Friday, September 21, 2007

ரோஜா மணம்


சென்ற வெண்பா முயற்சியைத் தொடர்ந்து அடுத்த முயற்சி:

இந்த முறையும் தலைப்பும் ஊக்கமும் வாஞ்சிநாதன் அவர்களிடம் இருந்தே:
ரோஜாப்பூ மல்லிகை ஆன கதை

ரோஜாவை மல்லிகை என்றழைத்தால் மாறிடுமா

ரோஜாவின் வாசனை? வாசனையும் நாதன்

தருவித்த போது மலர்கொண்ட நாமத்

தினாலல்ல பூவின் மணம்!

4 comments:

  1. Anonymous10:23 AM

    படமும் பாவும் சூப்பர்!



    மலர்கொண்ட ரோஜாவே, மணம் வேசும் ரோஜாவே!

    ReplyDelete
  2. வாங்க ரஜிதா!

    ReplyDelete
  3. வெண்பா அருமை வியக்கின்றேன் என்னருமை
    நண்பா நவில்கின்றேன் நாலுவரி -பண்பாய்
    மணமில்லா ரோசாவும் மல்லிகைக் கொப்போ?
    கணமேனும் சிந்திப்பீர் கண்டு! ---அகரம்.அமுதா

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வெண்பாவில்!
    என்பால் கொண்ட அன்பால்
    தந்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete