Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Wednesday, December 05, 2012

Life of Pi திரையில்

அண்மையில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் பகிர்ந்து கொள்வதும் பல்கிப் பெருகி வரும் தருணத்தில், எனது பார்வையையும் இங்கே பதிவு செய்கிறேன்.

புத்தக வடிவில் நாவலாக வெளியிடப்பட்டபோதே 2005இல், இப்புத்தகத்தை வாங்கிப் படிக்கத் துவங்கி இருந்தேன். முன்னுரை மட்டும் படித்த பின் ஒரு பதிவும் அப்போது எழுதி இருந்தேன். பின்னர் முழுதும் முடித்த பின்னர் மீண்டும் பதிவிடக் கிட்டவில்லை. என்றாலும், அப்போதைக்கு இப்போது சமன் செய்யலாமனெ நினைக்கிறேன். முடிந்த வரை, இப்பதிவில் இப்படத்தின் கதை விவரங்களைச் சொல்லாமல் இருக்கப் பார்க்கிறேன்.

3D வடிவத்தில் பெரிய படங்கள் அனைத்துமே இப்போதெல்லாம் வெளியிடப்படுகையில், எனக்கோ 3D கண்ணாடிகள் வழியாக திரையினைப் பார்ப்பது என்பது ஒரு குறையாகவே தோன்றும். அது செயற்கையான சேர்க்கையாக, என் இயற்கையான விழி வழி புலனுணர்வுகளுக்கு ஏதோ ஒரு தடையாகவே தோன்றும். ஆகவே 3D காட்சியனை தவிர்க்க நினைத்தாலும், சாதாரணக் காட்சிக்கு அனுமதிச் சீட்டுக்கள் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், வேறு வழியின்றி 3D காட்சிக்கே சென்றேன். ஆனாலும், நல்லவேளை, அப்படியொன்றும் பெரிய இடராகத் தெரியவில்லை.

படத்தில் முதல் சொல்லே "கண்ணே" என்றே தமிழில் தொடங்க - வியப்பில் இது ஏற்கனவே கேட்ட குரலாய் இருக்கிறதே நினைக்கையில் - அது பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடும் தாலாட்டுப் பாட்டென்பது தெளிவாகியாது. பக்கத்தில் மடியில் உட்கார்ந்திருந்த நான்கு வயது மகளோ உடனே தூங்கிவதற்கு முகத்தை திரும்பிக் கொண்டு தயாராகி விட்டாள்!

 

நல்லவேளை, பாடல் முடிந்தபின் புதுச்சேரிக் காட்சிகளும், இயல்பான வசனங்களும் அவளைத் தொடர்ந்து தூங்க விடாமல் திரையை கவனிக்கச் செய்து விட்டன. இயக்குனர் ஆங் லீ என்பவரின் தயாரிப்பு தானா, இது ஹாலிவுட் படம்தானா என எண்ணும் அளவிற்கு புதுச்சேரிக் காட்சிகள் தமிழ் திரைமண்ணின் மணத்தைக் காட்டின!

இந்தியர்கள்் எப்படி பிற மதங்களையும் தங்கள் சூற்றுச்சூழலில் எதிர்கொள்கிறார்கள் என்பதையும், மற்ற மதக் கடவுள்களையும் அன்னியமில்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டும் காட்சியும் உண்டு. கிட்டத்தட்ட இந்தக் காட்சிகள் ஆவணப்படம் போல் இருந்தாலும், மேலை நாட்டவர்களுக்கு நமது சமயச்சூழலையும், "எம்மதமும் சம்மதம்" என்னும் கோட்பாடும் இயற்கையாகவே இளைய தலைமுறையில் உருவாகுவது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.

படம் முழுவதும் படத்தின் நாயகன் தன் கதையைச் சொல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தன் தந்தையின் மிருகக் காட்சி சாலை அனுபவங்கள் முதல் கால் பகுதி. மீதிப் பகுதியில் நாயகன் ஒரு சில மிருகங்களுடன் படகொன்றில் மாட்டிக்கொண்டு பசிபிக் பெருங்கடலில் தத்தளிப்பதுதான். தனது சொந்தப்புலமதில் தனக்கு விருப்பமானவற்றைச் செய்வதும் பின்பற்றுவதுமாக எல்லோரும் போல இருந்த நாயகன், அவற்றைத் தாண்டி, கடல் என்னும் புதிய பழக்கமில்லாத புலத்தில் விடப்படும் பொழுது என்னவெல்லாம் நடக்கலாம்? பசிபிக் பெருங்கடலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எல்லா திசைகளிலும் கடலே தெரிகையில் படகில் மிஞ்சுவது தினமும் ஐந்து கிலோ மாமிசம் உண்ணும் வங்காளப் புலியும், மாமிசமே உண்டிராத நாயகனும் தான். தன்னை புலியிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள நாயகனின் சிறு சிறு முயற்சிகள் எனப் படம் நகர, அப்பயணத்தின் போது வண்ணத்திரை வண்ணத் தூரிகையாகிறது. படகையும் அதை இணைத்திருக்கு கட்டு மரத்தையும் சுற்றி பச்சை ஒளி தோன்றுவதாகவும், இரவில் கடலுக்கு ஜெல்லி மீன்களே வண்ண ஒளியூட்டுவதும், கடலில் இருந்து பிரம்மாண்டமான உயரத்திற்கு எழுந்து விஸ்வரூப தரிசனத்தைத் தரும் திமிங்கலமும் கண்கொளாக் காட்சிகள்!




கடலின் பிரம்மாண்டம் திரையில் விரிய, அதில் பகல் நேரத்தில் வானத்தின் நீலமும், வெண் மேகங்களும் தங்கள் பிரதிபலிப்பைக் காட்டுகின்றன. இரவு நேரமென்றால் இன்னமும் கேட்கவே வேண்டாம். கற்பனைக்கே அலாதி ஆனந்தத்தைத் தரும் கரு வானத்தில் பதித்து வைந்த எண்ணிடலங்கா இரத்தினங்களென மின்னும் விண்மீன்களின் தனித்துவமான பிரதிபலிப்பு பார்ப்பவர் விழிகளை வசியம் செய்கிறது. படகு பயணிப்பது கடலிலா அல்லது வானத்திலா என்று மனதை மயலுறுத்துகிறது!

நடுக்கடலில் மீண்டும் புயல்வர, அது படகுடன் அவர்களை ஆளிலில்லாத அதிசயத் தீவிற்கு இட்டுச் செல்கிறது. அங்கே நாயகன் இயற்கையாகவே சூழ்நிலைக்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பாடத்தைக் கற்றுக் கொண்டதுடன், புலியுடன் படகை செலுத்தி, இறுதியில் மெக்ஸிகோவின் கடற்கரையை அடைகிறான். புலி படகில் இருந்து இறங்கி கடலை ஒட்டி இருக்கும் காட்டில் மறைகிறது. அது காட்டில் நுழையும் சமயம் தன்னை திரும்பி ஒருமுறை கடைசியாகப் பார்க்காத என்ற ஏக்கத்துடன் மயங்கி விழுந்த நாயகனைக் காப்பாற்றி மருத்தவ மனையில் சேர்க்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

பின்னர் நாயகனைப் பார்க்க வந்த காப்புரிமை நிறுவன ஆட்களிடம் இந்தக் கதையைச் சொல்ல அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவர்களுக்காக இன்னொரு கதையினைச் சொல்கிறான். இரண்டாவது மாற்றுக் கதையை நாயகன் சொல்லும்போது ஏனோ நான் அவற்றை ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுக்கொண்டே இருந்தேன். ஏனப்படி? நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஏதோ ஒன்றின் நம்பிக்கை செய்யும் வித்தையால்தான் அது. படத்தின் முக்கால் பகுதிக்கு கண்களிலும் மனதிலும் பதிவு செய்யப்பட்ட காட்சிகள், அதற்கு நேரெதிர் மறையான இன்னொன்றைச் சொல்லும் போது - மனதால் ஏற்கப்பட மறுக்கப்படுகின்றன. இந்த 'மாற்று' வேண்டாமே என்கிற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

இறை நம்பிக்கையும் இப்படித்தான் என்பதை மறைமுகமாக இதன் பின்புலத்தில் வைக்கப்படுவதை கவனிக்காமல் விட்டுவிட இயலாது. இரண்டு கதைகளைச் சொல்லி - எப்படி நடந்திருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுகையில் - இறை நம்பிக்கையோ அல்லது இறை மறுப்போ - நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்களோ - அதைத் தான் நம்பப் போகிறீர்கள் - அதுபோலவே இந்தப் படத்தின் முடிவையும் நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்களோ அதுபோல எடுத்துக் கொள்ளுங்கள் என்று நம்பிடமே விட்டு விடுகிறார்கள்!

புலி காட்டுக்குள் மறைவதற்கு முன்னால் தன்னைத் திரும்பிப் பார்க்காதா என்ற நாயகனின் ஏக்கம் போல - மனிதர்கள் வாழும்போதே ஒருவருக்கொருவர் உதவியோ நன்றியோ செய்யாமல், அவர்களை இழந்தபின் அதற்காக ஏங்குவது என்பதைப் பதிவு செய்து திரைப்படம் நிறைவு பெறுகிறது.

படம் முடிந்து மங்கிய விளக்குகளின் வெளிச்சம் அரங்கில் ஆக்கிரமிக்க, என்னுடைய உடமைகளை இறுக்கமாகவும், அதிக கவனத்துடனும் பிடித்துக்கொண்டு நடக்கத் துவங்கினேன்!

படத்தின் முன்னோட்டக் காட்சிகளை இங்கே பார்க்கலாம்:

Friday, April 22, 2005

அட்லாண்டாவில் சந்திரமுகி

ரஜினி படம் என்றாலே வெகு ஜோர்தான். படத்தின் ஜோர் பாதி என்றால், படம் பார்ப்பவர்களை கவனிப்பது மீதி ஜோர். ரஜினி படத்தில் தான் இப்படியெல்லாம் நடக்கும்!. படம் பார்ப்பவர்கள் சினிமா என்பதை மறந்து, ஒரு நேரடி நிகழ்சியாக எண்ணிக்கொள்ள செய்கிறது படம். சென்ற முறை பாபா படம் அட்லாண்டாவில் திரையிடப்பட்டதும், இந்த மாயத்திரையில் நேரடி நிகழ்சியே நடந்தேறியது.
பாபா படத்தில் சொதப்பல்கள் பல இருந்தாலும், ரசிகர்களின் விசில்களுக்கு குறைவிருந்ததில்லை.

இந்தமுறை ரஜினி படத்திற்கு அட்லாண்டா ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வதில் ஆவலாகவே இருந்தது.
இன்னும் இரண்டே நிமிடங்கள் இருக்கையில் திரையரங்கை அடைந்தோம். உடனடியாக நுழைவுச்சீட்டு விற்கும் இடத்தை அடைந்தோம்.
அதிலொன்றும் அதிக சிரமம் இல்லை. நம்மூர் ஆட்களின் வரிசை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க வேண்டியதுதான். கண்டதும், மூன்று சீட்டுகளை பெற்றுக்கொண்டோம் - முப்பது டாலர்களுக்கு.

நுழைவிற்கு மட்டும்தான் சீட்டாம். அமர்வதற்கு அல்லவாம்!. கிடைத்த இடத்தை பிடித்துக்கோள்ள வேண்டியதுதானாம். முன்னமே வந்தவர்கள்
கைக்குட்டடையெல்லாம் பத்தாதென்று கம்பளி விரித்தார்களோ என்னவோ மொத்த சீட்டையும் பிடித்து விட்டார்கள்.கம்பளி போதாக்குறைக்கு,
கையில் செல்பேசி வேறு, நமக்கு பாவ்லா காட்ட. எங்களுக்கு மிஞ்சியது முதல் வரிசை சீட்தான். ஒரமாக இருந்த ஒரு முதல் வரிசை இருக்கையை
பிடித்துகொண்டேன். ஆரம்பக் காட்சிகள் 3D படம் போல இருந்தாலும் பின்னர் பழகி விட்டது.

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு காட்சி என அறிவித்து இருந்ததால், படம் 2 மணிநேரப்படமோ என்ற சந்தேகம் வேறு. இடைவேளை விடமாட்டார்கள் என்று
எங்கேயோ படித்ததாக ஞாபகம். வந்திருந்த கூட்டத்தப்பார்த்து ஒரு நோட்டம் விட்டேன். பலதரவகைப்பட்டவரும் இருந்தனர். நம்மூர் கொட்டகையில்
தலைவருக்கு விசில் அடித்துக்கொண்டு இருந்தவர் முதல், தமிழை இதற்குமுன் கேள்விப்படாதவர் வரை சகலவிதமானவரும் 'உள்ளேன் அய்யா'
சொல்லியவாறு. தீவிர ரஜினி ரசிகர்களின் பக்தி தெரிந்த விஷயமே. புதியவர்களின் ஈடுபாட்டைப்பார்ப்பதிலே ஆவல்.

குடும்ப சகிதமாக ஆஜராகியிருந்த குடும்பத்தலைவர்கள் ஒருபுறம். அவர்களின் 'என் குடும்பத்தை நான் ரஜினி படத்திற்கு அழைத்து வந்துள்ளேன்'
என்ற பெருமிதம் அவர்களின் பார்வையிலேயே தெரியும். கையில் கைகுழந்தையுடன் கணவன்மார்கள்/மனைவிமார்கள் ஒருபுறம். படத்தையும்
விட மனசில்லாமல், குழந்தையையும் விட மனசில்லாமல், இரண்டிலும் ஒரு கண் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு இருப்பார்கள். பெண்கள்
சங்கம்/சங்கீத சங்கம் என்று சங்க தோழியர் கூட்டம் இன்னொரு புறம். கேட்டால், 'அவருக்கு தமிழ் படமெல்லாம் பிடிக்காது' என்று பெருமையாக
சொல்லிக்கொள்வார்கள். நமக்குத்தான் தெரியும், கணவன்மார்கள் வீட்டில் இருந்தால் படம் பார்க்க வர மறுக்கும் சிறுவர்களுக்கு 'பேபி சிட்டிங்' மிச்சம் என்று!.

சில நிமிடங்களில் படம் ஆரம்பித்துவிட்டது. சண்டைக்காட்சியுடன் படம் துவங்குகிறது. தலைவர் ரஜினி ,அவரின் ஷூ வழியாக திரையில் நுழைகிறார். பார்ப்பவர்கள் முகமெங்கும் தவறாமல் புன்னகை!. பின்னால் விசில் பறக்கிறது.
தமிழ்நாடுபோல், திரைக்கருகே வந்து கண்ணில் ஒற்றிக்கொள்ள யாரும் இல்லை!.

படமெங்கும் ரஜினி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த மனநல மருத்துவர் என்று சொல்லப்படும்போது, எல்லோரும் உரத்த குரலில் 'ஓ' போடுகிறார்கள்!.
இப்படியாக படம் களை கட்ட, வேட்டைக்காரன் அரண்மணைக்கு படத்திலிருக்கும் மொத்த பாத்திரங்களும் (கே.ஆர்.விஜயா தவிர) நுழைகிறார்கள்.
இத்தனை பேரும் ஒரே இடத்தில் இருப்பதலோ என்னவோ ரஜினிக்கு அவ்வளவாக சோபிக்க வாய்ப்பில்லை. கிடைத்த நேரத்தில், வடிவேலுவுடன் நகைச்சுவை. அல்லது காமடி என்ற பெயரால் சகிக்க முடியாத கூத்து. ரஜினிக்கு ஆனாலும் இது தேவையில்லாததுதான்.

இது நடுவில் ரஜினி அரண்மணையைவிட்டு வெளியூருக்கு போய் விடுகிறார். நடுவில் ஜோதிகா, சந்திரமுகியின் ஆவி இருக்கும் அறைக்கதவை திறந்து அதை வெளியே விட்டு விடுகிறாராம். அதற்காக எதற்கு ரஜினியை வெளியூருக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரியவில்லை. திரும்பி வரும் ரஜினி அரண்மணையில் நடக்கும் மர்மங்களுக்கான காரணங்களை ஆராய்கிறார். பிரபு கொல்லப்பட இருக்கும் தருணங்களில் அவரை காப்பாற்றுகிறார்!. (விஷம் மற்றும் மீன் தொட்டி விழுந்து கொலை - அதரப்பழசு. சந்திரமுகியின் ஆவியும், இயக்குனரும்(!) சமகாலத்தவர்களோ?). 'கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, சூப்பர் ஸ்டாரை பாரப்பா', என்று பின்னால் இருந்து உரத்த குரல் வருகிறது!.

மாளவிகா, டேன்ஸ் மாஸ்டர், மந்திரவாதி, அடியாள் போன்ற பாத்திரங்கள் ஜவ்வு போன்று கதையை இழுக்க உதவுகின்றன. வேறு விஷேசமில்லை. அங்கங்கே சில இடங்களில் மட்டும் நகைச்சுவை ரசிக்கும்படியாகவும் உள்ளது. 'ஜோதிகா பாவம், என்ன கொடுமை இது' என்று சீரியசாக பிரபு சொல்லும் இடத்தில் எல்லோரும் சிரிக்கிறார்கள். (இயக்குனரையும் பார்த்து). இளம் கல்ல்லூரிப் பெண்கள் தாங்கள் வந்திருப்பதைக் காட்டிக்கொள்ள, நடுவே சத்தமாக subtitle-ஐ ஆங்கிலத்தில் படிக்கிறார்கள்!, அவர்களை முறைப்பவர்களையும் பொருட்பருத்தாமல்.

சந்திரமுகி ஆவி ரகசியத்தைக் கண்டு பிடித்த பின்னால் ஜோதிகாவின் உடலின் சந்திரமுகியின் ஆவியை வெளியேற்ற ரஜினி திட்டமிடுகிறார். பைத்தியம் போல தலையை கலைத்துக்கொண்டு ஜோதிகா பரதநாட்டியம் ஆடுகிறார். அந்த சமயம் மூன்று சதுர துளைகள் வழியே, ரஜினி உட்பட மூன்று பேரும் பரதநாட்டியத்தைப்பார்ப்பது Very Funny. நல்ல வேளை, பரதநாட்டியம் முழுதுமாக கலைந்த தலையுடன் இல்லை. அதுவரை, இயக்குனரை பாராட்ட வேண்டும். ஜோதிகா என்னவோ பெரிதாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள். பிதாமகனில் லைலாவுக்கு முன்னால் இது ஒன்றுமில்ல்லை.

விதியை தன் மதியால் வென்றார் ரஜினி என்பதே முடிவு. முடிவு எனக்கு ஒகே. அதிரடி ரசிகர்களுக்கு? அதிரடி படங்களுக்கு நடுவே இது வித்யாசமாக இருக்கும். இந்த படம் வெற்றியடைந்து, அதன் மூலமாவது, இப்போது தொடர்ந்து வரும் சகிக்க முடியாத 'தனிநபர் சாடுதல்' முடிவுக்கு வந்தால் நல்லதே.

Monday, April 04, 2005

மும்பை எக்ஸ்பிரஸ் - பாடல்கள் - முன்னோட்டம்

மும்பை எக்ஸ்பிரஸ் பாடல்கள்களை ஒரு முறை கேட்டவுடன் செய்யும் பதிவு இது.

பூ பூத்தது என்று ஒரு மெலடி ட்யூட் பாடல் - ஆண் பாடகர் தெரியவில்லை. பெண் பாடகர் ஷ்ரேயா போலத்தெரிகிறது. intelude களில் ட்ரம்ஸ் மற்றும் பியானோ அசத்தலாகவும் நீளமாகவும் இருந்தது.

கமல் இரண்டு பாடல்களை பாடுகிறார் - அதில் ஒன்று ட்ரெயினில் பாடுவது போலும்.
படத்தோடு சேர்ந்து பார்க்க மட்டுமே இந்த பாடல் என நினக்கிறென். அன்பே சிவம் 'எலே மச்சி' போல ஆரம்பித்தாலும், பாடலில் intelude கள் நீளமாக இருக்கிறது.

இன்னொன்று 'குரங்கு கையில் மாலையை கொடுத்தது யாரு' என்று பல்லவி. இதிலும் நிறைய Rock & Roll Drums. பின்னணியில் நிறைய பியானோ. (பூ பூத்தது போலவே)
இவையெல்லாம் அக்னி நட்சத்திரத்தை ஞாபகம் செய்கிறது.

வந்தேமாதரம் என்று குழந்தைகள் பாடும் பாடலும் உள்ளது.

கமலும் இளையராஜாவும் இணைந்து எட்டாத உயரத்தையெல்லாம் தொட்டபின், இன்னும் செய்ய என்ன இருக்கிறது?
என்ன செய்திருக்கிறார்கள் இந்த பாடத்தில், பார்ப்போம்.

Thursday, March 31, 2005

சந்திரமுகி - இசை விமர்சனம்

எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். இசையமைப்பாளர் 'வித்யாசாகர்' என்று அறிவித்தவுடனேயே, நான் இவர் நல்ல தேர்வென்று நினைத்தேன். ஏனெனில், வித்யாசாகர், இயக்குனரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றமாதிரி இசையமைப்பதில் வல்லவர். சமீப காலங்களில் ட்ப்பாங்கூத்து கேட்டவர்களுக்கு, குத்திய குத்துப்பாடல்களாகட்டும், நெடுங்காலமாக அர்ஜூன் படங்களில் அமைத்த மெலடி பாடல்களாகட்டும். இளையராஜாவிற்கு அடுத்ததாக, ரஜினிக்கு ஹிட் கொடுக்கக்கூடிய வாய்ப்பு இன்றைய சூழ்நிலையில் வித்யாசாகருக்கே. இப்படி இருக்கையில், பாடல்கள் எப்படி வந்திருக்குன்னு பார்ப்போமா?

1. தேவுடா தேவுடா (SPB)

அனேகமாக இது அறிமுகமாகப்பாடலாக இருக்கவேண்டும். SPB சரியான தேர்வுதான். ஆரம்ப prelude நன்றாக இருந்த்தது. ஆனால், வாலியின் வரிகள், சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இசைக்கும், பாடல் வரிகளுக்கும் இசைக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் உள்ளது. காதில் விழுவதெல்லாம் வெறும் 'டம் டம்' மத்தள சப்தமே. தெலுங்கு வார்த்தைகளிளை ஆங்காகே இறைத்திருப்பதை கவனிக்கவும். பழைய ஞாபகம் வரவேண்டுமே?
மேலும், பாடலில், 'ரிப்பீட்டு...' என்று சொல்லுமிடம் பாபா படப்பாடல் 'டிப்பு டிப்பு' பாடலை நினைவுப்படுத்துகிறது. படத்தில் பார்கும்போது ரஜினி காட்டும் வேடிக்கையில் ஹிட் ஆனால்தான் உண்டு.

2. கொஞ்ச நேரம் (ஆஷா போன்ஸ்லே, மது பாலகிருஷ்ணன்)


வித்யாசாகர் என்றவுடனேயே, மது பாலகிருஷ்ணனை வைத்து மெலடி எதிர்பார்த்ததுதான். சதுரங்கம் படத்திலேயும் இதுபோல ஒருபாடல் இருக்கிறது. முதல் interlude-இல் வயலின்கள் ஒளிர்கின்றன. மது நன்றாக பாடியுள்ளார். ஜேசுதாஸ் ரஜினிக்கு கொடுத்த பல வெற்றிப்பாடல்களை இது நினைவு படுத்துகிறது. இசை வாத்தியங்கள் அனத்தும் நன்றாக கையாளப்பட்டுள்ளன. ஆனால், பாடகி தேர்வில் ஒரு பெரிய குறை. ஆஷா போன்ஸ்லே வடிவில். எதற்காக இவரை பாடச்சொல்லியிருக்கிறார்கள்? அவர் இந்த பாடல் பாட சொந்த செலவில் சென்னை வந்தாராம். நல்லது, ஆனால், தமிழை சரியாக உச்சரிக்கவாவது தெரிய வேண்டாமா?, நன்றாக வர வேண்டிய பாட்டு, குட்டிச்சுவர். ராம்குமார் காதுகளில் விழுந்தால் சரி.

3. அத்தித்தோம் (SPB, வைஷாலி)

பாடல் பாறை ஒலிகளுடன் தொடங்குகிறது பாடல். பறைஞானி வித்யாசாகர் பாடலயிற்றே. ஆனால் அளவோடு உபயோகப்படுத்தி இருப்பதால் நன்றாக இருக்கிறது. மேலும் பாதியில் அதுவே மிருதங்கமாக மாறும்போதும் அழகு. கிராமியப்பாடலா, இல்லை கிளாசிக்கல் பாடலா என வியக்கும் வகையில் இருக்கிறது. SPB பாடியிருக்கும் விதம், சின்னத்தம்பி படப்பாடல்களை நினைவு படுத்துகிறது. எளிதாக ஆல்பத்தின் சிறந்த பாடல். எளிமையும் அழகும் ததும்ப, இந்த மாதிரி பாடல்கள் அமைககக்கூடியவர்கள் வெகு சிலரே.


4. கொக்கு பற பற (டிப்பு, ராஜலக்ஷ்மி, மாணிக்க விநாயகம்)

ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல், சீனத்து இசையை நினைவுபடுத்தினாலும், பின்னர் ட்யூன் மாறுகிறது. இது ரஜினி, பிரபு, நயன், ஜோதிகா அனைவரும் சேர்ந்து பட்டம் விடும் பாட்டு என நினைக்கிறேன். பாபா படத்திலும் பட்டம், இந்த படத்திலும் பட்டம். ரஜினி அடுத்த தேர்தலில் பட்டம் சின்னத்தில் நின்றால், இந்த பாடல் வசதியாக இருக்கும்! ராஜலக்ஷ்மியின் ஹம்மிங், அதைத்தொடர்ந்து டிரம்ஸ், blow horn ஆகியவற்றின் 'தொடர்' நன்றாக இருந்தது.

5. ரா ரா (பின்னி கிருஷ்ண குமார், டிப்பு)

பாடல் வரிகள் முழுதும் தெலுங்கில் இருப்பது வியப்பு. சந்திரமுகி தெலுங்குப்பட பாடலை இங்கு தெரியாமல் சேர்த்து விட்டார்களா? இசை மொழிக்கு அப்பாற்பட்டது என்பார்கள். இசையை மட்டும் கேட்கும் போது படையப்பா பாடல் 'மின்சார கண்ணா' நினைவில் வந்தது. தொடர்ந்து கேட்க, பின்னியின் குரலும், பாடும் விதமும் சலங்கை ஒலி பாடல்களின் சாயல் தெரிகிறது. நடுவில் 'லக்கலக்க...' என்று ஏன் வருகின்றது எனத் தெரியவில்லை. படம் பார்த்தால் தெரியும். ஜதிகள் வருவதால் அநேகமாக பரதநாட்டியம் பாட்டில் இருக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டே கதையை கற்பனை செய்யலாமே!.

6. அண்ணனோட பாட்டு (கார்த்திக், கே கே, சுஜாதா)

நாட்டுப்புற பாடல் வரிகளுடன் தொடங்கும் பாடல், பின்னர் திரையரங்கில் இளசுகளை சீட்டிலிருந்து எழுந்து ஆட்டம் போட வைக்கும் பாடலாக மாறுகிறது. கார்த்திக், கே கே இருவரும் கலக்கியிருக்கிறார்கள். பாடலை எழுதியது எந்த ப்ரகஸ்பதி எனத்தெரியவில்லை. இது அண்ணனோட பாட்டு, பார்ப்பவரை ஆட்டம் போட வைக்கணும், சீட்டிலேயே உட்கார்ந்திருப்பவர்கள் 'போயும் போயும் இந்த படத்தை பார்க்க வந்தோமே' என முணுமுணுக்காமல் இருக்க இந்த பாட்டில் அர்தமுள்ள பாட்டாகவும் இருக்கவேணும் என்று இயக்குனர் சொன்னவுடன், அவர் சொன்னதையே இவரும் எழுதிவிட்டார். அதற்கு ஒரு ட்யூனும் போட்டு விட்டால் பாட்டகிவிட்டது. ஓ, மாற்றி சொல்லிவிட்டேனா? இதற்கு நடுவில் வாத்தியங்கள் வேறொரு பாடலை (அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு சிரிப்பு... பாடல்)வேறு வாசிக்கின்றன. படக்காட்சிக்கு தேவைப்படும் விதத்தில் இது சரி, இல்லாவிட்டால் இது கொஞ்சம் ஓவர்.


மொத்தத்தில் ஒரு சுமாரான (நல்ல விதத்தில்) ஆல்பமாக அமைந்துள்ளது. பாபா ஆல்பத்தைவிட சிறிது மேலாகவே இருக்கிறது. 'தேவுடா தேவுடா' பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானின் தாக்கம் நன்றாகத் தெரிகிறது. இசை அமைக்க வ்ரும் முன் முத்து, படையப்பா, பாபா பட பாடல்களை பத்துமுறை கேட்டுவிட்டு வந்தாரோ?
இருந்தாலும் வித்யாசாகர் தன்மேலிருந்த எதிர்பார்ப்பு என்னும் பளுவை ஒரளவு நன்றாகவே சமாளித்திருக்கிறார். எனக்கு வித்யாசாகரிடம் பிடித்த சோலோ வயலின் இந்த ஆல்பம் முழுவதிலும் இடம்பெறாததில் சிறிது வருத்தம்தான்.
'அத்தித்தோம்' பாடலும் 'கொக்கு பறபற' பாடலும் சூப்பர்.
'ரா ரா' பாடல் படத்தோடு சேர்ந்து கேட்க, பார்க்க வேண்டும். 'அண்ணனோட பாட்டு' Fast Forward.

Wednesday, March 30, 2005

Spring, Summer, Fall, Winter & Spring

தங்கமணியின் சிபாரிசுக்குப்பின் இந்த கொரியப்படத்தைப் பார்த்தேன். (ஆங்கில subtitles உடன்)

மீண்டும் அவருடைய முகவரியைப்படித்தேன். அருமை. படத்தப்பார்த்தபோது விளங்காத சில விஷயங்களும் பின்னர் விளங்கின.
உதாரணத்திற்கு,
//
படம் முழுவது தொடர்ந்து கோர்க்கப்பட்ட குறியீடுகளாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.
அந்த விகாரையில் இருக்கும் ஒரே அறையில் குருவும் சீடனும் படுப்பதற்கு ஒரு பக்கத்தில் இடமும், விருந்தினர்கள் படுப்பதற்கு மறு பக்கத்தில் இடமும் இருக்கும். இந்த இடங்களுக்கு செல்ல ஒரு நிலையும், கதவும் உண்டு;
ஆனால் அதைத்தவிர பக்கத்தடுப்புகள் எதுவுமிருக்காது. (அதாவது அந்த கதவின் வழியன்றியும் அந்த இடத்தையடையலாம்) //
இதற்கென்ன பொருள்?
எனக்குத்தோன்றியது:
பாவமென்னும் கல்லரைக்கு பலவழி, தர்மதேவன் கோவிலுக்கு ஒருவழி என்பதே. ஒரு சமயம் இளம்துறவி இரவில் எழுந்து செல்லும்போது, கதவு இடிக்க, முதிய துறவியை தாண்டிச்செல்வதுபோல் காட்டியிருப்பது இந்தக்குறியீட்டினால் ஆகத்தான் இருக்க வேண்டும்.

படத்தில் குரு எழுதச்சொல்லும் புத்த சூத்திரம் என்ன என்று தேடினேன். மஹாயானத்தைச்சேர்ந்த ப்ரஜ்னபரமிதா என்பவரின் சூத்திரம்:
http://www.wildmind.org/meditation/mantra/gategate.html

சீடன் பெரியவனாக வளர்ந்தபின் குரு முதலில் சேவலையும், பின்னர் ஒரு பூனையையும் வளர்க்கிறார். இவற்றின் பொருள் தெரியவில்லை. இரண்டுமுறை சீடன் பிரியும்போதும், அவன் இந்த வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு செல்கிறான். இதற்கு எதோ பொருள் இருக்க வேண்டும்.

மேலும் படத்தில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண், விஹாரைக்குள் குருவினைக்காண வருவாள். அவள் தன் குழந்தையை யாருக்கும் தெரியாமல் அங்கேயே விட்டுவிட்டு வெளியேரும்போது, கால் தடுக்கி கீழே விழுந்து இறந்து விடுவாள். அவள் சடலத்தை பனிக்குழிக்குள் இருந்து மீட்டபின், குழிக்குள் இருந்து, புத்தர் முகம் போலத்தெரியும். இதன் பின்னணியும் தெரியவில்லை. ஏதாவது ஜென் கதையின் பின்னோட்டமாக இருக்கலாம்.

படத்தைப்பார்த்தேன் என்று செல்லுவதைவிட, படம் பார்ப்பதில் ஈடுபட்டேன் என்று சொல்லும்படி செய்து விட்டார்கள்.
படத்தை அறிமுகப்படுத்திய தங்கமணிக்கும் நன்றி.

Wednesday, March 16, 2005

சுதந்திர வாழ்க்கை

நேற்றிரவு, நல்ல படமொன்று பார்த்தேன். அதைப்பற்றி உங்களுக்கு விவரிக்கப்போகிறேன். படத்தின் பெயர் 'லிவ்விங் ஃப்ரீ' (சுதந்திர வாழ்க்கை). ஏதோ சுதந்திர போராட்டத்தைப்பற்றி என்றெண்ண வேண்டாம். சுதந்திரமாகத் திரியும் மூன்று சிங்கக் குட்டிகளைப்பற்றியது. ஆஃப்ரிக்கா. சுதந்திரமாகத் திரியும் வன விலங்குகளுக்கு பூலோக சொர்கம் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த விலங்குகளுடன் மனிதர்களும் சுமூகமாக எப்படி வாழ்கிறார்கள் என்று யோசித்ததுண்டா?
ஆஃப்ரிக்க கிராமம் ஒன்றருகே, மூன்று சிங்கக்குட்டிகள் அங்கு வாழும் மக்களையும், அவர்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளையும் பயமுறுத்தி வந்தது. மனிதர்களால் சிங்கக்குட்டிகளுக்கோ அல்லது, சிங்கக்குட்டிகளால் மனிதர்களுக்கோ எந்த நிமிடம் ஆபத்து வரும் என்று சொல்ல முடியாமல் இருந்தது. இந்த சமயத்தில், சிங்கக்குட்டிகளை இவ்விடத்திலிருந்து அகற்றி வனவிலங்குகள் உள்ளுறைவிடங்களுக்கு கொண்டு செல்ல வனநல ஆர்வலர்கள் முயர்ச்சிக்கிறார்கள். முதலில் சிங்கக்குட்டிகள் ஊருக்குள் நுழைந்தால் கிராம மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள அறிவிப்பு மணி முறையை ஏற்படுத்துகிறார்கள். பின்னர் சிங்கக்குட்டிகளுக்கு மிகப்பிடித்த மீன் எண்ணை தடவிய துணியை நீண்ட மூன்று கயிறுகளில் கட்டி, அவற்றை ஒரு வண்டியின் பின்னால் கட்டி இழுத்து வர, சிங்கக்குட்டிகள் அவற்றை வாசனை பிடித்து வண்டியைத் தொடருகின்றன.
இவ்வாறு முடிந்த வரை கிராமத்திலிருந்து தூரத்தில் சிங்கக்குட்டிகளை கொண்டு சென்ற பின்னர், அங்கு ஒரு கூடாரம் அமைத்து , சிங்கக்குட்டிகளின் கவனம் அவ்விடத்தை விட்டு அகலாவண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். பின்னர் சிங்கக்குட்டிகளை பிடிக்க மூன்று கூண்டுகளை அமைக்கிறார்கள். கூண்டுகளில் பொறி வைத்தாலும் மூன்று சிங்கக்குட்டிகள் ஒரே சமயத்தில் சிக்காமல் தப்பிக்கின்றன. பல முறை முயன்றாலும், எட்டாக் கனியாய், எட்டினாலும் கிட்டாக் கனியாய் சிங்கக்குட்டிகள். இப்படியே என்னும் சில நாட்கள் நகருகின்றன.
சிங்கக்குட்டிகளை அகற்றுவதற்கு இன்னும் மூன்றே நாட்கள். கூடாரம் அமைத்த இடத்தில் அருகினில் சிற்றோடையில் திடீரேன வெள்ளம். கூடாரங்கள் வெள்ளதில் சேதம் அடைகின்றன. அருகே சிங்கக்குட்டிகளுக்காக கூண்டுகள் அமைத்த இடமோ சற்று மேடான இடமாததால், மூன்று சிங்கக்குட்டிகளும் சமர்த்தாக மூன்று கூண்டுகளில் அமர்ந்து கொண்டிருக்கின்றன. ஆகா, இத்தனை நாள் காத்திருந்த தருணம் வந்ததென, கூண்டுகளை மூடும் பொறி விசையை இயக்குகிறார்கள். ஆனால், அந்தோ, வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்தினால், விசை பழுது பட்டிருக்க, கூண்டின் கதவுகள் முழுதும் மூடாமல் பாதியில் நின்று விடுகின்றன. சிங்கக்குட்டிகள் விழித்துக்கொண்டு தப்பி விடுகின்றன. ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.
அன்றிறவு. பெருத்த மழை பெய்கிறது. கூண்டுகளுக்கு அருகே சிங்கங்களின் உறுமல் சத்தம் கேட்க, எட்டிப்பார்க்கிறார்கள். மழையிலிருந்து ஒதுங்க, கூண்டுக்குள் மீண்டும் சிங்கக்குட்டிகள். (கூண்டுகளின் மேல்பக்கம் மூடியிருக்கும்). உடனே, விசை இயக்கப்பட, இந்த முறை சிங்கக்குட்டிகள் சிக்கிக்கொள்கின்றன. மூன்று கூண்டுகளையும் ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அருகே இருக்கும் சரணாலயத்திற்கு கொண்டு செல்கிறார்கள். போகும் வழியில் மேலும் சோதனை. அவற்றையும் கடந்து, ஒரு வழியாக, சிங்கக்குட்டிகள் பாதுகாப்பான, சுதந்திராமான இடத்தில் கூண்டிலிருந்து திறந்து விடப்படுகின்றன.
அத்துடன் கதை முடிகிறது. கதை சொல்லப்பட்ட விதமும், பாத்திரங்கள் கையாளப்பட்ட விதமும் திரையிலிருந்து கண்களை அகற்ற இயலாமல் சிறைப்பிடிக்கின்றன. நிறைவான திரைப்படம், மனநிறைவைத் தந்தது.

Thursday, February 24, 2005

Dirty War - A BBC Film

Yesterday night PBS showed this BBC Film - 'Dirty War'. It was a very provocative film and heart moving picture to watch.
The story was about a radiological "dirty bomb" attack on central London. The film shows how a "dirty bomb" attack might be planned and executed in London, despite the best efforts of police and intelligence forces - as well as how devastating the consequences of such an attack could be.
An organized group of Islamic terrorists, smuggle radioactive material into England from Pakistan. They plan for exploding a bomb with radioactive material in couple of places in London. The intelligence officials manage to nab the man who was organizing, just before the attack, but they could NOT stop the bomb from exploding. And there is atleast one more bomb waiting explode elsewhere. In the end, they manage to avert that from exploding, but already the damages of the first bomb itself were enormous.
After the movie, PBS also arranged a in-house panel discussion with an US experts in homeland security, emergency preparedness such as fire department and health department , nuclear weapons and terrorism. The host and audience were discussing the preparedness of the government in the post 9/11 scenario.
Atlanta based CDC (Center for Disease Control and Prevention) has posted various information about how we can prepare ourselves towards handling the emergency at the following location.

Sunday, February 20, 2005

Film Review of Tamil Movie - Pithamagan

Pithamagan is definitely a good crafty movie but not for everyone. That was obvious from everyone’s reaction as we walked out of the theater in Atlanta, US. To the extent I observed, Looked like I was pretty alone among those who could have enjoyed this kind of movie. There may have been some exceptions - who are probably die hard fans for the two hero’s of the movie - Vikram and Surya and for Director - Bala. But for them, in general the movie was not making any sense to the public in general.

The expectations that Bala had created from his previous movies ’’Sethu’’ and ’’Nandha’’ which were artistic, moving and sensational. Vikram was the hero of Sethu while Surya was the hero of Nandha. Bala had extracted exceptional acting talents from both the actors in respectively in those movies

Whats good about this movie?
Portrayal and Presentation of the Characters:
Director Bala is has done a wonderful job in characterizing the lead actors pretty well as he did in his previous movies.

Vikram is characterized as the man in charge of the burial ground, someone who was born and brought up all along there. His lives there with only one person to accompany - the old man who brought him up. With such a background, Vikram has no idea what the external world is like, worst of it - he is not even ’used’ to converse to public - thus in most of part of the film - he doesnt’t even speak. Such a person after the death of the man, who brought him up, comes out to village and mixes with the public. The movie is all about how he copes with his experiences, how he is caught up in the evil web of city life. He plays part to perfection. A very powerful portrayal of a powerful person.

Surya’s character is just opposite to that of Vikram. He earns his everyday bread by fooling around by bursting a scam or two in selling stuff around. Surya’s character nicely compliments the seriousness of Vikrams character - without which the plot could have been little intolerable. Bala uses Surya and Karunas to establish the balance.

Laila’s character is also something different. Her performance raises everyone’s eyebrows. Something that many fellow heroines to envy about. Given a chance, Laila has proved her acting smartness. I am not sure if Bala had selected Laila and then built up her character or chose Laila for this character. She just lives it every moment - like an acting dynamite ready to burst any moment.

How abt the Music?

needless to say, IR would give his best for a movie like this.
The Background music is nice, but Visual medium is strong that they just block hearing senses.
As far the songs, there is nice ’Elangaathu veesude’ melody which Bala uses to show the funny moments Vikram pondering over - the world he is unaware of.

Well, Why did the movie appeal to me anyway?

There is so much of Violent scenes in the movie, which is something that strikes everyone to say ’Ah, Yucky!’. I know. But believe me, its all in the perception. Last year around this time, I saw an Hollywood - spilled with lot of violence like this - Gangs of NewYork. I was highly critic of that movie - that it was a bad example.
But in this movie, I did not see that Violence as Violence, I saw it as Power.
Power of Good to beat Evil, Power of Krishna to beat Duriyodhana.
Every time I saw Violent depiction, I felt stronger and stronger to fight against the evil inside me.
And unavoidably it come to mind that, if everyone thinks like that, how strong would we be?
But Violence is not a permanent solution to any problem - Anyway that totally a different topic

Is this movie realistic?


Cinema is a medium of exaggeration. Then where does ’Realism’ come into picture? The extent to which there is less exaggeration - that’s the degree of realism. On that note, Yes the movie is. Bala’s portrayal of characters is realistic. Questions like - Why do Laila’s parent’s don’t come into picture after a while - do arise - but then you can expect a director to tell you and justify every minor detail. Certain things have to be taken for granted. Certain people can’t accept that. Still some other ponder, these things don’t happen. For them its Not.

DO I recommend?
No, Not for young audience and light hearted people.
Yes, for the brave and intellectuals.
A must for anyone in who care about film direction

Is there any message in the movie?

Yes. To those film directors, who are still making movies on based masala formulas (Alas, even Shankar fell into that trap) : Stop it, or else you will be thrown out. Beware! There are more creative talents on upspring.