பெய்யெனப் பெய்யும் மழையாய் மனமதிற்
பெய்திடும் மெய்யருளும் மேனியெங்கும் ஓங்கிட
உய்யவே வேண்டும்; உந்தன் உகப்பை
செய்யவே வேண்டும் சிறப்பு.
Showing posts with label மரபுக் கவிதை. Show all posts
Showing posts with label மரபுக் கவிதை. Show all posts
Friday, June 04, 2010
Monday, May 31, 2010
எய்தவனே என்னையும் நோக்கு.
கைகொளாச் சிறுமை வலிந்து மலிந்தும்
கைகொளக் கிடைத்த தனித்த கருணையிற்
செய்தவம் யாதோ எனத்திகைத்த செய்கையிற்
எய்தவனே என்னையும் நோக்கு.
கைகொளக் கிடைத்த தனித்த கருணையிற்
செய்தவம் யாதோ எனத்திகைத்த செய்கையிற்
எய்தவனே என்னையும் நோக்கு.
Wednesday, October 14, 2009
வெண்பாவிற்குப்பின் ஆசிரியப்பா!
வெண்பா வடிக்கலாம் வாங்க என அழைத்த அகரம் அமுதா, இப்போது, ஆசிரியப்பா அறியலாம் வாங்க என அழைத்திருக்கிறார்!
----
தமிழ்நம்பி அவர்கள் வழங்கும் பாடங்களில் இருந்து எனக்கு விளங்கிய அளவிற்கு தொகுத்துச் சொல்வேன்:
----
வெண்பா இலக்கணத்தினை முன்பு இங்கே பார்த்தோம்.
வெண்பாவிற்கான தளைகள், வெண்டளைகள் அல்லவா?
1) முதலாவது இயற்சீர் வெண்'தளை'கள்:
மாமுன் நிரை, விளமுன் நேர்!
2) அடுத்து வெண்சீர் வெண்டளைகள்:
காய்முன் நேர்!
இதோடு, இன்னபிற தளைகளையும் சேர்க்கலாம் ஆசிரியப்பாவிற்கு:
அவை:
3) இயற்சீர் வெண்டளையை திருப்பிப்போட்டால் என்ன வரும்?
மாமுன் நேர், விளமுன் நிரை!
இவைதான் 'ஆசிரியத்தளை'
4) வெண்சீர் வெண்டளையைத் திருப்பிப்போட்டால் என்ன வரும்?
காய்முன் நிரை!
இதன் பெயர் 'கலித்தளை'
ஆக, இந்த நான்கு வகைத்தளைகள் தட்டாமல் வருவது 'ஆசு'இரியப்பா, ஆசிரியப்பா!
(ஆசு: குற்றம் ; இரி: நீக்குதல் : ஆக, குற்றம் நீக்கிய பா!)
வெண்பாவைப் போலவே, கனிச்சீர் சேராது.
வெண்பாவின் கடைச்சீர் 'நாள், மலர், காசு, பிறப்பு' போன்றதொரு ஒரு வாய்பாட்டில் முடியுமல்லவா?
ஆசிரியப்பாவின் கடைச்சீர் 'ஏ, ஓ, என், ஈ, ஆய், அய்' போன்றவற்றில் முடியும்.
வெண்பாவில் கடைசி அடி மட்டும் முச்சீர் கொண்டும், அதற்கு முந்தைய அடிகள் நான்குசீர் கொண்டும் அமையுமல்லவா?
ஆசிரியப்பாவில், இவ்விதி சற்றே தளர்த்தப்படுகிறது.
முதலடியும், இறுதி அடியும் நான்கு சீர்கள் பெறவேண்டும். குறைந்தது மூன்று அடிகள்.
இடையிடையே, நான்கு சீர்களுக்கும் குறைவாக, முச்சீரோ அல்லது இருசீர் கொண்ட அடிகளோ கூட அமைக்கலாம். இவற்றால், இவை 'வகை' பெறும், அவையாவன:
1. நேரிசை ஆசிரியப்பா : கடைசி அடிக்கு முந்தைய அடி, முச்சீர் பெற்ற அடி
2. இணைக்குறள் ஆசிரியப்பா: இடையிடையே இருசீரோ அல்லது முச்சீரொ பெற்ற அடிகள்
3. நிலைமண்டில ஆசிரியப்பா: எல்லா அடிகளும் நான்கு சீர் பெற்ற அடிகள்
4. அடிமறிமண்டில ஆசிரியப்பா: ஒவ்வொரு அடியும் இறுதியடிபோலவே வருவது.
எதுகை,மோனை:
வெண்பா போலவே, சீர்மோனையும், அடி எதுகையும் - ஆசிரியப்பாவிலும்.
~~~~
பின்குறிப்பு:
அடிகள் அமையப்பெற்ற சீர்களின் எண்ணிக்கையைக் கொண்டு, இவ்வாறு வழங்கப்படும்:
இரண்டு சீர்களைக் கொண்ட அடி : குறளடி
மூன்று சீர்களைக் கொண்ட அடி : சிந்தடி
நான்குசீர்களைக் கொண்ட அடி : அளவடி
ஐந்தடிகளைக் கொண்ட அடி : கழிலடி
ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அடி : கழிநெடிலடி
~~~~~
இதுதாங்க ஆசிரியப்பாவின் எளிமையான இலக்கணம், என்ன நீங்களும் எழுதத் தயாரா?!
எடுத்துக்காட்டுகளோடு, பாடங்களை படிக்கவும், இதற்கு அடுத்த நிலைகளை அறியவும்,
இங்கே வருக, வருக!
----
தமிழ்நம்பி அவர்கள் வழங்கும் பாடங்களில் இருந்து எனக்கு விளங்கிய அளவிற்கு தொகுத்துச் சொல்வேன்:
----
வெண்பா இலக்கணத்தினை முன்பு இங்கே பார்த்தோம்.
வெண்பாவிற்கான தளைகள், வெண்டளைகள் அல்லவா?
1) முதலாவது இயற்சீர் வெண்'தளை'கள்:
மாமுன் நிரை, விளமுன் நேர்!
2) அடுத்து வெண்சீர் வெண்டளைகள்:
காய்முன் நேர்!
இதோடு, இன்னபிற தளைகளையும் சேர்க்கலாம் ஆசிரியப்பாவிற்கு:
அவை:
3) இயற்சீர் வெண்டளையை திருப்பிப்போட்டால் என்ன வரும்?
மாமுன் நேர், விளமுன் நிரை!
இவைதான் 'ஆசிரியத்தளை'
4) வெண்சீர் வெண்டளையைத் திருப்பிப்போட்டால் என்ன வரும்?
காய்முன் நிரை!
இதன் பெயர் 'கலித்தளை'
ஆக, இந்த நான்கு வகைத்தளைகள் தட்டாமல் வருவது 'ஆசு'இரியப்பா, ஆசிரியப்பா!
(ஆசு: குற்றம் ; இரி: நீக்குதல் : ஆக, குற்றம் நீக்கிய பா!)
வெண்பாவைப் போலவே, கனிச்சீர் சேராது.
வெண்பாவின் கடைச்சீர் 'நாள், மலர், காசு, பிறப்பு' போன்றதொரு ஒரு வாய்பாட்டில் முடியுமல்லவா?
ஆசிரியப்பாவின் கடைச்சீர் 'ஏ, ஓ, என், ஈ, ஆய், அய்' போன்றவற்றில் முடியும்.
வெண்பாவில் கடைசி அடி மட்டும் முச்சீர் கொண்டும், அதற்கு முந்தைய அடிகள் நான்குசீர் கொண்டும் அமையுமல்லவா?
ஆசிரியப்பாவில், இவ்விதி சற்றே தளர்த்தப்படுகிறது.
முதலடியும், இறுதி அடியும் நான்கு சீர்கள் பெறவேண்டும். குறைந்தது மூன்று அடிகள்.
இடையிடையே, நான்கு சீர்களுக்கும் குறைவாக, முச்சீரோ அல்லது இருசீர் கொண்ட அடிகளோ கூட அமைக்கலாம். இவற்றால், இவை 'வகை' பெறும், அவையாவன:
1. நேரிசை ஆசிரியப்பா : கடைசி அடிக்கு முந்தைய அடி, முச்சீர் பெற்ற அடி
2. இணைக்குறள் ஆசிரியப்பா: இடையிடையே இருசீரோ அல்லது முச்சீரொ பெற்ற அடிகள்
3. நிலைமண்டில ஆசிரியப்பா: எல்லா அடிகளும் நான்கு சீர் பெற்ற அடிகள்
4. அடிமறிமண்டில ஆசிரியப்பா: ஒவ்வொரு அடியும் இறுதியடிபோலவே வருவது.
எதுகை,மோனை:
வெண்பா போலவே, சீர்மோனையும், அடி எதுகையும் - ஆசிரியப்பாவிலும்.
~~~~
பின்குறிப்பு:
அடிகள் அமையப்பெற்ற சீர்களின் எண்ணிக்கையைக் கொண்டு, இவ்வாறு வழங்கப்படும்:
இரண்டு சீர்களைக் கொண்ட அடி : குறளடி
மூன்று சீர்களைக் கொண்ட அடி : சிந்தடி
நான்குசீர்களைக் கொண்ட அடி : அளவடி
ஐந்தடிகளைக் கொண்ட அடி : கழிலடி
ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அடி : கழிநெடிலடி
~~~~~
இதுதாங்க ஆசிரியப்பாவின் எளிமையான இலக்கணம், என்ன நீங்களும் எழுதத் தயாரா?!
எடுத்துக்காட்டுகளோடு, பாடங்களை படிக்கவும், இதற்கு அடுத்த நிலைகளை அறியவும்,
இங்கே வருக, வருக!
Monday, August 25, 2008
வெண்பா வகுப்பால் விளைந்த என் பாக்கள்:
பதிவர் அகரம்.அமுதா அவர்களின் வெண்பா எழுதலாம் வாங்க! பதிவைப் பார்த்தவுடன்,
ஆகா, குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ? என விரைந்தேற்றுக் கொண்டேன்.
இடுகை இடுகையாய் வரிசையாய் வகுப்பெடுக்க,
வெண்பா மரபினை இங்கே சொல்லித்தருகிறார்.
இடுகைகளின் பின்னூட்டங்களில் அவர் தந்த வினா விளக்கங்களுக்கும்,
தளை தட்டியபோதெல்லாம் திருத்தியமைக்கும் நன்றிகள் சொல்லி,
இவ்விடுகைகளை ஓரளவுக்கு படித்ததில் பெற்ற ஊக்கத்தில் விளைந்த ஆக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
அல்லும் பகலும் அகத்தில் தியானிக்க
நில்லுமா தாரம் அதனில் நிலைக்க
வெல்லும் இடரதை ஆனை முகத்தான்
இலங்காய் துலக்கத் துவங்கு.
நல்லூர் முருகனை நாளும் வணங்கிட
வல்வினை யாவையும் ஓடிடும் நில்லாமல்
நல்வினை யாவையும் நாளும் பெருகிடும்
நில்வாய் மனமே நிலை.
புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்
வள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்
கொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்
உள்ளிருள் நீக்கும் ஒளி.
அணுவிலும் யாவிலும் ஆழ்ந்து அகண்டிடும்
நுண்ணிய அறிவே சிவமெனும் எண்ணமதில்
தன்னை உணர்ந்திடும் தன்னறி வாம்-அவ்
வணுவாற்றல் வேண்டும் அறி.
நிலையில் மனிதர் நிலைத்து வளர்ந்து
உலையில் உணவை சமைத்து இலையில்
விழுந்திட, ஏனோ மறந்தார் எனினும்
உழவின்றி உய்யா துலகு.
அஞ்சி அவதியுற வேண்டா அவனியில்
விஞ்சி அமைதியே மிஞ்சிட தஞ்சமிலா
தன்னிறைவு தந்திடும் ஒப்பம் இதனில்
அணுவாற்றால் வேண்டும் அறி.
உயிர்நாடி யானதிந்த மின்சக்தி கொண்டு
பயிர்கட்டி ஓங்கி வளமும் உயர்ந்திட
நுண்ணணுவை ஆனைகட்டிப் போரடித்து ஆள
அணுவாற்றால் வேண்டும் அறி.
வரும்மொழி யெல்லாம் வளம்தரும் வாழை
தரும்பயன் போலத்தான் - பன்மொழிக் கலையாவும்
எம்மொழியில் சேர்த்திடபின் மெல்லத்தான் சாகும்
எனும்பேதை அச்சம் தவிர்.
துணிந்திட துச்சம்; தடைகள் தவிடு;
தணிந்திடும் தாகம்; பருகிட இன்பம்;
அணிந்திட ஆக்கம்; எனவே நாளும்
இனிய தமிழ்செய்வீர் ஈங்கு.
இதுவரை முயற்சித்தவை இவ்வளவு தாங்க. முதன் முதலில் முயற்சிக்க துவங்கிய போது, அரை மணி நேரம் முதல், முக்கால் மணி நேரம் வரையானது, ஒரு வெண்பா எழுதுவதற்கு. போகப்போக பயிற்சிக்குப் பின், ஐந்து முதல் பதினைந்து நிமிடங்களில் எழுத இயலுகிறது. இத்தனைக்கும் வெண்பா இலக்கியங்களை புரட்டிடவில்லை.
வெண்பாவில் சொல்லப்போகும் கருத்து, என்ன வரிகளில் சொல்லப்போகிறோம் என்பது சில சமயம் முன்பாகவே மனதில் தோன்றி விடுகிறது. சில சமயம், ஒரு பகுதி மட்டும் கிடைக்கும். கிடைக்கும் வரிகளை முதலில் நான்கு அடிகளில் எழுதிக் கொள்வேன். பின் சீர் பிரிப்பேன். இவ்வாறு சீர் பிரிக்கும்போது, தளை தட்டினால், சீர்களை மாற்றி அமைப்பேன். சீர்களை மாற்றி அமைக்க இரண்டு உத்திகள். ஒன்று, சொல்லையே மாற்றி அமைத்தல். இன்னொன்று, சொல்லை சற்றே மாற்றி அமைத்தல். உதாரணம் : 'உணர' என்ற சீரை, 'உணர்ந்திட' என்று மாற்றினால், மாச்சீரில் இருந்து, விளச்சீருக்கு மாறுகிறது!. 'மனதை' என்ற சீரை, 'மனத்தினை' என்று மாற்றினால், மாச்சீரில் இருந்து, விளச்சீருக்கு மாறுகிறது!.
அடுத்தாக, அடிகளை மாற்றி அமைக்கலாம். எத்தனையாவது அடி, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் இருப்பதால், அதற்கு இசைந்து வரும் விதத்திற்கு ஏற்ப அடிகளை மாற்றி அமைக்கலாம். இவையெல்லாம் துவங்குபவர்களுக்கு மட்டும். ஓரளவு பயிற்சி பெற்றபின், இயல்பாக, ஒரு சீர் முடித்தபின், அது மாச்சீரா, அடுத்த சீரை நிரையசையில் துவங்கு. அல்லது, அது காய்ச்சீர் அல்லது, விளச்சீரா, அடுத்த சீரை, நேரசையில் துவங்கு - என்பதுபோல உள்ளுணர்வு சொல்ல, நேரடியாகவே வெண்பா எழுதலாம்.
ஒவ்வொரு சொல்லுக்கும் பல மாற்றுச் சொற்கள் தெரிந்தால் நலமெனப் படுகிறது. எங்கு தளை தட்டுகிறதோ, அங்கு அந்த சொல்லை எடுத்துவிட்டு அதற்கு இணையான மாற்றுச் சொல்லினைக் கொள்ளலாம். மேலும், எதுகை மோனை பளிச்சிட, அதற்கேற்ப சொல் கிடைத்துவிட்டால், வேறென்ன வேண்டும்?. சொற்களைத் தேடிக் கண்டுபிடிக்க இந்தச் சொல் அகராதி பயன்படுகிறது. முன்பொருமுறை இலவசக்கொத்தனார், ஒவ்வொரு சொல்லுக்குமான மாற்றுச்சொற்களின் பட்டியல் தரும் அகராதியை குறிப்பிட்டிருந்தார். அதைப்பற்றிய விவரம் ஏதும் இருந்தால், அறிந்தவர்கள் தரவும்.
மரபுக் கவிதைகள் எழுதுவது வசப்பட்டு விட்டால், அடுத்து என்ன, தன்னன்ன தன்னன்ன தான, தனனான்ன என்று இசைத்து வரும், சந்தக் கவிகளைப் படைக்கலாம்!
என்ன நீங்க எப்போ வெண்பா எழுத துவங்கப்போறீங்க? ஆசிரியர் அமுதா காத்திருக்கிறார்!
துவங்க விரும்புபவர்கள், இந்த இடுகையிலும் உங்கள் சந்தேகங்களைத் தெரிவிக்கலாம்.
வெண்பா எழுத வசப்பெற்றவர்கள், பின்னூட்டத்தில் உங்கள் ஆக்கத்தையும் தரலாமே!
ஆகா, குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ? என விரைந்தேற்றுக் கொண்டேன்.
இடுகை இடுகையாய் வரிசையாய் வகுப்பெடுக்க,
வெண்பா மரபினை இங்கே சொல்லித்தருகிறார்.
இடுகைகளின் பின்னூட்டங்களில் அவர் தந்த வினா விளக்கங்களுக்கும்,
தளை தட்டியபோதெல்லாம் திருத்தியமைக்கும் நன்றிகள் சொல்லி,
இவ்விடுகைகளை ஓரளவுக்கு படித்ததில் பெற்ற ஊக்கத்தில் விளைந்த ஆக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
அல்லும் பகலும் அகத்தில் தியானிக்க
நில்லுமா தாரம் அதனில் நிலைக்க
வெல்லும் இடரதை ஆனை முகத்தான்
இலங்காய் துலக்கத் துவங்கு.
நல்லூர் முருகனை நாளும் வணங்கிட
வல்வினை யாவையும் ஓடிடும் நில்லாமல்
நல்வினை யாவையும் நாளும் பெருகிடும்
நில்வாய் மனமே நிலை.
புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்
வள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்
கொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்
உள்ளிருள் நீக்கும் ஒளி.
அணுவிலும் யாவிலும் ஆழ்ந்து அகண்டிடும்
நுண்ணிய அறிவே சிவமெனும் எண்ணமதில்
தன்னை உணர்ந்திடும் தன்னறி வாம்-அவ்
வணுவாற்றல் வேண்டும் அறி.
நிலையில் மனிதர் நிலைத்து வளர்ந்து
உலையில் உணவை சமைத்து இலையில்
விழுந்திட, ஏனோ மறந்தார் எனினும்
உழவின்றி உய்யா துலகு.
அஞ்சி அவதியுற வேண்டா அவனியில்
விஞ்சி அமைதியே மிஞ்சிட தஞ்சமிலா
தன்னிறைவு தந்திடும் ஒப்பம் இதனில்
அணுவாற்றால் வேண்டும் அறி.
உயிர்நாடி யானதிந்த மின்சக்தி கொண்டு
பயிர்கட்டி ஓங்கி வளமும் உயர்ந்திட
நுண்ணணுவை ஆனைகட்டிப் போரடித்து ஆள
அணுவாற்றால் வேண்டும் அறி.
வரும்மொழி யெல்லாம் வளம்தரும் வாழை
தரும்பயன் போலத்தான் - பன்மொழிக் கலையாவும்
எம்மொழியில் சேர்த்திடபின் மெல்லத்தான் சாகும்
எனும்பேதை அச்சம் தவிர்.
துணிந்திட துச்சம்; தடைகள் தவிடு;
தணிந்திடும் தாகம்; பருகிட இன்பம்;
அணிந்திட ஆக்கம்; எனவே நாளும்
இனிய தமிழ்செய்வீர் ஈங்கு.
இதுவரை முயற்சித்தவை இவ்வளவு தாங்க. முதன் முதலில் முயற்சிக்க துவங்கிய போது, அரை மணி நேரம் முதல், முக்கால் மணி நேரம் வரையானது, ஒரு வெண்பா எழுதுவதற்கு. போகப்போக பயிற்சிக்குப் பின், ஐந்து முதல் பதினைந்து நிமிடங்களில் எழுத இயலுகிறது. இத்தனைக்கும் வெண்பா இலக்கியங்களை புரட்டிடவில்லை.
வெண்பாவில் சொல்லப்போகும் கருத்து, என்ன வரிகளில் சொல்லப்போகிறோம் என்பது சில சமயம் முன்பாகவே மனதில் தோன்றி விடுகிறது. சில சமயம், ஒரு பகுதி மட்டும் கிடைக்கும். கிடைக்கும் வரிகளை முதலில் நான்கு அடிகளில் எழுதிக் கொள்வேன். பின் சீர் பிரிப்பேன். இவ்வாறு சீர் பிரிக்கும்போது, தளை தட்டினால், சீர்களை மாற்றி அமைப்பேன். சீர்களை மாற்றி அமைக்க இரண்டு உத்திகள். ஒன்று, சொல்லையே மாற்றி அமைத்தல். இன்னொன்று, சொல்லை சற்றே மாற்றி அமைத்தல். உதாரணம் : 'உணர' என்ற சீரை, 'உணர்ந்திட' என்று மாற்றினால், மாச்சீரில் இருந்து, விளச்சீருக்கு மாறுகிறது!. 'மனதை' என்ற சீரை, 'மனத்தினை' என்று மாற்றினால், மாச்சீரில் இருந்து, விளச்சீருக்கு மாறுகிறது!.
அடுத்தாக, அடிகளை மாற்றி அமைக்கலாம். எத்தனையாவது அடி, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் இருப்பதால், அதற்கு இசைந்து வரும் விதத்திற்கு ஏற்ப அடிகளை மாற்றி அமைக்கலாம். இவையெல்லாம் துவங்குபவர்களுக்கு மட்டும். ஓரளவு பயிற்சி பெற்றபின், இயல்பாக, ஒரு சீர் முடித்தபின், அது மாச்சீரா, அடுத்த சீரை நிரையசையில் துவங்கு. அல்லது, அது காய்ச்சீர் அல்லது, விளச்சீரா, அடுத்த சீரை, நேரசையில் துவங்கு - என்பதுபோல உள்ளுணர்வு சொல்ல, நேரடியாகவே வெண்பா எழுதலாம்.
ஒவ்வொரு சொல்லுக்கும் பல மாற்றுச் சொற்கள் தெரிந்தால் நலமெனப் படுகிறது. எங்கு தளை தட்டுகிறதோ, அங்கு அந்த சொல்லை எடுத்துவிட்டு அதற்கு இணையான மாற்றுச் சொல்லினைக் கொள்ளலாம். மேலும், எதுகை மோனை பளிச்சிட, அதற்கேற்ப சொல் கிடைத்துவிட்டால், வேறென்ன வேண்டும்?. சொற்களைத் தேடிக் கண்டுபிடிக்க இந்தச் சொல் அகராதி பயன்படுகிறது. முன்பொருமுறை இலவசக்கொத்தனார், ஒவ்வொரு சொல்லுக்குமான மாற்றுச்சொற்களின் பட்டியல் தரும் அகராதியை குறிப்பிட்டிருந்தார். அதைப்பற்றிய விவரம் ஏதும் இருந்தால், அறிந்தவர்கள் தரவும்.
மரபுக் கவிதைகள் எழுதுவது வசப்பட்டு விட்டால், அடுத்து என்ன, தன்னன்ன தன்னன்ன தான, தனனான்ன என்று இசைத்து வரும், சந்தக் கவிகளைப் படைக்கலாம்!
என்ன நீங்க எப்போ வெண்பா எழுத துவங்கப்போறீங்க? ஆசிரியர் அமுதா காத்திருக்கிறார்!
துவங்க விரும்புபவர்கள், இந்த இடுகையிலும் உங்கள் சந்தேகங்களைத் தெரிவிக்கலாம்.
வெண்பா எழுத வசப்பெற்றவர்கள், பின்னூட்டத்தில் உங்கள் ஆக்கத்தையும் தரலாமே!
Saturday, July 26, 2008
என் மதியம் நிதிஸ்ரீ சுவேதிகா வாம்!
ஆமாங்க, சொல்லிடறேன், ஆடி முதலாம் நாளில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு 'சுவேதிகா' எனப் பெயர் சூட்டியுள்ளோம்.
சுவேதம் என்னும் சொல்லுக்கு, 'வெண்மை', 'தூய்மை' என்பன பொருள். ஒளிரும் வெண்மையான பாதரசம், என்ற பொருளில் திருமந்திரச் செய்யுள் ஒன்றிலும் குறிப்பிருக்கிறது.
திரு'வெண்'காட்டில் உறையும் ஈசன் சுவேதாரண்யேஸ்வரர் பெயரை நினைவூட்டும் வண்ணம் பெயர் அமைந்துள்ளது.
எல்லாம் வல்ல ஈசன் கருணையினால் குழந்தையும் எல்லா நிறைகளுடன் பிறந்துள்ளது.
என்னே ஈசன் கருணை, அவனுக்கு எத்துணை நன்றி நவில்வேன்?
ஆடி முதல்நாளில் ஆடிய பாதத்தான்
ஆதி சிதம்பர நாதன் அருளில்
உதித்திட்ட நித்திலம் ஈதென் மதியம்
நிதிஸ்ரீ சுவேதிகா வாம்.
கருணை மழைபொழி வெண்காட்டு ஈசன்
அருணோத யம்போல் சுவேத அருள்பொழிந்து
அன்பனுக்கு ஆடி முதல்நாளில் ஈந்துவந்த
என்செல்வம் வெண்மதி யாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
திருச்சிற்றம்பலம்.
தொடர்புடைய இடுகை:
திருவெண்காட்டு தேவாரப் பதிகம்
குழந்தைக்கு 'சுவேதிகா' எனப் பெயர் சூட்டியுள்ளோம்.
சுவேதம் என்னும் சொல்லுக்கு, 'வெண்மை', 'தூய்மை' என்பன பொருள். ஒளிரும் வெண்மையான பாதரசம், என்ற பொருளில் திருமந்திரச் செய்யுள் ஒன்றிலும் குறிப்பிருக்கிறது.
திரு'வெண்'காட்டில் உறையும் ஈசன் சுவேதாரண்யேஸ்வரர் பெயரை நினைவூட்டும் வண்ணம் பெயர் அமைந்துள்ளது.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவுஎன்னும் திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகப்பாடல் எம்வாய் மொழிந்து,
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
எல்லாம் வல்ல ஈசன் கருணையினால் குழந்தையும் எல்லா நிறைகளுடன் பிறந்துள்ளது.
என்னே ஈசன் கருணை, அவனுக்கு எத்துணை நன்றி நவில்வேன்?
ஆடி முதல்நாளில் ஆடிய பாதத்தான்
ஆதி சிதம்பர நாதன் அருளில்
உதித்திட்ட நித்திலம் ஈதென் மதியம்
நிதிஸ்ரீ சுவேதிகா வாம்.
கருணை மழைபொழி வெண்காட்டு ஈசன்
அருணோத யம்போல் சுவேத அருள்பொழிந்து
அன்பனுக்கு ஆடி முதல்நாளில் ஈந்துவந்த
என்செல்வம் வெண்மதி யாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
திருச்சிற்றம்பலம்.
தொடர்புடைய இடுகை:
திருவெண்காட்டு தேவாரப் பதிகம்
Friday, September 21, 2007
ரோஜா மணம்
சென்ற வெண்பா முயற்சியைத் தொடர்ந்து அடுத்த முயற்சி:
இந்த முறையும் தலைப்பும் ஊக்கமும் வாஞ்சிநாதன் அவர்களிடம் இருந்தே:
ரோஜாப்பூ மல்லிகை ஆன கதை
ரோஜாவை மல்லிகை என்றழைத்தால் மாறிடுமா
ரோஜாவின் வாசனை? வாசனையும் நாதன்
தருவித்த போது மலர்கொண்ட நாமத்
தினாலல்ல பூவின் மணம்!
Monday, September 17, 2007
தட்டாமல் தங்கும் தளை?
"இயன்றவறை இனிய தமிழில்" பதிவில் வாஞ்சிநாதன் ஒரு தலைப்பைக் கொடுத்து வெண்பா வடிக்கச் சொன்னர். இதுவரை மரபில் பாட்டெழுதி பரிச்சயம் இல்லை. சரி இப்போதாவது முயன்று பார்ப்போமே, என்று முயன்றேன்:
பா எழுத கொடுக்கப்பட்ட கருத்து இதுதான்:
If it were possible to heal sorrow by weeping and to raise the dead with tears, gold were less prized than grief.
இந்த கருத்தை தமிழில் தர வேண்டும் - பாவாக.
முதலில் நான்கு வரிகள் வருமாறு மேற்சொன்ன கருத்தை கவிதை வடிவில் எழுதிக் கொண்டேன். அடுத்ததாக சீர்களை சீராக வேண்டும். தளைகள் தட்டாமல் தட்டிக் கொடுக்க வேண்டும்.
இதற்காக தெரிய வேண்டிய இலக்கணம் எல்லாம் இவ்வளவேதான்:
1. காய் முன் நேர்
2. விளம் முன் நேர்
3. மா முன் நிரை
4. ஓரசை / நான்கு அசை சீர்கள் கூடாது
5. கனி வேண்டாம்
6. கடைசி சீர் - நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்ப்பாடுகளில் ஒன்றில் முடிய வேண்டும்.
ஆகா, இவ்வளவுதானா இலக்கணம் என்று தளைகள் தட்டாமல் பார்த்துக் கொண்டதில், விளைந்த பா:
புலம்பி அழுதால் மறைந்திடும் அன்பர்
திரும்பி வருவாரோ? கேளுமய்யா சுத்தசிவம்
அந்தோ வருகின் அழுகையும் விற்காதோ
ஆயிரம் பொன்னின் விலை.
மேற்சொன்ன பதிவுக்கு சென்றால் உங்களுக்கே தெரியும், எத்தனை பேர் எத்தனை வடிவாக, எத்தனை சரளமாக பா வடித்திருக்கிறார்கள் என்று. அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஏதோ முதல் முறை முயன்றதற்கு தேவலாம் என்று நினைத்திருந்தேன்.
பதிவாசிரியர் வாஞ்சிநாதன், பாவைப் பார்த்து விட்டு தன் மறுமொழியை பகிர்ந்தார்:
தளையில் வெண்டளை என்றால் என்ன, பாவில் இதுவென்ன ஆசிரியப்பாவா, இவையெல்லாம் அடியேன் அறியேன்! ஆனால், முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றாயிற்று, இனி அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியதுதான்!
பின்னர் என் அப்பாவிடம் இந்த கவிதையை காட்டியதில் அவர் சொன்னது:
சக்திமகன் வேழமுகன் என்றும் அருளிடுவாய்
முக்திதரும் நீள்பாதை ஒன்றில் நடந்திட
நீதருவாய் ஆனைமுகா தங்கத் தமிழ்தனில்
தட்டாமல் தங்கும் தளை.
நீங்களும் வெண்பா எழுத முயலலாமே?
தமிழ் மன்ற மையத்தில் வெண்பா எழுதவது பற்றி கட்டுரை ஒன்றும் இங்கே படிக்கலாம்!
சந்த நயத்துடன் புதுக் கவிதை எழுதவும், மரபிலக்கணம் தெரிந்திருந்தால் பெரிதும் துணை புரியும்.
"கவிதை எழுதப் பழகலாம் வாங்க" பதிவைப் படித்தாயிற்றா?
பா எழுத கொடுக்கப்பட்ட கருத்து இதுதான்:
If it were possible to heal sorrow by weeping and to raise the dead with tears, gold were less prized than grief.
இந்த கருத்தை தமிழில் தர வேண்டும் - பாவாக.
முதலில் நான்கு வரிகள் வருமாறு மேற்சொன்ன கருத்தை கவிதை வடிவில் எழுதிக் கொண்டேன். அடுத்ததாக சீர்களை சீராக வேண்டும். தளைகள் தட்டாமல் தட்டிக் கொடுக்க வேண்டும்.
இதற்காக தெரிய வேண்டிய இலக்கணம் எல்லாம் இவ்வளவேதான்:
1. காய் முன் நேர்
2. விளம் முன் நேர்
3. மா முன் நிரை
4. ஓரசை / நான்கு அசை சீர்கள் கூடாது
5. கனி வேண்டாம்
6. கடைசி சீர் - நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்ப்பாடுகளில் ஒன்றில் முடிய வேண்டும்.
ஆகா, இவ்வளவுதானா இலக்கணம் என்று தளைகள் தட்டாமல் பார்த்துக் கொண்டதில், விளைந்த பா:
புலம்பி அழுதால் மறைந்திடும் அன்பர்
திரும்பி வருவாரோ? கேளுமய்யா சுத்தசிவம்
அந்தோ வருகின் அழுகையும் விற்காதோ
ஆயிரம் பொன்னின் விலை.
மேற்சொன்ன பதிவுக்கு சென்றால் உங்களுக்கே தெரியும், எத்தனை பேர் எத்தனை வடிவாக, எத்தனை சரளமாக பா வடித்திருக்கிறார்கள் என்று. அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஏதோ முதல் முறை முயன்றதற்கு தேவலாம் என்று நினைத்திருந்தேன்.
பதிவாசிரியர் வாஞ்சிநாதன், பாவைப் பார்த்து விட்டு தன் மறுமொழியை பகிர்ந்தார்:
ஜீவா வெங்கட்ராமன், உங்களுடைய பா " அழுகையும் விற்காதோ ஆயிரம் பொன்னின் விலை" என்று முடிவது அழுத்தமாக இருக்கிறது (equivalent to a thousand golden exit lines!) ஆனாலும் எதுகையில் கவனம் தேவை. "அந்தோ" என்ற குறில்+ மெய் தொடக்கத்திற்கு எதுகை இல்லாவிட்டாலும் வேறாதாவது "குறில்+ மெய்" கொண்டு ஈற்றடியைத் தொடங்கினால்தான் பாவின் ஏற்றம் இறக்கம் சரியாக இருக்கும்
வெண்டளை தவறாமல் வருகிறதால் நீங்கள் தேர்ந்தவர் என்று தெரிகிறது.
தளையில் வெண்டளை என்றால் என்ன, பாவில் இதுவென்ன ஆசிரியப்பாவா, இவையெல்லாம் அடியேன் அறியேன்! ஆனால், முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றாயிற்று, இனி அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியதுதான்!
பின்னர் என் அப்பாவிடம் இந்த கவிதையை காட்டியதில் அவர் சொன்னது:
சரி, நாமும் கடவுள் வாழ்த்துப் பா எழுதாலாம் என துவங்க, எல்லா வெற்றிகளுக்கும் துவக்கமாய் இருக்கும் மூலதார முதல்வன், விநாயகனை முன்னிறுத்தி, இதோ என் அடுத்த முயற்சி:தொடங்குதல் எப்பொழுதுமே மங்கலமாயிருப்பது மரபு.அதனால் தான் அந்தக்காலத்தில் அத்தனை புலவர்களும் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு எந்தக் காவியத்தையும் படைத்தார்கள்.காவியம் என்று மட்டும் இல்லை, எந்த புது முயற்சியும் அப்படித்தான்.அதனால் வேறு ஏதாவது வாழ்த்துக் கவிதை எழுதிவிட்டு, கவிதை எழுதத் தொடரலாம். இதற்கு முன் ஏதாவது எழுதியிருந்தால் சரி.
சக்திமகன் வேழமுகன் என்றும் அருளிடுவாய்
முக்திதரும் நீள்பாதை ஒன்றில் நடந்திட
நீதருவாய் ஆனைமுகா தங்கத் தமிழ்தனில்
தட்டாமல் தங்கும் தளை.
நீங்களும் வெண்பா எழுத முயலலாமே?
தமிழ் மன்ற மையத்தில் வெண்பா எழுதவது பற்றி கட்டுரை ஒன்றும் இங்கே படிக்கலாம்!
சந்த நயத்துடன் புதுக் கவிதை எழுதவும், மரபிலக்கணம் தெரிந்திருந்தால் பெரிதும் துணை புரியும்.
"கவிதை எழுதப் பழகலாம் வாங்க" பதிவைப் படித்தாயிற்றா?
Subscribe to:
Posts (Atom)