Saturday, December 30, 2006

இந்தியர்களின் உலகநோக்கு பற்றியொரு கருத்துக்கணிப்பு

"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற பழமொழிக்கேற்ப அன்று தொட்டு இன்று வரை பாரத நாட்டிலிருந்து தங்கள் வாழ்க்கை மேன்மையின் குறிக்கோளிற்காக பல நாடுகளில் தற்காலிகமாகவும், நிரந்திரமாகவும் குடியேறி பொருள் ஈட்டுவோர் ஏராளம், ஏராளம்.

இன்றைய உலகத்தின் அக்கரைப்பச்சைகளில் அரசனாக திகழும் அமெரிக்காவிற்கு எப்படியாவது வந்தாக வேண்டும் என்று கனவு கண்டு அதை நிறைவேற்றியவர்களின் எண்ணிக்கை, இன்றைய கணக்குப்படி - 1.2 மில்லியன்!

கணிணித்துறையில் சென்ற பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்தியர்களின் வருகை அமெரிக்காவில் பெருகுவதற்கோர் வடிகாலாய் வழி வகுத்தது. அதே துறையினர் தங்கள் துறையில் உள்ள அமெரிக்க இந்தியர்களைப்பற்றி ஓர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். அதன் முடிவுகளில் இருந்து சில துளிகள் இங்கே:

வளைந்து கொடுக்கும் தன்மையும், புதிய வணிக நுட்பங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் தான் உலக சந்தையில் வெற்றி பெருவதற்கு முக்கியமான காரணிகளாக தென்படுகின்றன.

உலக நோக்குடன் செயலபடுவதற்கு ஒருவர் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கின்றார் என்பது முக்கியமில்லாவிட்டாலும், இந்தியர்களிடமும், அமெரிக்கர்களிடமும், ஜப்பனியர்களுமே மற்ற நாட்டவர்களைக்காட்டிலும் அதிகமான உலக நோக்குடன் செயல்படுகிறார்களாம்.

இந்திய கணிணித்துறையினர் தங்களிடம் இருக்கும் காலத்திற்கேற்ப வளைந்து கொடுக்கும் தன்மையாலேயே உலகச்சந்தையில் மாறிவரும் காலத்திற்கேற்ப தாக்குப்பிடிக்க இயல்வாதாக கருதுகிறார்கள்.

அவர்களின் இந்தியரல்லாத சகாக்களிடம் கேட்டபோது, இந்திய கணிணித்துறையினரிடம் அதிகமான தொழில் நேர்மை காணப்படுவதாக கூறுகின்றனர். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான நேரம் வேலை செய்ய முன்வருவதாகவும், அதில் தாக்குப்பிடிப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆங்கிலத்தில் முழுதும் படிக்க கீழே உள்ள pdf:

dec06_learning_gmirpaper_anissha_ranjana[1]
dec06_learning_gmi...
Hosted by eSnips

2 comments:

  1. ம்ம்ம்ம், அட்லாண்டாவிற்கு ஒருமுறை வந்திருக்கிறேன். என்னோட சித்தி பையன் மஹாதேவன் சுப்பிரமணியம் அங்கே இருக்கிறார். எனக்குத் தம்பி அவர். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்பவே நன்றி.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நெகிழ் தண்மை இருக்கும் எதுவும் கொஞ்சம் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்கும்.

    ReplyDelete