ஆதியவன் சோதியாம் அன்னையவள் சக்தி
ஆதரிப்பாள் அன்புடனே அனுதினமும் போற்றி
நீதிநிலை நாட்டிடவே தீமையாவும் ஓட்டிடுவாள் சக்தி
நீடுதனி சூலமதை ஏந்திடுவாள் போற்றி
மூடச்சித்தமும் சிதைபட விடுவாளோ சக்தி
பாடியுன்னை சரண் புகுவேன் போற்றி
வையமெல்லாம் நினது கண்மணியாம் அலர்மேல்மகளே
வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்வாயே நீயே
பொன்னென மணியென மின்னிடும் அன்னையே
உன்னையன்றி உலகத்தோர் உழல்வாரில்லையே.
இணைமலர்த் திருவடி இறைஞ்சிப் புகுந்திட
இனியில்லைத் துயரென அடைந்தேன் தஞ்சம்.
ஆலயமாய் அமைந்ததுபார் அன்பர் மனதும்நீ அமர
காலமெல்லாம் காத்திடுவாய் கருத்ததனை கலைமகளே
வேதமும் நாதமும் தாயே நின் உறைவிடம்
வேண்டுவோர் திகழ்ந்திட வரமளிப்பாய் நித்தமும்
போனது போகட்டுமெனப் பணிவேன் நின்பதம்
போகாமல் நீயெனக்களிப்பாய் ஞானம் யாவும், உயர் ஞானம் யாவும். ===================================================
கேட்கமாலேயே பால் நினைந்தூட்டுவதுவாம் அன்னையின் கருணை.
அதுபோலவே,
கேட்காமலேயே பாடிப் பதிவேற்றி இருக்கிறார் சுப்பு தாத்தா,
அனைவரும் கேட்டு அன்னையின் அருள் பெற: