Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Thursday, June 09, 2005

இளையராஜாவின் வெண்பா

ஜெயகாந்தன் பாராட்டு உரையில் இளையராஜா எழுதிப்படித்த வெண்பா - பி.கே.எஸ் பதிவில் இளையராஜா உரையில் கேட்டது:

கேட்டதை எழுதியிருக்கிறேன்.பிரித்த சீர்கள் இலக்கணப்படி அமைந்துள்ளதா தெரியவில்லை.
மரபியலார் யாரேனும் சரி பார்க்கவும். நன்றி.

பாரதியும் இவரும் ஒன்று என்று:

நிமிர்ந்த நடையதனால், நேர்கொண்டு பார்க்கும்
தமிழின் திறமதனால் தந்நேர் ஒன்றில்லா
அமுதமொழி வாக்கின் நாக்கொழுக்கால் காந்தன்
சமமாவான் பாரதிக்கு சாற்று.

சத்தியத்தை காட்டுவதால் சக்தி எழுத்துள்ளதால்
இத்துணையும் சோர்விலதால் முத்தமிழும் முன்னுள்ளதால்
இக்கரையோர் தேக்கமிடும் இன்னெழுத்தோன் பாரதியோடு
ஒத்தவனாம் காந்தனென்று செப்பு.