Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Saturday, August 30, 2008

அமெரிக்க சுற்றுப்பயணம் போகலமா சிட்டுக்களே?

குழந்தைகளே, அமெரிக்க சுற்றுலா பயணம் போகலாமா?, நீங்களும் வாரீங்களா? உங்களுக்கு அமெரிக்காவில் என்னென்ன இடங்கள் பிடிக்கும்? நியூ யார்க், வாஷிங்டன், ஒர்லாண்டோ, லாஸ் வேகஸ், கலிபோர்னியா டிஸ்னி லேண்ட் இப்படி நிறைய இடங்கள் உங்களுக்குத் தெரியும் இல்லையா? இந்த இடங்களெல்லாம், பெரிய ஊர்கள் அல்லவா? இங்கே இருக்கும் எல்லாமே பெரிசு பெரிசா இருப்பது ஆச்சரியமாக இருக்கு இல்லையா!. ஆனா, இவற்றில் பலவும் செயற்கை அழகு. செயற்கை அழகைக் காட்டிலும் இயற்கை அழகு, இன்னும் இனிமையா இருக்கும். மனதை அப்படியே இளக வைக்கும். இந்தியாவில் இருந்து, சுவாமி விவேகானந்தர் முதன் முறை அமெரிக்கா வந்திருந்தபோது, இங்கே இருக்கிற இயற்கை அழகைப் பார்த்து, அப்படியே பரவசப் பட்டாராம். நீங்களும் விவேகானந்தரைபோல் நாளைக்கு வரவேண்டுமல்லவா, நீங்களும் இந்த இயற்கை அழகை இரசிக்கலாமே!.

சிறுவர், சிறுமியரே, வாங்க, நம் இயற்கைச் சுற்றுலாவைத் துவங்கலாம்.

* அமெரிக்கா மேப் வரைபடத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன உடனே தெரிகிறது?. இரண்டு பக்கமும் இரண்டு பெரிய 'பெருங்கடல்'கள் இருக்குது இல்லையா?. கிழக்குப் பக்கம் அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்குப்பக்கம், பசுபிக் பெருங்கடலும் இருக்கு இல்லையா? இந்தக் கடல்களும் நிலமும் சேரும் இடத்தில் நிறைய கடற்கரைகள் இருக்கு. (கடல் + கரை = கடற்கரை). கடற்கரையில் என்ன இருக்கும்? நிறைய மணல் இருக்கும், இல்லையா?. அப்புறம் நல்லா காத்து வரும், இல்லையா!


* அடுத்து வரைபடத்தில் நீங்கள் கவனிக்கக் கூடியது, கிழக்குக் கடற்கரையின் கடலில் நீளமாக, நீட்டிக் கொண்டிருக்கும் ஃபோளிரிடா மாகாணம். இங்கே, தாழ்வான சதுப்பு நிலங்களில் நிறைய பறைவைகளைப் பார்க்கலாம். பலவிதமான பறவைகள், பலதூரம் பயணம் செய்து இங்கே வந்திருக்கும். வருடம் முழுதும் இந்தப் பறவைகள், ஒரு இடம் விட்டு ஒரு இடம் என இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். அவைகளுக்கு, யாதும் ஊரே, யாவரும் கேளிர். வண்ணப் பறவைகளைக் காணும்போது, மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்று நம்ம பாரதியார் சொல்லி இருக்காரு இல்லையா! படத்தில் எவர்கிளேட்ஸ் தேசிய பூங்காவில் அழகான வெள்ளை வெளீரென ஒரு கொக்கு இருக்கிறது அல்லவா. இதற்குப் பெயர் - பெரிய வெள்ளை ஹெரான் (The great white heron) என்பது.


* அடுத்து, மேப்பில் கிழக்குப் பக்கதில் நிலத்தின் நடுவே கடல்போல நிறைய நீர் இருக்குதல்லவா? இவை ஐம்பெரும் ஏரிகள் (Great Lakes) எனப்படும்.
இந்த ஐந்து ஏரிகளில் இரண்டில் இருந்து வெளியேரும் ஆறில் இருந்து நயகரா நீர்வீழ்ச்சியே பிறக்கிறதாம். தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் என்று நீங்கள் படிச்சிருப்பீங்க இல்லையா, அதுபோல, இந்த ஐந்தும் பெரியது!


* பிரம்மாண்டமான நயகரா நீர்வீழ்ச்சியைப் பற்றி நாம நிறைய பேரு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா. படத்தில் பெரிய படகில், இந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகே சென்று பார்க்கிறார்கள் பாருங்க. இதற்குப் பெயர் 'Maid of the Mist' என்று வைத்திருக்கிறார்கள். Misty-ஆக அந்த இடமே இருக்கு இல்லையா. அதன் பக்கத்திலே போகும்போது, அதன் சாரலில் நாம்ப நனைய, சுகமா இருக்கும் இல்லையா. நம்ப கவிஞர் வைரமுத்து, இந்த இடத்துக்கு வந்து பார்த்தபோது, "இந்த நீர் வீழ்ச்சியில் நீருக்கு இது வீழ்ச்சியல்ல" என்று சொன்னாராம்!.


* அடுத்து, குளிர்காலத்தில் பனியால் நிறைந்து எழில் கொஞ்சும் கொலராடோ ராக்கி மலைத்தொடரின் சிகரங்கள். இங்கே பனிசறுக்கும் சுற்றுலா இடங்கள் நிறைய உண்டு. பனிச்சறுக்குவது மட்டுமல்லாமல், ஸ்னோமொபைல், எனப்படும் பனியில் செல்லும் வாகனத்தில், பனிமலையில் பயணிக்கலாம். டாக் ஸ்லெட்ஜிங் எனப்படும், பனிநாய்களால் கட்டி இழுக்கப்படும் வாகனத்திலும் செல்லலாம். நம்ப பாரதியாரும், 'வெள்ளிப்பனியின் மீதுலாவுவோம்' என்று பாடி இருக்கிறார் இல்லையா!


* அடுத்து மேப்பில், பார்த்தால் உங்களுக்குத் தெரியும், தனியா ஒரு மாநிலம் வடமேற்குப் பக்கமா இருக்கும். அது தான் அலாஸ்கா மாகாணம். இது அமெரிக்காவில் இருக்கும் மாநிலங்களிலேயே பெரிதான மாநிலம். பனி உறைந்த ஏரிகளும், வன விலங்குகளும் இங்கே நிறைய இருக்கு. இங்கே சுற்றுலா பார்க்கப்போகும் மக்கள் நிறைய பேராம். பலர் பெரிய கப்பலில் சென்று பார்ப்பார்கள். இந்த மாநிலம், தனியா இருந்தாலும், அமெரிக்காவோடு ஒன்றிணைந்து, ஒற்றுமையா இருக்கு. அதுபோல நாமளும் ஒண்ணா, ஒற்றுமையா இருக்கக் கத்துக்கணும். பிரிவு, பிரிவு என்று பேசக்கூடாது. அப்படிப் பேசுபவர்களையும், அன்பால், நம்மோடு இணைக்கணும்.


* கலிஃபோர்னியா மற்றும் நெவாடா மாநிலங்களுக்கு நடுவே, தாஹூ ஏரி எனப்படும் பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. இரம்மியமான இதில் படகுச் சவாரி செய்வது ஒரு இதமான அனுபவம். அடுத்ததாக, இந்த மாநிலத்தின் யோசிமிட்டி அருவியும், அழகான மலைகளும் கண்கவர் காட்சியாக இருக்கும்.


* நமது பட்டியலில் அடுத்து இருப்பது, பிரம்மாண்டமான அகலமும், நீளமும், ஆழமும் நிறைந்த கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கு. இது அரிசோனா மாநிலத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 17 மில்லியன் வருடங்களுக்கு முன்னால், கொலரடா நதியின் அரிப்பால் உருவாகி இருப்பதாக ஆராய்சியாளர்கள் சொல்லும் இவ்விடம், இயற்கையின் விந்தையாக உள்ளது.


* இறுதியாக நம் பட்டியலில் பார்க்கப்போவது, யெல்லோஸ்டோன் மற்றும் கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா. பூகம்மம், எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை சீற்றங்களால், பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் புரட்டிப் போடப்பட்ட இந்த நிலப்பகுதி, பல இயற்கை விந்தைகளை தன்னுள்ளே அடக்கியுள்ளது. பெரும் மலைகளும், பச்சை சமவெளியும் அருகேயே பார்க்கலாம். பல வன விலங்குகளில் தஞ்சமாக இருக்கும் இப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்து, பல நூறு வருடங்களாக, இந்தப்பரப்பின் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும் வராமல் பாதுகாத்து வருகிறார்கள். குழந்தைகளே, நாம் எல்லோரும், நம் இயற்கையை மிகவும் நேசித்துப் பாதுகாக்க வேண்டும்.


அன்புச் சிறார்களே, இந்த ஆன்லைன் இயற்கைச் சுற்றுப்பயணம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? பல செய்திகளை அறிந்து கொண்டீர்களா, நல்லது. இதுபோல நீங்கள் அறிய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கு. நீங்களாகவே படித்து அறியலாம். அல்லது, உங்களுக்கு இன்னும் படித்தறியும் வயது வராமல் இருந்தால், உங்கள் அம்மா, அப்பாவையோ அல்லது வீட்டில் இருக்கும் பெரியவரையோ அல்லது உங்கள் அண்ணன் அல்லது அக்காவையோ, படித்துக் காட்டச் சொல்லுங்கள். பொது அறிவுனை ஊட்டும் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டும்.

கடைசியாக நாம், நம் சுற்றுப்பயணத்தில் பார்த்த யெல்லோஸ்டோன் பற்றி மேலும் விரிவான கட்டுரையை நான்கு பகுதிகளில் எழுதி இருக்கிறேன். குளிர்காலத்தில் யெல்லோஸ்டோன் எப்படி இருக்கும் என இக்கட்டுரை கூறுகிறது. தவறாமல் அவற்றைப் படிக்க வேண்டும்.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
இயற்கையை நேசிப்போம், அதில் உறையும் இறையையும் நேசிப்போம்.
என்ன, இன்னொரு நாள் பார்க்கும் வரை, விடைபெறலாமா?. Bye, Bye.

அடி வயிற்றைக் கலக்கும் டொர்னடோக்கள்

டொர்னடோ என்கிற பேரைக் கேள்விப் படாதவருக்கு, நம்ம ஊரில் அதைப்போல வேறொன்றைக் காட்டி - இதைப்போல என விளக்குவதற்கு, ஏதுமில்லாதபடி இருக்கிறது. சுழற்றி இழுக்கும் சூறாவளிப் புயல் காற்று எனச் சொன்னால் அது தோராயமாகத்தான் இருக்கும். வானத்தில் இருந்து தரையை தொட்டுப்பார்க்கும் (இதற்கு 'touchdown' எனப்பெயர்) இதன் நீளம், வானத்தில் இருந்து தரை வரை என்றால், அதன் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான டொர்னடோக்கள் ஏற்படுகின்றன. இவற்றில் சில நொடிகளே நீடிப்பவையும் உண்டு. பெரும் பொருட்சேதங்கள் ஏற்படுத்துவையும் உண்டு. முன் அறிவுப்பு மூலமாக, உயிர்சேதம் மட்டுப்படுத்தப் பட்டாலும், அதன் அபாயம் என்றைக்கும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பூகம்பம், எரிமலை, சுனாமி என இயற்கைச் சீற்றங்கள் பலவும் இருந்தாலும், டொர்னடோக்கள் அவற்றில் இருந்து மாறுபட்டவை. அவை வானத்தில் இருந்து வருவதால், டொர்னடோவின் நகர்வினை யாராலும் முழுமையாக கணக்கிட முடிவதில்லை. இதுவரை நிகழ்ந்தவற்றில் இருந்து கிடைத்த பொதுவான காரணிகளில் இருந்து, டொர்னடோ நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை தோராயமாக மட்டுமே கணிக்க இயல்கிறது. அக்காரணிகள் என்னவென்றால்: தரையின் அருகே இருக்கும் சூடான, அதே சமயத்தில் ஈரப்பதமான காற்று, கிழித்து வீசும் காற்று, உயரம் போகப்போக காற்றின் வீச்சில் தெரியும் திசை மாற்றம் ஆகியவையாகும். இடி மின்னலோடு ஏற்படும் சூறாவளிக் காலங்களில், காற்றும் சுழன்று வீசுவதால், அக்காலங்களில் டொர்னடா நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

அமெரிக்காவில் நிகழும் டொர்னடாக்களில் பெரும்பான்மையானவை, மத்திய அமெரிக்காவில் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் உள்ள காலத்தில் ஏற்படுகின்றன. தெற்கு டகோடா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலம் வரைக்கும் இடைப்பட்ட மாநிலங்களில் தான், இவை அதிகமாக நிகழ்கின்றன. ராக்கி மலைத்தொடர்களில் இருந்து வரும் குளிர்ந்த மற்றும், வரண்ட காற்று, அதே சமயம் தெற்கில் மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து வடக்கே நகரும் சூடான, மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகையில் - எதிர் எதிர் துருவங்கள் சந்தித்தால் என்னவாகும்? மழையும், பனிக்கட்டி மழையையும் பொழிய - இவற்றின் கலவை தான் காலிஃபிளவர் போன்ற தலையுடன் வானத்தை நோக்கி விரியும், டொர்னடோ. டொர்னடோவின் முழு சக்தியையோ, வீச்சையோ வல்லுனர்களால் நேரடியாக அளவிட இயலாததால், அவற்றில் ஏற்படும் பாதிப்புக்களைக் கொண்டே அவற்றை அளவிட வேண்டியுள்ளது. எங்கள் வீட்டுப் பக்கத்தில், டொர்னடோ வருவதற்கு முன்பான ஆலங்கட்டி மழைகளால் மட்டுமே அவர்களின் வீட்டின் கூரைக்கு இழப்புகள் பல ஆயிரம் டாலர்கள். நல்ல வேளை டொர்னடோ தரையைத் தொடவில்லை அன்று. வீட்டின் கூரையின் மேல், படபடவென்று யாரோ கற்களை எறிந்ததுபோல இருக்க, நாங்களோ செய்தி அறிக்கையை கேட்டவாறே, அடுத்த 15 நிமிடங்களுக்கு, குளியலறையில், பாத்ரூம் டப்பில் பதுங்கிக் கொண்டோம்!


டொர்னடோ வரப்போகிறது என்று தெரிந்தால், வீட்டின் அடிமட்டத்திலோ அல்லது வேறு ஒரு பாதுகாப்பான இடத்திலோ, தஞ்சம் அடைய மக்கள் அறிவுருத்தப்படுவார்கள். சராசரியாக, டொர்னடோ உருவாகத் துவங்கிய இடத்தில், அதற்கு கீழே வசிப்பவர்கள், பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்ள இருப்பது 13 நிமிடங்கள் தானம். அதற்குப்பின் டொர்னடோ தரையைப் பதம் பார்க்க வாய்ப்புகள் அதிகம். அதனால், அந்தப்பகுதியை விட்டு பாதுகாப்பான வேறு இடத்துக்குப் பயணிக்ககூட நேரம் இருக்காது. தரையை தொட்டுவிட்டலோ, அங்கு குடியிருப்பு ஏதேனும் இருந்தாலும், அது அநேகமாக, வானத்தில் பறந்திருக்கும். பல இடங்களில், வெளியில் நிறுத்தப்பட்டைருந்த வாகனங்களும், வீட்டின் கூரையும், மேல்தளமும் சிதைந்து சின்னபின்னமாகியுள்ளன.

1996 இல் வெளிவந்த திரைப்படமான 'டிவிஸ்டர்' மிகவும் சுவாரஸ்யமாக டொர்னடோக் கதையைச் சொல்லி இருக்கும். இத்திரைப்படத்திற்குப்பின் டோர்னடோக்களைத் தேடிப்போய் அவற்றைப் புகைப்படம் எடுப்பவர்களும் அதிகமானார்கள். இது உயிருக்கு ஆபத்தான செயல் என்றாலும், அதையும் பணயம் வைத்து, இந்தக் காரியத்தில் இறங்குகிறார்கள். மோசமான தட்பவெட்ப நிலையிலும், பற்கள் கடுகடுக்க, அவர்களின் வாகனங்களை பனிக்கட்டி மழைகள் பதம் பார்க்க, டொர்னடோ தொடருதல் நடைபெருகிறது. சில அஞ்சா நெஞ்சங்கள்(/ளை) டொர்னடோவைக் காட்டுவதற்கு டூர் அழைத்துப்போகும் கைட் போல வேலை செய்வதும் உண்டு. ஆனால் நிச்சயமாக அது நயகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதுபோல எளிதானதாக இருக்காது! :-)

அமெச்சூர் டொர்னடோ வேட்டையாளர்களைப் போலவே, அறிவியல் ஆராய்சியாளர்களும் டொர்னடோக்களைத் தேடிப்போவதுண்டு. நிலையான ராடார் கருவிகளைக் கொண்டு மட்டும் இவற்றை ஆய்வு செய்ய இயலாது. டொர்னடோ நிகழ்ப்போகும் இடத்தில் கொண்டுபோய் டாப்ளர் ராடார் கருவுகளைப் பொருத்துவதால் ஓரளவுக்கு பயனிருக்கிறது. இப்படி ஆராய்சியாளர்கள் தங்களால் இயன்ற அளக்கும் கருவிகளை தயார் செய்து, அங்கு வைத்து விட்டு வந்தால், பல சமயம், இந்த சுழற்காற்றுகள், ஒன்றுமில்லாமல் இற்றுப்போய் விடும். அடுத்த முறை வரை, அவர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

சமீப ஆண்டுகளில் சற்றே முன்னேறியிருக்கும் GPS போன்ற நுட்பங்களும் இந்தப் பணியில் கைகொடுக்கின்றது. டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவற்றுக்கு எவ்வளவு அருகே செல்லமுடியுமோ அவ்வளவு அருகில் சென்று அவற்றைப்பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பது அவசியமாகிறது. இதற்காக, ஆராய்சியாளர்கள், அமெச்சூர் காரார்களையும் உதவிக்கு கொள்கிறார்கள். டொர்னடோ பற்றியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் சின்னச்சின்னக் கருவிகளை, டொர்னடோ வரும் பாதையில் கொண்டுபோய் வைத்துவிட்டு, உடனே அந்த இடத்தைவிட்டு அகன்று விடுவார்கள். அவற்றில் ஒன்றான, 'டின்மேன்' எனப்படும் டொர்னடோக்களை படம் பிடிக்கும் கருவி, பிரபலம். இதன்மூலம், டொர்னடோவைப்பற்றிய தகவல்கள் மற்றும் படங்களை அவை மிக அருகாமையில் வரும் சமயம் பதிவு செய்ய முடிகிறது. இந்த தகவல்களின் உதவியால் வெப்பம், ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் மாறிக்கொண்டே இருக்கும் காற்றின் திசை ஆகியவற்றை மேலும் துல்லியமாக கணிக்க இயல்கிறதாம். தொடரும் ஆராய்ச்சிகள், டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணியைத் தொடருகிறார்கள்.

Friday, March 25, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 4 (நிறைவுப்பகுதி)

குளிர்காலம் முற்றுப்பெற்ற மறுநாளே, நானும், பெர்கெரும் க்ரேண்ட் டெட்டான் தேசிய பூங்காவின் தென் முனைய நோக்கி, நடைபயணமாய் கிளம்பினோம். கழுத்தைச்சுற்றி வளையம் போன்ற பட்டையுடன் மூஸ் மாடொன்றும், நான்கு எருதுகளும், மேலும் ஒரு மாடும் வெண்பச்சை நிற புல்வெளியில் அமர்ந்திருந்தன. நாங்கள் அதன் அருகாமையை அடைந்தவுடன், பெர்கெர் திடீரென, தன் கைகளை வாயில் குவித்துக்கோண்டு ராவென் பறவையப்போல் ஒலி எழுப்பினார். மூஸ் மாடோ அதில் கவனம் இழ்ந்ததாகக்கூடத் தெரியவில்லை. பின் நரியைப்போலவும் ஊளையிட்டார். மூஸ் மாடோ அவரைப்பார்த்து என்னை ஏன் இப்பட் போரடிக்கிறீர்கள் என்று கேட்பதுபோல் தோன்றியது.
பின்னர் பெர்கெர் என்னிடம் சொல்கிறார். ஒருகாலத்தில், நரிகள் மூஸ் கன்றுகளுக்கு ஆபத்து விளைவித்ததால், நரிகளின் ஊளைச்சப்தமே மூஸ் மாடுகளை பயமுறுத்தி வந்தது. ஆனால் இப்போதோ, அது பழங்கதையாகி விட்டது. இந்த மூஸ் மாடுகளுக்கு, இவற்றின் மூதாதாயரின் பய உணர்வு தொடரவில்லை போலும். மூஸ் மாடு அவருக்கு 'சாம்பிள்' ஒன்றை 'ஈந்த'உடன், அதை கவனமாக ஒரு ஜிப்லாக் பையில் போட்டுக்கொண்டார். பின்னர் நடைபாதைக்கு திரும்புகையில் அவர் சொல்கிறார். "நான் இதை எனக்கு நினவு தெரிந்த் காலம் முதல் செய்து வருகிறேன். ஏனெனில், வனம் மற்றும் இயற்க்கையின் மீது நம்மவர்களின் தாக்கம் எவ்வளவு என்பதை அறிவதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு" என்று. தொடர்ந்து, புன்னகையுடன் "அதே சமயத்தில் வனம் மற்றும் இயற்க்கையினால், மனிதர்களின்மேல் எவ்வளவு தாக்கம் உண்டு என்றறிவதிலும் ஆர்வம் உண்டு. ஆனால் அதை எண்களால் வரையருப்பது கடினம்" என்று.
எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தனிமையில் நீண்ட குளிர்காலத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டு இருப்பது எவ்வளவு கடினம் என்று - மூஸ் மாடுகள், க்யோட்டே நரிகள், மேக்பை வகை பறவைகள் மற்றும் அன்னம் ஆகியவற்றின் நிர்ணயக்கத்தக்க துணையில்லாமல். சப்தம் மிகுந்த வசந்தகாலத்தின் வருகயைப்பற்றி தன் ரிங்காரத்தினால் முன் அறிவிப்பு செய்யும் (சிவப்பு இறக்கை கொண்ட) கறுப்பு பறவையோ, அல்லது மலர்களில் தித்திக்கும் தேன் சுவையை கண்டுகொண்டு, அந்தரத்தில் ஊசாலடிக்கொண்டே தன் சிறகுகளை வியக்கவைக்கும் வேகத்தில் வீசவைக்கும் ஹம்மிங் பறவைகளோ, அல்லது நீர்வெளிகளில் படபடவென தன் சிறகுகளை அடித்துக்கொள்ளும் வாத்துக்களையோ, அல்லது விழுந்துபோன ஆஸ்பன் மரத்தைச்சுற்றி வரும் எல்க் மானின் இளம் குட்டியையோ, இவற்றில் எதை ஒன்றையையும் விடுவது என்பது மனதிற்கு மிக மிகக் கடினமேயாகும்.

எல்க் மான்

Elk Posted by Hello

அன்னம்

Swan Posted by Hello

உறைபனிக்கு நடுவே நீர்வீழ்ச்சி

Falls Posted by Hello

முற்றும்.

இதுவரை 'நேஷனல் ஜியோகிராபிக்' பத்திரிக்கையில் அலெக்ஸ்ஸாண்டர் ஃபுல்லர் என்பவர் 'அளவிடமுடியா பரிசுகள்' என்ற தலைப்பில் எழுதி வெளிவந்த ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம் படித்தீர்.
இது குளிர்காலத்தின் இறுதியில் யெல்லோஸ்டோனைப்பற்றிய கட்டுரை. மற்ற காலங்களில் யோல்லோஸ்டோன் போனீர்கள்லானால், இந்தக்கட்டுரையில் விளக்கியதைக்காட்டிலும் வேறு உலகததைக்காண்பீர்!

கடந்த பகுதிகளின் சுட்டிகள்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3

Thursday, March 24, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 3

க்ராண்ட் டெட்டான் மற்றும் யெல்லோஸ்டோன் பூங்காவின் எல்லைகளாக முதலில் அதன் பார்வைக்கு அழகு தரும் இடங்கள் வரை இருந்தது. இதனால், சென்ற அரை நூற்றாண்டில், அது மட்டும் போதாதென்றும், இங்கு வாழும் வனவிலங்குகளுக்கு தேவையான இடத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென உணர்ந்துள்ளனர். 1970களில், ஜான் மற்றும் பிரான்க் கிரைக்ஹெட் என்போர், க்ராண்ட் டெட்டான் மற்றும் யெல்லோ ஸ்டோன் பூங்காவின் முழுமையை கணக்கிட வெறும் நிலப்பரப்பின் அளவுகளையும், வேலிகளையும் கொள்ளாது, கரடிகள் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கென்று தனி விதிகளை ஏற்படித்திக்கொண்டு உலவி வருவதையும், அதனோடு மனித அருகாமையின் விளைவுகளையும் கணக்கில் கொண்டனர். அவர்கள்தான் முதன்முதலில், இங்கு வாழும் விலங்கினங்களின் எண்ணிக்கையும், வகைகளும் இந்த நூற்றாண்டையும் தாண்டி வளருமென்றும், குறிப்பிட்ட விலங்கினங்களை எடுத்துக்கொண்டு, இவற்றை மட்டும் தனியாக காப்பாற்றி விட முடியாது என்றும் சொன்னார். ஏனெனில், அவ்விலங்குகளை காப்பாற்றும் திட்டத்தில் அவை சார்ந்திருக்கும் சுற்றுசூழலை மேலாண்மை செய்வதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

யொல்லோஸ்டோன் மற்றும் கிரேண்ட் டெட்டானில், நரைத்தமுடிக் கரடியையும், (இவை சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, அவற்றின் முன் கோபத்திற்கும் எடுத்துக்காட்டு), ப்ராங்ஹார்ன் எனப்படும் ஒருவகை கொம்புமானையும் சேர்த்துக்கொண்டால், இந்த பூங்காவின் எல்லைகள் முழுவதும் ஓட்டைகள் இருப்பதாகத்தான் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு, பூங்காவின் உள்ளிருந்து வெளியேவும், வெளியிருந்து உள்ளேயும் இந்த விலங்குகள் இடம்பெயர்ந்தவாறு இருக்கும்.

கோடைக்ககாலத்திற்கும் குளிர்காலத்திற்கும் மிக முக்கியமான பாலமாகத்திகழ்வது யல்லோஸ்டோனைச் சுற்றி இருக்கும் நிலப்பகுதியானது - இப்போது இவை 'புற யல்லோஸ்டோன் சுற்றுசூழல் பகுதி' (GYE) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான எவரும், அதன் எல்லைகளை தோராயமானதுதான் என்று ஒத்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு, ஹம்மிங் பறவைகளை எடுத்துக்கொண்டால், GYE - னது, மத்திய மற்றும் தென் அமெரிக்காவரை நீளக்கூடும்!. னால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஃப்ரான்ஸ் கேமன்ஜிந்த் எனும் உயிரியல் வல்லுனர் என்னிடம் சொன்னார் "கடைசியாக, வேறுவழியில்லாமல், பொருள்படவேண்டி, யெல்லோஸ்டோனின் வனப்பகுதியை பூங்காவாக அறிவித்தோம்" என்று.

என்னுடைய கேபினிலிருந்து, எந்த திசையில் சென்றாலும், GYE-க்குள் செல்லலாம். கேமன்ஜிந்த் சொல்லுவதுபோல், அமெரிக்காவில் காப்பாற்றப்பட்ட இயற்கை வனச்சூழலில் இதுவே மிகப்பெரியதாகும். ஆனால், வரைபடத்தில் பார்த்தாலோ, இதன் மேல் பறந்துபோனாலோ, அவ்வளவு பெரிதானதல்ல என்று தேன்றும். சரிதான், ஆனாலும், அமெரிக்காவில் இருப்பதில் இதுவே மிகப்பெரியது.
குறைந்துவரும் அளவினால், GYE தாக்குப்பிடிப்பதற்கு, நட்சத்திர அந்தஸ்து பெற்ற (நரைமுடிக் கரடிகள், நரிகள், பைசன் எருதுகள்) விலங்குகளை கவனிப்பது மட்டுமல்லாமல், நமது எதிர்பார்ப்புகளில் ஏற்படும் திடீர் மாறுதல்களை தணிக்கவும் வேண்டும். நாம் நம்முடன் வாழ எதிர்பார்க்கும் விலங்குகளின் வலிகளை புரிந்துகொள்ளவேண்டும்.

ஜோயல் பெர்ஜர் என்பவர் (பார்ப்பதற்கு ஒல்லியான, வெள்ளையடித்த நபர்), இரண்டு மொழி கற்றவர். இதென்ன பிரமாதம் என்கிறிறீர்களா? நான் சொன்னதில் இரண்டாவது மொழி, விலங்கின மொழி. சென்ற ஒன்பது வருடங்களில் அவர் சந்தித்தவை – அதிர ஓடி வரும் மூஸ் மாடுகளையும், திடீரெனத் தோன்றும் கரடிகளையும் மட்டுமல்ல – ராக்கி மலைதொடர்களின் கடுங்குளிரையும், கால்களைப் படரும் காட்டுப்புதர்களின் நடுவே மூஸ் மாடுகளின் சமீபத்தைய சாணம் தேடும் (அய்யே) வெட்டையயும்தான்!. மூஸ் மாடுகளின் சமீபத்திய தலைமுறைகள் காட்டு நரிகளை பார்த்திருக்காது. இந்த சூழ்நிலையில், இந்த காட்டு நரிகள், இங்கே மீண்டும் அனுமதிக்கப்பட்டவுடன், அவற்றால், மூஸ் மாடுகளில் எதேனும் மாறுதல் உள்ளதா என்றரியும் ஆராய்சியில் ஈடுபட்டுள்ளார், வன பாராமரிப்பு இயக்கத்தைச் சேர்ந்த இந்த உயிரியியல் வல்லுனர். இவர், மூஸ் மாடுகளின் கருவுரும் விகிதங்களையும் (சாணம் தேடிப்போனது இதற்காகத்தான் – சாணத்தில் இருக்கும் ஹார்மோன்கள் – கருவுரும் தன்மைக்கு அளவுகோல்), மாட்டின் கன்றுகள் எவ்வளவுநாள் தாக்குப்பிடிக்கின்றன என்ற விகிதத்தையும், காட்டு நரியின் ஊளை மற்றும், மற்ற இயற்க்கை சப்தங்களினால் மூஸ் மாடுகளின் போக்கு போன்றவற்றையும் கூட பதிவு செய்துள்ளார். இந்த ஆய்வுகளினால், எல்லோரும் பயந்த்ததுபோல் அல்லாமல், மூஸ் மாடுகளின் எண்ணிக்கை குறைவிற்கு, காட்டு நரிகளின் மறு அனுமதி காரணமில்லை என கண்டறிந்துள்ளார். கடினமான கோடக்காலத்தின் இறுதியில், குறைவான மாடுகளே கருத்தரிப்பதும், குறைவான கன்றுகளே தாக்குப்பிடிப்பதாலுமே காரணம் என்கிறார்.

யெல்லோஸ்டோன் மற்றும் க்ராண்ட் டெட்டான் - நிலப்படம்


Map of Yellowstone & Grand Tetton Park Posted by Hello

(அடுத்த பகுதியில் முடிப்பேன்)

பகுதி 1 பகுதி 2

Wednesday, March 23, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 2

அமெரிக்காவின் இயற்கை வளங்களில் முக்கியமானதான யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவைப்பற்றிய ஆங்கிலக்கட்டுரையை தமிழில் மொழி பெயர்க்கிறேன். முதலாம் பகுதியின் சுட்டி இங்கே.

இந்த அமெரிக்க நாட்டிலேயே இரண்டு வகை வெவ்வேறு பருவங்களுண்டு. எளிதில் உடையக்கூடிய குளிர்காலம் ஒரு உலகம். எதற்கும் கவலைப்படாத கோடைக்காலம் இன்னோரு உலகம். இந்த இரண்டு உலகங்களுக்கு இடையே பாலமாக இருப்பது, என்றும் மெலிந்து கொண்டிருக்கும் இடமாற்ற வழிகள் - பறவைகளும், விலங்குகளும் வான் வழியாகவும், நிலம் வழியாகவும் கோடையில் இந்த தேசிய பூங்காவிற்குள் நுழைந்து, குளிர்காலமென்னும் அடுத்த உலகை அடையும். ஜேக்ஸனைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் ப்ரான்ஸ் கேமசைந் சொல்கிறார்: "யெல்லோஸ்டோன் & கிராண்ட் டெட்டானின் பல்வேறு வகை உயிரினங்கள் எங்கே போய்ச்சேருகின்றன என்று பார்த்தால் - ஸ்வெய்னின் கழுகளும் சிட்டுக்குருவிகளும் மத்திய மற்றும் தென் அமெரிக்கா வரை சென்றடையும்" என்று.

நீங்கள் நினைக்கக்கூடும் - இந்த இரண்டு பூங்காக்களின் ஈடுபாடு தேசிய எல்லைகளை கடக்கிறதா என்று. நான் சொல்வேன் - இந்த பூங்காக்களின் நிஜ எல்லை மட்டுமே எல்லையாக இருந்தால், இவ்வளவு வியக்கத்தக்க பூங்கா இருந்திடினும், இங்கு வாழும் உயிரினங்களால் தாக்குப்பிடிக்க இயலாது. இயற்கையின் எதிர்பாரா சீண்டுதல்லால்லோ அல்லது மனிதனின் அஜாக்கிரதையோ, இந்த இடத்தில் வாழும் உயிரினங்களை அகற்றிவிட முடியும். அப்படியே இவை அனைத்தும் இங்கு இல்லாமல் போனால், கடினமான உயிரற்ற பொருட்களின் காட்சி (செத்த காலேஜ்?) - இந்த அழகான, இளமையான இடத்தில் ஓர் கொடூரமெனத் தோன்றும். இதை நன்குணர்ந்த நம் முன்னோர்கள், இந்த எழில் கொஞ்சும் வனத்தை உலகின் முதல் தேசிய பூங்காவாக உருவாக்கும் முயர்ச்சியில், 1872-லேயே அமெரிக்க காங்கிரஸில் சட்டம் கொணர வழி வகுத்தார்கள் - "இதன் எழிலை அனுபவிக்கவும், அதனால் வளமடையவும்" என்பதே அவர்களின் தாரக மந்திரம். இன்றய கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா 1950-இல் 310,000 ஏக்கர் கொண்ட காட்டு நிலமாக உருவாக்கப்பட்டது. ராக்கி மலைத்தொடர்களின் முதுகுத்தண்டுவடத்தில் தொடங்கி, 'ஜாக்ஸன் ஹோல்' சமவெளிவரை பரவியிருந்தது.

இந்த இரண்டு பூங்காக்களையும் சேர்த்தால் (இவை இரண்டையும் இணைப்பது, ஜான் டி. ராக்கெபெல்லர் ஜூ. மெமோரியல் பார்க்வே) 2.5 மில்லியன் ஏக்ராவிற்கும் மேல் ஆக, அவற்றின் கடைசி ஏக்ராவரை அழகிற்கு பஞ்சமேதும் கிடையாது.

அமெரிக்க வரை படத்தில், ஒரு விரல் வைத்தாலே மறைந்துபோகும் இடத்தில், காடுகளும், மலைத்தொடர்களும், வெந்நீர் ஊற்றுகளும், மண் பானைகளும், நதிநீர் சமவெளிகளும் கலந்தவாறு காட்சியளிக்கின்றன. அமெரிக்காவின் மத்தியமேற்கின் தலை சுற்ற வைக்கும் தட்டை நிலங்களை ஈடுகட்டுவதுபோல இந்த பசுமை நிறைந்த சமவெளிகள் இனிமை தருகின்றன.

இப்படியொரு நிலப்பரப்பு ஏற்பட்ட காரணமென்ன தெரியுமா?. ஏறக்குறைய 13 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் (அம்மாடி!), அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களின் காரணத்தால் ஏற்பட்ட நிலநகர்வுகளால், தற்போது டெட்டான் மலைத்தொடர்களும் சமவெளிகளும் அருகருகே அமைந்தன. 12,000 வருடங்களுக்குமுன் நகரும் பனிமலைகளால் செதுக்கப்பட்டு நீள்செங்குன்றுகளாக கிராண்ட் டெட்டானில் தோன்றின. யெல்லோஸ்டோனின் மத்திய சமவெளியோ, வெகு முன்பாகவே, ஏறக்குறைய 600,000 ண்டுகளுக்கு முன் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்த எரிமலை வெடிப்புகளின் விளைவாக பிறந்ததாகும்.

இது மிக அழகான இடம். ஆனால் அதே சமயம் இது அமைதியான இடமென்று யாரும் குறை கூற முடியாது. இங்கே நிலம் பொறுமையின் சின்னம் இல்லை. அது யெல்லோஸ்டோனின் வென்னீர் ஊற்றுகளில் வெளிவறும் சாம்பல் புகைகளில் மட்டுமல்ல, புல்வெளிகளின் வீறல்களில் உற்றுப்பார்த்தாலும் பூமி விம்மிக்கொண்டுதான் இருப்பது தெரியும். எரிமலை நிகழ்வுகளால் ஏற்பட்ட மண்ணானது, யெல்லோஸ்டோனின் உயரமான இடங்களிலும், கிராண்ட் டெட்டானின் சரிவுகளிலும் வெளிப்படையாகவே உள்ளது. இங்கு 'வளரும் பருவம்' என்று சொல்லப்போனால், ஆல்பைன் மரக்காடுகளில் இரண்டு மாதம்முதல், பள்ளத்தக்குகளில் மூன்று முதல் நான்கு மாதம் வரைதான். செப்டம்பர் மாதம் வந்தால் போதும். காற்றுக்கே வேலி வந்துவிடும். கசப்பான காற்று அமைதியை நிரந்தரமாக தந்துவிடும். இருந்தும், வனவிலங்குகள் மற்ற இடங்களில் எல்லாம் மனித நடமாட்டம் இருப்பதால், இந்த இடத்தை தங்கள் வீடாக கொள்ள வேண்டியுள்ளது. இருந்தும், வனவிலங்குகள்தான் இந்த இடத்திற்கு உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது. புல்வெளிகளில் விலங்குகள் மேய்ந்தும், பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொறித்தும், மாமிச உண்ணிகள் மற்ற விலங்குகளை வேட்டையாடியும், புல்வெளிகளுக்கும், நீரோடைகளுக்கும், இவை தினம்தினம் ஒவ்வோர் வடிவத்தை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. ஏதாவது ஒரு விலங்கின் பழக்கத்தை லேசாக பிடித்து நிறுத்தினாலும், மொத்த சூழ்நிலை மண்டலமும் இடிந்து விழுவதுபோலாகி விடும். ஜான் முயிர் சொல்வதுபோல், இந்த உலகத்தில் ஒவ்வொன்றும் மற்றொன்றோடு கொண்ட தொடர்பினால், எந்த ஒரு தொடர்பினை அறுத்தாலும், மற்ற எல்லாம் உடைந்துபோகும்.

போவோமா ஊர்கோலம்? - பைசன் எருதுகள்


Bison Posted by Hello

செந்நரி


RedFox Posted by Hello

(அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...)

Saturday, March 19, 2005

வெள்ளைப் பூக்கள்

மார்ச் மாதமாகிவிட்டது. குளிர் காலத்தின் கடைசி மாதம். குளிர் இன்னமும் முழுதாய் விட்டபாடில்லை.
சூரியன் மேகங்களுடன் கண்ணாம்பூச்சி விளையாடிக்கொண்டிருக்கும். பகலில் ஒரு சில சமயம் சூரியன் எட்டிப்பார்த்தால் மட்டுமே வெப்பம்.
நாங்கள் வசிக்கும் அட்லாண்டாவில், மேலை அமெரிக்காவைப்போல் வாட்டி எடுக்கும் குளிர் இல்லாவிட்டாலும், குளிரானாலும், வெய்யிலானாலும் சரி மிதமானதகவே இருக்கும்.

மார்ச் மாதத்தின் தொடக்கதிலேயே, காய்ந்து போன மரங்கள் துளிர் விடத்தொடங்கிடும். ஒரு சில வகையான மரங்கள் பூ வைக்கத்துவங்கிவிடும். இவற்றில் ஒன்று, வெள்ளை பூக்களை கொண்டிருக்கும். இம்மரத்தை, நகரெங்கிலும் பார்க்கலாம். இந்த மரத்தில் என்ன விசேஷம் என்றால், இந்த மாததில், மரத்தில் இலைகளே கிடயாது. மரம் முழுதும் வெள்ளை பூக்கள் தான். நிறத்தை சரியாகச்சொல்ல வேண்டுமெனால், வெளிர் பச்சை நிற பூக்கள் இவை. தூரத்தில் இருந்து பார்ப்பதற்க்கு வெள்ளை பூக்கள் போலத்தோன்றும். நவம்பர் மாதத்தில் இதே மரம் பழுப்பு நிற இலைகளை கொண்டு அழகாகக் காட்சி அளித்தது. இலையுதிர் காலத்திற்குப்பின், அனைத்து இலைகளையும் இழந்து மொட்டையாக மூன்று மாதங்கள்.
இப்போதும், இலைகளில்லை, அனால், பூக்களுண்டு.

இயற்கையின் சீரான மாற்றங்களில்தான் எத்தனை வினோதம்!


Vellai pookal Posted by Hello

Friday, March 18, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 1

நவம்பர் 2003 - நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிக்கையில் வந்த ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கிறேன். இன்னமும் முழுவதாக, முடிக்காததால், பகுதிகளில், ஒரு தொடரைப்போல் வெளிவரும். அமெரிக்காவின் வித்யாசமான, அதே சமயம் வியத்தகு இயற்கை வனப்பை, அனுபவித்தவர்களும், கேள்வியால் மட்டுமே அறிந்தவர்களும், கேள்விப்படாதவர்களும் ஒருசேர படித்து நுகருங்கள்.

யெல்லோஸ்டோன் கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா, அமெரிக்கா - அளவிடமுடியா பரிசுகள்


கிராண்ட் டெட்டானில் எங்கள் கேபினிலிருந்து ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தால் எப்படி இருந்தது தெரியுமா? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனிவெளி. அவற்றுக்கப்பால் வெளிர்ஊதா நிறத்து ஆஸ்பன் (Aspen) மரங்கள். அவற்றுக்கும் அப்பால் வெள்ளைவெளிர் சூரிய கதிர்கள். அதையும் தாண்டினால் மீண்டும் பூமியில் விண்ணைப்பிளந்து நிற்கும் ராக்கி மலைத்தொடர்கள். இந்த அழகிய பிரதேசம் பல கவிதைகளை மட்டுமல்ல, முதன்முறையாக தேசிய பூங்கா ஒன்றை அமைக்கும் அமெரிக்க சட்டத்தையும் உருவாக்கியது என்றால் பாருங்களேன். ஆனால் நானோ உங்களுக்கு இவ்விடம் தரும் அன்றாடப்பரிசுகளை அளவிடப்போகிறேன்.

இது மார்ச் மாதம். சூடு என்னும் சொல்லே மிகத்தொலைவில் இருந்தது - நாங்களோ குளிர் காலத்தின் இருக்கமான பிடிகளில். என் குதிரைகளோ தங்கள் தோள்களை சிலிர்த்துக்கொண்டும், தங்கள் வாலை வயிற்றுக்கடியில் இழுத்துக்கொண்டும் இருந்தன. அவற்றுக்காக, காய்ந்த புல்லை வெளியே எடுக்க, படர்ந்திருந்த பனியை அகற்றியபோது, என் திடீர் செய்கையை எதிர்பாராத நீல நிற ஹெரான் பறவை ஒன்று (இந்த சீசனில் இதுதான் முதல்முறை பார்க்கிறேன்) விண்ணுக்குப் பறந்து, சில்லென்ற எதிர்காற்றில் விரைந்தது, ஜுராசிக் காலத்து பறவை - டெர்ரோடாக்டெல் போலத்தோன்றியது எனக்கு. இதுதான் முதல் பரிசு.

பகலில் வயோமிங் வானொலியில் எச்சரிக்கைகள் வந்தவண்ணமாய் இருந்தன. நீண்ட குளிர்கால ஓய்விற்குப்பின் கரடிகள் வெளிவரக்கூடுமாம். பசியில் உணவு தேடிக்கொண்டிருக்கும் விலங்குகளிடம் நாங்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கை செய்தனர். அதே சமயம், கேபினிலில் ஓர் ஓரத்திலிருந்த விறகுகளிலிருந்து வெளிவந்த ஈக்கள், நீண்ட நாள் வாழ்வோமென்ற நம்பிக்கையில் மேலே பறந்து, ஜன்னல் கதவுகளில் மோதி, என் தேனீர் கோப்பையில் வந்து விழுந்தன. வாழ்க்கை இருக்கிறதே - மிக அபாயகரமான, சிக்கலான மற்றும் சிறிது நெருடலுடன் கூடிய பெருமையுடன், உலகத்தின் இந்த மூலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது எனக்கு. இது இரண்டாவது பரிசு.

பின்னர், நாளின் முடிவினை பூமியின் சோர்வான மூச்சில் தெரிந்தது. அதில் சென்ற ஆறு மாதங்களாக காய்ந்த இலை, தழை, காய்ந்த புல் மற்றும் உரைந்துபோன குளத்தில் நான்கு அடிக்கு கேழே செத்துப்போன கியோட் ஓநாய் ஆகியவை மக்கி உரமாகியது தெரிந்தது. இருந்தாலும், குளிர்காலம் முழுதும் சேர்ந்துபோன குப்பைகளிலும், குதிரை லாயத்திலும் புதிதாக துளிர்க்கப்போகும் உயிர்களின் வாடை நன்றாகத் தெரிகிறது. இதுவோ கணக்கிட இயலா பரிசு.

நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் குளிர் காலத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டிருக்கிறோம். செப்டம்பரின் இறுதி முதல் நேற்றுவரை இங்கு இருப்பது நான் ஒருவன் மட்டும்தான் என்பதுபோல உணர்ந்தேன். நானும் எனது கியோட் ஓநாய்களும், எல்விஸின் வளைவுகளை இடுப்பில் கோண்ட கறுப்பு மூஸ் எருது, இளம் குட்டியுடம் இரண்டு அமெரிக்க கழுகுகள் (பால்ட் ஈகிள்) மற்றும் பத்து ட்ரம்பீடர் வாத்துகளும். அன்றாடம் இந்த உயிரினங்களில் எத்தனை மிஞ்சுகிறது என்பதை தவறாமல் கவனித்தேன், நான் வாழ்வானா சாவேனா என்பதற்கும் அவைகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதுபோல். ஆனால், இன்னும் இரண்டே மாதத்தில் (மார்ச் மாதமும் ஏப்ரல் மாதமும் கரைந்து உருகி மே மாதம் ஆகும் வரை!) மீண்டும் பனி உரையத் தொடங்குமுன், ராக்கி மலைகளில் பல்வேறு உயிர்கள் பல்கிப்பெறுகும் என்று தெருவில் நடந்து போகும் ஒருவர் என்னிடம் வந்து சொன்னால், அதில்சந்தேகம் ஏதும் எனக்கு இருக்காது.

கோடைக்காலம் வந்தால் போதும், இங்கு காடுவாழ் உயிரினங்களின் வளர்ச்சி கொந்தளிக்கும். விலங்கினங்கள் காட்டில் சிந்திச்சிதறும் இடங்கள் - மனிதர்கள் நமக்கோ சாதாரண இடங்கள், ஆனால் மான் போன்ற விலங்குகளுக்கோ இவை காப்பிடங்கள். தற்போது உயிரினங்கள் அதிகமாக அடர்ந்திருப்பது தேசிய பூங்காக்களுக்கு அருகாமையில் இருக்கும் காப்பிடங்களில்தான். அவற்றில் யெல்லோஸ்டோன் & கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா - தங்கள் பங்கிற்கு நம் மனதில் அகலா இடத்தை பிடிக்கின்றது. இதைப்போன்று வட அமெரிக்காவில் இன்னும் மிக சில இடங்களே உள்ளன - அதுவும் ஐரோப்பியர்கள் வருவதற்குமுன் எப்படி இருந்ததோனவோ அப்படியே இன்றும் இருக்கும் இடங்கள். அவற்றில் இதுவும் ஒன்று. ஜான் கால்டர் (லெவிஸ் & க்ளார்க் எக்ஸ்பெடிஷனச் சேர்ந்த) 1807-இல் இந்த வழியேதான் சென்றாராம். 200 வருடங்கள் கழித்து இன்னமும் அவர் பார்த்த உயிரினங்களை இன்னமும் பார்க்கமுடியும். கிராண்ட் டெட்டானில் மட்டும், கோடைக்காலத்தில் 18 வகை மாமிசஉண்ணி வகை விலங்கினங்கள் இருந்தது. அவற்றில் ஊல்வெரென்கள், ஓநாய்கள், கறுப்பு மற்றும் பழுப்பு நிற கரடிகளும் அடங்கும். இதைத் தவிர, குட்டியிட்டு பால் கொடுக்கும் அமெரிக்க விலங்குகளில் 7 வகைகள், 22 வகை எலி இன விலங்குகள், 6 வகை ஒளவால்கள், 5 வகை தவளை இன விலங்குகள், 16 வகை மீன்கள், 300க்கும் மேற்பட்ட பறவையினங்கள், 900 வகை மலர் தரும் தாவரங்கள், 7 வகை ஊசி இனத் தாவரங்களும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

(அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...)

Sunday, March 13, 2005

Carnatic Music teachers in U.S

ARIZONA
Anand Ramanathan - Flute - Carnatic
axr2@hotmail.com
North Scottsdale
Daniel Hirtz - Tabla
Phoenix
(480) 951-9339 danease@cox.net

CALIFORNIA

Vijaylakshmi Abhijit - Carnatic Vocal
vilakshmi@yahoo.com
Irvine 949-509-9693

Ragaswara School of South Indian Music - Vocal / Veena/ Harmonium
Sanathana Dharma Temple - Norwalk
562-924-2294 / 714-655-1538

Deepa Mani - Carnatic Violin, Vocal
deepa73@hotmail.com
Bay Area

Geeta Vidylaya - Carnatic Vocal and Veena
geethavidyalaya@yahoo.com
Freemont - 510-438-9207
Rose Muralikrishnan - Carnatic vocal
rosemurali@aol.com
www.rosemuralikrishnan.com

Rose Muralikrishnan - Carnatic Vocal
isaisangam@aol.com - Cerritos
(562) 802-8462

Bharathi Kalalaya - North and South Indian vocal & instrumental
Annu_Radha@hotmail.com - Fremont
(510) 490 4629
www.bharathikalalaya.com

Preetha Sheshadri - Carnatic Music - Vocal
s_preets@hotmail.com - San Jose
(408) 260 - 9733

Veena Kinhal - Veena & Vocal
San Diego
858-538-4312

International Foundation for Carnatic Music
Carnatic Vocal, Veena, Mridungam
Ramesh (408) 528-7946 / Gowri (408) 260-8661 San Jose - carnatic_school@yahoo.com

FLORIDA
Shri Kamakshi Kuppuswany - Carnatic Vocal // Nalini Vinayak - Sitar +Tabla
Tallahassee
vinayaksharma@cs.com

Leela Rammohan Rao - Carnatic Music and Bharatnatyam
E-mail: leelasram@yahoo.com - Pensacola
850-437-0907 - Fax 850-432-9262

Vani Sateesh - Carnatic Vocal / Violin
vani-sateesh@att.net
Orlando - 407-903-6970 -

GEORGIA
Atlanta

Murthy, Deepak - Carnatic Violin
dkmurthy@hotmail.com

Jassodha, Ruban - Carnatic Violin
rubanjasso@yahoo.com

Lakshmi Prabhakar - Carnatic Vocal
(770)518-0860

SriNithya Krishnan - Carnatic Vocal
(678)797-9324

Shuruthilaya
www.shruthilaya.us
Kala Vasudevan Ph : 678 714 6851

ILLINOIS
Mrs. Vijaya Narayan - Carnatic-Vocal
sansunarayan@aol.com Streamwood
630-483-8359

Vidya Narayan - Bharatanatyam and Carnatic vocal music
brihadisha@yahoo.com
Schaumburg 312-371 3580

Desikan Ramaswami - Carnatic Violin, Vocal
Mt. Prospect - 847-258-3145

Subhadra Natrajam - Carnatic Music
subhadra_natrajan@yahoo.com
Naperville

Jayashree Venkatesh and Venkatesh - Carnatic Vocal, Violin
847 934-7268
jayvenpad@hotmail.com

MARYLAND
Rachita Nambiar - Carnatic Vocal and Bharatanatyam
rachita_anambiar@yahoo.com
Middletown-Delware 304-610-4633

Dr. P. K. Swaminathan - Mridangam - S. Indian Percussion
swamipk@hotmail.com
Burtonsville - 301 421 9040

MASSACHUSETTS

Ekacakra Dasa - Khol / Mridungam
Northampton -MA. 413-586-6992 ekacakradasa@aol.com

Ramnath - Carnatic Flute
Ashland, MA
Phone: 508-881 3968

Aparna Sindhoor - Bharata Natyam, Carnatic Vocal
asindhoor@yahoo.com
617-776-7939 -www.navarasa.org/

Pravin Sitaram - Mridangam
psitaram@msm.umr.edu

Mahalingam Santhanakrishnan - Mridungam
adambakkam@hotmail.com
Waltham

MICHIGAN
R. Sundar and Padma - Carnatic Vocal
Southfield
810-647 9363

Jay Balan - Carnatic Violin
West Bloomfield
248-932-5828

R. Sundar and Padma
South - Carnatic Vocal
810-647 9363

Rohan Krishnamurthy - Mridungam
Rohan_Krishnamurthy@hotmail.com
Kalamazoo

Sriram Balasubramanian - Mridangam, Ghatam, Tabla, Flute
srirambalsu@yahoo.com
Detroit / 313-942-5288

MISSOURI

Seema Murthy - Carnatic Vocal
info@sooryadance.com
Ballwin - 636-227-9366

NEW JERSEY

Sugantha Venkatraman - Carnatic Vocal
kris_venk@yahoo.com
732-452-9512

Radha Kalyan - Carnatic Vocal
Princeton - 2learn@MLC-Princeton.com
609-468-9863

Govind - Vocal - Carnatic & Hindustani styles
govi57@hotmail.com
Edison 732-393-9438 or 1-848-203-5918


Sownmya Natarajan - Carnatic Vocal + Veena
(direct student of Dr. Chittibabu)
Edison - sowmyacotah@yahoo.com
732-662-7458

Mysore Satish - Carnatic Violin
Rahway
908-815 3285

Bhuvana Kannan - South Indian Classical -Veena
Plainsboro - bhuvanak@hotmail.com
609-716-6409

Meenakshi Tumuluri - Carnatic Music
meenakshi_tumuluri@hotmail.com
Westwood

Vasudha Narayan - Veena and Carnatic - Vocal, Light Music
vasudha.narayan@att.net - Rochelle Park
201-291-7810

Sivakumar M - Mridangam
savukku@yahoo.com - Edison
732-452-1154

Aarthi Sainathan - Vocals
aarthi_s16@rediffmail.com - Hackensack
201 678 0378

Majula Ramchandran - Carnatic Vocal & Veena
manjularam@juno.net
Edison

Rajeswarin - Carnatic Violin
rajiramesh@indiatimes.com
Elmwood Park

Vasudha Narayan Carnatic Veena and Light Classical Vocal
vaudha.narayan.@att.net
Rochelle Park - 201-291-7810

Sivakumar M. Mridungam
savukku@yahoo.com
Edison - 732-452-1154

Dr. Bhavani Rao- Carnatic - Vocal, Veena, Flute
Prakash Rao - Carnatic Mridangam
bhapra@yahoo.com
Rahway 908-322-1595

NEW YORK
Nivedita ShivRaj - Carnatic Vocal and Veena
917-515-9164
Flushing - nivi@ragachitra.org

C. Balachandran - Mridangam
Balachandr@pbworld.com - Flushing
718 461 5520

North Carolina

Padma Gopal - Carnatic & Hindustani Vocal
(919)-380-1344

Srikanthi Gunturi - Carnatic Vocal music
(919) 596-7449

Srikanthi Gunturi - Carnatic Vocal music
(919) 596-7449

Vyjayanti Jandhyala - Carnatic Veena & Vocal
(919) 544-8276
vyjayantij@hotmail.com

Manjula Ramesh - Carnatic Vocal & Veena
919-460-3981

Sudhindra Rao - Mridangam
919 363-9571 -sudikumar@yahoo.com

Aparna Devajuptapu - Carnatic Vocal
aparnadevu@yahoo.com
Charlotte - 704-510-0918

TEXAS

Vittal Ramamurthy - Carnatic Vocal and Violin, Bhajans
vittalramamurthy@hotmail.com
281-480-4535

Krishna Kumari - Carnatic Veena/Vocal
kowthakk@yahoo.com
Arlington

Santosh Chandru - Mridangam
santosh_chandru@hotmail.com - Beaumont
Phone 409-813-2193

Asha Narasimhan - Carnatic-Vocal
ashabaktha@hotmail.com
Sugar Land - Phone 281 980 3827

Revathi Ravi - Carnatic-Vocal
revathy17@hotmail.com
Austin - Phone 512-386 6346

Bharathi Annapurna - Carnatic Music-Vocal
bharathigollapudi@hotmail.com

VIRGINIA
Vijaya Balakrishna - Carnatic Vocal
Hampton
Phone 804 838 3121

Sadhana School Of Arts- Drupad / Carnatic / Hindustani -Vocal,Veena, Mridungam
(877) 579-9408
SadhanaSchoolOfArts@uReach.com


WEST VIRGINIA
Pattisam Veera Bhadra Sarma Bandi -Carnatic vocal
Montgomery -304-442-2982

RatnaManjusha Mocherla - Karnatic Classical-Vocal / Veena
m_usha001@yahoo.com
Dunbar - 304-766-6624


WISCONSIN
Vindhya Vasini Annapareddy - Carnatic Music,Vocal
vindhya81@yahoo.com

Vijaya Rajaraman - Saraswathi Veena
vijayarajaraman@hotmail.com
Middleton - 608-833-8832