Showing posts with label மழலை. Show all posts
Showing posts with label மழலை. Show all posts

Sunday, January 23, 2011

நானொரு நாத்திகன்

குப்பறையில் அந்த ஆசிரியர் தன் முன்னாலிருந்த மாணவர்களைப் பார்த்து பெருமையுடன் சொன்னார், "நானொரு நாத்திகன்" என்று. அவருக்கு எப்போதுமே இதிலொரு தனிப்பெருமை இருக்கத்தான் செய்தது. இல்லாத ஒரு கடவுளை இருப்பதாக நினைத்துக் கொண்டு, கற்பனையைக் கடவுளெனக் கொள்வாரும் உண்டோ? கண்ணால் காண்பது மட்டுமே மெய். அதுவே அறிவியல். அறிவியல் உலகத்துக்குப் பற்பல அற்புதங்களைச் சமைத்துத் தந்திருக்கிறது. கடவுள் என்றிருந்தால், அறிவியல்தான் அந்த கடவுள். அதைவிடுத்து கல்லையும் கற்பனை மூட்டைகளையும் சுமந்து கொண்டு காலத்தை விரையம் செய்பவர்களைப் பார்த்தால் - அவர்களைப் புரிந்து கொள்வது என்பது அவருக்குச் சற்றுக் கடினமாகவே இருந்தது.

அவர் எப்போதும் தன் சக ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் தானொரு நாத்திகன் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருப்பது வழக்கம். அன்றைக்கு அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை - தானொரு நாத்திகன் என்னும் அறிவியல் உண்மையினை(?!) தனதருமை மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கின்ற அற்புத அவா அவரையும் மீறி அதை அவர்களிடம் வெளிப்படுத்தச் செய்தது.

"அன்பு மாணவ மணிகளே, நானொரு நாத்திகன். உங்களில் யாரெல்லாம் நாத்திகர்களோ, உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம்." என்றார். மாணவர்களில் பலருக்கும் 'நாத்திகன்' என்றால் என்னதென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், ஆசிரியரை மறுத்துச் சொல்லவோ எதிர்த்துச் சொல்லவோ அவர்களுக்கு துணிவில்லை. எல்லோரும் தங்களை கைகளை உயர்த்தினார்கள் - ஒரேயொரு சிறுமியைத் தவிர.

ஒரு சிறுமியைத் தவிர அனைவரும் தத்தம் கரங்களை உயர்த்தியது, ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு சிறுமி மட்டும் தன் கரத்தை உயர்த்தாது அவரை வியப்பினில் ஆழ்த்தியது.

அந்த வியப்பினூடே, "சின்னஞ்சிறு பெண்ணே! - நீ மட்டும் இங்கே ஆத்திகப் பெண்ணோ!." என்றார்.

"ஆம். ஐயா. கண்ணன் தான் என் கடவுள்." என்றாள் அந்தச் சிறுமி.

காணத ஒன்றுக்குக் கண்ணன் என்று பெயரும் இட்டு, அதைக் கடவுள் என்றும் வணங்குவது அவருக்கு என்றுமே விளங்காதது. தனக்குப் புரியாதது, அச்சிறுமிக்கும் புரியாதது என்கிற முடிவில், "அதற்குக் காரணம் என்ன?" என்று வினவினார்.

"ஐயா, கண்ணன் எனக்கு கடவுள் மட்டுமல்ல, ஒரு தோழனும் கூட. அவனோடு நான் விளையாடும் நேரங்களில் எல்லாம் எல்லையில்லா ஆனந்தம் என்னுள் மேலிடுகிறது. என்னவென்று சொல்லவியலா ஆனந்தம் அது. ஏனிப்படி என எண்ணிப்பார்த்தால் என் என் அப்பாவையும், அம்மாவையும் தான் காரணம் சொல்ல வேண்டும். என் அப்பாவும், அம்மாவும் ஆத்திகர்கள். அதனால் நானும் அப்படியே இருக்கின்றேன் போலவும்!" என்றாள் அந்தச் சிறுமி.

"அப்பாவும், அம்மாவும் தான்" என்றதைக் கேட்டதும் ஆசிரியருக்கு உடனே கோபம் நிறையவே வந்தது. "என்னது?. இதெப்படி ஒரு நல்ல காரணமாக இருக்க முடியும்? அப்பாவும் அம்மாவும் ஆத்திகர்களானால், நீயும் அப்படித்தான் ஆக வேண்டுமா என்ன? அப்படியானால், உன் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்தால், நீ எப்படி இருப்பாயோ?" என்றார் கிண்டலாக.

சிறுமியிடம் இருந்து நிதானமாக பதில் வந்தது. "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் - நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாளே பார்க்கலாம்! - சக மாணவர்களின் கைத்தட்டல்கள் அவ்வகுப்பறையை நிறைத்திட.

Friday, December 31, 2010

2011 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என் வாசகத்தில்
முத்துசாமி தீக்ஷிதர் பாடல் மட்டுமல்ல,
மழலைப் பாடலும் உண்டு!

மழலைகளுக்கான துள்ளல் பாட்டொன்று இங்கே.
ஆனா, ஆவன்னா சொல்லித் தரும் பாடல், நீங்களே கேட்டுப் பாருங்கள்:



அடுத்து, மழலைகள் தேசிய கீதம் பாடுவதின் இனிய தொகுப்புன்று:


இதோ, 2011 எனும் இனிய புத்தாண்டு பிறக்கறது.
இந்த இசையில் வேகமாக வாசிக்கப்படும் வயலின் போல, 2011 துள்ளலோடு துவங்கட்டும்,
துலங்கட்டும்:


2011 எல்லோருக்கும் எல்லா வளங்களும் வந்துசேர வழி வகுக்க வாழ்த்துக்கள்!

Saturday, October 23, 2010

ச இ த ப

அது என்னது ச இ த ப?

நீங்களே கேளுங்களேன்!
Get this widget | Track details | eSnips Social DNA


நடுவிலே லம்போதர லகுமிகரா வில் கொஞ்சம் வருது!

Sunday, April 11, 2010

நேதி நேதி

யானைப் பாட்டு!

பாடகர்:
யானை யானை யானை!
மரங்களில் தாவும் யானை!

மழலை:
இல்லை, மரங்களில் தாவுவது குரங்கு!

பாடகர்:
ஆமாம், மரங்களில் தாவும் குரங்கு!
குரங்கு, கடலில் நீந்தும் குரங்கு!

மழலை:
இல்லை, கடலில் நீந்துவது மீன்கள்!

பாடகர்:
ஆ.., கடலில் நீந்துவது மீன்கள்!
மீன்கள், குரைக்கும் மீன்கள்!

மழலை:
இல்லை, இல்லை, குரைப்பது நாய்கள்!

பாடகர்:
அட,ஆமாம்!, குரைப்பவை நாய்கள்!
நாய்கள், எலிகளை துரத்தும் நாய்கள்!

மழலை:
இல்லை, எலிகளை துரத்துபவை பூனைகள்!

பாடகர்:
ஆமாம்,ஆமாம்!, எலிகளை துரத்துபவை பூனைகள்!
பூனைகள், கொக்கரக்கோ எனக்கூவும் பூனைகள்!

மழலை:
இல்லை, பூனைகள் மியாவ் எனக் கத்தும்.
கொக்கரக்கோ எனக்கூவுவது சேவல்!

பாடகர்:
சரிதான், கொக்கரக்கோ எனக்கூவுவது சேவல்!
சேவல், தேனீக்கூட்டில் ஏறித் தேனெடுக்கும் சேவல்!

மழலை:
இல்லை, இல்லை, தேனீக்கூட்டில் ஏறித் தேனெடுப்பது கரடி!

பாடகர்:
ஆமாம்!, தேனீக்கூட்டில் ஏறித் தேனெடுப்பது கரடிகள்!
கரடி, நாக்கை நீட்டி பூச்சியைப் பிடிக்கும் கரடி!

மழலை:
இல்லை, இல்லை, நாக்கை நீட்டி பூச்சியைப் பிடிப்பது தவளை!

பாடகர்:
ஆமாம், நாக்கை நீட்டி பூச்சியைப் பிடிப்பது தவளை!
பெரிய தும்பிக்கை கொண்டது தவளை!

மழலை:
இல்லை, இல்லை, தும்பிக்கை கொண்டது யானை!

பாடகர்:
அட, ஆமாம், அதான் முதல்லேயே சொன்னேனே யானை என்று!
இது யானைப் பாட்டு என்று!

மழலை:
உனக்கு யானையைப் பற்றி ஒண்ணும் தெரியலை!
எந்த விலங்கைப் பற்றியும் தெரியலை!




பார்த்தாச்சா, இதுபோலத்தான் 'நேதி நேதி' யும்...

"நேதி நேதி" ன்னு ஆத்ம போதம் பகுதியிலே முன்பே பார்த்திருக்கோம் அல்லவா இங்கே!

Saturday, August 30, 2008

அமெரிக்க சுற்றுப்பயணம் போகலமா சிட்டுக்களே?

குழந்தைகளே, அமெரிக்க சுற்றுலா பயணம் போகலாமா?, நீங்களும் வாரீங்களா? உங்களுக்கு அமெரிக்காவில் என்னென்ன இடங்கள் பிடிக்கும்? நியூ யார்க், வாஷிங்டன், ஒர்லாண்டோ, லாஸ் வேகஸ், கலிபோர்னியா டிஸ்னி லேண்ட் இப்படி நிறைய இடங்கள் உங்களுக்குத் தெரியும் இல்லையா? இந்த இடங்களெல்லாம், பெரிய ஊர்கள் அல்லவா? இங்கே இருக்கும் எல்லாமே பெரிசு பெரிசா இருப்பது ஆச்சரியமாக இருக்கு இல்லையா!. ஆனா, இவற்றில் பலவும் செயற்கை அழகு. செயற்கை அழகைக் காட்டிலும் இயற்கை அழகு, இன்னும் இனிமையா இருக்கும். மனதை அப்படியே இளக வைக்கும். இந்தியாவில் இருந்து, சுவாமி விவேகானந்தர் முதன் முறை அமெரிக்கா வந்திருந்தபோது, இங்கே இருக்கிற இயற்கை அழகைப் பார்த்து, அப்படியே பரவசப் பட்டாராம். நீங்களும் விவேகானந்தரைபோல் நாளைக்கு வரவேண்டுமல்லவா, நீங்களும் இந்த இயற்கை அழகை இரசிக்கலாமே!.

சிறுவர், சிறுமியரே, வாங்க, நம் இயற்கைச் சுற்றுலாவைத் துவங்கலாம்.

* அமெரிக்கா மேப் வரைபடத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன உடனே தெரிகிறது?. இரண்டு பக்கமும் இரண்டு பெரிய 'பெருங்கடல்'கள் இருக்குது இல்லையா?. கிழக்குப் பக்கம் அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்குப்பக்கம், பசுபிக் பெருங்கடலும் இருக்கு இல்லையா? இந்தக் கடல்களும் நிலமும் சேரும் இடத்தில் நிறைய கடற்கரைகள் இருக்கு. (கடல் + கரை = கடற்கரை). கடற்கரையில் என்ன இருக்கும்? நிறைய மணல் இருக்கும், இல்லையா?. அப்புறம் நல்லா காத்து வரும், இல்லையா!


* அடுத்து வரைபடத்தில் நீங்கள் கவனிக்கக் கூடியது, கிழக்குக் கடற்கரையின் கடலில் நீளமாக, நீட்டிக் கொண்டிருக்கும் ஃபோளிரிடா மாகாணம். இங்கே, தாழ்வான சதுப்பு நிலங்களில் நிறைய பறைவைகளைப் பார்க்கலாம். பலவிதமான பறவைகள், பலதூரம் பயணம் செய்து இங்கே வந்திருக்கும். வருடம் முழுதும் இந்தப் பறவைகள், ஒரு இடம் விட்டு ஒரு இடம் என இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். அவைகளுக்கு, யாதும் ஊரே, யாவரும் கேளிர். வண்ணப் பறவைகளைக் காணும்போது, மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்று நம்ம பாரதியார் சொல்லி இருக்காரு இல்லையா! படத்தில் எவர்கிளேட்ஸ் தேசிய பூங்காவில் அழகான வெள்ளை வெளீரென ஒரு கொக்கு இருக்கிறது அல்லவா. இதற்குப் பெயர் - பெரிய வெள்ளை ஹெரான் (The great white heron) என்பது.


* அடுத்து, மேப்பில் கிழக்குப் பக்கதில் நிலத்தின் நடுவே கடல்போல நிறைய நீர் இருக்குதல்லவா? இவை ஐம்பெரும் ஏரிகள் (Great Lakes) எனப்படும்.
இந்த ஐந்து ஏரிகளில் இரண்டில் இருந்து வெளியேரும் ஆறில் இருந்து நயகரா நீர்வீழ்ச்சியே பிறக்கிறதாம். தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் என்று நீங்கள் படிச்சிருப்பீங்க இல்லையா, அதுபோல, இந்த ஐந்தும் பெரியது!


* பிரம்மாண்டமான நயகரா நீர்வீழ்ச்சியைப் பற்றி நாம நிறைய பேரு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா. படத்தில் பெரிய படகில், இந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகே சென்று பார்க்கிறார்கள் பாருங்க. இதற்குப் பெயர் 'Maid of the Mist' என்று வைத்திருக்கிறார்கள். Misty-ஆக அந்த இடமே இருக்கு இல்லையா. அதன் பக்கத்திலே போகும்போது, அதன் சாரலில் நாம்ப நனைய, சுகமா இருக்கும் இல்லையா. நம்ப கவிஞர் வைரமுத்து, இந்த இடத்துக்கு வந்து பார்த்தபோது, "இந்த நீர் வீழ்ச்சியில் நீருக்கு இது வீழ்ச்சியல்ல" என்று சொன்னாராம்!.


* அடுத்து, குளிர்காலத்தில் பனியால் நிறைந்து எழில் கொஞ்சும் கொலராடோ ராக்கி மலைத்தொடரின் சிகரங்கள். இங்கே பனிசறுக்கும் சுற்றுலா இடங்கள் நிறைய உண்டு. பனிச்சறுக்குவது மட்டுமல்லாமல், ஸ்னோமொபைல், எனப்படும் பனியில் செல்லும் வாகனத்தில், பனிமலையில் பயணிக்கலாம். டாக் ஸ்லெட்ஜிங் எனப்படும், பனிநாய்களால் கட்டி இழுக்கப்படும் வாகனத்திலும் செல்லலாம். நம்ப பாரதியாரும், 'வெள்ளிப்பனியின் மீதுலாவுவோம்' என்று பாடி இருக்கிறார் இல்லையா!


* அடுத்து மேப்பில், பார்த்தால் உங்களுக்குத் தெரியும், தனியா ஒரு மாநிலம் வடமேற்குப் பக்கமா இருக்கும். அது தான் அலாஸ்கா மாகாணம். இது அமெரிக்காவில் இருக்கும் மாநிலங்களிலேயே பெரிதான மாநிலம். பனி உறைந்த ஏரிகளும், வன விலங்குகளும் இங்கே நிறைய இருக்கு. இங்கே சுற்றுலா பார்க்கப்போகும் மக்கள் நிறைய பேராம். பலர் பெரிய கப்பலில் சென்று பார்ப்பார்கள். இந்த மாநிலம், தனியா இருந்தாலும், அமெரிக்காவோடு ஒன்றிணைந்து, ஒற்றுமையா இருக்கு. அதுபோல நாமளும் ஒண்ணா, ஒற்றுமையா இருக்கக் கத்துக்கணும். பிரிவு, பிரிவு என்று பேசக்கூடாது. அப்படிப் பேசுபவர்களையும், அன்பால், நம்மோடு இணைக்கணும்.


* கலிஃபோர்னியா மற்றும் நெவாடா மாநிலங்களுக்கு நடுவே, தாஹூ ஏரி எனப்படும் பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. இரம்மியமான இதில் படகுச் சவாரி செய்வது ஒரு இதமான அனுபவம். அடுத்ததாக, இந்த மாநிலத்தின் யோசிமிட்டி அருவியும், அழகான மலைகளும் கண்கவர் காட்சியாக இருக்கும்.


* நமது பட்டியலில் அடுத்து இருப்பது, பிரம்மாண்டமான அகலமும், நீளமும், ஆழமும் நிறைந்த கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கு. இது அரிசோனா மாநிலத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 17 மில்லியன் வருடங்களுக்கு முன்னால், கொலரடா நதியின் அரிப்பால் உருவாகி இருப்பதாக ஆராய்சியாளர்கள் சொல்லும் இவ்விடம், இயற்கையின் விந்தையாக உள்ளது.


* இறுதியாக நம் பட்டியலில் பார்க்கப்போவது, யெல்லோஸ்டோன் மற்றும் கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா. பூகம்மம், எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை சீற்றங்களால், பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் புரட்டிப் போடப்பட்ட இந்த நிலப்பகுதி, பல இயற்கை விந்தைகளை தன்னுள்ளே அடக்கியுள்ளது. பெரும் மலைகளும், பச்சை சமவெளியும் அருகேயே பார்க்கலாம். பல வன விலங்குகளில் தஞ்சமாக இருக்கும் இப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்து, பல நூறு வருடங்களாக, இந்தப்பரப்பின் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும் வராமல் பாதுகாத்து வருகிறார்கள். குழந்தைகளே, நாம் எல்லோரும், நம் இயற்கையை மிகவும் நேசித்துப் பாதுகாக்க வேண்டும்.


அன்புச் சிறார்களே, இந்த ஆன்லைன் இயற்கைச் சுற்றுப்பயணம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? பல செய்திகளை அறிந்து கொண்டீர்களா, நல்லது. இதுபோல நீங்கள் அறிய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கு. நீங்களாகவே படித்து அறியலாம். அல்லது, உங்களுக்கு இன்னும் படித்தறியும் வயது வராமல் இருந்தால், உங்கள் அம்மா, அப்பாவையோ அல்லது வீட்டில் இருக்கும் பெரியவரையோ அல்லது உங்கள் அண்ணன் அல்லது அக்காவையோ, படித்துக் காட்டச் சொல்லுங்கள். பொது அறிவுனை ஊட்டும் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டும்.

கடைசியாக நாம், நம் சுற்றுப்பயணத்தில் பார்த்த யெல்லோஸ்டோன் பற்றி மேலும் விரிவான கட்டுரையை நான்கு பகுதிகளில் எழுதி இருக்கிறேன். குளிர்காலத்தில் யெல்லோஸ்டோன் எப்படி இருக்கும் என இக்கட்டுரை கூறுகிறது. தவறாமல் அவற்றைப் படிக்க வேண்டும்.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
இயற்கையை நேசிப்போம், அதில் உறையும் இறையையும் நேசிப்போம்.
என்ன, இன்னொரு நாள் பார்க்கும் வரை, விடைபெறலாமா?. Bye, Bye.

Saturday, July 26, 2008

என் மதியம் நிதிஸ்ரீ சுவேதிகா வாம்!

ஆமாங்க, சொல்லிடறேன், ஆடி முதலாம் நாளில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு 'சுவேதிகா' எனப் பெயர் சூட்டியுள்ளோம்.
சுவேதம் என்னும் சொல்லுக்கு, 'வெண்மை', 'தூய்மை' என்பன பொருள். ஒளிரும் வெண்மையான பாதரசம், என்ற பொருளில் திருமந்திரச் செய்யுள் ஒன்றிலும் குறிப்பிருக்கிறது.
திரு'வெண்'காட்டில் உறையும் ஈசன் சுவேதாரண்யேஸ்வரர் பெயரை நினைவூட்டும் வண்ணம் பெயர் அமைந்துள்ளது.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
என்னும் திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகப்பாடல் எம்வாய் மொழிந்து,
எல்லாம் வல்ல ஈசன் கருணையினால் குழந்தையும் எல்லா நிறைகளுடன் பிறந்துள்ளது.

என்னே ஈசன் கருணை, அவனுக்கு எத்துணை நன்றி நவில்வேன்?

ஆடி முதல்நாளில் ஆடிய பாதத்தான்
ஆதி சிதம்பர நாதன் அருளில்
உதித்திட்ட நித்திலம் ஈதென் மதியம்
நிதிஸ்ரீ சுவேதிகா வாம்.

கருணை மழைபொழி வெண்காட்டு ஈசன்
அருணோத யம்போல் சுவேத அருள்பொழிந்து
அன்பனுக்கு ஆடி முதல்நாளில் ஈந்துவந்த
என்செல்வம் வெண்மதி யாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
திருச்சிற்றம்பலம்.


தொடர்புடைய இடுகை:
திருவெண்காட்டு தேவாரப் பதிகம்

Friday, March 14, 2008

உயிரிலும் மெய்யில் உருகவா பாப்பா!

ன்பே ருயிரே

மைக்கும் சனருளே

வகையே னே உயிரே

னதுயிரே காந்தச்சிரிப்பே

ம்புலன் ஆள்வாயே

ருமையே ம்காரமே

வையின் தமிழே

ட்டிக் கரும்பே கனிமுத்துப் பாப்பா,

செல்வமே உனை சீராட்டிடுவேனே!

ங்கச் சுடரே தங்கமே தங்கம்

பிஞ்சுக் கிள்ளையின் பூந்தளிர் மேனியே

வெற்றி முரசே

யாதும் உனதே யாவையும் நீயே

ம்மிய இசையே ரீங்கராத் தென்றலே

விடியலின் புதுமையே விந்தையின் முந்தையே

லை மொழியே மாசறு ஒளியே

ஞாமாய் எங்கும் நிறையும்

நான் அருளில் பூரமாய் திகழ்வாயே!

உனக்காக இங்கே நிலாப்பாட்டு ஒன்றினை, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தினார் உருவாக்கியுள்ளனர்.

இன்னும் பல பாடல்களும், கதைகளும், பயிற்சிகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது, பார்க்கவும்!