Showing posts with label பதிவுகள். Show all posts
Showing posts with label பதிவுகள். Show all posts

Saturday, January 31, 2009

ப பூ ப வி!

இது என்ன தலைப்பு? ப பூ ப வி!
அதாங்க, பட்டாம் பூச்சி பதிவர் விருது.
கீதாம்மா பாட்டுக்கு, நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க....ஞானம் அப்படியெல்லாம் வேற சொல்லிட்டாங்க!
Half knowledge is more dangerous than No knowledge அப்படீங்கற வாசகம் தான் நினைவுக்கு வருது, அதனால பயமாத்தான் இருக்கு!

ப பூ பற்றி முன்னாடி நிறைய கேள்விப்பட்டது இல்லை. யாரோ, ஒண்ணு ரெண்டு பதிவர் பக்கத்துல்ல பார்த்ததா ஞாபகம்! ஆனா, சமீபத்துல, திவா சார் பக்கத்துல பார்த்தா, இதைப் பற்றிப் பெரிய்ய்ய்ய ஆராய்ச்சியே செஞ்சு வைச்சுருக்காரு!

நமக்கு கொடுத்த விருது, நமக்கே இல்லையாம்,
இதை, மூணு பேருக்கு கொடுக்கணுமாம்மே!
ஆனா ஒரு சந்தேகம், ஒரு விருதை எப்படி மூணா பங்கிடுவது? 33.333...% ஆகவா?
இப்படியெல்லாம் சாக்கு சொல்லி, விருதை நம்ப பக்கமே வச்சுக்க தந்திரம் ஏதும் பலிக்காததுனாலே,
ஒருவழியா, மூணு பேரையும் இங்கே(யே) அறிவிச்சிடுறேன்!:

1. தங்கமணி அவர்களின் தங்கமான கவிதைகள்.
மரபில் சிறப்பாகவும் வழுவிலாமலும் அழகான
கவிதைகளை படைக்கும் இவரின் நடை
சுவைக்க சுவைக்க இனிக்கும்!
பதமலர் என்னும் கவிதையில் இவரது இந்த ஒரு சொல்லாடலே சான்றோ!:
'விட அரவும் புலியதளும் விரிசடையில் நதிமதியும் மிளிரும் ஈசன்'

2. அடுத்தது, காற்று வெளிதனில் சகலமும் படைப்பவர், மதுமிதா க்கா.
நிறைய நாளாகவே, இவங்க பதிவுகள், ஆச்சரியமா, அனுபவிச்சு படிச்சு வருகிறேன்.
இலக்கியவாதி, செய்தியாளர், தேசநேசி என பற்பல பரிணாமங்கள், இவரது பதிவுகளில் படங்களுடன் பட்டொளி வீசிப் பறந்திடக் காணலாம்!

3. முடிவா, முத்தாய்ப்பா, ஷைலஜா க்கா.
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ண வேண்டும் என்று
நல்ல நல்ல விஷயங்களை நாளொரு வண்ணமாய் தருபவர். இவங்க அருமையா புயங்கப் பெருமானின் புஜங்கம் பாடி இருந்தாங்க! சமீபத்தில, இவர் தந்த புத்தகக் கண்காட்சி அனுபவங்களைப் படிக்கையில், நாமும் கண்காட்சியைப் பார்க்கலையே என ஏங்க வைத்தன. கடைசியா நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய் பத்து வருடங்கள் இருக்கும். அப்போ, என்னென்ன புத்தகங்களைப் பார்த்தேன், என்ன புத்தகங்களை வாங்கினேன் என அசைபோட்டு பார்க்கையில், நினைவுகள் வியந்தன!

விருதைப் பெற்ற மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.
அப்புறம், முன்கூட்டியே நன்றியும், எனென்றால்:
இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள் இருக்காம்!: (

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

~~~~
மூணு பேரைப் பாராட்ட வாய்ப்புக் கொடுத்த கீதாம்மாவுக்கு ஒரு நன்றி!
~~~~
அங்கே இருந்து ஒரு சத்தம் கேட்டது: க்கர்ர்ர்ர்ர், ஒண்ணே ஒண்ணு தானா?
~~~~
சரி, சரி, மூன்று நன்றிகள்! :-)
~~~~

Sunday, March 23, 2008

கே ஆர் எஸ் - கேடு கெடுத்தவர்

பதிவர் KRS - கே.ஆர்.எஸ் -
அவரைப் பற்றி நான் சொல்லும் ஏதும் புதிதாய் இருக்காது.
குன்றிலிட்ட விளக்கினை அறியாதவரும் உண்டோ?

கே ஆர் எஸ் - ஆம், கேடு கெடுத்தவர் - இவர்
ஆன்மீகத்திற்கு வரும் கேட்டினைக் கெடுத்தவர்.
எப்படி என்கிறீர்களா, இப்படித்தான்:

அண்ணல் இவர் பதிவில்தான் எத்தனை வகை -
எனினும் எதிலும் குன்றாது சுவை.
தாலாட்டும் பாடுவார் - துயில்
எழுப்பலும்
பாடுவார்.
அரங்கன் பதிவு மட்டுமல்ல ,
சிவராத்திரிப் பதிவும் இவரிடம் உண்டு.
இவர் பதிவுகளில்
ஆழ்வார் பாசுரம் ஏதும்
ஆச்சரியமல்ல - தியாகப் பிரம்மமே
தமிழில்
பாட்டிசைக்கும்போது!
திருமால் பாடல்களை தொகுப்பார் - அவன்
மருகன் முருகன் பாடல்களை வகுப்பார்.

இவர் வாசகர் வட்டத்தினை தன்பக்கம்
வசமாக கவர்ந்திழுக்கும் காந்தம்!
கவர்ச்சியான தலைப்புகளால்
வந்து விழுமே ஒராயிரம் பின்னூட்டம்!

புராணக் கதைகளோடு சேர்த்து
புதிரும் போடுவார் - உடன் வாசகரைத்
தேடவும் வைத்து தன்பக்கமே திருப்பிடுவார்.
இந்தக் கண்ணபிரானும் உன்னைத்
தேடவைத்தது என்னபிரானே?

புராணப்பதிவு மட்டுமல்ல,
புதுமைகளும் படைப்பவர்.
சீர்திருத்தம் தேவையென
சீர்குரல் கொடுப்பவர்.
சமூக விழிப்புணர்வை
சலிக்காமல் சொல்பவர்.
சிகுவையும் நகையும் சிந்தனையும்
சீராய்ப்பெற்ற செம்மல்.

ஆதவனாய் ஒளிவிடும் ரவிசங்கர்,
வாழ்க வளமுடன் - எங்கள்
பதிவுலக நெஞ்சங்களிலெல்லாம்.
சிறப்புகள் பல பெற்று ஒளிர்விட
எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கே!

Saturday, July 14, 2007

தரமான பதிவுகள் எங்கே?

பதிவுகள் பல ரகம், பதிவுகளில் பல தரம்!

பதிவர்களின் பல ரகம், பதிவர்களின் பல தரம்!



சூடான பதிவாகி பலர் படிக்கும் பதிவாக பிரபல பாதிவாகிடும் பதிவுகள் எப்படி இருக்கின்றன? தரம் எப்படி என்றால், சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

கவனத்தை திசை திருப்ப, பலரையும் தம் பதிவுக்கு வரவழைக்க, பதிவர்கள் பலவற்றையும் எழுதிவதில், நிறைய மோசமான பதிவுகளாகத் தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட மோசமான பதிவுகளுக்கு காரணம் யார்?

நாம், நாமேதான்!

நல்ல தரமான பதிவுகள் இல்லாமைதான்!

நல்ல தரமான பதிவுகள் கிடைக்கும்போது, அவற்றை கொள்ள வாசகர் வட்டம் காத்திருக்கிறது. அதே சமயம், அவை இல்லாதபோது, கிடைப்பதைப் படிப்போம் என்ற வகையில், மோசமான பதிவுகளையும் படிக்கும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர் வாசகர்.

பதிவர்களே, பதிவர் என்ற நிலையிலிருந்து எழுத்தாளர் என்கிற நிலைக்கு உயர முயலுங்கள்!

பொறுப்புள்ள எழுத்தாளர் என்கிற நிலைக்கு உயர நல்ல தரமான பதிவுகளை தாருங்கள்!

களைகள் ஆங்காங்கே இருப்பது இயல்பு. களைகளை களைவது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் நாம் நல்ல பயிரை வளர்ப்போம்!

Tuesday, June 27, 2006

ஆறு

ஆறு பேரில் ஒருவராக அழைக்கப்பட்டவர் - கார்த்திகேயன் - தன் 'ஆறு' பதிவில் - என் பெயரையும் அழைக்க - அதனால் இந்த ஆறு பதிவு. அழைப்புக்கு நன்றி கார்த்திகேயன்.

ஒரு சில 'ஆறு' பதிவுகளை படித்திருந்தாலும், இதுவரை ஆறு என்று பதிய யோசிக்கவில்லை. அதனால் அதிகம் யோசிக்காத உடனடி பதிவாகி விட்டது.

இந்தியாவில் பிடித்த ஆறு
புதுச்சேரி
திருவனந்தபுரம்
கேரளக் கடற்கரை
மும்பை நரிமன் பாய்ண்ட்
ஹைதராபாத்
்திருப்பதிதிருப்பதிதமிழ்நாடுதமிழ்நாடுதமிழ்நாடு

தமிழ்நாட்டில் பிடித்த ஆறு
கூட்டமில்லாத கோவில்கள்
விண்ணைத் தொட்டு நிற்கும் கோபுரங்கள்
ஆள் அரவமற்ற நூலகங்கள்
புதிய ஊர்களுக்கு பேருந்துப் பயணம்
திருடு போகாத ஆற்று மணல்
இலக்கிய ஆர்வம்

தமிழகத்தில் பிடிக்காத ஆறு
மொழி அரசியல்
ஹிந்தி எதிர்ப்பு
இலங்கை அகதிகள் நிலை
பார்முலா திரைப்படங்கள்
விளையாட்டுத் துறையில் கவனமின்மை
சுற்றுப்புற சூழல் மாசு

கர்நாடக சங்கீத வாய்ப்பாடகர்களில் ஆறு
பாம்பே ஜெயஸ்ரீ
நித்யஸ்ரீ மஹாதேவன்
சுதா ரகுநாதன்
விஜய் சிவா
டி.எம்.கிருஷ்ணா
மதுரை டி.என்.சேஷகோபாலன் (ஹரிகதை)

தமிழ் பின்னணி பாடகர்கள்களில் ஆறு
எஸ்.பி.பி
உன்னி கிருஷ்ணன்
ஹரிணி
ஜேசுதாஸ்
சித்ரா
கார்த்திக்

சமீபத்தில் வியந்து படித்த பதிவுகளில் ஆறு
ஜி.ரா
சுகா
குமரன்
எஸ்.கே
வெற்றி
நேசகுமார்


சரி, போதும் இந்த விளையாட்டு, ஆறு பேரை அழைச்சிடலாமா...

முத்து
வாசன்
ராம்கி
என்றென்றும் அன்புடன் பாலா
பொன்ஸ்
தருமி

Saturday, April 22, 2006

யுனித்தமிழில் செய்தித் தளம்?

யுனிகோட் தமிழ் எழுத்துருவில் இயங்கும் செய்தித் தளம் ஏதுமில்லையா? இந்த கணக்கில் பி.பி.சி மற்றும் ஏனைய இலங்கைத்தமிழ் ஊடகங்களைத் தவிர்க்கவும். தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் செய்தித்தளங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எழுத்துருவில் *இன்னமும்* இயங்கி வருகின்றன. சின்சவுத் வலைதளம் கூட மாறிவிட்டது, இந்த தளங்கள் இன்னமும் மாறவில்லை.
இவற்றுக்கு மாற்றாக யாரேனும் புதியவர்கள் யுனிகோட் எழுத்துருவில் வந்தால் நன்றாக இருக்கும்.
கூகிளில் தேடியும் ஒன்றும் உருப்படியாகத் தேறவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் பரிந்துரையுங்களேன்...?

Saturday, February 26, 2005

எனது முதல் யுனிகோட் வலைப்பதிவு


வலையில் பலமுறை தேடிப்பின் கடைசியில் தமிழ் யுனிகோட் பற்றி கற்றுக்கொண்டேன். விண்டோஸ் 2000ல் இதுவரை திஸ்கி முறையில்தான் எழுதி வந்தேன். இப்போது, விண்டோஸ் ரீஜனல் செட்டிங்கில் தமிழையும் சேர்த்தபின் தமிழ் யுனிகோடில் எழுதமுடியும்.
எனக்கு, தமிழ் தட்டெழுத்தில் அவ்வளவு பழக்கமில்லாத்தால், நேராக யுனிகொடில் எழுதுவது கடினமாக உள்ளது. ரோமன் எழுத்துக்களில் தட்டியவுடன், யுனிகோடில் உருமாற வழியேதும் உண்டா எனத்தெரியவில்லை. கண்டுபிடிக்கவேண்டும்.

இப்போது, அஞ்சல் கொண்டு திஸ்கியில் எழுதி, முரசு மூலம் யுனிகோடில் உருமாற்றம் செய்தேன்.