இந்தியாவிலும், ஏன் உலகெங்குமே மக்களாட்சி என்ற பெயரால் அரசியல்வாதிகள் பெரும்பாலும் சுரண்டல் சுண்டெலிகளாய் கொழுத்துப் பெருத்து, வாக்களித்த மக்களின் வாயில் வாய்க்கரிசி மட்டுமே போட்ட வண்ணம் இருப்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர, அரசியல்வாதிகளின் சுயநல ஆட்சிதான் இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பொதுஜன வாக்காளன், வாக்கிடுவதோடு தன் வாக்குரிமையை பயன்படுத்திய மனநிறைவில், அடுத்த தேர்தல் வரை தன் உரிமைகள் அனைத்தையும் இழந்து விடுகிறான். ஆட்சிக்கு வந்தோர் வைத்ததே சட்டம், தைத்ததே திட்டம், தந்ததே பட்டம். இதற்கிடையில், வாக்காளனுக்கு அரசியல் கசந்துவிடக் கூடாதே என்பதற்காக, ஆயிரமாயிரம் திரை மறைவு நாடகங்கள், கேளிக்கை கூத்தாட்டங்கள்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் அரசியல் அமைப்பு பெரிதும் அங்கம் வகிக்கிறது. அரசாங்கம் நல்ல திட்டங்களை செயல்படுத்தினால்தானே, நாடு முன்னேறும். திட்டங்களா, இவர்களுக்கு தங்கள் நாற்காலியை தக்க வைப்பதற்கும், தங்கள் கல்லாப்பெட்டியை நிரப்புவதற்குமே நேரம் சரியாய் இருக்கும்போது, திட்டங்கள் தீட்டுவதெப்போது? அரசியல் கட்சிகளின் அமைப்பு எப்படி இருக்குமோ, அப்படித்தான் அந்த அரசியல் கட்சிகளின் ஆட்சியும் இருக்கும். ஒரே கட்சிக்குள்ளேயே, ஆயிரம் கோட்சிப்பூசல்கள், அடிதடி உதைகள்.
அரசியல் அமைப்புகள் இப்படி உடைந்து போயிருக்கையில் என்ன செய்தால் இவற்றை சீரமைக்கலாம் என யோசித்தபோது எனக்குத் தோன்றிய சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவற்றில், ஒருசில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் இவற்றில் ஏற்படக்கூடிய நன்மைகளை கணக்கிடும் போது, குறைபாடுகளை விட நன்மைகள், அதுவும் நமக்கு இன்றைய நிலையில் மிகவும் தேவையானவை அதிகமாக கிடைக்கும் என நினைக்கிறேன்.
1) முதலில் ஆயிரத்தெட்டு கட்சிகள் இருக்கும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். இரண்டுக்கு மேல் வேண்டாம் கட்சிகள். வலது சாரிகள் அனைவரும் ஒரு கட்சியிலும், இடது சாரிகள் ஒரு கட்சியிலும் இணையட்டும். வலது சாரிகளும், இடது சாரிகளும் போட்டியிட்டு ஆட்சி அமைக்கட்டும்.
* இதனால் என்னவாகும்? நாளடைவில், அரசியலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகும்.
* எண்ணிக்கை குறைந்தால் என்னவாகும்? போட்டியும், பூசலும் குறையும். ஒன்றாக உழைப்பார்கள்.
* தேர்தலுக்குப்பின் எந்த ஒரு கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை கிடைக்காமல், ஒரு பெரிய பட்டியலாய் கட்சிகள் கூட்டணி அமைத்து, அவர்களுக்குள் ஒன்றுக்கும் ஒப்புக்கொள்ளாமல் நடக்கும் குழப்பங்கள் குறையும்.
* வலது - இடது என எதிர் எதிர் சித்தாந்தங்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் அரியணையை பிடிப்பதற்காக தேர்தலுக்குப் பின் கூட்டணி கொள்ளும் சந்தர்ப்பவாதம் தவிர்க்கப்படும்.
2) அடுத்ததாக, அரசியலுக்கு வருபவர்கள் குறைந்தபட்சம் சில அரசியல் தேர்வுகளை எழுதி அவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்றால், திருக்குறள் முதலான நீதி நெறி நூல்களை கற்றுத் தேற வேண்டும். கற்க, பின் நிற்க அதற்குத் தக: தேர்ச்சி பெற்றபின் (மருத்துவர்கள் முதலில் house surgeon ஆக internship இல் இருப்பதுபோல்), நடைமுறை பயிற்சிக்காக குறைந்தது ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு, இவர்கள் தூய, எளிய பொதுநலச் சேவை வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும். அதன் பின்னரே, இவர்கள் அரசியலில் எந்தப் பதவிக்கும் வரத் தகுதியானவர்கள். இந்த முறை மட்டும், வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்டால், தேர்தலையே தவிர்த்துவிட்டு, தேர்வு ஒன்றே போதும் என்னும் அடுத்தகட்ட நிலைக்குப் பயணிக்கலாம், அல்லது தேர்வு பெற்றவர்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும், அவர்களுக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாம்.
3) சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால் மற்றும் ஜி.எஸ். சாங்வி ஆகியோர் 'இந்த நாட்டை கடவுளாலும் காப்பாற்ற இயலாது' என மனம் வெதும்பிச் சொன்னார்கள். எதனால்? அரசு குடியிருப்புகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு மறுத்து விட்டதால். இதுதான் இன்றைக்கு இருக்கின்ற நீதிமன்ற அதிகாரம். இது மாற வேண்டும். நமது நீதித் துறை மிகவும் வலுப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும். தவறிழைப்போர்களுக்கான தண்டணைகள் கடுமையாக்கப் பட வேண்டும். உதாரணத்திற்கு, குற்றம் நீருபிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு நேரடியாக குற்றம் இழைத்தவர், பாதிப்புக்கு ஏற்றதுபோல, ஒரு பெரிய அபராதத் தொகையை நஷ்ட ஈடாகத் தர வேண்டும். குற்றத்தை ஒப்புக்கொண்டு, பொதுமன்னிப்பு கேட்பவருக்கு, கவுன்சலிங் பெற்றுக்கொள்ள கட்டாயமாக அனுப்பப்பட வேண்டும். இதற்காக, அரசு சாரா (NGO) கவுன்சலிங் துறை ஒன்றி அமைக்கப்பட வேண்டும். கூடுதலாக அவர் மீண்டும் அரசியல் போன்ற பொதுநல வாழ்க்கையில் ஈடுபட வேண்டுமானால், மீண்டும் பொதுநலச் சேவையில் சில ஆண்டுகளுக்கு தன்னலமற்ற தொண்டாற்றி, தன் களங்கத்தை முதலில் துடைத்துக் கொள்ள வேண்டும்.
நாட்டு மக்களுக்கு, அரசு மற்றும் அரசியலில் இருக்கும் சார்பு பெரிதளவும் குறைக்கப்பட வேண்டும். முடிந்த வரை, ஒவ்வொரு துறையும், அரசியல் தலையீடின்றி நேரடியாக மக்களுக்குப் பயன்பட வேண்டும். எங்கே அரசாங்கத்தின் ஈடுபாடு அவசியம் தேவைப்படுகிறதோ, அங்கு மட்டுமே அது தன் கவனத்தை செலுத்த வேண்டும். அரசியல் தூய்மையோடு, நாட்டை முன்னேற்ற சீரிய திட்டங்களை தீட்டிட முனைந்தால், நாம் நாடு விரைவில் தன்னிறைவை எட்டி, சமுதாய வளம் மேம்பட்டு நிற்கும். அதற்காக, அரசியல் துப்புரவு தேவை இப்போது.
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
Tuesday, August 26, 2008
Thursday, August 09, 2007
பொற்காலமும் போறாத காலமும்
பொற்காலம் என்று ஆளை அடுக்கி வைத்து அடுக்கடுக்காய் செல்லி விட்டால் போதுமா? அழுத்திச் சொன்னாலும், அரையாத மாவு, உதவாது தோசைக்கு!
உருப்படியாய் ஒரு தொழிற்சாலையை கொண்டு வருவதற்குள் எதிர்கட்சி கேள்வி கேட்டால், மக்களிடமே கருத்து கேட்பதென்ன? அப்புறம் எதற்கு அரசு?
மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் எதற்கிங்கு எடுத்துக்காட்ட? சொந்த சரக்கு ஏதும் இல்லையா?
மன்னராட்சி படங்களுக்கு திரைக்கதை எழுதிய பழைய ஞாபகம் வந்து விட்டதா? அடுத்த வாரிசு அமைக்க?
அத்தனை வழக்குகள் இட்டாலும் அதெல்லாம் வெறும் கண்துடைப்புதானா? ஆட்சியில் இருந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாதா?
பொற்காலமா, போறாத காலமா?
உருப்படியாய் ஒரு தொழிற்சாலையை கொண்டு வருவதற்குள் எதிர்கட்சி கேள்வி கேட்டால், மக்களிடமே கருத்து கேட்பதென்ன? அப்புறம் எதற்கு அரசு?
மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் எதற்கிங்கு எடுத்துக்காட்ட? சொந்த சரக்கு ஏதும் இல்லையா?
மன்னராட்சி படங்களுக்கு திரைக்கதை எழுதிய பழைய ஞாபகம் வந்து விட்டதா? அடுத்த வாரிசு அமைக்க?
அத்தனை வழக்குகள் இட்டாலும் அதெல்லாம் வெறும் கண்துடைப்புதானா? ஆட்சியில் இருந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாதா?
பொற்காலமா, போறாத காலமா?
Sunday, July 29, 2007
டாடா தொழிற்சாலையும் சந்தர்ப்பவாத அரசியலும்
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளில் டாடாவின் புதிய டைட்டானியம் டை ஆக்ஸைட் தொழிற்சாலை நிறுவும் பணியில் பல்வேறு சர்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதில் உண்மை நிலை என்ன? என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கிறது.

டாடா என்ன சொல்கிறது?
2,500 கோடி செலவில் உருவாகும் இந்த தொழிற்சாலை, 1000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 3000 பேருக்கு ஏனைய வழிகளிலும் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்கிறது.
ஏனைய வழிகளில், மேலும் 3000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது உண்மையானால் நல்லதே!
தொழில் சம்பந்தமான நுட்ப அறிவு தேவைப்படாத வேலைகளுக்கெல்லாம், உள்ளூர் மக்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்வோம் என்கிறது. அதிலும் தொழிற்சாலைக்காக தங்கள் நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்போவதாக சொல்கிறது.
மொத்தம் 10,000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தவிருக்கிறது. அவை தற்போதைய மார்க்கெட் விலையில் நிலத்தை வாங்கிக் கொண்டு, உரிமையாளர்களுக்கு பணம் கிடைக்க வழி வகுக்கிறது என்கிறது. மேலும் குடியிருப்புப் பகுதிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்கிறது.
குடியிருப்பு பாதுக்கப்படும் என்று சிலர் சொல்வது எப்படி என்று தெரியவில்லை.
தற்போதைய மார்கெட் விலை இது போன்ற இடங்களில் குறைவாக இருக்கும். தொழிற்சாலைக்காக வாங்கும் நிலத்திற்காக, டாடா, மார்க்கெட் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை தர முன் வர வேண்டும். குடியிருப்பு பாதிக்கப்படும் பட்சத்தில் மேலும் அந்த ஊரிலேயே தொடர்ந்து வாழ விரும்புபவர்களுக்கு தரமான குடியிருப்பு கட்டித் தரவேண்டும்.
கடல் நீரை சுத்தகரிக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டு அதன் மூலமாக சுத்தகரிககப்படும் நீரை மட்டுமே தொழிற்சாலை பயன்படுத்தும். நிலத்தடி நீர் நிலமை இதனால் முன்னேருமே தவிர பாதிக்கப்படாது என்கிறது.
மேலும், சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு எந்த ஒரு கேடும் ஏற்படாத வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று சொல்கிறது.
இதெல்லாம் நியாயமாகத்தான் தெரிகிறது. ஆனால் எந்த அளவிற்கு இதெல்லாம் உண்மையாக நிறைவேற்றப் படும்?, எந்த அளவிற்கு இது ஆளும் கட்சி மற்றும் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் பணம் ஈட்டும் வழியாக மட்டும் செயல் படப்போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.
அதே சமயத்தில் எதிர் கட்சிகள், இதுதான் கிடைத்தது சந்தர்ப்பம் என்று கண்மூடித் தனமாக எதிர்ப்பது, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் தோல் உரித்துக் காட்டுகிறது.
என்ன குறைகள் இருக்கின்றன என்பதை பட்டியல் இடட்டும். டாடா நிறுவனமும், அரசும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பாடாது என்று எழுத்து மூல உத்தரவாதத்துடனும், தகுந்த பண காப்பீடுடனும், எந்த தரப்பும் சாராத நடுநிலையாளர்களின் கண்காணிப்புடனும் திட்டத்தை செயல் படுத்தினால் என்ன?
எத்தனை க்காலம் தான் இந்தப் பகுதி மக்கள் விளைச்சலற்றுப் போன நிலங்களிலும் விவசாயம் செய்வதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்? நம்மிடம் மனித வளம் ஏராளம். அதை மாற்றுவோம் தொழில் வளமாய்!
இதில் உண்மை நிலை என்ன? என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கிறது.

டாடா என்ன சொல்கிறது?
2,500 கோடி செலவில் உருவாகும் இந்த தொழிற்சாலை, 1000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 3000 பேருக்கு ஏனைய வழிகளிலும் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்கிறது.
ஏனைய வழிகளில், மேலும் 3000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது உண்மையானால் நல்லதே!
தொழில் சம்பந்தமான நுட்ப அறிவு தேவைப்படாத வேலைகளுக்கெல்லாம், உள்ளூர் மக்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்வோம் என்கிறது. அதிலும் தொழிற்சாலைக்காக தங்கள் நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்போவதாக சொல்கிறது.
மொத்தம் 10,000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தவிருக்கிறது. அவை தற்போதைய மார்க்கெட் விலையில் நிலத்தை வாங்கிக் கொண்டு, உரிமையாளர்களுக்கு பணம் கிடைக்க வழி வகுக்கிறது என்கிறது. மேலும் குடியிருப்புப் பகுதிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்கிறது.
குடியிருப்பு பாதுக்கப்படும் என்று சிலர் சொல்வது எப்படி என்று தெரியவில்லை.
தற்போதைய மார்கெட் விலை இது போன்ற இடங்களில் குறைவாக இருக்கும். தொழிற்சாலைக்காக வாங்கும் நிலத்திற்காக, டாடா, மார்க்கெட் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை தர முன் வர வேண்டும். குடியிருப்பு பாதிக்கப்படும் பட்சத்தில் மேலும் அந்த ஊரிலேயே தொடர்ந்து வாழ விரும்புபவர்களுக்கு தரமான குடியிருப்பு கட்டித் தரவேண்டும்.
கடல் நீரை சுத்தகரிக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டு அதன் மூலமாக சுத்தகரிககப்படும் நீரை மட்டுமே தொழிற்சாலை பயன்படுத்தும். நிலத்தடி நீர் நிலமை இதனால் முன்னேருமே தவிர பாதிக்கப்படாது என்கிறது.
மேலும், சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு எந்த ஒரு கேடும் ஏற்படாத வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று சொல்கிறது.
இதெல்லாம் நியாயமாகத்தான் தெரிகிறது. ஆனால் எந்த அளவிற்கு இதெல்லாம் உண்மையாக நிறைவேற்றப் படும்?, எந்த அளவிற்கு இது ஆளும் கட்சி மற்றும் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் பணம் ஈட்டும் வழியாக மட்டும் செயல் படப்போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.
அதே சமயத்தில் எதிர் கட்சிகள், இதுதான் கிடைத்தது சந்தர்ப்பம் என்று கண்மூடித் தனமாக எதிர்ப்பது, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் தோல் உரித்துக் காட்டுகிறது.
என்ன குறைகள் இருக்கின்றன என்பதை பட்டியல் இடட்டும். டாடா நிறுவனமும், அரசும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பாடாது என்று எழுத்து மூல உத்தரவாதத்துடனும், தகுந்த பண காப்பீடுடனும், எந்த தரப்பும் சாராத நடுநிலையாளர்களின் கண்காணிப்புடனும் திட்டத்தை செயல் படுத்தினால் என்ன?
எத்தனை க்காலம் தான் இந்தப் பகுதி மக்கள் விளைச்சலற்றுப் போன நிலங்களிலும் விவசாயம் செய்வதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்? நம்மிடம் மனித வளம் ஏராளம். அதை மாற்றுவோம் தொழில் வளமாய்!
Wednesday, July 25, 2007
அமெரிக்காவில் இருந்து... இந்திய செய்திகள்
இந்தியா வேண்டுமென்றே உறுதி செய்யப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பல மடங்காக ஏற்றிச் சொல்கிறதாம் - சொல்கிறார் லலித் தாண்டோனா, டெல்லி AIIMS இல் பயின்ற இவர், தற்போது சிட்னியில் பணிபுரிகிறார்.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்களில் விரிசல்கள் ஏற்பட்டாலும், திரும்பத் திரும்ப அமெரிக்க வலுக்கட்டயமாக இந்தியாவிற்கு உதவிட வருவதின் பிண்ணணியில் இருப்பவர்களில் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் GE, Boeing ஆகியவும் அடங்குமாம்!
அமெரிக்கா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முயன்ற கோதுமையை தரமற்றது என்று சொல்லி இந்தியா சொல்லிவிட்டதால் கொதித்துப் போயிருக்கும் அமெரிக்கா, இந்தியாவின் தர நிர்ணயம் ஈடுகட்ட இயலாதது என்று பொருமுகிறதாம். அமெரிக்க கோதுமையை வாங்கியிருந்த்தால் இந்தியா 65-85 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தி இருக்கலாம் என்கிறதாம்!
அமெரிக்க செனட்டில் பன்மத நல்லிணக்க குழுவின் சார்பாக ஒரு ஹிந்து கோவிலைச் சேர்ந்த ஒருவருக்கு, சமீபத்தில் அன்றைய பிராத்தனைகளை தொடங்கும்போது சின்னதான ஒரு பகுதி ஒதுக்கப்பட்டதாம். ஆனால், எதிர்பாராதது, பார்வையாளர்களின் மூவரின் கூக்குரல் - "நாங்கள் கிருஸ்துவர்கள் மட்டுமல்ல, தேச பக்தர்கள்". அவர்களை காவலர்கள் கைது செய்து அங்கிருந்து அகற்றிய பின் பிராத்தனைகள் தொடர்ந்ததாம்.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்களில் விரிசல்கள் ஏற்பட்டாலும், திரும்பத் திரும்ப அமெரிக்க வலுக்கட்டயமாக இந்தியாவிற்கு உதவிட வருவதின் பிண்ணணியில் இருப்பவர்களில் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் GE, Boeing ஆகியவும் அடங்குமாம்!
அமெரிக்கா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முயன்ற கோதுமையை தரமற்றது என்று சொல்லி இந்தியா சொல்லிவிட்டதால் கொதித்துப் போயிருக்கும் அமெரிக்கா, இந்தியாவின் தர நிர்ணயம் ஈடுகட்ட இயலாதது என்று பொருமுகிறதாம். அமெரிக்க கோதுமையை வாங்கியிருந்த்தால் இந்தியா 65-85 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தி இருக்கலாம் என்கிறதாம்!
அமெரிக்க செனட்டில் பன்மத நல்லிணக்க குழுவின் சார்பாக ஒரு ஹிந்து கோவிலைச் சேர்ந்த ஒருவருக்கு, சமீபத்தில் அன்றைய பிராத்தனைகளை தொடங்கும்போது சின்னதான ஒரு பகுதி ஒதுக்கப்பட்டதாம். ஆனால், எதிர்பாராதது, பார்வையாளர்களின் மூவரின் கூக்குரல் - "நாங்கள் கிருஸ்துவர்கள் மட்டுமல்ல, தேச பக்தர்கள்". அவர்களை காவலர்கள் கைது செய்து அங்கிருந்து அகற்றிய பின் பிராத்தனைகள் தொடர்ந்ததாம்.
Sunday, May 07, 2006
தேர்தல் 2006 - உங்கள் வாக்கு யாருக்கு?
தேர்தல் களம் சூடு பிடித்து தேர்தலும் நெருங்கியாகி விட்டது. கடந்த தேர்தல்களில் வேட்பாளர்கள்தான் வாக்குறுதிகளை சகட்டுமேனிக்கு அள்ளி விடுவார்கள். இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளே 'மொத்த' அளவில் வாக்காளர்களில் தலைகளை சிரைப்பதென முடிவு செய்து, இலவச அறிவிப்புகளை அள்ளி வீசுகின்றன. திராவிட கட்சிகள் சென்ற தேர்தல்களில் 'அலை'களில் உதவியிலேயே ஆட்சியை பிடித்துவிட்டதால், அவர்களுக்கு புதிதான யுக்தி ஏதும் தோன்றவில்லை. தேசிய கட்சிகளோ, திராவிட கட்சிகளை நம்பியே காலம் தள்ளி விட்டதால் மூளை மங்கிப்போய், ஏதோ நாங்களும் தேர்தலில் நிற்கிறோம் என்கிறார்கள்.
இந்த நிலமையில் யாருக்கு வாக்களிப்பது என்று கட்சி சாராத சராசரி வாக்காளன் பெரிதும் குழம்பிப்போய் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கட்சிகளுக்கும் பெரிதும் வித்யாசம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டை' என்னும் கேலிச்சித்திரம் 80-களில் விகடனில் பார்த்த நினைவு வருகிறது. இன்னமும் நிலமை சற்றும் மாறவில்லை என்பது உங்களுக்கே தெரியும். இந்த கட்சித் தொண்டர்களோ சென்ற முப்பது ஆண்டுகளில் இரு கட்சிகளின் மத்தியில் ஏற்பட்ட வன்மங்களின் நினைவிலேயே இன்னமும் ஊறிப்போய், இன்றைய நிலமை என்ன என்று யோசிக்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள்.
வாரிசு அரசியலை குற்றம் சாட்டி, கட்சியில் இருந்து பிரிந்து புதுக்கட்சி தொடங்கிய தலைவர் ஒருவர் இன்னொரு கட்சியில் கூட்டு சேர்வதால் தானும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்கிறார். புதிதாக அரசியலில் குதித்திருக்கும் நடிகரோ, எல்லா கட்சிகளின் அரசியல் சித்தாந்தங்களையும் (அப்படி 'ஒன்று' இல்லாவிட்டாலும்) கலந்துகட்டி, 'தான் இதிலும் நடிகன் தான்' என்கிறார். அரசியல் கட்சிகளாய் மாறிப்போன ஜாதி சங்கங்களின் ஆதிக்கம், தேர்தல் என்றால் திருவிழா என்று மட்டுமே நினைக்கும் அப்பாவி மக்களிடம் குறைந்து போயிருப்பது இந்த தேர்தலில் பாராட்ட வேண்டியது. ஆனால், இதை சாக்கிட்டு ஏனைய கட்சிகள் தங்களை அவர்களின் தனிப்பொரும் பிரதிநிதியாக காட்டிக் கொள்கின்றன.
இந்த நிலமையில் உங்கள் வாக்கு யாருக்கு?
தற்போதைய முதலமைச்சர் சென்ற பாரளுமன்றத் தேர்தல் தோல்வியின் பின், தோல்விக்கான காரணமாய் வாக்குகள் கணக்கெடுக்கும் இயந்திரத்தை குறை சொல்கிறார். என்ன பொறுப்புணர்ச்சி பாருங்கள்!. முதலைமைச்சரையோ, முக்கிய அமைச்சர்களையோ நம்பி வாக்களிக்காதீர்கள். இத்தனை நாளில் திருந்தாத அவர்கள் இனிமேலுமா திருந்தப்போகிறார்கள்?. கட்சிகளை நம்பிப் பயனில்லை. அவர்கள் இலவச வாக்குறுதிகளை நம்பிப் பயனில்லை.
என்ன செய்யலாம்?
தலைமையையோ, கட்சியையோ தேர்வு செய்யாமால், உங்கள் வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். சுயேச்சையாக இருந்தாலும் பாதகமில்லை.
உங்கள் வேட்பாளர்களில் யார் நியாயமான நபர் என்று பாருங்கள்.
யார் பாரபட்சமன்றி அனைத்து தரப்பு மக்களின் சரியான பிரதிநிதியாக செயல்படுவார் என்று தீர்மானியுங்கள்.
அவ்வளவே. முதலில் நியாயமான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும். பின் அவர்களாகவே, அவர்களின் சரியான தலைமையை தேர்ந்தெடுப்பார்கள். சரியான அரசியல் பாதைக்கு வழி வகுப்பார்கள். முதலில் வித்திடுவோம்.
இவையெல்லாம் வாக்களிக்கும் உங்கள் கையில்தான் உள்ளது. இத்தனைநாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த அரசியல் தலைவர்களுக்கு நல்ல பாடம் கற்பியுங்கள். தேர்தல் களத்தில் முக்கியமானவர்கள் வாக்களர்களும், 234 தொகுதிகளின் வேட்பாளர்களும்தான். கட்சி சார்போ, கூட்டணியோ அல்லது தலைமையோ அல்ல.
இந்த நிலமையில் யாருக்கு வாக்களிப்பது என்று கட்சி சாராத சராசரி வாக்காளன் பெரிதும் குழம்பிப்போய் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கட்சிகளுக்கும் பெரிதும் வித்யாசம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டை' என்னும் கேலிச்சித்திரம் 80-களில் விகடனில் பார்த்த நினைவு வருகிறது. இன்னமும் நிலமை சற்றும் மாறவில்லை என்பது உங்களுக்கே தெரியும். இந்த கட்சித் தொண்டர்களோ சென்ற முப்பது ஆண்டுகளில் இரு கட்சிகளின் மத்தியில் ஏற்பட்ட வன்மங்களின் நினைவிலேயே இன்னமும் ஊறிப்போய், இன்றைய நிலமை என்ன என்று யோசிக்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள்.
வாரிசு அரசியலை குற்றம் சாட்டி, கட்சியில் இருந்து பிரிந்து புதுக்கட்சி தொடங்கிய தலைவர் ஒருவர் இன்னொரு கட்சியில் கூட்டு சேர்வதால் தானும் அதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்கிறார். புதிதாக அரசியலில் குதித்திருக்கும் நடிகரோ, எல்லா கட்சிகளின் அரசியல் சித்தாந்தங்களையும் (அப்படி 'ஒன்று' இல்லாவிட்டாலும்) கலந்துகட்டி, 'தான் இதிலும் நடிகன் தான்' என்கிறார். அரசியல் கட்சிகளாய் மாறிப்போன ஜாதி சங்கங்களின் ஆதிக்கம், தேர்தல் என்றால் திருவிழா என்று மட்டுமே நினைக்கும் அப்பாவி மக்களிடம் குறைந்து போயிருப்பது இந்த தேர்தலில் பாராட்ட வேண்டியது. ஆனால், இதை சாக்கிட்டு ஏனைய கட்சிகள் தங்களை அவர்களின் தனிப்பொரும் பிரதிநிதியாக காட்டிக் கொள்கின்றன.
இந்த நிலமையில் உங்கள் வாக்கு யாருக்கு?
தற்போதைய முதலமைச்சர் சென்ற பாரளுமன்றத் தேர்தல் தோல்வியின் பின், தோல்விக்கான காரணமாய் வாக்குகள் கணக்கெடுக்கும் இயந்திரத்தை குறை சொல்கிறார். என்ன பொறுப்புணர்ச்சி பாருங்கள்!. முதலைமைச்சரையோ, முக்கிய அமைச்சர்களையோ நம்பி வாக்களிக்காதீர்கள். இத்தனை நாளில் திருந்தாத அவர்கள் இனிமேலுமா திருந்தப்போகிறார்கள்?. கட்சிகளை நம்பிப் பயனில்லை. அவர்கள் இலவச வாக்குறுதிகளை நம்பிப் பயனில்லை.
என்ன செய்யலாம்?
தலைமையையோ, கட்சியையோ தேர்வு செய்யாமால், உங்கள் வேட்பாளரை தேர்வு செய்யுங்கள். சுயேச்சையாக இருந்தாலும் பாதகமில்லை.
உங்கள் வேட்பாளர்களில் யார் நியாயமான நபர் என்று பாருங்கள்.
யார் பாரபட்சமன்றி அனைத்து தரப்பு மக்களின் சரியான பிரதிநிதியாக செயல்படுவார் என்று தீர்மானியுங்கள்.
அவ்வளவே. முதலில் நியாயமான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும். பின் அவர்களாகவே, அவர்களின் சரியான தலைமையை தேர்ந்தெடுப்பார்கள். சரியான அரசியல் பாதைக்கு வழி வகுப்பார்கள். முதலில் வித்திடுவோம்.
இவையெல்லாம் வாக்களிக்கும் உங்கள் கையில்தான் உள்ளது. இத்தனைநாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த அரசியல் தலைவர்களுக்கு நல்ல பாடம் கற்பியுங்கள். தேர்தல் களத்தில் முக்கியமானவர்கள் வாக்களர்களும், 234 தொகுதிகளின் வேட்பாளர்களும்தான். கட்சி சார்போ, கூட்டணியோ அல்லது தலைமையோ அல்ல.
Subscribe to:
Posts (Atom)