சரிதான், இந்த முறை இந்தியப் பயணத்தின்போது படிப்பதற்காக புத்தகம் வாங்கியாச்சு!. தொடர்ந்து முழு நீளமாக படிப்பதற்கு இதைப்போல் சந்தர்ப்பம் வேறேது?
இந்த முறை வாங்கியுள்ள புத்தகம் Life of Pi (Pi என்பது பைசைன் படேல் என்ற பெயரின் சுறுக்கம்). புத்தகத்தின் ஆசிரியர் கனேடியரான
யான் மார்டெல். 2002 க்கான
புக்கர் பரிசு பெற்ற நாவல். முன்பொருமுறை மதி இந்த புத்தகத்தைப்பற்றி எழுதியதாக ஞாபகம். 2006 இல்
நைட் சியாமளன் இந்தக் கதையை படமாக எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. பின்னால் ஹேரி பாட்டரின் சென்ற பகுதியின் இயக்குனர்
அல்போன்ஸோ க்யூரான் இயக்கப்போவதாக மாறிவிட்டது.
பைசைன் படேல் என்பவர் பாண்டிச்சேரியில் மிருகக்காட்சி சாலையில் காப்பாளராக உள்ளார். எழுபதுகளின் இறுதியில் இந்தியாவிலிருந்து நீர் வழியாக கனடா புலம் பெயர, கப்பல் நடு வழியில் மூழ்குகிறது. படேல் ஒரு படகில் ஒரு வங்க புலியுடனும் வேறு சில விலங்குகளுடன் தப்பிக்கிறார். இவர்கள் பசிபிக் பெருங்கடலில் 227 நாட்கள் தத்தளிப்பது கரை சேர்வது கதையின் முக்கிய பகுதி. பாண்டிச்சேரி - பசிபிக் - மெக்ஸிகோ - டொராண்டோ என பயணிக்கிறது கதை.

LifeOfPi


Yann Martel

ஆசிரியர் யான் மார்டெல் பாண்டிச்சேரிக்கு செல்லும்போது, அங்கு நேரு தெருவில் உள்ள இந்தியன் காஃபி ஹவுசில் ஒரு வயதான மனிதரை சந்திக்கிறார். அவர் பெயர் ஃப்ரான்ஸிஸ் அதிரூபசாமி. அவர் கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைக்கும் கதை ஒன்று சொல்கிறேன் என்று துவங்கி சொல்லும் கதைதான் இது.
புத்தகத்தில் மொத்தம் 326 பக்கங்கள்.
முன்னுரை மட்டும்தான் படித்துள்ளேன். முழுதும் படித்து முடித்துவிட்டு, நான் ரசித்தவற்றை எழுதுகிறேன்.
இது சம்பந்தப்பட்ட கார்ட்டூன்/விளையாட்டு ஒன்றை
இங்கே பார்க்கலாம்.