Wednesday, October 14, 2015

சங்கரி சம்குரு சந்தரமுகி

நவராத்ரி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் கிருதிகளில் ஒன்று சாவேரி இராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரி அவர்களின் "சங்கரி சம்குரு சந்தரமுகி" ஆகும். மிகவும் இனிமையானதும் நெகிழ்ச்சியைத் தரக் கூடியதுமான இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

பஞ்ச பூத தலங்களில் நீருக்கு உரிய தலமாம் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பிகையாம் அகிலாண்டேஸ்வரியைப் பாடும் பாடல்.

இராகம் : சாவேரி
தாளம்: திஸ்ர நடை
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்திரிகள்

பல்லவி:
சங்கரி சம்குரு* சந்தரமுகி அகிலாண்டேஸ்வரி
சாம்பவி சரசிஜ பவ வந்திதே கௌரி அம்பா

(*சம்குரு/சங்குரு)

அனுபல்லவி:
சங்கட ஹாரினி ரிபு விதாரிணி கல்யாணி
சதா நட பலதாயிகே ஜகத் ஜனனி

சரணம்:
ஜம்புபதி விலாசினி ஜகதவனோலாசினி
கம்பு கந்தரே பவானி கபால தாரிணி சூலினி
அங்கஜ ரிபு தோஷிணி அகில புவன போஷிணி
மங்களபிரதே ம்ருதானி மராள சன்னிபவ காமினி
ஷ்யாமகிருஷ்ண சோதரி ஷ்யாமளே சாதோதரி
சாமகான லோலே பாலே சதார்தி பஞ்சன சீலே.

பொருள்:
குளிர் நிலவினை முகமாகக் கொண்ட சங்கரி - சங்கரனின் துணைவி
சம்குரு - நலங்களை எமக்கு வழங்கிடு,
அகில உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரி - மனதுக்கு இயைந்த இறைவி - அகிலாண்டேஸ்வரி.
சாம்பவி - சாம்புவின் துணைவி.
தாமரைப் பூவில் அமர்ந்த பிரம்மாவால் வணங்கப்படும் கௌரி.

சங்கட ஹாரினி - சங்கடங்களை அழிப்பவள். துயர் துடைப்பவள்.
எப்போதும் (சதா) வேண்டும் (நட) அன்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள்.
ஜகத் ஜனனி - உலகங்களை ஈன்றவள், தாயானவள். கல்யாணி,

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் துணைவி.
ஜகத் +அவன + விலாசினி = உலகங்களைக் காப்பத்தில் மகிழ்பவள்.
சங்கினை (கம்பு) ஒத்த கழுத்தினைக் கொண்டவள். சக்தியின் மூலமானவள்.

பவானி! கபலாத்தினை ஏந்தியவள். சூலினி - சூலத்தினை ஏந்தியவள். உக்ர தேவதையாய் இருந்த அகிலாண்டேஸ்வரியை, ஸ்ரீசக்ர பிரதிஷ்டை மூலமாக ஆதி சங்கரர் சாந்தப்படுத்தியாக சொல்லப்படுகிறது.

மன்மதனின் எதிரியாம் சிவனின் மனதிற்கு உகந்தவள்.
அகில உலகங்களையும் போஷிப்பவள் - பேணுபவள்.
மங்களங்களைத் தருபவள்.
ம்ருதானி - மிருடனின் (கருணையுடையவன்) - சிவனின் துணைவி.

மராள (அன்னம்) சன்னிபவ காமினி - அன்னம் போன்ற நடையை உடையவள். லலிதா சகஸ்ரநாமத்தில் 47வது நாமம்.

ஷ்யாம கிருஷ்ணனின் சகோதரி. ஷ்யமாளா என வழங்கப்படுபவள்.

சதோதரி - மெல்லிய(சாத) இடையை(உதரி) உடையவள். இமவானுக்கு 'சதோதரன்' என்றோரு பெயருண்டு. இமவானின் மகளாதலால் சதோதரி எனவும் கொள்ளலாம். லலிதா சகஸ்ரநாமத்தில் 130வது நாமம்.

சாம கானத்தினை கேட்டு மகிழும் பாலே - பாலா திரிபுரசுந்தரி. லலிதா சகஸ்ரநாமத்தில் 965வது நாமம்.

எப்போதும் அன்பர்களின் துயர் துடைப்பதில் நாட்டம் உடையவள்.

சங்கரியே எப்போதும் நலங்களை எமக்கு வழங்கிடு,

---------------
இப்பாடலை கேட்க:

ரஞ்சனி & காயத்ரி:




டி.கே.பட்டம்மாள்:


மகாராஜபுரம் சந்தானம்:

விஜய் சிவா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ்:


Monday, October 12, 2015

"உன்னை"ப் பாடும் பாடல்கள்

பாடலின்/பல்லவியின் அல்லது முதல் வரியில் "உன்னை" என்ற சொல்லுடன் வரும் கிருதிகளில் சில:

1. அறிவார் யார் உன்னை
இயற்றியவர்: அருணாசலக் கவியார்
ராகம்: பைரவி



2. அய்யனே இன்றுன்னை
இயற்றியவர்: அருணாசலக் கவியார்
ராகம்: மத்யமாவதி

3. நேக்குருகி உன்னைப் பணியா
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: ஆபோகி

4, நிஜம் உன்னை நம்பினேன்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: பிலஹரி

5. சுவாமி உன்னை - வர்ணம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: ஆரபி

6. உன்னப்போல எனக்கு
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: பேஹாக்

7. உன்னைத் தவிர வேறில்லை
இயற்றியவர்: நீலகண்ட சிவன்
ராகம்: சுரடி

8. உன்னைத் துதிக்க
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: குந்தளவரளி

9. உன்னையல்லால் உற்றதுணை
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
ராகம்: கல்யாணி

10. உன்னையல்லால் வேறேகதி
இயற்றியவர்: கோடீஸ்வர ஜயர்
ராகம்: சிம்மேந்திர மத்யமம்

11. உன்னையன்றி உற்றதுணை
இயற்றியவர்: தண்டபாணி தேசிகர்
ராகம்: பைரவி

12. உன்னையல்லால் 
இயற்றியவர்: கவி குஞ்சர பாரதி
ராகம்: சிம்மேந்திர மத்யமம்

13. உன்னை பஜிக்க
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: பேகடா

14. உன்னை எனக்கு
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: கல்யாணி

15. அப்பா உன்னை மறவேனே
இயற்றியவர்: பெரியாசாமித் தூரன்
ராகம்: பிலஹரி

16. உன்னை மறவாதிருக்க
இயற்றியவர்: லலிதா தாசர்
ராகம்: ஹம்சாநந்தி

17. உன்னை மறவாமல்
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: சாளகபைரவி

18. உன்னை நினைந்தே
இயற்றியவர்: முத்தையா பாகவதர்
ராகம்: இராகமாலிகை

19. உன்னை நினைந்து நினைந்து
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: சக்ரவாகம்

20. உன்னை நினைந்து உள்ளம் - வர்ணம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: தேவமனோகர்

21. உன்னை நினைந்தாலே
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: செஞ்ச்சுருட்டி