எத்தனை யாவும் எத்தனை சொல்லடா,
எத்தனை யாக்கை எத்தனை வினைகள்
எத்தனை யாவும் எத்தனை சொல்லடா.
நெட்டிபோல் நீரில் நாளெலாம் மிதந்து
வித்தினை மறந்து மற்றதைப் பிடித்தேன் பாரடா.
பித்தனாய் பிழற பித்ததைப் பீடிக்கும்
சொத்தெலாம், கொண்ட சொத்தெலாம் உதவா.
சந்ததம் வீணென அசதியில் தளர்ந்திட
எஞ்சியதில் வீடும் சடுதியில் வாராதா.
இத்தனை துயரையும் இடரையும் ஓட்டும்
சித்தினில் நவமெனச் சுடர்வது யாதடா?
மொத்தமும் சிவமென சிவசக்தியின் முகமென
மெச்சிட உச்சியதை அடைந்தே உய்யடா.