மார்கழி இல்லாமல் மாதங்களா!
ஆண்டாள் இல்லாத மார்கழியா!
இங்கே ஆண்டாளின் மார்கழியில், ஆண்டவளை, ஆண்டாளை அகமகிழ கேட்டு இரசிப்போமா!
திருமதி. விசாகா ஹரி அவர்கள் ஜெயா டி.வி. மார்கழி மகா உற்சவத்தில் வழங்கிய ஹரிகதையினைப் பார்ப்போமா?
சென்ற முறை, தியாகராஜ இராமாயணம் வழங்கினார். இந்தமுறை அவர் வழங்கும் கோதை நாச்சியார் கதை கேட்டு கோதுகம் (உளக்களிப்பு) கொள்வோமா?
கதை கேளு, கதை கேளு, சுவையான கதை கேளு.
கோதையார் கதை கேளு, காது கொடுத்துக் கதை கேளு.
வழங்குபவர் : விசாகா ஹரி
வயலின் : அனந்தகிருஷ்ணன்
மிருதங்கம் : அர்ஜூன் கணேஷ்
பகுதி 1: (கோதை பிறப்பு)
பகுதி 2: (கோதை விடு தூது)
பகுதி 3 : (திருப்பாவை : மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்நாளால்...)
பகுதி 4 : (சூடிக் கொடுத்த சுடர்க்கொடி)
பகுதி 5 : (திருமண உற்சவம்)
பகுதி 6 : (வழியனுப்புதல்)
கண்களில் நீர் தளும்ப, உருக்கமாய் கதை சொன்ன பாங்கில், நீங்களும் உருகலையோ?
நேரடியாய், நிகழ்சியை பார்த்தவர்களில் சிலர், கண்ணீர் தாரையாய் மல்கிட, மாலனைச் சார்ந்தனரே.
Moral Of the Story? : பக்தி பண்ணி பாடி...