Tuesday, September 20, 2016

ஆனந்த பைரவியில் ஆனந்தமான இரண்டு!

தியாகராஜர் "இராமா நீ சமானம் எவரு?" என்பார்,
கோபால கிருஷ்ண பாரதி "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?" என்பார்,
ஷ்யாமா சாஸ்த்ரிகள் இந்த கிருதியில் குமார ஜனனியாம் உமையே - உனக்கு சமானம் எவரும் இல்லை என்கிறார்!

தஞ்சை பெரிய கோவிலின் பெருவுடையார் - பிரஹதீஸ்வரின் இடது பாகமாம் - பிருஹநாயகி அன்னையைப் பாடும் பாடலாகும் இது.

இப்பாடலை சௌம்யா அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:



இராகம் : ஆனந்தபைரவி
தாளம் : ஆதி
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்த்ரிகள்

பல்லவி
ஹிமாசல தனய ப்ரோசூடகிதி
மஞ்சி சமயமுராவே அம்பா

அனுபல்லவி
குமார ஜனனி சமானம் எவரு?
குமார ஜனனி சமானம் எவரிலனு
மானவதி ஸ்ரீ ப்ருஹநாயகி

சரணம்
உமா ஹம்ஸகமா! தாமசமா?
ப்ரோவ திக்கெவரு நிக்கமுகனு
மாகி இபுட அபிமானமு சூப
பாரமா சலமா வினுமா தயதோனு

சதா நத வர தாயகீ நிஜ
தாசூடனு ஷ்யாம க்ருஷ்ண சோதரி
கதா மொர வினதா துரித
நிவாரிணி ஸ்ரீ ப்ருஹநாயகி

தமிழில்:

இமயனின் புதல்வியே! காப்பதற்கு இதுவே
நல்ல சமயமே! வாராயோ? அம்பாள்!

குமாரனை ஈன்றவளே! உனக்கு நிகர் எவருமில்லை!
மதிப்பிற்குரிய பெரிய நாயகியே!

உமையே! அன்ன நடையாளே! தாமதமா!
காத்திட வழியேது? உறுதியாக
என்மீது இப்போது அன்பு காட்ட
கடினமோ? மலையோ? கேளாயோ? தயை காட்ட

எப்போதும் பணிபவர்க்கு வரம் அளிப்பவளே!
நான் நிஜ பக்தனம்மா!

நீ நீல கிருஷ்ணனின் சகோதரி அன்றோ!
நீ என் முறைதனைக் கேளாயோ!

பாவங்களைப் போக்குபவளே!
பெரிய நாயகியே!

----------------------------------------------
ஆனந்த பைரவி இராகமானது, ஷ்யாமா சாஸ்திரிகளின் சொத்து எனச்சொன்னால், இப்பாடல் அதில் ஒரு இரத்தினம்.

எனினும் அனுபல்லவியில் மானவதி எனும் ஐந்தாவது மேளகர்த்தா இராகத்தின் பெயர் வருவதைக் கவனிக்க. ஒருவேளை தற்செயலோ?

பல்லவி, அனுபல்லவி மற்றும் முதல் சரணத்தில் எத்தனை எத்தனை "மா" வருகிறது சாகித்யத்தில் என்று பார்க்க!

ஹிமாசல
குமா
மானம்
மானவதி
மா
ஹம்ஸகமா
தாமசமா
மாகி
அபிமா
பாரமா
சலமா
வினுமா

அப்பாடா! இத்தனை "மா" போதுமா?

அடுத்த சரணத்திலோ, "மா" வில் இருந்து "தா"விற்கு தாவினதோ?

தா

தாயகீ
தாசூடனு
தா
வினதா
துரி

-------------------------------------------------------------------------------------------
மேற்சொன்ன பாடல் பிரஹநாயகி அம்பாளின் மீது என்றால்,
அடுத்த பாடல் பிரகதீஸ்வரர் மீதானது.
இடப்பக்கத்தில் இருந்து அடுத்து வலப்பக்கத்திற்கு!

இராகம் : ஆனந்தபைரவி
தாளம் : ஆதி
இயற்றியவர்: தஞ்சை சிவானந்தம்

எடுப்பு
காப்பதுவே உனது பாரம்

தொடுப்பு
வாய்ப்பதுவே உனது அருள்
வையகத்தில் வாழச் செய்து
(சிட்டை ஸ்வரம்)

முடிப்பு
இன்பதென்பது அறியாத ஏழை
எனை மறந்திடாமல்
நின் புகழைப் பாடிடவே
நெஞ்சில் உறை தஞ்சை பிரகதீசா!
(சிட்டை ஸ்வரம்)

இப்பாடலை காயத்ரி வெங்கட்ராகவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்: