Tuesday, March 13, 2012

மனம் ஏதய்யா

ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி
புனைந்தது: அடியேன்

பல்லவி

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா - உனை

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

அனுபல்லவி

தொட்டுத் தொடர்ந்திடும் பழவினைகளும் தொடரவே  - உனை 

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

சரணம்

சொட்டு சொட்டெனத் தூர்த்திடும் நின்னருளுக் கேங்கிட

பட்டுப்போனதொரு பாலையில் நீரனெ நின்னருள்

மட்டிலா மகிழ்ச்சியை தந்ததே முருகய்யா - நிதம் உனை

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா