Sunday, November 10, 2013

சிலையில் இருந்து சிவரூபம்!

பல வருடங்களுக்கு முன் ஜேசுதாஸ் பாடிக் கேட்டிருந்த இந்த மலையாளப் பாடலை, இங்கே பதிவு செய்கிறேன்.

பாடலை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை.

சிலையே கைக்கொண்டு சிவரூபம் ஆக்குன்ன
கலையுடே கால்களே கைத்தொழுனேன்

முளையே சும்பிச்சு முரளியாய் மாட்டிய
முரஹர பத பாதம் கைத்தொழுனேன்

மூகன்னு சுவரமேழுக்கும் முக்தி பிரதாஹினியாம்
மூகாம்பிகே நின்னே கைத்தொழுனேன்

காலில் சிலங்கையோடடு ஆனந்த நடனமாடும்
கனகசபாபதியே கைத்தொழுனேன்

கல்லேலே கலைவண்ணம் கண்டு
கண்களில் சிலைவண்ணம் காண,
கண்களும் காணா சிவரூபம் காண,
கைகளும் அவன் காற் தொழுமே.

மூங்கிலை ஒடித்து குழலாக மாற்றி
முரளீகானம் இசைத்திடும்
முரஹரனாம் கண்ணனின் தாமரை
மலர் பாதங்களைக் கைத் தொழுமே.

தித்திக்கும் சுவரம் ஏழுக்கும்
முக்தி அளித்தவளாம்
மூகாம்பிகை அன்னையை என்
கைகளும் பணிந்து தொழுமே.

காலிற் சதங்கைகள் ஒலிக்க அம்பலத்தில்
ஆனந்த நடனம் ஆடும்
கனக சபாபதியை என்
கைகளும் போற்றித் தொழுமே.

Sunday, November 03, 2013

அன்னையின் பெயரில் அத்தனை சக்தி!

இது ஒரு வங்காளப் பாடல் - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் காளி அன்னையை இப்பாடலில் பாடுவது வழக்கம்!



கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
காளி காளி காளி போலே
காளி காளி காளி போலே
அஜபா ஜதி ஃபுராய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்

(கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?
"காளி காளி காளி" என்று நானும் சொன்னால்
"காளி காளி காளி" என்று நானும் சொன்னால்
என் கடைசி மூச்சு வரையிலும் சொன்னால்
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)

திரி சந்த்யா ஜே போலே காளி
பூஜா சந்த்யா செ கி சாய்
திரி சந்த்யா ஜே போலே காளி
பூஜா சந்த்யா செ கி சாய்
சந்த்யா தார் சந்த்யானெ பெரெ
சந்த்யா தார் சந்த்யானெ பெரெ
கபு சந்தி நஹி பாய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்

மூன்று சந்தி வேளையிலும் காளி என்ற பெயரைச் சொன்னால்
பூஜைகளும் பிரார்த்தனைகளும் தேவையா?
பூஜைகள் அருகாமையில் இட்டுச் செல்லலாம், ஆனால்
பூஜைகள் தன்னைக்காட்டிலும் தாண்டிச் செல்ல இயலா.
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)

ஜப யக்ன பூஜா ஹோம
ஆர் கிச்சு நா மன லய்
மதனெர ஜாக யக்ய
பிரம்மமயீர் ராங்கா பாய்

(ஜபங்கள், யக்னம், பூஜை மற்றும் ஹோமங்கள்
மனதை லயிக்க விட வில்லையே
மதனின் ஜபம் எப்போதும்
அன்னையின் பாத மலர்களே.)

காளி நாமெர் எத குன்
கெபா கா ஜான்டெ பாரெ டாய்
தேவாதிதேவ் மஹாதேவ் ஜர்
பஞ்சமுகெ குன காய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்

(காளி அன்னையின் பெயரில் அத்தனை சக்தி
இருப்பதை யார் அறிவார்?
தேவாதிதேவன் மகாதேவனே அன்னையின் பெயரை
தன் ஐந்து முகங்களின் ஐந்து வாய் வழியே பாடிட
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)