Showing posts with label மரபணுவியல். Show all posts
Showing posts with label மரபணுவியல். Show all posts

Friday, May 30, 2014

மோடிக்கும் ராஜபக்க்ஷேவுக்குமான பழங்காலத் தொடர்பு?

சிங்கள வம்சாவளியினரின் இலங்கை வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்தின் படி, வங்கத்தில் இருந்து கப்பலில் இலங்கைக்கு இளவரசன் விஜயன் (கி.மு 543 - கி.மு 505) என்பவன் வந்ததாகவும், அவனது வம்சாவளியினரே முதல் சிங்கள ராஜ வம்சமாகவும் கருதப்படுகிறார்கள்.

இது இப்படி இருக்க, சிங்கள வம்சாவளியினருக்கும் மற்றவர்களுக்குமான மரபணுத் தொடர்பை ஆராயும் சோதனைகள் என்ன சொல்கின்றன?

பல்வேறு சோதனைகளின் முடிவுகள் ஒன்றுக்கொன்று சற்றே முரணாக இருந்தாலும், அவை யாவும் சிங்களர்களுக்கும் வங்காளியர்க்குமான மரபணுத் தொடர்பை உறுதிப் படுத்துகின்றன.

1995 வாக்கில் நடத்தப்பட்ட ஆரம்பகால சோதனைகள் இந்தியத் தமிழர்களின் மரபணுத்தொடர்பே சிங்களரிடம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தன. இதனால் சிங்களர்க்கும் வங்கத்தினருக்குமான மரபணுத் தொடர்பு - மகாவம்சத்தின் கதையோடு அவ்வளவாக ஒத்துப் போகவில்லை.

சமீபத்தில், 2005-2006 இல் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளின் படி,  72 சதவிகிதமும் வங்காளியர்க்கும், 16 சதவிகிதம் தமிழருக்கும் மற்றும் 12 சதவிகிதம் குஜராதியினருக்கும் தொடர்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறது! இந்த ஆய்வில் தமிழரின் மரபணுத் தொடர்பின் பங்கு குறைந்துபோனதற்கு காரணமென்ன என்கிற கேள்விக்குச் செல்லாமல் (சோதனை செய்யப்பட்ட நபர்களைப் பொறுத்து பங்கு விகிதம் கூடவும் குறையவும் செய்யலாம்), வங்காளியர்க்கும், தமிழருக்குமான தொடர்பு எதிர்பார்த்ததே என்றாலும், குஜராத்தியினரின் குறிப்பிடத்தக்க பங்கு சிங்களரின் மரபணுவில் இருப்பதுமாக இவ்வாராய்ச்சி மூலம் தெரிகிறது.

மேலும் சில வரலாற்று ஆய்வளர்கள் - இளவரசன் விஜயன் வங்க நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப் படவில்லை. மகாவம்சம் சொல்லுவதற்கு மாற்றாக வட மேற்கு இந்தியாவில் இருந்து - குறிப்பாக தற்போதைய குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

வங்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பவர்கள் கூற்றுப்படி - விஜயன் இருந்த சிம்மபுரம் என்ற இடம் என்பது தற்போது மேற்கு வங்கத்தில் இருக்கும் சிங்குர் எனகிறார்கள். ஆனால் குஜராத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் என்பர்கள் கூற்றுப்படி, சிம்மபுரம் என்கிற இடம், தற்போது குஜராத்தில் சிஹோர் என்கிறார்கள். விஜயனின் கப்பல் முதலில் சுப்பாரகா என்னும் இடத்தை அடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடம் தற்போது மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் இருக்கும் சோபனா என்கிற இடமாக அறியப்படுகிறது. விஜயனின் கப்பல் வங்கத்தில் இருந்து கிளம்பி இருந்தால் எப்படி இந்தியாவின் மேற்கு கரையினை அடைந்திருக்க முடியம்? ஆகையால் மேற்கு கடற்கரையில் இருந்தே புறப்பட்டு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுக்கிறது.

குஜராத் நாட்டுப்புற பாடல்களிலும், மற்றும் ஒன்றிரண்டு திரைப்படங்களிலும் கூட, "இங்கு இருந்து இளவரசன் இலங்கை சென்று, அங்கு பெண்ணை மணந்தான்" என்கிற செய்தி பேசப்படுகிறது. இலங்கையின் தேசியக் கொடியிலும் இடம்பெறுகிறது சிங்கம். பழங்கால வங்கத்தில் சிங்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆனால் குஜராத்திலோ தொன்று தொட்டே சிங்கங்கள்  இருந்தன என்றும் தெரிகிறது.

மகாவம்சம் குறிப்பிடும் விஜயன் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று கொண்டாலும் கூட - அதனை இந்தியாவின் வட மாநிலங்களான வங்காளம் மற்றும் குஜராத்தில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்களின் நிதர்சனமான குறியீடாகக் கொள்ளலாம். பிற்காலத்தில் சிங்கள மொழி உருவாவதற்கும் இதுவே காரணமாகவும் அமைகிறது.

மரபணு சோதனை விவரங்களுக்கு விக்கி தளத்தில் இச்சுட்டியைப் பார்க்கவும்.

Sunday, December 25, 2005

மரபணுவியல் செய்திகள்

செய்திகள் வாசிப்பது ஜீவா!

ஓட்டப்பந்தையங்களில் கென்யாவைச் சேர்ந்தவர்களும், எத்தியோப்பியர்களும் - பொதுவாக ஆப்ரிக்க இனத்தினவர் முண்ணணியில் வருவது உங்களுக்கு தெரியும். முயன்றால் முடியாதது இல்லை என்றாலும், ஆப்பரிக்கர்களின் மரபணுவிலேயே ஏதாவது எழுதி வைத்து இருக்கிறதா என்றால் - 'ஆமாம்' என்கிறார்கள் - சமீபத்திய ஆய்வில் கிளாஸ்கோ பல்கலைக்கழக மரபணு ஆராய்சியாளர்கள். அவர்கள் ஆய்வு செய்த ஆப்ரிக்கர்களில் - அவர்களுக்கு நான்கு மரபணுக்களில் மாறுதல்கள் இருக்கிறதாக சொல்கிறார்கள். மாறுதலில் பொதுவானதொரு mutation ஏதும் இல்லாவிட்டாலும், மரபணு வகைகளில் ஏற்படும் கூட்டணிதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களுக்கு 10 வயது அதிகமாகிறதாம். அது சரி, அதெப்படி கணக்கிட்டார்கள் என்கிறீர்களா? கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது பற்றி ஆராய்ந்தது. முதலில் கொஞ்சம் முன்னுரை: ஒவ்வொரு குரோமசோமின் முனைகளிலும் 'டீலோமியர்' என்கிற டி.என்.ஏ இருக்கும். ஒவ்வொரு முறை செல் உடைந்து குட்டி செல்கள் உருவாகும்போதும் இந்த டீலோமியரின் நீளமும் குறைந்துபோகும். சிறிய வயதுள்ளவர்களில், 'டீலோமிரேஸ்' என்கிற என்சைம்-இன் உதவியால், டீலோமியர் வளர்ந்து குரோமசோம்கள் திடமாக இருக்க உதவுகின்றன. ஆக, டீலோமியர் நீளமாக இருக்க, ஒருவரின் குரோமசோம்கள் நீண்ட நாள் தாக்குப்பிடுக்கும், அவர் நீண்ட நாள் வாழலாம். வயதானவர்களில், நீண்ட டீலோமியர் இருப்பவர்கள் நீண்ட நாள் இருப்பார்கள் என்றும், டீலோமியர் அவ்வளவு நீளமாக இல்லாதவர்கள் குறைவான நாட்களே வாழ்வார்கள் என்றும் சொல்லலாம். சரி, இப்போ நம்ம ஆராய்ச்சிக்கு வருவோம். அதிக மன அழுத்தத்துடன் வாழ்ந்த்துவரும் பெண்களை ஆராய்சியில் உட்படுத்தியபோது, அவர்களுக்கு சொல்லி வைத்தார்ப்போல, டீலோமியர்களின் நீளம் குறைவாக காணப்பட்டதாம். கிட்டத்தட்ட 9 முதல் 17 ஆண்டுகால செல் வளர்ச்சியின் (அல்லது தேய்தலின்) அளவிற்கு அந்த தாய்மார்களுக்கு, மன அழுத்தம் காரணமாக செல்களின் அடிப்படையில் வயது குறைந்து போனதாக சொல்லலாம் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

Friday, June 03, 2005

மரபணுவியல் - கடந்துவந்த பாதை

1951 - ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் க்ரிக் டி.என்.ஏ மாதிரி வடிவம் செய்கிறார்கள்.


Watson and Crick Posted by Hello

1952 - ரோசாலிந் ஃபிராங்க்ளின் என்ற பெண்மணி டி.என்.ஏ வை எக்ஸ் கதிர்கள் கொண்டு படம் பிடிக்கிறார்.


XRayImage Posted by Hello

- மேலே உள்ள படத்தில் இரண்டு சங்கிலிகளே தெரிகின்றன. வாட்சன் டி.என்.ஏ வில் மூன்று சங்கிலிகள் கொண்ட தன் மாதிரியை இன்னமும் நிரூபணம் செய்ய இயலவில்லை.

1953 - லினஸ் பாலிங்க் டி.என்.ஏ வில் மூன்று சங்கிலித் தொடர்புகள் உள்ளன என உறுதியாக சொல்கிறார்.

- பிப்ரவரி 28: திடீரென தோன்றிய 'யுரேகா' எண்ணத்தில் தன்னுடைய மாதிரியில் சிறிது மாற்றி அமைக்க, எல்லாம் சரியாக வருகிறது. க்ரிக்-கும் அதை ஆமோதிக்கிறார்.

- ஏப்ரல் 25: 'நேச்சர்' சஞ்சிகையில் தன் கண்டுபிடிப்பை வெளியிடுகிறார்கள் வாட்சனும் கிர்க்கும்.

1959 - 'டவுன் சிண்ட்ரோம்' குரோமோசோம்-தனின் குறைபாடுதான் என கண்டறிகிறார்கள்.

1960 - டி.என்.ஏ வுக்கும் புரதம் உருவாகும் செல்களுக்கும் இடையே இருக்கும் ஒரு 'தூதுவன் ஆர்.என்.ஏ' கண்டுபிடிக்கப்படுகிறது.

1962 - வாட்சன், க்ரிக் மற்றும் வில்கின்ஸ் மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.


medal Posted by Hello


1967 - அலான் விட்சன், வின்செண்ட் சாரிச் ஆகியோர் ஐந்து மில்லியன் வருடங்களுக்கு முன்னாலே மனித இனமும் மனித குரங்கு இனமும் பிரிந்திருக்க வேண்டுமென்று கணக்கிடுகின்றனர்.

1970 - விஸ்கான்ஸின் பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் மரபணுவை முழுமையாக உருவாக்குகிறார்கள்.

1975 - ஆராய்சியாளர்கள் கலிஃபோரினியா கூட்டத்தில் மரபணு ஆராய்சிகள் வழிநெறிமுறைப்படுத்த வேண்டும் என்று முட்வெடுக்கிறார்கள்.

1976 - பாயர் மற்றும் ராபர்ட் ஸ்வான்சன் உலகின் முதல் மரபணு ஆராய்சி நிறுவனத்தை நிர்மாணிக்கிறார்கள்.

1978 - முதன்முதலாக மரபணுவிலிருந்து மனித இன்சுலின் தயாரிக்கிறார்கள்.

1982 - முதல் மரபணு மூலமாக உருவாகப்பட்ட இன்சுலின் மருந்து அனுமதிக்கப்படுகிறது.

1983 - கேரி முலிஸ் என்பவர் PCR என்னும் பாலிமெரீஸ் தொடர் வினையால் டி.என்.ஏ துண்டுகள் வேகமாக பல்கிப்பெருகும் வழி கண்டு பிடித்தார்.

1984 - அலெக் ஜெஃப்ரிஸ் டி.என்.ஏ கொண்டு ஒரு நபரை அடையாளம் கண்டு கொள்ளும் வழியை உருவாக்கினார்.

1985 - ராபர்ட் காலோ மற்றும் லூக் மாண்டாக்நீர் தனித்தனியே ஹெச்.ஐ.வி. வைரஸின் மரபணுத் தொடரினை பதிப்பிக்கிறார்கள்.

1986 - லெராய் ஹூட் உலகின் முதல் தானியங்கி மரபணு தொடர்பு உருவாக்கியை வடிவமைத்தார்.

1988 - ஹார்வார்ட் பல்கலைக்கழகம், மரபணு மாற்றியமைக்கப்பட்ட முதல் எலிக்கான உரிமைக்காப்பு பெறுகிறது.

1989 - பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா எனக் கண்டறியும் சோதனை முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது.

1990 - மனித டி.என்.ஏ தொடர்புச் சங்கிலியை நிறைவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

1993 - ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்சியாளர்கள் மனித கருவை இன்னொரு மனித கருவிலிருந்து க்ளோன் செய்து சில நாட்களுக்கு வளர்த்தனர்.

1994 - மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட தக்காளிப் பழம் சந்தைக்கு வருகிறது.

1997 - இயான் வில்மட் என்பவர் ஆட்டின் கருவை க்ளோன் செய்து இன்னொரு ஆட்டு குட்டியை (டாலி) உருவாக்கியிருப்பதாக அறிவித்தார்.

1999 - மரபணு சிகிச்சையின் விளைவாக முதன் மனித உயிரிழப்பு (ஒத்துக்கொள்ளப்பட்ட)


2002 - வீட்டுப்பூனை ஒன்றை டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் க்ளோன் செய்கிறது.

- வாட்சன் மற்றும் க்ரிக் டி.என்.ஏ மாதிரி வடிவமைத்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

2003 - மனித மரபணுவின் தொடர்புகள் முழுதும் நிறைவு செய்யப்பட்டுவிட்டதாக மனித ஜீனோம் திட்டவியலார் அறிவிக்கின்றனர்.