Saturday, January 10, 2015

விடலைப் பருவமடி!

இன்று காலை கண் விழிக்கையில் மனதில் தோன்றிய வரிகள். மால் மருகன் முருகனை எண்ணி மருகும் பாடல் வரிகள்.

எடுப்பு
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

தொடுப்பு
வெகுண்டு விரைவாய் துடிக்குது மனது
வேட்கை அதனில் புதிதாய் புகுந்தது
விடலைப் பருவமடி - வெண்ணிலா
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

சரணம் 1
சுடலைப் பொடி பூசும் சுந்தரேசன் மகன்
சுகுணகுமாரன் சுந்தர ரூபனை நாடி
இகபரசுகம் பெறவே துடிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

சரணம் 2
விரைந்தெனைக் காண வேலவன் வருவான்
பரிவோடு என்னை பார்த்திட வருவான்
பாலகன் இவனை வாரி அணைத்து
ஆவலைத் தீர்க்க அன்பிலே தவிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

முடிப்பு
அறிந்தது யாவும் அகந்தையை தூண்டுது
அங்கம் எங்கும் அவித்தையே மிஞ்சுது
அறிந்தது யாவையும் அடியோடு மறக்க
அழகன் முருகனைக் காணத் துடிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!