Monday, June 03, 2024

ஆடல் வல்லான் - எம்மை ஆளவந்தான்!

எடுப்பு

டல் வல்லான் - எம்மை ஆளவந்தான்!

பாடல்பெற்றத் தலங்கள் பலவிருக்கையில்

ஆடல் வல்லான் - இங்கெம்மை ஆளவந்தான்!


தொடுப்பு

தேடிய இருவர் காணக் கிடைக்காகூத்தன்,

தேய்ந்த பிறை சூடிய பெருமான் நினைவில்

தேய்ந்த இடை இன்னமும் தேய்கையில் 

ஆடல் வல்லான் - இங்கெம்மை ஆளவந்தான்!


முடிப்பு

காவிரியின் இருகரை நெடுகிலும் 

கயற்கொடி பாண்டிய நாட்டிலும்

தொண்டை கொங்கு மலை நடுநாட்டிலும்

துளுவம் ஈழம் வடநாட்டிலும் பாடல் பெற்ற

ஆடல் வல்லான் - இங்கெம்மை ஆளவந்தான்!


------------

இன்று காலை எழுகையில் மனதில் நிலைத்த வரிகளை விரித்து எழுதியது.

------------

No comments:

Post a Comment