Sunday, November 10, 2013

சிலையில் இருந்து சிவரூபம்!

பல வருடங்களுக்கு முன் ஜேசுதாஸ் பாடிக் கேட்டிருந்த இந்த மலையாளப் பாடலை, இங்கே பதிவு செய்கிறேன்.

பாடலை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை.

சிலையே கைக்கொண்டு சிவரூபம் ஆக்குன்ன
கலையுடே கால்களே கைத்தொழுனேன்

முளையே சும்பிச்சு முரளியாய் மாட்டிய
முரஹர பத பாதம் கைத்தொழுனேன்

மூகன்னு சுவரமேழுக்கும் முக்தி பிரதாஹினியாம்
மூகாம்பிகே நின்னே கைத்தொழுனேன்

காலில் சிலங்கையோடடு ஆனந்த நடனமாடும்
கனகசபாபதியே கைத்தொழுனேன்

கல்லேலே கலைவண்ணம் கண்டு
கண்களில் சிலைவண்ணம் காண,
கண்களும் காணா சிவரூபம் காண,
கைகளும் அவன் காற் தொழுமே.

மூங்கிலை ஒடித்து குழலாக மாற்றி
முரளீகானம் இசைத்திடும்
முரஹரனாம் கண்ணனின் தாமரை
மலர் பாதங்களைக் கைத் தொழுமே.

தித்திக்கும் சுவரம் ஏழுக்கும்
முக்தி அளித்தவளாம்
மூகாம்பிகை அன்னையை என்
கைகளும் பணிந்து தொழுமே.

காலிற் சதங்கைகள் ஒலிக்க அம்பலத்தில்
ஆனந்த நடனம் ஆடும்
கனக சபாபதியை என்
கைகளும் போற்றித் தொழுமே.

Sunday, November 03, 2013

அன்னையின் பெயரில் அத்தனை சக்தி!

இது ஒரு வங்காளப் பாடல் - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் காளி அன்னையை இப்பாடலில் பாடுவது வழக்கம்!



கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
காளி காளி காளி போலே
காளி காளி காளி போலே
அஜபா ஜதி ஃபுராய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்

(கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?
"காளி காளி காளி" என்று நானும் சொன்னால்
"காளி காளி காளி" என்று நானும் சொன்னால்
என் கடைசி மூச்சு வரையிலும் சொன்னால்
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)

திரி சந்த்யா ஜே போலே காளி
பூஜா சந்த்யா செ கி சாய்
திரி சந்த்யா ஜே போலே காளி
பூஜா சந்த்யா செ கி சாய்
சந்த்யா தார் சந்த்யானெ பெரெ
சந்த்யா தார் சந்த்யானெ பெரெ
கபு சந்தி நஹி பாய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்

மூன்று சந்தி வேளையிலும் காளி என்ற பெயரைச் சொன்னால்
பூஜைகளும் பிரார்த்தனைகளும் தேவையா?
பூஜைகள் அருகாமையில் இட்டுச் செல்லலாம், ஆனால்
பூஜைகள் தன்னைக்காட்டிலும் தாண்டிச் செல்ல இயலா.
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)

ஜப யக்ன பூஜா ஹோம
ஆர் கிச்சு நா மன லய்
மதனெர ஜாக யக்ய
பிரம்மமயீர் ராங்கா பாய்

(ஜபங்கள், யக்னம், பூஜை மற்றும் ஹோமங்கள்
மனதை லயிக்க விட வில்லையே
மதனின் ஜபம் எப்போதும்
அன்னையின் பாத மலர்களே.)

காளி நாமெர் எத குன்
கெபா கா ஜான்டெ பாரெ டாய்
தேவாதிதேவ் மஹாதேவ் ஜர்
பஞ்சமுகெ குன காய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்

(காளி அன்னையின் பெயரில் அத்தனை சக்தி
இருப்பதை யார் அறிவார்?
தேவாதிதேவன் மகாதேவனே அன்னையின் பெயரை
தன் ஐந்து முகங்களின் ஐந்து வாய் வழியே பாடிட
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)

Monday, October 21, 2013

Peace : விவேகானந்தர் கவிதை



சென்ற பதிவில் பார்த்த சுவாமி விவேகானந்தரின் கவிதையை இங்கு விரிவாகப் பார்ப்போமா?

சற்றே முரணான வார்த்தைகளைக் கொண்ட அக்கவிதையின் பொருள்தான் என்ன?
முதல் நான்கு வரிகளுடன் துவங்குவோம்:




Behold, it comes in might,
The power that is not power,
The light that is in darkness,

The shade in dazzling light.

விழித்திரு, அது வலிமையில் வருகிறது.
சக்தி இருப்பினும் வெளிப்படாத சக்தி அது,
இருளிலும் இருக்கும் வெளிச்சம் அது,
சுடரொளியிலும் இளைப்பாற நிழல் அது.

எப்போதும் எதையோ தேடிக் கொண்டே இருக்கும் அன்றாட வாழ்வில், எப்போது நாம் ஆன்ம சாந்தியை நாடி இருக்கிறோம்? எப்போதும் இல்லை. இருப்பினும் அது நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆன்ம சாந்தியின் இருப்பிடத்தை, இருப்பினை, அதன் வலிமையில் உணர்ந்திடுவாய், அதற்காக விழித்திரு என அறைகூவல் விடுக்கிறார் முதல் வரியிலேயே. சில நேரங்களில் விவேகானந்தர் தன் சீடர்களுக்கு இதுபோன்ற அறிவுரைகளை வழங்குவதுண்டு.

அதில் சக்தியும் அடக்கம் என்றாலும், அது எந்த ஒரு தனித்துவமான பொருளாகவும் இல்லாததால் அதில் தனியானதொரு சக்தியும் இல்லை. "இந்த குணத்துடன் கூடிய", இந்த நபர் என்று சொல்ல இயலாமல் போவது போல. மாற்றாக எல்லா குணங்களும் கூடி, சகலமும் சாந்தி பெற்று அடங்குதல். 
சக்தி தனியாக விளைவிப்பது ஆக்கம். ஆக்கமற்ற நிலையில் சக்தி இருப்பினும் அது வெளிப்படாத நிலையில் இருப்பது அது.

ஒளி இல்லாத இருளில் வேறுபாடு இல்லை. எல்லாம் ஒடுங்கிய பின் இருளில் கிடைப்பது அமைதி. எல்லா புலன்களையும் கடந்து மனமும் அமைதி அடைகையில், எல்லாமும் ஆன ஆன்ம சாந்தி ஒளி - அமைதியான இருளிலும் அஃதே பேரொளி!

சுடரொளியானாலும், அமைதியான மனம் வெண்மையான நிழற்குடையின் நிழலின் நிலைபெறும் சாந்தி. ஆகையால், அந்த நிழற்குடையாய் இருப்பதும் அது.

It is joy that never spoke,
And grief unfelt, profound,
Immortal life unlived,
Eternal death unmourned.


அது மௌனமான இன்பம்

மனதால் உணரப்படாத பாரம், ஆழமான பொருள்,
அமரத்துவமான, வாழாத வாழ்க்கை
அமரத்துவமான, துயரமில்லா இறப்பு.

இன்பமும் மகிழ்ச்சியும் எப்போதும் ஓசையோடு வெளிப்படுவது வழக்கம். ஆனால்  அதனில் ஓசையில்லாமால் மௌனமும் இன்பம். இன்பம் மட்டுமல்ல துயரமும் கூட - ஆனால் அது மனதால் உணரப்படாத பாரம். அது சாதாரணமாக மறந்து விடக் கூடியதான வழக்கமான நிகழ்வல்ல. அது ஆழமான பொருள் தருவது.
அது இறப்பில்லாத அமரத்துவமான வாழ்க்கை - ஆனால் யாரும் - அதை எந்த ஒரு ஜீவனும் வாழ்க்கையாக வாழந்ததில்லை. அதை நித்யமான இறப்பென்றும் சொல்லலாம். ஆனால் அவ்விறப்பில் துயரப்படுவதற்கோ, சோகப்படுவதற்கோ ஏதுமில்லை. 



It is not joy nor sorrow,
But that which is between,
It is not night nor morrow,
But that which joins them in.

அது, இன்பமும் இல்லை, துயரமும் இல்லை
ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்று.
அது இரவும் இல்லை அதன் மறுநாளும் இல்லை
ஆனால் அவ்விரண்டையும் இணக்கும் பாலம்.



It is sweet rest in music;
And pause in sacred art;
The silence between speaking;
Between two fits of passion --
It is the calm of heart.


அது இசையின் இடையே இனிய நிறுத்தம்
மற்றும் வரைகலையில் தொடர்வுக்கு முன்னே நிறுத்தம் ;
பேச்சிற்கு இடையே மௌனம்
ஆர்வ வெளிப்பாட்டிற்கு இடையே -
மனதின் அமைதி.




It is beauty never seen,
And love that stands alone,
It is song that lives un-sung,
And knowledge never known.

அது பார்த்திராத அழகு
மற்றும் தனியாக நிற்கும் அன்பு
அது பாடப்படாத பாடல்
மற்றும் அறியப்படாத அறிவு.



It is death between two lives,
And lull between two storms,
The void whence rose creation,
And that where it returns.

அது இரண்டு ஜென்மங்களுக்கு இடையேயான இறப்பு
மற்றும் இரண்டு புயல்களுக்கு இடயேயான அமைதி
அது படைப்பிற்கு முன்னேயான வெறுமை
மற்றும் படைப்பின் பின்னேயான பரிணாமங்கள் 




To it the tear-drop goes,
To spread the smiling form
It is the Goal of Life,
And Peace -- its only home!

அதற்கான கண்ணீர்
அதன் புன்னகையை எங்கும் எடுத்துச் சென்றிட
அதுவே வாழ்க்கையின் குறிக்கோள்
ஆம், ஆன்ம சாந்தியே - அதன் ஒரே வீடு!.

Sunday, October 13, 2013

சமீபத்திய பிரதிபலிப்புகள்

சென்ற வார இறுதியில் நாங்கள் ஒரு குழுவாக தனியொரு இடத்தில் தங்கி பட்டறை ஒன்றில் பங்குபெறும் வாய்ப்பு கிட்டியது. இதற்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க St.Louisஇல் இருந்து சுவாமி நிஷ்பாபானந்தர் வந்திருந்தார். இந்த வருடம், சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் வருடமாகையால், பாடங்களின் தலைப்பே விவேகானந்தர் தான்!. முதல் நாளின் இறுதியில் சுவாமி விவேகானந்தரின் கவிதை ஒன்று தரப்பட்டது. அந்த கவிதையில் இருந்து அடுத்த நாள் நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குப் பிடித்த வரிகளைப் பற்றிப் பேச வேண்டும் என்பதும் பணிக்கப்பட்டது.


இரண்டாம் நாள் காலையில் எழுந்து, அரை மணி நேரம் தியானம் செய்து விட்டு, தங்கி இருந்த இடைத்தைச் சுற்று சற்றே நடக்கலானேன். கண்கள் பதிவு செய்த காட்சிகளை காமிராவில் பதிவு செய்து கொண்டவாறு.
காலை விடியல் நேரம். Chattahoochee national forest எனப்படும் வனத்தின் எல்லைப்பகுதியில் தங்கி இருந்தால், சுற்றி இருந்த இடம் முழுதும் அடர் மரங்கள். சாலையில் இருந்து உள்ளே வருவதற்கான பாதை மட்டும் இருந்தது, அப்பாதை ஜல்லிக் கற்களால் செப்பனிடப் பட்டிருந்தது.






நடக்கையில் காலணிகள் கற்களோடு உரசி எழுப்பிய ஓசையும் என்னுள்ளே எழும்பிய கேள்விகளுக்கு கவிதை வடிவம் தந்தது:

As I am taking this leisurely stroll, 
I hear my sandals rubbing on the gravel   
and making a grinding sound.
As the grind begins to rhyme,
Wont my heart sing an hymn?
Listening to the pauses between the grind -
Is the Peace bestowed in those pauses?
Or Is it in the rhyming sound too?
Do the distant mountains indicate
how far I am away from the peace,
even if it is really so close.
The sun attempts to brighten the sky,
yet blocked by the murky clouds.
Oh nature, while you are a silent witness
on the outside, is there a
natural witness right within me?

இந்த எண்ண ஓட்டங்களுக்குக் காரணம் வேறொன்றும் இல்லை. நேற்றுப் படிக்கப் பணிக்கப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் கவிதைதான். "Peace" என்று தலைப்பிடப் பட்டிருந்த அக்கவிதையின் முதல் வரியிலேயே விவேகானந்தரின் அறிவுரை அறிவிப்பாய் அமர்ந்திருந்தது. கவிதை வரிகளை காட்சிப் படமாக இங்கு பார்க்கலாம்.


Composed at Ridgely Manor, New York, 1899.

Behold, it comes in might,
The power that is not power,
The light that is in darkness,
The shade in dazzling light.

It is joy that never spoke,
And grief unfelt, profound,
Immortal life unlived,
Eternal death unmourned.

It is not joy nor sorrow,
But that which is between,
It is not night nor morrow,
But that which joins them in.

It is sweet rest in music;
And pause in sacred art;
The silence between speaking;
Between two fits of passion --
It is the calm of heart.

It is beauty never seen,
And love that stands alone,
It is song that lives un-sung,
And knowledge never known.

It is death between two lives,
And lull between two storms,
The void whence rose creation,
And that where it returns.

To it the tear-drop goes,
To spread the smiling form
It is the Goal of Life,
And Peace -- its only home!
-Swami Vivekananda

"The Power that is not the Power" என்று விவேகானந்தர் எதைக் குறிக்கிறார்? அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம். அதற்குள் உங்களுக்குத் தோன்றியதைப் பகிர்ந்து கொள்ளலாமே?



Tuesday, October 01, 2013

ஆருக்கும் அடங்காத நீலி

ராகம் : பேகடா
தாளம்: ஆதி
இயற்றியவர்: ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

பல்லவி
ஆருக்கும் அட‌ங்காத‌ நீலி - பொன்
அம்ப‌ல‌த்தாடும் காளி


அனுபல்லவி
பாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை)

பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை


சரணம்
ப‌ர‌மநாதன்த‌னைப் பாதியாய் மாற்றினாள்

ப‌ர‌ந்தாம‌ன் முக‌ம‌தில் பல்வில‌ங்கேற்றினாள்
சிர‌ம‌த‌றுபட‌வே விதித‌னைத் தூற்றினாள்

ஹ‌ரிகேச‌ ந‌க‌ர் வாழும் எம்மைக் காப்பாற்றினாள்

சிட்டை ஸ்வரங்கள்
;நீத பமாத மகரிஸ நிதப | ஸாகரி காநித | நீதப மபதப||
ரிஸ்க்ரி க்மாக் ரிஸ்நிரி நீதப | ஸாக்ம் ப்தநீ |தபஸ்ப அமத||
பரி (ஆருக்கும்)


இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் பாடிட கேட்கலாம்:




இந்தப் பாட்டின் வரிகள் பொருளை, இல்லை இல்லை கதையை - கீதாம்மா அவர்களது பதிவில் கதையையும் அதன் காரணத்தையுமாக கேட்க வேண்டுகிறேன்.
கதைகளுக்கான சுட்டிகள்:

பொன் அம்பலத்தாடும் காளி (சிவனும் சக்தியும் ஒன்றே. பெயர் அளவிலேயே வேறுபாடு.  உண்மையில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.)
பாருள் பரபிரம்மத்தை அடக்கிய சாயை
பாடும் வேதங்களாலும் அறியாத மாயை
பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள்
சிரம் அது அறுபடவே 'விதி'தனை தூற்றினாள் பகுதி 1 பகுதி 2 பகுதி 3



Monday, July 22, 2013

கண்ணனைக் காணவில்லை

எடுப்பு
கண்ணனை இன்னமும் காணவில்லை - அவன்
கனிமுகமும் என் நினைவில் இல்லை
கண்ணனை இன்னமும் காணவில்லை - அவன்
கார்குழலும் என் காதினில் கேட்கவில்லை

தொடுப்பு

வண்டுகள் சூழும் சோலையில் தேடியும்
வான்முகில்களின் இடையே தேடியும்
வருவான் வருவான் - வருவான் என
வழிமேல்விழி வைத்தும் மணி வண்ணணைக்
 (கண்ணனை இன்னமும்...)

வீதியில் ஆடும் கோபியர் பின்னேயும்
மாடுகள் மேய்க்கும் ஆயர் பின்னேயும்,  தயிர்
கொட்டி வைத்திருந்த உரியின் பின்னேயும், அவனைக்
கட்டி வைத்திருத்த உரலின் பின்னேயும்
தேடியும் தேடியும் தேடியும்
 (கண்ணனை இன்னமும்...)

முடிப்பு
முன்னம் முலையில் விடம் உண்டதனால்
இன்று இப்போது காணாமற் போனானோ? மண்
தின்ற வாய் திறந்து அண்டம் காட்டியதனால்
அண்டம் தனை விட்டு அகன்றே போனானோ?
ஆலிலையில் ஒரு காலைத் தூக்கியதால்
அமிழ்ந்தே அமிழ்ந்தே ஆழ்கடலுக்கடியே போனானோ?
(கண்ணனை இன்னமும்...)

சகடனை உதைத்து அவன் உருள்வதைக்
காணச் ஓடிச் சென்றானோ!
காளியன் வாலினால் கட்டுண்டது போல் மயங்கிப் போனானோ?
குழலூதி கறவையை அடக்கச் சென்றானோ?
கன்றினை தடியாய் மாற்றி விளாங்கனி பறிக்கச் சென்றானோ?
குன்றினைத் தூக்கி குடைபிடிக்கச் சென்றானோ?
(கண்ணனை இன்னமும்...)
பிணை மருத மரங்களை சாய்க்கச் சென்றானோ?
ஆனையை காலனும் அண்டாது காக்கச் சென்றானோ?
வஞ்சகன் கஞ்சனை வாட்டவே சென்றானோ?
பாஞ்சாலியின் மானம் காக்கவே சென்றானோ?
பஞ்சவர்க்குத் தூதாகச் சென்றானோ? பின்னர்
பார்த்தனுக்குத் தேரோட்டச் சென்றானோ?
(கண்ணனை இன்னமும்...)

பாவை நான் பாடும் பாவைக் கேளானோ
பாவையின் வாட்டத்தைத் தான் தீர்ப்பானோ
மாலையும் வாடுது - மாலை நேரமும் கூடுது
மன்னவா மன்னவா - மனதுக்கினிய
(கண்ணனை இன்னமும்...)

















எங்கும் எங்கும் கண்ணன் என இருக்க
எங்கோ எங்கோ ஏன் தேடினேன்
எங்கும் மறைபவன் கண்ணன்
எங்கும் தெரிபவன் கண்ணன்
எல்லாம் எல்லாம் எல்லாம் எல்லாம்
எல்லாம் எல்லாம் எல்லாமும் கண்ணன்!

Wednesday, June 19, 2013

ஓடும் கங்கை நாறும் கொன்றை

ஓடும் கங்கை நாறும் கொன்றை

சுடாத நிலவு சூடும் பிரான்

விடாது உலையில் வாட்டி எடுத்தனன்

விடாது ஒட்டும் வினையை.


தண்டை ஒலிக்க வெண்டையம் இனிக்க

கிண்கிணி கிலுகிலுக்க சதங்கைகள் கொஞ்ச  

கண்கழலில் வாணியும் சிலம்பில் பரவிந்தும்

அணியழகு சிங்கார செந்தில் வேலவன்;



பிரானின் குமாரன் உமாவின் சுதனாம்

சூரனை வேலினால் வென்ற செவ்வேள் மா

மரத்தை இரண்டாயப்் பிளந்து தன் செங்

கரத்தால் காட்டினான் அருள்.


--------------------------------------------

கந்தன் அணியும் ஆபரணங்களுக்கான மேற்கோட்கள்:


தண்டை:

சிந்திக்கில்லேன் நின்று சேவிக்கில்லேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கில்லேன்
- கந்தரலங்காரம்


வெண்டையம்:

காலின் கழலோசையு நூபர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களின் ஓசைய தாநட மிடுவோனே
- திருப்புகழ்


கிண்கிணி:

மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினாலுலகம் கேட்டதுவே.
- கந்தரலங்கரம்


சதங்கை:

மறைசதுர் விதந்தெரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
மலரடி வணங்க என்று பெறுவேனோ
- திருப்புகழ்

தண்கழல்:

மதுரவாணியுற்ற கழலோனே
- திருப்புகழ்

சிலம்பு:

இனியநாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்
- திருப்புகழ்