Tuesday, June 27, 2006

ஆறு

ஆறு பேரில் ஒருவராக அழைக்கப்பட்டவர் - கார்த்திகேயன் - தன் 'ஆறு' பதிவில் - என் பெயரையும் அழைக்க - அதனால் இந்த ஆறு பதிவு. அழைப்புக்கு நன்றி கார்த்திகேயன்.

ஒரு சில 'ஆறு' பதிவுகளை படித்திருந்தாலும், இதுவரை ஆறு என்று பதிய யோசிக்கவில்லை. அதனால் அதிகம் யோசிக்காத உடனடி பதிவாகி விட்டது.

இந்தியாவில் பிடித்த ஆறு
புதுச்சேரி
திருவனந்தபுரம்
கேரளக் கடற்கரை
மும்பை நரிமன் பாய்ண்ட்
ஹைதராபாத்
்திருப்பதிதிருப்பதிதமிழ்நாடுதமிழ்நாடுதமிழ்நாடு

தமிழ்நாட்டில் பிடித்த ஆறு
கூட்டமில்லாத கோவில்கள்
விண்ணைத் தொட்டு நிற்கும் கோபுரங்கள்
ஆள் அரவமற்ற நூலகங்கள்
புதிய ஊர்களுக்கு பேருந்துப் பயணம்
திருடு போகாத ஆற்று மணல்
இலக்கிய ஆர்வம்

தமிழகத்தில் பிடிக்காத ஆறு
மொழி அரசியல்
ஹிந்தி எதிர்ப்பு
இலங்கை அகதிகள் நிலை
பார்முலா திரைப்படங்கள்
விளையாட்டுத் துறையில் கவனமின்மை
சுற்றுப்புற சூழல் மாசு

கர்நாடக சங்கீத வாய்ப்பாடகர்களில் ஆறு
பாம்பே ஜெயஸ்ரீ
நித்யஸ்ரீ மஹாதேவன்
சுதா ரகுநாதன்
விஜய் சிவா
டி.எம்.கிருஷ்ணா
மதுரை டி.என்.சேஷகோபாலன் (ஹரிகதை)

தமிழ் பின்னணி பாடகர்கள்களில் ஆறு
எஸ்.பி.பி
உன்னி கிருஷ்ணன்
ஹரிணி
ஜேசுதாஸ்
சித்ரா
கார்த்திக்

சமீபத்தில் வியந்து படித்த பதிவுகளில் ஆறு
ஜி.ரா
சுகா
குமரன்
எஸ்.கே
வெற்றி
நேசகுமார்


சரி, போதும் இந்த விளையாட்டு, ஆறு பேரை அழைச்சிடலாமா...

முத்து
வாசன்
ராம்கி
என்றென்றும் அன்புடன் பாலா
பொன்ஸ்
தருமி

Tuesday, June 20, 2006

இன்று கேட்ட இரண்டு பாடல்கள்

இன்று அலுவலகத்தில் வேலையின் ஊடேயே தூள்.காம் -இல் பாடல்கள் கேட்கக் கிடைத்தது.

இதுபோன்ற சமயங்களில் இதுவரை கேளாமல்போன பாடல்களை கேட்டுப்பார்ப்பது வழக்கம்.

இவற்றில் மிகப்பழைய பாடல்களும், இடைக்காலப் பாடல்களும் அதிகம்.

இன்று கேட்ட பாடல்களில் - இந்த இரண்டு பாடல்களும் கேட்பதற்கு நன்றாக இருந்தது.

இரண்டிலுமே பெண் பாடகி ஸ்வர்ணலதா.

முதல் பாடல்:
ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஜெயசந்திரன், ஸ்வர்ணலதா
படம்: பொண்ணுக்கேத்த புருஷன் (!!!:-))

இரண்டாவது:
நான் ஏரிக்கரை மேலிருந்து
கே.ஜே.ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா
படம்: சின்னத்தாயி

பாடல் சுட்டிகளுக்கு dhool.com் க்கு நன்றி.

Sunday, June 18, 2006

நிஜ பொன்னியின் செல்வன் ?

கார்த்திகேயனின் வலைப்பூவில் மறுமொழியாய் இடவேண்டியது - கொஞ்சம் பெரிதாய் போய் விட்டதால் - தனிப் பதிவு். (ஹே...ஹே...)

இது எப்படி இருக்கு?

பொ. செல்வன் - மாதவன்

வந்தியத்தேவன் - சூர்யா

ஆ கரிகாலன் - விக்ரம்

சேந்தன் அமுதன் - ஸ்ரீகாந்த்

ஆழ்வார்கடியான் - திலீப் (நன்றி - கார்த்திகேயன்)

குந்தவை - ஸ்நேகா

பூங்குழலி - மீரா ஜேஸ்மைன்

நந்தினி - சதா

வானதி - அஸின்

சு.சோழர் - கமல் (நன்றி - ஜி. ராகவன்)

பெ. பழுவேட்டையார் - நாசர்

சி. பழுவேட்டையார் - பிரகாஷ்ராஜ்

கந்தமாறன் - பசுபதி


இன்றைய நடிகர்களில் யார் இந்த பாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றொரு அனுமானமே இது. நடைபெற சாத்தியம் இல்லாவிட்டாலும் - கற்பனையாவது செய்து பார்ப்போமே!

இவ்வளவு முக்கிய பாத்திரங்கள் (நடிகர்கள் அல்ல)் அமையப்பெற்ற கதை கொண்ட திரைப்படம் ஏதும் இதுவரை வந்திருக்காது என நினைக்கிறேன்!

Thursday, June 08, 2006

ஸ்ரீமத் ஸ்வாமி வீரேஸ்வரானந்தா

பெங்களூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஸ்வாமி வீரேஸ்வரானந்தா பற்றிய புகைப்படத்தொகுப்பு - கூடவே ராமகிருஷ்ண மடத்திலிருந்து வாசகங்கள் - பின்னணியில் சிதார் இசை.


SrimatSwamiVireswarananda.pdf
Powered by Castpost

Saturday, June 03, 2006

படித்தால் வேலை, வேலை கிடைத்தால் சோறு, ஆனால்...

ஒன்றாய் பிறந்தோம், ஒன்றாய் வளர்ந்தோம்.

படித்தால் வேலை, வேலை கிடைத்தால் சோறு என்றார்கள்.

ஆனால் இடையில் இட ஒதுக்கீடு...

ஒருவனுக்கு படித்தாலும் வேலை இல்லை.

ஒருவனுக்கு படிக்காவிட்டாலும் வேலை.

இப்போதுதான் சொல்கிறார்கள்,

படித்தால் மட்டும் போதாது,

'சரியான' சாதியில் பிறந்திருக்க வேண்டுமாம்.

அடடா, இது அப்போதே தெரிந்திருந்தால்,

வேறு 'உயர்த்தப்பட்ட' சாதியில் பிறந்திருக்கலாமே...!