Monday, May 30, 2005

இழைக் கொள்கை - ஒரு முன்னோட்டம்

நமது அண்டத்தையும் அதன் ஆக்கங்களின் விதிகளைப்பற்றியும்் அலசும் அறிவியலின் பிரிவு கணித இயற்பியல் (இயல்பியல்?)்பியல்(தியரடிகல் ஃபிசிக்ஸ்)். ஆப்பிள் பழத்தைக் கொண்டு சோதனை செயத ஐசக் நீயூட்டனும், தொலைநோக்கி கொண்டு கோள்களைப் பார்த்தறிந்த கலிலீயோவும், பட்டம் விட்டு மின்விசைதனை தொட்டுப்பார்த்த பென்ஜாமின் ஃபிராங்க்ளினும், அணுவிசையாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ் கணித இயல்பியலாளர்களும் கூட, சோதனை அறிவியலாளர்கள் மட்டுமல்ல, கணித அறிவியலாளரும் கூட.

கணிதமும்் இயல்பியலும்்பியலும் எப்போதும் கைகோர்த்துக் கொண்டே நடந்து வந்துள்ளது. இயல்பியலில்்பியலின் பல்வேறு சோதனைகளின் நிரூபணத்திற்கு கணிதம் பேருதவி புரிந்த்துள்ளது. நேரடியாக சோதனை செய்து பார்க்க இயலாத பல கோட்பாடுகளை கணித சமன்பாடுகள் மூலமாக சரிபார்த்துக் கொண்டனர்.

பதினெட்டு மற்றும் பத்தின்பதாம் நூற்றாண்டுகளில் நியூட்டனின் புவியீர்ப்பு விசைக் கோட்பாடிற்கான கேல்குலஸ் கணக்குகள், அதையும் தாண்டி, மின்காந்த விசை சம்ந்தப்பட்ட கணக்குகளுக்காக பயன்படுத்திக் கொண்டனர். பின்னர் 'எலக்ட்ரான்' கண்டு பிடிக்கப் பட்டது. அதன் விளைவால் குவாண்டம் இயல்பியல் வளரத் தொடங்கியது. பின் நாட்களில் ஐன்ஸ்டைனின் Special thoery of Relativity (விசேஷ சார்நிலைக் கொள்கை) -க்குப் பின்னர், குவாண்டம் கணிதமும் அதனுடன் சேர்ந்து relativistic குவாண்டம் கொள்கைகள் உருவாகின.

கடைசியாக் சொன்ன relativistic குவாண்டம் கொள்கையில் விசேஷம் என்னவென்றால், இருபதாம் நூற்றாண்டின் நுண் அணுப் பொருட்களின்் (எலக்ட்ரான், புரொட்டான்) ஆய்விற்கு அவற்றின் கொள்கைளே அடித்தளம். மேலும் ஐன்ஸ்டைன் வேறொரு காரியமும் செய்தார். தன்னுடைய விசேஷ சார்நிலைக் கொள்கையைக் கொண்டு நியூட்டனின் புவி ஈர்ப்பு விசையையும் விளக்கினார். இதனல் Differential Geometry என்னும் கணிதப் பிரிவும் இயற்பியலுக்கு வந்து சேர்ந்தது. 'கேல்குலஸ் தொடங்கி Differential Geometry வரை எல்லாவற்றையும் பாத்துட்டேம்பா' என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறது புவி ஈர்ப்பு விசை.

எல்லாம் சரியென்று எண்ணியிருந்த சமயம், சார்நிலைக் கொள்கைகளுக்கு வந்ததோர் சோதனை. அண்ட வெளி ஏன் நீண்டு கோண்டே போகிறது? என்ற கேள்விக்கும் அண்ட வெளியில் இருக்கும் கருப்பு ஓட்டைகளுக்கும்(Black Holes) சார்நிலைக் கொள்கை தந்த பதில்கள் பொதுவாக ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது.

ஏனெப்படி?

ஏனென்றால், சார்நிலைக் கொள்கையானது, பூமியில் பொதுவாக புவி ஈர்ப்பு விசை குறைவாக உள்ளதால், இங்கு்கு நடத்தப்படும் சோதனைகளில் சரியான முடிவுகளைத் தருகிறது. புவி ஈர்ப்பு விசையினால் நுண் அணுப்பொருள்களில் மாறுதல் ஏதும் இல்லை என்று எடுத்துக் கொண்டால் மட்டுமே சார்நிலைக் கொள்கை செல்லுபடி ஆகிறது. இதென்னடா சிரமம் என்று இயல்பியலாளர் எண்ணியிருந்த சமயம் புதிதாக இன்னொரு கொள்க சமீப காலமாக உருவாகத் தொடங்கியுள்ளது. அதுதான் String Thoery. 'இழைக் கொள்கை' எனலாமா? (திருங்குக் கொள்கை?) சார்நிலைக் கொள்கை உள்ள ஓட்டையை நிறை செய்து விடும் இந்தக் கொள்கை என்கிறார்கள் அறிவியலார்.

Sunday, May 29, 2005

சரளி வரிசைகள்

ராகம்: மாயமாளவ கெளளா
தாளம்: ஆதி

புதிதாக சங்கீதம் கற்றுக்கொள்பவர்களுக்கான பால பாடத்தில் முதல் பாடமே சரளிவரிசைகள். பொதுவாக இவை 'மாயமாளகௌளா' ராகத்தில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இவற்றில் 'ஸ', 'ப', 'ஸ்' ஆகிய ஸ்வரங்கள் நிலையான ஸ்வரஸ்தானங்களாதனால், முதலில் அவற்றின் நிலையான ஸ்தானத்தைக்கொற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், 'மாயமாளகௌளா' ராகத்தில் மற்ற ஸ்வரங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஸரளிவரிசைகளில் முதல் வரிசையில் எல்லா ஸ்வரங்களையும், ஏறுமுகத்திலேயும், இறங்குமுகத்திலேயும் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் வரும் வரிசைகள், அவற்றின் அவற்றின் வெவ்வேறு மாற்றங்களிலும் அமைந்துள்ளது.
மொத்தம் 14 வரிசைகள். இவற்றில் முதல் 7 வரிசைகளில், எளிதாக இருக்கும், எனெனில், அவற்றில் ஏற்றமும் இறக்கமும் சீராக இருக்கும்.
அடுத்த 7 வரிசைகளில், ஏற்றமும் இறக்கமும் கலந்து வரும்.
இவ்வாறு அமைத்திருப்பதால், ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்திற்கு ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ, ஸ்வரங்களில் சரியான ஸ்தானத்தை அடைய கற்றுக்கொள்ள முடியும்.

1.
ஸ ரி க ம | ப த நி ஸ் || ஸ் நி த ப |மக ரி ஸ ||
ஸ ரி க ம | ப த நி ஸ் || ஸ் நி த ப |மக ரி ஸ ||

2.
ஸ ரி ஸ ரி | ஸ ரி க ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி ஸ் நி | ஸ் நி த ப || ஸ் நி த ப| ம க ரி ஸ ||

3.
ஸ ரி க ஸ | ரி க ஸ ரி ||ஸ ரி க ம | ப த நி ஸ்||
ஸ் நி த ஸ் | நி த ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ||

4.
ஸ ரி க ம | ஸ ரி க ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப |ஸ் நி த ப || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

5.
ஸ ரி க ம | ப அ ஸ ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம அ ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

6.
ஸ ரி க ம | ப த ஸ ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம க ஸ் நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

7.
ஸ ரி க ம | ப த நி இ | ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம க ரி இ | ஸ் நி த ப | ம க ரி ஸ ||

8.
ஸ ரி க ம | ப ம க ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம ப த நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

9.
ஸ ரி க ம | ப ம த ப || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ஸ் நி த ப | ம ப க ம || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

10.
ஸ ரி க ம | ப அ க ம || ப அ அ அ | ப அ அ அ||
க ம ப த | நி த ப ம || க ம ப க | ம க ரி ஸ ||

11.
ஸ் அ நி த | நி இ த ப || த அ ப ம | ப அ ப அ||
க ம ப த | நி த ப ம || க ம ப க | ம க ரி ஸ ||

12.
ஸ் ஸ் நி த | நி நி த ப || த த ப ம | ப அ ப அ||
க ம ப த | நி த ப ம || க ம ப க | ம க ரி ஸ ||

13.
ஸ ரி க ரி | க அ க ம || ப ம ப அ | த ப த அ ||
ம ப த ப | த நி த ப || ம ப த ப | ம க ரி ஸ ||

14.
ஸ ரி க ம | ப அ ப அ || த த ப அ || ம ம ப அ ||
த நி ஸ் அ| ஸ் நி த ப || ஸ் நி த ப || ம க ரி ஸ ||

இந்த பாடங்களின் ஒலிப் பதிவுகளை இந்த தளங்களில் கேட்கலாம்:

ராணி ராயல் கார்பெட்
சிவ்குமார் கல்யாணராமன்

மேலும் கூடுதல் சரளி ஸ்வர வரிசைகள்
இவற்றை மேலே உள்ள ஏழாவது வரிசைக்கு அப்புறம் சேர்த்துக்கொள்ளலாம்.
1.
ரி ஸ க ரி | ம க ப ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
நி ஸ் த நி | ப த ம ப || ஸ் நி த ப | ம க ரி ஸ ||
2.
க ரி ஸ ம | க ரி ப ம || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
த நி ஸ் ப | த நி ம ப || ஸ் நி த ப | ம க ரி ஸ ||
3.
ம க ரி ஸ | ப ம க ரி || ஸ ரி க ம | ப த நி ஸ் ||
ப த நி ஸ் | ம ப த நி || ஸ் நி த ப | ம க ரி ஸ ||

Monday, May 23, 2005

வித்யாசமான ஓவியம்

ஒவியர்களின் தளத்தை பார்த்துக்கொண்டு இருந்தபோது இந்த வித்யாசமான படம் அகப்பட்டது. இதிலென்ன வித்யாசம் என்றால், ஓவியர் இதை Microsoft Paint கொண்டு வரைந்தாரம்! (நாம் எல்லோருமே முயற்சித்து இருப்போம் என்று நினைக்கிறேன்!)....ஆனால் அவர் வரைந்த்தோ....வெனிஸ் நகர அழகு என நினைக்கிறேன்...! கிட்டத்தட்ட 500 மணி நேரமானதாம் இதை வரைந்து முடிக்க...
டீவியன் ஆர்ட் என்ற மன்ற தளத்தில் கண்டெடுத்தது:


Painted with MS Paint? Posted by Hello

Sunday, May 22, 2005

இளைஞர் கீதம்

இளைய உள்ளங்களின் எழுச்சி கீதம் - டாக்டர் அப்துல் கலாம்
-------------------------------------------------------------------------------

President Dr. Kalam Posted by Hello

வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
(வளமான நாடாக்குவோம்...)

அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியம் தன்னில் சிந்தனைகள்
வீணாவதை மாபெரும் குற்றமென்போம்
(வளமான நாடாக்குவோம்...)

பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் பல நூறாகிலும் இந்த
லட்சியச் சுடரினை பரப்பிடுவோம்

வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே.

வடவரையை மத்தாக்கி - சிலப்பதிகாரப்பாடல்

இந்த சிலப்பதிகாரப் பாடல் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் பாடப்பெற்று பிரபலமடைந்த பாடல். 1966 இல் ஐ.நா சபையில் நடந்த எம்.எஸ் கச்சேரியில் இந்த பாடல் இடம் பெற்றது. பாடல் வரிகளும் பொருளும்:
1.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
வடமலையாம் மேருவை மத்தாக்கி,
வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு
அன்று கடலை கடைந்தவன், இன்று யசோதையின் சிறு கயிற்றால்
கட்டப்பட்டுக் கிடக்கிறாயே, என்ன விந்தை!

2.
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
அமரரும் உன்னை தொழுது பசி போக்கிக் கொள்ள,
நீயோ வெண்ணைதனை களவு செய்து உண்டாயே!.
அவ்வாறு உண்ட வாய்தனில் வெண்ணை,
கரும் துளசியாய் மாறியதென்ன மாயமோ?

3.
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
அமரர் தொழும் திருமால் உன் செங்கமல பாதத்தின்
இரண்டடியால் இருள் முடிய இப்பூவுலகை அளந்தாயே!
அதே பூவுலகில் பாண்டவர்க்கு, மடல் கொடுக்கும்
தூதனாகவும் இருந்தது விந்தைதானே!

4.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே

பொருள்:
மூவுலகை இரண்டடியால் நடந்தது குறைவென்று,
நிறை செய்ய, தம்பியோடு வனம் வழி நடந்தாயே!
உன் சேவகன் அனுமன் சீர் கேளாத செவியும் செவியோ?
திருமால் உன் சீர் கேளாத செவியும் செவியோ?

5.
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே

பொருள்:
பெரியவன் பலராமன், மாயவன் கண்ணன் இருவரையும்
உலகம் முழுதும் பார்க்க, திருமால் உன் திருவடியும்,
கையும், திருவாயும் வேலை செய்ய,
கரியவன் கண்ணனைக் காணாத கண்ணும் கண்ணோ?
மெய்மறந்து காணாத கண்ணும் கண்ணோ?


பாடலை இங்கே கேட்கலாம்:

Friday, May 20, 2005

நுண்பொருள் திரைப்படவியல்

அறிவியலில் வேகமான வளர்சியில் பல மைல்கற்களை கடந்து வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். ஆனாலும், மனித இனத்தால் கற்பனையில்கூட எட்ட இயலா உயரத்தில் இயற்கை வளர்ந்து இருக்க, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று தினம்தினம் வியந்து கொண்டே இருக்கிறான் மனிதன். (நம்மூர்காரர்கள் வெட்டி மேடைப்பேச்சில் காலவிரயம் செய்வது வேறு விஷயம்). வெற்று சூனியமாகத் தெரியும் அண்ட வெளிகளை ஆராய்வது மட்டுமில்லாமல், தன் சொந்த பூமியையும், அதிலுள்ள எண்ணற்ற உயிர் வகைகளையும் மனிதனின் வியப்பு ஆராயச்செய்துள்ளது. உயிர் வகைகளில் முதல் முதலாக தோன்றியிருக்க வேண்டிய நுண் உயிர்களை ஆராய்வதில் மேலும் ஒரு விஞ்ஞான முன்னேற்றம் - நுண்பொருள் திரைப்படவியல்.

நுண்பொருள் திரைப்படவியல் - MicroCinematography - என்பது நுண்ணிய பொருட்களை படம்பிடிப்பதாகும். இந்த துறையின் பயன்பாடுகள்:
* ஆராய்சிகளில் நுண்நோக்கியுடன் இணைக்கப்பட்டு நுண்ணுயிர்களை படம்பிடித்தல்
* மருத்துவத்துறை - உடல் உருப்புகள், கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி போன்றவற்றை முப்பரிமாண படம் பிடித்தல்
* திரைப்படத்துறையில் சிறப்புக் காட்சிகளில் வியத்தகு special effects காட்சிகளை உருவாக்குதல்

நுண் உயிர் ஆராய்ச்சி:
அமீபாவையும், செல்களையும் எத்தனை நாள்தான் பாடப்புத்தகங்களிலேயே கருப்பு வெள்ளை படங்களிலேயே பார்த்துக்கொண்டு இருப்பது?
அதற்கு அடுத்த கட்டமாய் நுண்நோக்கிகளில் பார்த்து வந்தோம். எனினும் இதுவும் இரண்டு பரிமாண தோற்றமே. இதற்கு அடுத்த நிலையாக இதே நுண்நோக்கிகளில் மிக நுண்ணிய CCD கேமராக்களைப் பொருத்தி நுண் உயிர்களின் அசைவுகளைப் படம் பிடிக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படமாக பிடிப்பதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. பல்வேறு நோக்குகளில் படம் பிடித்து அவற்றை முப்பரிமாணப் படமாக உருவகம் செய்யலாம். மென்பொருள் கொண்டு தானியங்கி ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இன்னமும் மேலும் பல ஆய்வுகள் டிஜிடல் படமாக மாற்றியபின் சாத்தியமாகின்றன.
நகரா படங்களை மட்டுமே பார்த்து வந்த நிபுணர்களும் இப்போது இந்த நேர இடைவெளையை குறுக்கி, செல்களை நம் பார்வையில் 'நகர' வைத்த படங்களைப் பார்த்து வியக்கிறார்கள். செல்களும், ஏனைய நுண் உயிர்களும் இத்தனை வேலைகளை செய்கின்றனவா என்று, புதியதொரு புரிந்துகொள்ளுதலை உருவாக்கியுள்ளன இந்த படங்கள்.

இருபதாம் நூற்றாண்டில் நுண்பொருள் திரைப்படவியல் வளர்சிகளைச் சித்தரிக்கும் குறும்படம் பார்க்கலாமா? சுட்டுங்கள் இங்கே. (QuickTime Player தேவை)

செல்கள் எவ்வாறு தோன்றுகின்றன, மறைகின்றன, எவ்வாறு ஒன்றுக்கொண்று பேசிக்கொள்கின்றன போன்ற பல விஷயங்களை நிபுணர்களும், ஆர்வலர்களும் விளக்கப்படங்களாக செய்து இந்த இணையதளத்தில் வெளிக்கொணர்ந்துள்ளனர். நீங்களும் பார்த்து, கேட்டு பயனடையாலாமே!

மருத்துவத்துறை:
நுண்பொருள் திரைப்படவியலின் உதவியால், இப்போது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை முப்பரிமாணத்தில் கண்காணிக்க முடியும். இரு பரிணாமத்தில் ஸ்கேனர் கொண்டு ஒருசில நோக்குகளில் மட்டுமே கண்காணிக்க முடியும் என்ற நிலைமாறி, இப்போது எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் கருவில் வளரும் குழந்தையின் முப்பரிமாண தோற்றத்தை அச்சில் வார்க்கமுடியும் என்பது பெரியதொரு முன்னேற்றமாகும்.
மேலும் லேசர் அறுவை சிகிச்சை போன்ற அதி நுண்ணிய சிகிச்சைகளுக்கு நேரடியாக நுண்ணிய பகுதிகளை திரையில் பார்த்தவாறு நிபுணர்கள் அறுவை சிகிச்சையில் ஈடுபட பேருதவியாய் இருக்கிறது இந்த நுட்பம்.

திரைப்படத்துறை:
அறிவியல் வளர்சிக்கு மட்டுமல்ல, பொழுதுபோக்கிற்கும் பயன்படுகிறது இந்த துறை. மென்பொருளால் உருவாக்கப்படும் மாயத்தோற்றங்களை நிஜமான உருவங்கள் போல பெரிய திரையில் தோற்றமளிக்கச் செய்யும் சாகசமெல்லாம் நுண்பொருள் திரைப்படவியல் கொண்டு சாத்தியமாகிறது.

Saturday, May 14, 2005

ஏழே கணக்கா, இன்னும் இருக்கா?

அழகன் படத்தில் மரகதமணி இசையில் இந்த பாடலை கேட்டிருப்பீர்கள்:
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்...

சங்கீதம் என்பது பிறந்த குழந்தைகூட எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய இனிய மொழி. அந்த மொழியின் எழுத்துக்கள்தான் ஸ்வரங்கள். ஸ்வரங்கள்முத்துக்கள் என்றால் விதவிதமாய் கோர்க்கப்பட்ட முத்து மாலையே இசை. இசையில் மயங்காத மனிதனே இல்லை. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வழக்கங்களால் பல்வேறு விதமாக சங்கீதம் இசைக்கப் படுகிறது. என்றாலும் அனைத்து இசைக்கும் மூலம் ஒன்றுதான். ஸ்வரங்கள் எல்லா வகை இசைக்கும் அடிப்படை. ஸ்வரங்களோடு சேர்த்து தாளமும் சங்கீதத்தின் ஜீவநாடி. இந்தப்பதிவில் ஸ்வரங்களைப் பற்றி பார்ப்போம்.

சகலமும் தருபவள் சங்கீத தெய்வம்
ஸரிகமபதநி அவள் உருவம் - உலகில்...(சகலமும்...)

ஆம், ஸ ரி க ம ப த நி .... என்ற ஏழு ஸ்வரங்கள் தான் அவை.

அதென்னது ஸ்வரம்?
ஒலி...சப்தம்...அ.....ஆ....இ....ஈ....இப்படி எதுவேண்டுமென்றாலும் இருக்கட்டும்...
ஒரு குறிப்பிட்ட அலைஎண்ணில் (frequency) ஒலி எழுப்பினால் அதுதாங்க ஸ்வரம்.
அதுசரி, என்ன அலை எண்ணில் ஒலி எழுப்புகிறோம் என்றெப்படி கண்டுகொள்வது?
மேற்கத்திய நாடுகளில் அலைஎண் அளக்கும் கருவியொன்று இசைக்கருவிகளை மீட்டிட பயன்படுத்தப் படுகிறது என்றாலும், ஒவ்வொரு ஸ்வரத்தையும் அளவெடுத்துக்கொண்டு இருக்க முடியாது. ஆதாலால், இசை கற்றுக்கொள்பவர் தன் காதுகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எழுப்பும் ஒலி எந்த அலைஎண்ணில் வருகிறது என்பதை கணிக்க. இசைக்கருவிகளுக்கும் இது பொருந்தும். உதட்டை மூடிக்கொண்டு 'ம்ம்ம்ம்....' என்று சொல்லுங்கள். சற்றேறக்குறைய அதுதான் உங்களுடய 'ஸ'. 'ம்ம்ம்...' சொல்லிவிட்டு அதே தொனியில் வாயைத்திறந்து 'ஸ..அ..அ....' என்றீர்கள் ஆனால் இன்னமும் சரியான 'ஸ'. ஸ,ரி,க,...ஆகிய ஸ்வரங்கள் ஏறுமுகமான அதிர்வெண்ணில் இருப்பதால், அதிர்வெண்களைக் கூட்டிக்கொண்டே போனால், ஒவ்வொரு ஸ்வரத்தையும் சரியாக பிரயோகிக்க முடியும். இசை ஆசிரியரோ அல்லது சங்கீத ஞானம் உள்ள மற்றொருவரோ நீங்கள் சரியான ஸ்வர ஸ்தானத்தில் ஸ்வரத்தை ப்ரோயோகிக்கிறீர்களா என்று சொல்ல முடியும். அவ்வாறு அவர்களின் உதவியுடன் ஸ்வரங்களின் சரியான ஸ்வர ஸ்தானத்தை கற்றுக் கொள்ளலாம்.
போதுமான பயிற்சியுடன் கற்றதை பழகிக்கொள்ள வேண்டும். சங்கீத ஞானத்திற்கு நிறைய பயிற்சிகள் தேவை. நன்று தேர்ந்த சங்கீத வித்வானுக்கும் மற்றவர்களுக்கும் முக்கியமான வேறுபாடு மற்றவர்களிடம் பயிற்சி இன்மைதான்.

நமது இந்திய சங்கீதத்தில் மட்டுமல்லாமல் அனைத்து சங்கீதங்களுக்கும் ஸ்வரங்களே பிரதானம். மேற்கத்திய இசையை எடுத்துக் கொண்டால், ஸ்வரங்கள், 'நோட்' என்று வழங்கப்படுகின்றன. பியானோ அல்லது கீபோர்ட் ஒன்றைப் பார்த்தால், கருப்பு மற்றும் வெள்ளைக் கட்டைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோட்-டைக் குறிக்கும். அவர்களது ஸ்வரங்கள் 'A', 'B', 'C' ,... போன்ற குறியீடுகளால் வழங்கப்படுகின்றன. கீழே உள்ள படத்தில் இருப்பதுபோல:


keyboard Posted by Hello

எழுத்து வடிவத்தில் 'A', 'B', 'C' ,... என்று குறிப்பிட்டாலும் பாடும்போது ஸ்வரங்களை குறிப்பதற்கு
'டோ', 'ரி', 'மி', 'ஃபா', 'ஸோ', 'லா', 'தீ'
என்று வழங்குகிறார்கள். இவை முறையே,
'ஸ', 'ரி', 'க', 'ம', 'ப', 'த', 'நி'
ஆகிய ஸ்வரஸ்தானங்களுக்கு சமானமாகும்.

ஆ, தலைப்பின் கேள்விக்கு வரும் தருணமாகி விட்டது. சங்கீதத்தில் ஸ்வரங்கள் இந்த ஏழுதானா, இன்னும் இருக்கா?
ஆம், இன்னும் இருக்கு, மொத்தம் பன்னிரெண்டு. பொதுவாக சொல்லும்போது அந்த கூடுதல் ஐந்தும் இந்த ஏழு ஸ்வரங்களுக்குள் அடக்கம்.
நமது சங்கீதத்தில் இவற்றை கீழே உள்ள பட்டியலில் இருப்பதுபோல் வழங்குகிறோம்.

ஸ - ஷட்ஜம்
ரி1 - சுத்த ரிஷபம்
ரி2 - சதுஸ்ருதி ரிஷபம் == க1 - சுத்த காந்தாரம்
ரி3 - ஷட்ஸ்ருதி ரிஷபம் == க2 - சதாரண காந்தாரம்
க3 - அந்தார காந்தாரம்
ம1 - சுத்த மத்யமம்
ம2 - ப்ரதி மத்யமம்
ப - பஞ்சமம்
த1 - சுத்த த்வைதம்
த2 - சதுஸ்ருதி த்வைதம் == நி1 - சுத்த நிஷாதம்
த3 - ஷட்ஸ்ருதி த்வைதம் == நி2 - கைசிகி நிஷாதம்
நி3 - ககாலி நிஷாதம்

இதற்கு ஈடாக மேற்கத்திய சங்கீதத்தின் 12 நோட்-கள்:
C, C#, D, D#, E, F, F#, G, G#, A, A#, B

இந்த ஸ்வரங்களின் அதிர்வெண்ணின் பின்னணியில் சுவரஸ்யமான கணிதமும், இயற்பியலும் இருக்கிறது!

அதிர்வலைகளின் நிறமாலையை(spectrum) எடுத்துக்கொண்டால், ஒரு சிறு பகுதி மட்டுமே மனிதனின் காதுகளால் கேட்கக்கூடிய ஒலியினை எழுப்பக் கூடியவை. இவற்றின் அதிர்வெண் 16Hz முதல் 16,000Hz வரை. அவற்றில் 1000 Hz முதல் 16,000 Hz வரையுள்ள பகுதியில்தான் காதுகளும், ஒலியை புரிந்துகொள்ள மூளையும் நன்றாக உணர முடியும். அதிலும் அதிலுள்ள ஒவ்வொரு அதிர்வெண் ஒலியையும் நம் காதுகளால் வேறுபடுத்தி அறிய இயலாது!. உதாரணத்திற்கு அதிர்வெண் 240Hz ஒலிக்கும், 241Hz ஒலிக்கும் வேறுபாடு எதிவும் நம் கேள்வியில் தெரியாது.


frequencyRanges Posted by Hello

மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதுபோல, ஒலிநிறமாலையை ஆக்டேவ் ஆக்டேவாக (ஆக்டேவ் என்பதற்கு எண்மம்? என்கிறார்கள் தமிழில்) பிரித்துக் கொள்ளலாம். மனிதர்களால் கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து ஆக்டேவ்களில் ஒலி எழுப்ப முடியும். ஆக்டேவின் ஆரம்ப அதிர்வெண் f1 என்றால், முடியும் அதிர்வெண் தொடங்கிய அதிர்வெண்ணின் இரண்டு மடங்காக, 2 x f1 ஆக இருக்கும். விளக்குவதற்காக வேண்டி, ஒரு ஆக்டேவை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
ஒரு ஆக்டேவில் இருக்கும் ஒலி அதிர்வுகளை அதிர்வெண் வாரியாக பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அதிர்வெண்ணுக்கும் இடைவெளி, 1.059 இன் மடங்கு என்று வைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு ஒலி அதிர்வின் எண் 240 Hz என்றால், அதற்கு அடுத்த அதிர்வெண், 240 x 1.059 = 254 Hz ஆக இருக்கும்.
இப்படியே, 240,254,269,...என்று, பன்னிரெண்டு மடங்கு செல்லுங்கள், பதிமூன்றாவது மடங்கு, தொடங்கிய 240Hz க்காட்டிலும் இரண்டு மடங்காக இருக்கும்!. அதன் பின் அடுத்த ஆக்டேவ் துவங்கும். ஆக, ஒரு ஆக்டேவில் 12 அதிர்வெண் ஒலிகள். இந்த 12 என்னும் எண்ணுக்கும் நமது ஸ்வரங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள ஒற்றுமையை இன்னேரம் ஊகித்து இருப்பீர்கள்!
ஆம், நமது 12 ஸ்வரங்களின் அதிர்வெண் இடைவெளியும் 1.509 Hz இன் மடங்குகள்தான்!.

மேற்கத்திய சங்கீதத்தில் மேற்சொன்ன பன்னிரெண்டு அதிர்வெண் கணக்கும், 240 Hz போன்றதொரு நிலையான அதிர்வெண் ஆக்டேவ் தொடக்கமும் பின்பற்றப்படுகிறது. இந்திய சங்கீதத்தில் இதுபோன்ற நிர்பந்தங்கள் இல்லை. மேலும் இதை முதல் நிலையாக கொண்டு அதற்கு மேல் 'கமகம்' என்ற சொல்லப்படும் வழிமுறையையும் சேர்த்து, அடுத்த நிலையில் பயணிக்கிறார்கள். இம்முறை 16ஆம் நூற்றாண்டு ஃபிரன்ச் சங்கீதத்திலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. எளிமைப்படுத்த வேண்டி, அவற்றை மேற்கத்திய சங்கீத வழக்கத்தில் அவ்வளவாக இல்லை. (Beatles, Simon போன்றவர்களின் ஆல்பங்களில் அவ்வப்போது காணலாம்).

என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லை பகலா, எனக்கும் மயக்கம்...
சங்கீத ஸ்வரங்கள், ஏழே கணக்கு, ஆனால்
இன்னும் இருக்கு, எனவே மயக்கம்...!

Sunday, May 08, 2005

உன்னால் முடியும் தம்பி!

டாக்டர் வாய்னே டையர், அமெரிக்காவில் "ஊக்கத்தின் தந்தை" என வர்ணிக்கப்படுபவர். தன்னைத்தானே முன்னேற்றிக்கொள்வது எப்படி என்று பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அவருடைய புத்தகங்கள் 48 மொழிகளில் 55 மில்லியன் புத்தக பிரதிகள் விற்பனை ஆகியுள்ளதாம்!. நம்ம நாட்டு, தீபக் சோப்ராவுடன் சேர்ந்துகூட ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
அவருடைய சமீபத்திய புத்தகம் "Power of Intention".



Dr Dyer Posted by Hello

பல சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார்.
10 Secrets for Success and Inner Peace,
There's a Spiritual Solution to Every Problem,
How to Get What You Really, Really, Really, Really Want,
Improve Your Life Using the Wisdom of the Ages
போன்றவை அவருடைய சுய முன்னேற்றம் பற்றிய சொற்பொழிவுகள் ஆகும்.

எதேச்சையாக PBS தொலைக்காட்சியில் அவரது சொற்பொழிவைக் கேட்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
அவர் என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று கவனித்தேன்;
நமது பழைய தத்துவங்களிலும், மதங்களிலும் தேங்கிக்கிடக்கும் உண்மைகளை இன்றைய அறிவியலோடு இணைத்து ஒருவர் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதுபோல சொற்பொழிவாற்றினார்.
முடிவில் தன் சொற்பொழிவை தொகுத்து '12 வெற்றிக்கான வழிமுறைகள்' என்றார்.
அவற்றை குறித்து வைத்துக்கொண்டு தமிழில் தருகிறேன் இங்கே:

1. உங்களுக்காக நீங்கள் விரும்புவதைக் காட்டிலும் மற்றவர்களுக்காக அதிகமாக விரும்புங்கள்.

2. எந்த ஒரு விஷயத்தையும் முடிவிலிருந்து எண்ணத் தொடங்குங்கள்.

3. பாராட்டுபவராக இருங்கள்.

4. உங்கள் உள்சக்தியுடன் நல்லதொரு உள்தொடர்பில்/பழக்கத்தில் (rapport) இருங்கள்.

5. எதிர்ப்புகள் இயற்கையானதென புரிந்து கொள்ளுங்கள்.

6. நீங்கள் உருவாக்குவதற்கு அல்லது செய்யவேண்டியதற்கான மூலக்கூறுகள் அனைத்தும் உங்கள் அருகாமையிலேயே இருப்பதாக "நினைத்து"க்கொள்ளுங்கள்.

7. விட்டுக்கொடுத்தல் என்பதனை பழகிக்கொள்ளுங்கள்.

8. பணிவு எப்போதும் பழக்கத்தில் இருக்கட்டும்.

9. எப்போதும் நன்றியுணர்சியுடன் நடந்துகொள்ளுங்கள்.

10. பழிப்பதும், கழித்துக்கட்டுவதும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது.

11. வாழ்க்கையை ஒரு போட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

12. தியானம் செய்யுங்கள்.

டாக்டர் வாய்னே டையரப் பற்றி மேலும் விவரங்களுக்கு அவரது இணைய தள முகவரி இங்கே.

Saturday, May 07, 2005

கொசுறுச் செய்திகள்

அமெரிக்காவில் 2004 இல் அதிகமாக குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்கள்:

ஆண்
1. ஜேகப் (1998 முதல் இந்த பெயருக்குத் தான் முதலிடமாம்!)
2. மைக்கேல்
3. ஜோஷ்
4. மேத்யூ
5. ஏதன்

பெண்
1. எமிலி (1996 முதல் இந்த பெயர்தான் முதலிடமாம்!)
2. எம்மா
3. மேடிசன்
4. ஒலிவியா
5. ஹன்னா

சிகாகோவில் ஒரு பாலத்திற்கு கீழே அன்னை மேரி தேன்றினாராம்
(நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!)


mary Posted by Hello

'பாப்புலர் சயன்ஸ்' இதழ் கூட ப்ளாக் பற்றி எழுதுகிறது.
அதன் இணையதள சுட்டிகள்: சுட்டி 1 சுட்டி 2
இப்போதுதான் செய்தி தளங்களும், செய்தி தொலைக்காட்சிகளும் கூட ப்ளாக் பற்றி அதிகமாக பேசத்தொடங்குகிறார்கள்.
ஒரு செய்தி தொலைக்காட்சியில் 'பாப்புலர் சயன்ஸ்' இதழ் எடிட்டர் 'ப்ளாக்' செய்வதுபற்றி பேட்டி யே(!) கொடுத்தார்.

Friday, May 06, 2005

புத்தம் - ஒரு அத்வைதப்பார்வை

புத்தம் என்ற தலைப்பில் வி.சுப்ரமணியம் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம்:

புத்தர் (கெளதமர்) ஒரு மாபெரும் ஞானி, ஆனால் அவரை பெயர்த்து உரைத்தவர்களுக்கு அவ்வளவாக ஞானம் இருக்கவில்லை. புத்தரோ அவருக்கு முன் இருந்த வேதாந்தங்களுக்கு விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. அவருக்கு அது தேவையில்லாதாகப் பட்டது. ஆனால், அந்தோ அந்த ஒரு காரணத்தாலேயே இந்தியாவில் பெரிதும் நிராகரிக்கப் பட்டார்.
ஆதி சங்கரரோ, புத்தரின் ஏறக்குறைய அனைத்து கோட்பாடுகளிலும் ஒத்துப்போனாலும், புத்தர் செய்யாத ஒன்றைச் செய்தார். வேறொன்றும் இல்லை. 'ரோமானியபுரியில் ரோமானியனாக இரு' என்ற மொழிக்கு ஏற்றார்போல் செய்ததே - ஏற்கனவே ஏற்பட்ட வேதாந்தங்களுக்கு விளக்கம் சொல்வதுதான்! உண்மையை புரியவக்க, அதுவரை இருந்த அனைத்து சாத்திரங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் தனது 'அத்வைதம்' என்ற சித்தாந்தத்தில் மறுமொழி அளித்தார். புத்தர் சொல்லியும் கேட்காத, புரியாத அல்லது விளங்க விரும்பாத மரமண்டைகளுக்கு அப்போதுதான் விளங்கத் தொடங்கியது.

saranath-buddha Posted by Hello
அது அப்படி இருக்கையில், புத்த மதமே கெளதமரையே தவறாகவேத்தான் புரிந்துகொண்டது - நிர்வாணத்திற்கு அப்புறம் மீதி இருப்பது ஒன்றுமே இல்லை என்று புத்தர் சொன்னதாக . பல நூற்றாண்டுகளாக புத்த மதத்தினரும் இதையே சாதித்து வந்தனர். மறைந்து போகும் ஈகோவினைப் பார்ப்பது யார்? என்ற கேள்விக்கு புத்தமதத்தினரால் பதிலேதும் சொல்ல இயலாது. அந்த கேள்விக்கு சரியான பதிலை அத்வைதம் மட்டுமே உரைக்க முடியும்: "மறைந்து போவதை பார்ப்பது யார் என்று திருப்பிப் பார்ப்பவன்தான்" என்று. நிர்வாணம் அடையும் நிலையில் ஈகோ மறைகிறது என்று சொல்கிற வரையில் புத்தத்தில் தவறேதும் இல்லை. ஆனால், அவர்களிடம் விட்டுப்போன ஒரு பகுதி - "திருப்பிப் பார்ப்பவன்". எப்படி ஈகோ உருவாகிறது?, ஈகோ வருவதையும், மறைவதையும் பார்த்துக்கொண்டு இருப்பது யார்? 'ஆத்மா' என்று விடையளிக்கிறது வேதாந்தம் - "தீர்க தேஸ்ய விவேகம்" என்னும் விவாதத்தின் மூலம்.

இன்னமும் எளிய முறையில் விளக்குகிறேன்.
'வருகிறது', 'போகிறது' என்று சொல்லும்போது, அவ்வாறு வந்ததையும், போவதையும் பார்த்துக்கொண்டு இருக்க இன்னொருவர் இருந்தால்தானே, அவ்வாறு சொல்ல முடியும்.? புத்த மதத்தில், இப்படி ஒரு இன்னொன்றுக்கான சாத்தியம் இல்லை. இப்படி ஒரு விஷயத்தை புத்த மதத்தில் விட்டுபோனதிற்கு மூல காரணம் என்னவென்று பார்த்தோமேயானால் - புத்தர் இதுபோன்ற தர்க்க ரீதியான விஷயங்களை விளக்கிக்கொண்டிருக்கவில்லை என்பதேயாகும்.

ஈகோ என்பது மாயை, அதற்கு தொடக்கம் இல்லை, ஆனால் முடிவு உண்டு புத்தர் உபதேசித்தார். அது முற்றிலும் சரி. ஆனால் அதற்கு மேல் அவர் விளக்கவில்லை. அது தானகவே கண்டறிய வேண்டிய விஷயம், சொல்லிப்புரியவைக்க வேண்டியதில்லை என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அவரது வழிவந்தவர்களோ, ஏற்கனவே இருந்த சித்தாந்தங்களை உடைக்கும் முயற்சியில், இதையும் சேர்த்துக் கொண்டார்கள் - புத்தர் அந்த கூற்றைப்பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ ஒரு விவாதமுமே செய்யாவிட்டாலும்.

புத்த மத சித்தாந்ததிற்கும், அத்வைதத்திற்கும் இது ஒன்று தான் வேறுபாடு, மற்றவையெல்லாம் ஒன்றுதான். ஆனால் இது மிக முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டிய கூற்று.

Wednesday, May 04, 2005

புத்தம் சரணம் கச்சாமி

மே மாதம், இந்தியாவில் தோன்றிய மாபெரும் ஞானிகளில் ஒருவரான கெளதம புத்தர் பிறந்த மாதமாகும். தினம் நிகழ்வுகளில் தன்னைத்தொலைத்து மாயை என்னும் சுழலில் சிக்கித் தளிக்கும் மனித இனம் உய்வதற்கு வழி சொன்ன மகான். உலகுக்கெல்லாம் முதன்முதலின் புத்த மதம் போதிக்கப்பட்டது இந்தியாவில் இருந்துதான். இன்று புத்த மதம் இந்தியாவில் நொடிந்துபோனாலும், உலகின் மற்ற பகுதிகளில் அதன் வேர்களைக் காணலாம்!.

இளவரசன் சித்தார்த்தன் தன்னொளி பெற்று கெளதம புத்தனாக ஆன கதை உங்களுக்கெல்லாம் தெரிந்து இருக்கும். அவ்வாறு அவர் பெற்ற ஞானத்தின் சாரம்தான் புத்த மதம். புத்த மதம் முதலில் 'ஹீனயானம்', 'மஹாயானம்' என்ற இரண்டு பிரிவுகளில் இருந்தது. பின்னர் அதிலிருந்து பல்வேறு பிரிவுகள் தோன்றின. இந்த இரண்டு பெரிய பிரிவுகள் அதிகமாக பின்பற்றப்படும் நாடுகளை கீழே காணாலாம்:


Hinayana Map Posted by Hello




Mahayana Map Posted by Hello


இவற்றைத்தவிர, திபத்தில் பின்பற்றப்படும் பிரிவுக்கு வஜ்ரயானா என்று பெயர்.
பிரிவுகள்பல இருந்தாலும், அனைத்து பிரிவுகளும் புத்தரின் மூல போதனகளையே பின்பற்றுகின்றன.

புத்தரின் மூல போதனைகள்
ஹிந்து மதத்தின் மூல நெறிதனை நான்கு வார்த்தைகளில் அடக்கிவிடலாமென்பதுபோல, புத்தத்தின் மூல போதனைகளை நான்கு வரிகளில் சொல்லலாம். அவை:
1. "வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது"
என்ற அனைவருடைய சொந்த அனுபவத்தை கூறுகிறது.
2. "ஆசையே துன்பங்களுக்கு எல்லாம் காரணம்"
எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பொழுது எவ்வளவு துன்பமடைகிறோம். ஆனால், எதிர்பார்ப்புகள் நிறைவேறினாலும் நமக்கு உண்மையில் நிலையான இன்பம் கிடைப்பதில்லை. மேலும் மேலும் ஆசைகள் பெருகத் தான் வழி வகுக்கிறது.
3. "துன்பங்களை தடுக்கவும், பேரின்பம் கிட்டவும் வழி உண்டு"
தேவையில்லாத ஆசைகளை விட்டொதுக்கி, பொறுமையுடன் பிரச்சனைகளை எதிர்கொண்டு, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் அற்று, இன்றைய பொழுதில் வாழ்ந்தோமானால், முழுமையுடன் வாழ முடியும். இதனால் நிர்வாணம் என்னும் பேரின்ப நிலையை எட்ட முடியும்.
4. "துன்மற்று வாழ இந்த எட்டு வழி நெறிகளைக் கடைப்பிடிக்கலாம்."

எட்டு வழி நெறிகள்
1. சரியான பார்வை
2. சரியான எண்ணம்
3. சரியான சொல்
4. சரியான செயல்
5. சரியான வாழ்க்கை
6. சரியான முயற்சி
7. சரியான மனநிலை
8. சரியான மனத்தீர்மானம்

புத்தரும் கடவுளும்
புத்தர் தன்னை கடவுள் என்றோ, கடவுளின் மகனெற்றோ, அல்லது கடவுளை வணங்குவதால் துன்பங்கள் தொலையும் என்றோ சொன்னதில்லை. ஒவ்வொருவரின் துன்பங்களையும் அவராலேயே போக்கிக்கொள்ளமுடியும், அவராகவே தன்னைத்தானே அறிந்து கொள்வதால்.
்புத்த மதம் பொதுவாக உருவ வழிபாட்டில் ஈடுபாடவிட்டாலும், புத்தர் சிலைகளை குறியீடாகவும், ஊக்க கருவிகளாகவும் பயன்படுத்துகின்றன.

உலகம் எப்படி தோன்றியது?
நீரில் முதலில் தோன்றிய உயிரானது, பல்வேறு விதங்களில் பல்வேறு உயிர் வகைகளாக மாறியது. இவற்றை யாரும் தோற்றுவிக்கவில்லை. இவற்றுக்கு தொடக்கமும் இல்லை. உலகம் ஒரு விதத்தில் இருந்து, அழிந்து, மறு உருவம் எடுத்துக்கொண்டே இருக்கும்.

தியானம்
புத்தரின் மூல தியான வழிமுறைகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்:
1. அனபாணா சாத்தி (பிராணயாணம்)
2. மேத பாவனை (சுய வாழ்த்து)

இந்த தியான வழிமுறைகளைப்பற்றி மேலும் அறிய விரும்புவோர்களுக்கு PDF சுட்டி.

மேலும் விவரங்களுக்கு: இந்த சுட்டியில் பல மின்னிதழ்களைப் பெறலாம்.

மேலும் இந்த தளத்தில் ஒலி வடிவத்தில் ஆங்கில சொற்பொழிவுகளைக் கேட்கலாம்.

Monday, May 02, 2005

திரைஇசையில் கீரவாணி

கீரவாணி 21வது மேளகர்த்தா ராகம்.
ஆரோஹணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ்
அவரோஹணம்: ஸ் நி3 த1 ப ம1 க2 ரி2 ஸ

கீரவாணி இளையராஜாவிற்கு மிக மிக பரிச்சையமான ராகங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பல பாடல்களுக்கு கீரவாணியை தேர்ந்தெடுத்திருப்பாரா?. இளையாராஜா பற்பல ராகங்களில் இசையமைத்திருந்தாலும், கீரவாணிப் பாடல்களில் பல பாடல்கள் மிகவும் பிரபலமான பாடல்களாக இருக்கின்றன.

இதோ கீரவாணி ராகத்தில் அமைந்த திரைப்பட பாடல்களின் தொகுப்பு:
(எந்த ஒரு குறிப்பான வரிசையிலும் இல்லை)

1. கீரவாணி இரவிலே கனவிலே / S.P.B, ஜானகி /பாடும் பறவைகள்
இந்தப்பாடலில் ஸ்வர வரிசைகளைப் பாடுதல் மிக இனிதாக இருக்கும்.
ஸ்அ நி ஸ் ரி ஸ் நி
ஸ் அ நி ஸ் ம் க் ம் ரி எனத்தொடங்கும்!

S.P.B வரிக்குவரி பாவத்தை மாற்றுவதைக்காணலாம்!
புலி வேட்டைக்கு வந்தவன் .... (பெருமிதம்)
குயில் வேட்டைதான் ஆடினேன்... (மகிழ்வு)
புயல் போலவே வந்தவன்... (அமைதி)
பூந்தென்றலாய் மாறினேன்.... (மகிழ்வு)

2. காற்றே எந்தன் கீதம் / S.ஜானகி / ஜானி
மிகப்பிரபலமான இந்தப்பாடல் இசைக்கருவிகளின் இனிதான சங்கமம் மட்டுமல்ல. ஜானகியின் குரல் இன்னுமொரு இசைக்கருவியைப்போல், மிகச்சீராகப் பாடியிருப்பார். இந்த பாடலின் பி்ன்ணணியில் ரஜினி மழையில் ஓடிவருவதையும், அதற்குத் தகுந்தாற்போல் வயலின்கள் வாசிப்பதும், பாட்டுக்கும் காட்சிக்கும் என்னதொரு பொருத்தம் என வியக்க வைக்கும்.

3. நெஞ்சுக்குள்ளே/S.P.B, S.ஜானகி /பொன்னுமணி
S.P.B பாடும்போதும்போது ஜானகி அந்த வரிகளை அகாரத்தில் பாடுவதும் பின்னர் ஜானகி பாரும்போது, S.P.B அகாரத்தில் பாடுவதும் நல்லதொரு கலவையாக இருக்கும். பல்லவி முடிந்தபின் புல்லாங்குழல் வாசித்தும் பின்னர் வயலின்கள் வாசித்து, அதிலிருத்து சீராக தொடர்த்து மறுபடி அடுத்த சரணம் தொடர்வது, 'இயற்கையாக' இருக்கும்.

4. மண்ணில் இந்த/ S.P.B / கேளடி கண்மனி
சரணங்களில் S.P.B மூச்சுவிடாமல் பாடியதாக சொல்லப்பட்டு பிரபலமான பாடல். அதை மறுத்தும், சாதகமாகவும் பல வாதங்கள் நடந்திருக்கின்றன. இந்த பாடலிலும் புல்லாங்குழலின் இனிமையை ரசிக்கலாம்.

5. முன்னம் செய்த தவம்/ S.ஜானகி , S.P.B / வனஜா கிரிஜா
புல்லாங்குழலில் 'கூக்கு...கூக்கு...கூஊக்கு' என்று கூவுவது புல்லாங்குழலை வாசிப்பது குயிலோ எனத் தோன்றச் செய்யும். மேலும் பாடலில் பின்குரல்கள் ஹம் செய்வதும் நன்றாக இருக்கும்.

மண்ணில் வானம் பந்தல் போல தோணுதே...
விண்ணில் மீன்கள் கண்கள் சிமிட்டி காணுதே...

எங்கும் எங்கும் ஓம்கார நாதம்,
வந்து வந்து நல்லாசி கூறும் .

6. போவோமா ஊர்கோலம்/S.ஜானகி , S.P.B/சின்னத்தம்பி
ஒருகாலத்தில் இது கேட்டு கேட்டு தெவிட்டிப்போன பாடலானாலும், இந்த பாடலின் interlude கள் நன்றாக இருக்கும்.

7. உன்னை நான் அறிவேன் /S.ஜானகி / குணா
இது இதமாக நெஞ்சைத்துவட்டும் பாடல். பாடலின் நடுவே ஹிந்துஸ்தானி கஸல் ஆலாபனையும் அமைத்திருப்பார் இளையராஜா. அது முடிந்த்து அதுவே ஒரு தெலுங்கு கூத்துப்் பாடலாகவும் மாறும்!. முடிவில் வரலட்சுமியையும் பல்லவியை முடிக்குமாறும் செய்திருப்பார்!

யார் இவர்கள் மாயும் மானிடர்கள்
ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள்

8.
நடந்தால் இரண்டடி / S.P.B /செம்பருத்தி
இது கனமில்லாத சாதாரணமனிதனின் தத்துவப்பாடல். S.P.B அனயாசமாக பாடியிருப்பதைக் காணலாம்.

9. தங்கச்சங்கிலி / S.ஜானகி , மலேஷியா வாசுதேவன்/தூறல் நின்னு போச்சு
எல்லோருக்கும் பிடித்த சிறந்ததொரு பாடல். மாலேஷியா வாசுதேவனின் சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.

10. மலையோரம் வீசும் / S.P.B / பாடு நிலாவே
இந்த பாடலிலும் புல்லாங்்குழலின் இனிமையைக் காணலாம். சற்றே சோகமான பாடலாக பாடியிருப்பார் S.P.B.

11. எவனோ ஒருவன் / ஸ்வர்ணலதா / அலைபாயுதே
கீரவாணியில் இன்னுமொரு சோகப்பாடல். இந்த முறை ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து.
வைரமுத்துவின் வைர வார்த்தைகள் பாடலில் பிரகாசிக்கும்.

அந்த குழலைப்போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே...

12. பாடி பறந்த கிளி / S.P.B / கிழக்கு வாசல்
நாட்டுப்புறப் பாடலைப்போல, இருக்கும். ஆனாலும் intelude களில் வயலின் மற்றும் புல்லாங்குழல் பயன்படுத்தி இருப்பார் இளையராஜா. மற்றும்மொரு சோகப்பாடல்.

13. என்னுள்ளே / ஸ்வர்ணலதா / வள்ளி
மற்றுமொரு இதமான பாடல். வேலை செய்துகொண்டே பின்னோட்டமாக ஓடிகொண்டு இருக்க சிறந்த பாடல்.

14. குயிலுக்கு கூ கூ / S.P.B, ஹரிஹரன், சங்கர் மஹாதேவன் / ஃபிரண்ட்ஸ்
மூன்று புகழ்பெற்ற ஆண் பாடகர்கள் ஒரே பாடலின் இடம்பெறுவது அவ்வளவு வழக்கமான நிகழ்வல்ல. இந்த பாடலுக்கு அந்த பெருமை உண்டு. கோரஸ்ஸாக மூன்றுபேரும் பாடும் இடங்கள் பாடலில் வியப்பைத்தரும்.

15. கண்ணே கலைமானே/ஜேசுதாஸ்/மூன்றாம் பிறை
கேட்டவர் யாரலும் மறக்கமுடியாத அமரத்துவம் வாய்ந்த பாடல். கமல்-ஸ்ரீதேவி என்று சொல்லும்போது, இந்தப்பாடல் நினவிற்கு வராமல் இருக்க முடியாது.

16. பாட்டுப் பாடவா / ஏ.எம்.ராஜா / தேன்நிலவு
மற்றொரு புகழ்பெற்ற இந்த பாடலும் கீரவாணி ராகம் தான்.

17. பூவே செம்பூவே/ஜேசுதாஸ் / சொல்லத்துடிக்குது மனசு
இந்த பாடலும் மிகவும் பிரபலமான பாடல். இரண்டாவது interlude-இல் வயலின்கள் வேகமாக வாசித்து, நமது மனத்துடிப்பை அதிகரித்து, பின்னர் சரணம் பாடும்போது மீண்டும் சாதாரணமாவது, மனதுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல இருக்கும்!

18. ராஜ ராஜ சோழன் நான் /ஜேசுதாஸ்/ இரட்டைவால் குருவி
ஜேசுதாஸ் இந்த பாடலையும் மிக அழகாக பாடி இருப்பார். சரணங்களில் ஒரு வரியை முடிக்குமிடத்தில், அதை 'ம்ம்ம்' என்று இழுத்து, அதிலிருந்து அடுத்த வரியைத் தொடங்குவார்!

19. உன்னை நினச்சேன் பாட்டு / S.P.B / அபூர்வ சகோதரர்கள்
இரண்டாவது interlude-இல் வரும் வயலின்களும், புல்லாங்குழலும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். காட்சியில் கமல் சர்கஸ் ஜோக்கர் போல வேடமிட்டு ஆடுவதற்கு தோதாக வயலின்கள் இருக்கும்.

கண்ணிரண்டில் நான் தான் காதலெனும் கோட்டை
கட்டிவைத்துப் பார்த்தேன் அத்தனையும் ஓட்டை!

20. எங்கே எனது கவிதை /K.S. சித்ரா, ஸ்ரீநிவாஸ் / கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
மற்றுமொரு சிறந்த பாடல், சின்னக்குயில் சித்ராவின் குரலில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்.