Friday, July 29, 2011

விழிக்கும் மொழிக்கும் பழிக்கும் வழிக்கும்

கேள்வியும் பதிலும்:

இது கேள்விக்கேற்ற பதிலல்ல - அதற்குப்
பதில் பதிலுக்கேற்ற கேள்வி.

அடியேன்:
பழித்திருக்கும் பாதக உலகம் பாழுங்கிணற்றில் தள்ளப்பார்க்க
விழித்திருப்பதே விழிக்கும் வழிக்கும் துணையாமோ?
செழித்திருக்கும் மொழியும் எம்மை அணையாய் தடுத்திருக்க
வழித்தடமெல்லாம் வானோர் கண்திறந்து பார்த்திடச்செய்திடும்
விழித்திருத்தலே வாடிக்கையாய்ப் போகாதோ?

கந்தரலங்காரம்:
விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!


|