Monday, September 07, 2015

ஒரு காலைத் தூக்கியது ஏன்?

இயற்றியவர்: மாரிமுத்தாப்பிள்ளை
இராகம் : தோடி / விளரிப்பாலை
தாளம் : ஆதி


பல்லவி:
எந்நேரமும் ஒரு காலைத் தூக்கிக்
கொண்டிருக்கின்ற வகை ஏதையா?

அனுபல்லவி:
பொன்னாடர் போற்றும் தில்லை
.....நன்னாடர் ஏத்தும் தில்லை
பொன்னம்பல வாணரே
.....இன்னும் தானும் ஊன்றாமல்
(எந்நேரமும் ஒரு...)

சரணம்:
எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ?
....எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ?

சிக்கனவே பிடித்து சந்திரனை நிலத்தில் தேய்த்த போதிலுரைந்தோ?
....உக்கிர சாமுண்டியுடன் வாதுக்காடியசைந்தோ?

உண்ட நஞ்சு உடம்பெங்கும்
.....ஊறிக் கால் வழி வந்தோ

தக்க புலி பாம்பிரு வாக்கும் கூத்தாடியாடி
....சலித்துத்தானோ பொற்பாதம் வலித்துத்தானோ தேவரீர்
(எந்நேரமும் ஒரு...)