங்களை சொல்லவே இல்லையே.
    கண்டிப்பாக இந்தியாவின் தன்னிச்சையான அணுசக்தி வளர்ச்சிக்கு ஒரு கடிவாளம் போட தான் அமெரிக்க இந்த ஒப்பந்தம் போடவே முன் வந்து இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. வாங்க வவ்வால்!
    சாதக பாதகங்களைப் பற்றி இன்னொரு பதிவு எழுதலாம். இந்த பதிவின் நோக்கம் - இந்த ஒப்பந்தம் நிறைவேற உழைத்தவர்களை பட்டியலிடுவதே!

    பல சமயம் இவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியாமல் போய்விடுகிறது!

    //கண்டிப்பாக இந்தியாவின் தன்னிச்சையான அணுசக்தி...//
    இந்தியாவின் தன்னிச்சையான வளர்ச்சி பெருமைப்பட வேண்டியதுதான் என்றாலும், அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம், அதற்கு இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்!

    ReplyDelete
  5. Anonymous12:45 PM

    i was mentioning people who selectively post things to degrade India and its acchievements.....

    ReplyDelete
  6. Anonymous12:49 PM

    in my opinion america wants India on its side in the coming years for its world dominance.... i think that is why now Russia started to protest everything... India again has to take a stance ...by having this economical pampering it will become difficult to stand against US....and NRIs in western countries can influence Indian stance too... India may become another Japan by becoming america's puppy.....

    ReplyDelete
  7. //i was mentioning people who selectively post things to degrade India and its achievements.....//

    In Tamilnadu, that has become a fancy thing for a group of fanatic people!
    It's a small number - and will die on its own!

    ReplyDelete
  8. //in my opinion america wants India on its side in the coming years for its world dominance.... i think that is why now Russia started to protest everything... India again has to take a stance ...by having this economical pampering it will become difficult to stand against US....and NRIs in western countries can influence Indian stance too... India may become another Japan by becoming america's puppy.....//

    India is growing No matter what...
    I am sure U.S is benefiting as much as India would!

    ReplyDelete
  9. காலத்தால் பரிட்சையிட வேண்டிய ஒப்பந்தமிது.துவக்கத்திலேயே அதிகமான ஓசைகள்.நாம் எதில் முரணற்று இருந்தோம்.தெரிந்தால் யாராவது பட்டியலிடுங்கள்.பொக்ரானை வரவேற்ற பெரும்பான்மையினையும் மீறி மாற்றுக் கருத்துக்கள் கூறி பரிசை தட்டிச் சென்றவர்களுண்டு.எத்தனை துறைகளின் பங்கீடு.இன்னும் அனுபவமான எதிர்கால தலைமுறைகள் நம்மிடம் நிறையவே தென்படுகிறது.துணிவு கொள்வோம்.

    ReplyDelete
  10. மாற்றுக் கருத்துக்கள் வெளிவர வேண்டியது அவசியமானதே. அப்போதுதான் முதலிலேயே ஓட்டைகளை அடைக்க முடியும். ஆனால் ஒன்றும் தெரியாத அரசியல்வாதிகள், அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பிரச்சனை செய்வதுதான் இடிக்கிறது.

    நட்டு, நீங்கள் சொன்னது போல் காலம் தான் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  11. Anonymous4:57 PM

    இதுபோன்ற ஒப்பந்தங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு விளக்கப்படுதலும் விவாதிக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுவதுமே முக்கியம்.

    இல்லாவிட்டால் ...

    "நீங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டால் எனக்கு கவலையில்லை" என்று பிரதமரே கூறுகையில் 'தம் அரசுக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவே பறிபோனாலும் பரவாயில்லை, அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே முக்கியம், அதில் இனி எந்த பரிசீலனைக்கும் இடமில்லை' என்று அவ்வளவு உறுதியாய் இருக்கவேண்டிய அவசியம் என்ன, யாருக்கு, யார் யாருக்கு என்று சந்தேகம்தான் வரும்.

    'அணுவெடிப்பு சோதனை நம் தனியுரிமை, அதை விட்டுக்கொடுக்கமாட்டோம்' என்று ஜல்லியடித்திருந்தார் பிரதமர். இன்று, 'அணுவெடிப்பு சோதனை மேற்கொண்டால், உடனடியாக ஒப்பந்தம் ரத்தாகி, தொழில்நுட்பம் ஆகியவை திரும்ப பெறப்படும்' என்று தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்திருக்கிறது அமெரிக்கா.

    இதில் யாரை நம்புவது ? எதற்காக நாம் நமது உரிமையை இப்படி அடமானம் வைக்க வேண்டும் ?

    மிக பிரம்மாண்ட நடுத்தரவர்க்க இந்திய சந்தை அமெரிக்காவிற்கு தேவையாயிருக்கும்போது நாம் ஏன் உறுதியாய் ஒற்றைக்காலில் நின்று நமக்கு எல்லாவகையிலும் சாதகமாய் இந்த ஒப்பந்தத்தை மாற்றியிருக்க முடியாது ?

    இன்னும் எத்தனை காலம் 'உட்கார்' என்றால் மல்லாந்து படுத்து நாலு காலையும் உயர்த்தி காட்டிக்கொண்டே இருக்கப்போகிறோம் ?

    அயர்வும் ஆதங்கமுமாய்
    முத்துக்குமார்.

    ReplyDelete
  12. "நீங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டால் எனக்கு கவலையில்லை" என்று பிரதமர் முன்னால் சொன்னாலும், பின்னால், இடது சாரி கட்சிகளை கலந்து பேசுகிறேன் என்கிறார். அரசியல்வாதிகள் எப்போதுமே முன்னுக்கு பின் முரண் தான் போலும் :-(

    உறுதியாய் இருப்பதில் தவறில்லை, அதே சமயம் திட்டத்தில் பாதங்கள் ஏதும் இல்லை என்பதை விளக்கும் கட்டாயம் பிரதமருக்கும், அரசுக்கும் இருக்கிறது.

    நீங்கள் சொல்லுவதுபோல், எல்லாவிதத்திலேயும் நமக்கு சாதகமாய் ஒப்பந்ததை மாற்றிக்கொள்ள வேண்டும். அது நமது உரிமை!

    ReplyDelete