Sunday, October 16, 2016

ஆனந்தபைரவியில் மூன்றாவது ஆனந்தம்

இரண்டு ரொம்பவே குறைச்சல் என்றபின் மூன்றாவதற்கு முனையாமல் இருக்க முடியாதல்லவா!

ஆனந்த பைரவி இராகத்தில் தொடர்ந்து மூன்றாவது கிருதி - கமலாம்பாள் அன்னையே - என்னைக் காத்து அருள்வாய்.

இப்பாடல் முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்டது. கமலாம்பாள் நவ-ஆவரணக் கிருதிகளில் முதலாவது கிருதி. இந்தத் தொகுப்பில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலிலும் ஒரு ஸ்ரீசக்ர ஆவரணம் என ஒன்பது ஆவரணங்களையும் பாடுவதாக அமைத்துள்ளார்.



பல்லவி
கமலாம்பா3 ஸம்ரக்ஷது மாம்
ஹ்ருத்கமலா நக3ர நிவாஸினீ அம்பா31

அனுபல்லவி
ஸுமனஸாராதி4தாப்3ஜ முகீ2
ஸுந்த3ர மன:ப்ரியகர ஸகீ2
கமலஜானந்த3 போ3த4 ஸுகீ2
காந்தா தார2 பஞ்ஜர ஶுகீ

சரணம்
த்ரிபுராதி3 சக்ரேஶ்வரீ அணிமாதி3 ஸித்3தீ4ஶ்வரீ
நித்ய காமேஶ்வரீ
க்ஷிதி புர த்ரை-லோக்ய மோஹன சக்ரவர்தினீ
ப்ரகட யோகி3னீ
ஸுர ரிபு மஹிஷாஸுராதி3 மர்தி3னீ
நிக3ம புராணாதி3 ஸம்வேதி3னீ

த்ரிபுரேஶீ கு3ரு கு3ஹ ஜனனீ
த்ரிபுர ப4ஞ்ஜன ரஞ்ஜனீ
மது4 ரிபு ஸஹோத3ரீ தலோத3ரீ
த்ரிபுர ஸுந்த3ரீ மஹேஶ்வரீ

பாடல் வரிகளுக்கு உதவி சாகித்யம்.நெட்




ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு முறையினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஸ்ரீசக்ரத்தின் முதலாவது ஆவரணமாகிய  த்ரை லோக்ய மோஹன சக்ரம் பாடற்பெருவதைப் பார்க்கலாம். இந்த சக்ரத்தின் தேவதை பூபுரம் எனப்படும். மேலும் விவரங்களுக்கு இத்தளத்தில் பார்க்கலாம்.

இந்த கிருதியை இரஞ்ஜனி-காயத்ரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்: