நமது அண்டத்தையும் அதன் ஆக்கங்களின் விதிகளைப்பற்றியும்் அலசும் அறிவியலின் பிரிவு கணித இயற்பியல் (இயல்பியல்?)்பியல்(தியரடிகல் ஃபிசிக்ஸ்)். ஆப்பிள் பழத்தைக் கொண்டு சோதனை செயத ஐசக் நீயூட்டனும், தொலைநோக்கி கொண்டு கோள்களைப் பார்த்தறிந்த கலிலீயோவும், பட்டம் விட்டு மின்விசைதனை தொட்டுப்பார்த்த பென்ஜாமின் ஃபிராங்க்ளினும், அணுவிசையாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ் கணித இயல்பியலாளர்களும் கூட, சோதனை அறிவியலாளர்கள் மட்டுமல்ல, கணித அறிவியலாளரும் கூட.
கணிதமும்் இயல்பியலும்்பியலும் எப்போதும் கைகோர்த்துக் கொண்டே நடந்து வந்துள்ளது. இயல்பியலில்்பியலின் பல்வேறு சோதனைகளின் நிரூபணத்திற்கு கணிதம் பேருதவி புரிந்த்துள்ளது. நேரடியாக சோதனை செய்து பார்க்க இயலாத பல கோட்பாடுகளை கணித சமன்பாடுகள் மூலமாக சரிபார்த்துக் கொண்டனர்.
பதினெட்டு மற்றும் பத்தின்பதாம் நூற்றாண்டுகளில் நியூட்டனின் புவியீர்ப்பு விசைக் கோட்பாடிற்கான கேல்குலஸ் கணக்குகள், அதையும் தாண்டி, மின்காந்த விசை சம்ந்தப்பட்ட கணக்குகளுக்காக பயன்படுத்திக் கொண்டனர். பின்னர் 'எலக்ட்ரான்' கண்டு பிடிக்கப் பட்டது. அதன் விளைவால் குவாண்டம் இயல்பியல் வளரத் தொடங்கியது. பின் நாட்களில் ஐன்ஸ்டைனின் Special thoery of Relativity (விசேஷ சார்நிலைக் கொள்கை) -க்குப் பின்னர், குவாண்டம் கணிதமும் அதனுடன் சேர்ந்து relativistic குவாண்டம் கொள்கைகள் உருவாகின.
கடைசியாக் சொன்ன relativistic குவாண்டம் கொள்கையில் விசேஷம் என்னவென்றால், இருபதாம் நூற்றாண்டின் நுண் அணுப் பொருட்களின்் (எலக்ட்ரான், புரொட்டான்) ஆய்விற்கு அவற்றின் கொள்கைளே அடித்தளம். மேலும் ஐன்ஸ்டைன் வேறொரு காரியமும் செய்தார். தன்னுடைய விசேஷ சார்நிலைக் கொள்கையைக் கொண்டு நியூட்டனின் புவி ஈர்ப்பு விசையையும் விளக்கினார். இதனல் Differential Geometry என்னும் கணிதப் பிரிவும் இயற்பியலுக்கு வந்து சேர்ந்தது. 'கேல்குலஸ் தொடங்கி Differential Geometry வரை எல்லாவற்றையும் பாத்துட்டேம்பா' என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறது புவி ஈர்ப்பு விசை.
எல்லாம் சரியென்று எண்ணியிருந்த சமயம், சார்நிலைக் கொள்கைகளுக்கு வந்ததோர் சோதனை. அண்ட வெளி ஏன் நீண்டு கோண்டே போகிறது? என்ற கேள்விக்கும் அண்ட வெளியில் இருக்கும் கருப்பு ஓட்டைகளுக்கும்(Black Holes) சார்நிலைக் கொள்கை தந்த பதில்கள் பொதுவாக ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது.
ஏனெப்படி?
ஏனென்றால், சார்நிலைக் கொள்கையானது, பூமியில் பொதுவாக புவி ஈர்ப்பு விசை குறைவாக உள்ளதால், இங்கு்கு நடத்தப்படும் சோதனைகளில் சரியான முடிவுகளைத் தருகிறது. புவி ஈர்ப்பு விசையினால் நுண் அணுப்பொருள்களில் மாறுதல் ஏதும் இல்லை என்று எடுத்துக் கொண்டால் மட்டுமே சார்நிலைக் கொள்கை செல்லுபடி ஆகிறது. இதென்னடா சிரமம் என்று இயல்பியலாளர் எண்ணியிருந்த சமயம் புதிதாக இன்னொரு கொள்க சமீப காலமாக உருவாகத் தொடங்கியுள்ளது. அதுதான் String Thoery. 'இழைக் கொள்கை' எனலாமா? (திருங்குக் கொள்கை?) சார்நிலைக் கொள்கை உள்ள ஓட்டையை நிறை செய்து விடும் இந்தக் கொள்கை என்கிறார்கள் அறிவியலார்.