Sunday, October 21, 2012

நவராத்ரிப் பாடல்


ஆதியவன் சோதியாம் அன்னையவள் சக்தி
ஆதரிப்பாள் அன்புடனே அனுதினமும் போற்றி
நீதிநிலை நாட்டிடவே தீமையாவும் ஓட்டிடுவாள் சக்தி
நீடுதனி சூலமதை ஏந்திடுவாள் போற்றி
மூடச்சித்தமும் சிதைபட விடுவாளோ சக்தி
பாடியுன்னை சரண் புகுவேன் போற்றி

வையமெல்லாம் நினது கண்மணியாம் அலர்மேல்மகளே
வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்வாயே நீயே
பொன்னென மணியென மின்னிடும் அன்னையே
உன்னையன்றி உலகத்தோர் உழல்வாரில்லையே.
இணைமலர்த் திருவடி இறைஞ்சிப் புகுந்திட
இனியில்லைத் துயரென அடைந்தேன் தஞ்சம்.

ஆலயமாய் அமைந்ததுபார் அன்பர் மனதும்நீ அமர
காலமெல்லாம் காத்திடுவாய் கருத்ததனை கலைமகளே
வேதமும் நாதமும் தாயே நின் உறைவிடம்
வேண்டுவோர் திகழ்ந்திட வரமளிப்பாய் நித்தமும்
போனது போகட்டுமெனப் பணிவேன் நின்பதம்
போகாமல் நீயெனக்களிப்பாய் ஞானம் யாவும், உயர் ஞானம் யாவும். ===================================================

கேட்கமாலேயே பால் நினைந்தூட்டுவதுவாம் அன்னையின் கருணை.

அதுபோலவே,

கேட்காமலேயே பாடிப் பதிவேற்றி இருக்கிறார் சுப்பு தாத்தா,

அனைவரும் கேட்டு அன்னையின் அருள் பெற:

 

4 comments:

  1. அழகான இந்த பாடலை
    அன்னைக்கான இந்த பாடலை
    அடியேன் பாடாது இருக்கவும்
    ஆகுமோ ?

    பாடிவிட்டேன்.
    பிழை ஏதேனும் இருந்தால்
    பொருத்தருள வேணும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. அழகாகப் பாடி, அன்புடனே பதிவேற்றி, அனுப்பி வைத்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

      Delete
  2. பாட்டும் அருமை; பாடியதும் அருமை.
    பாட்டெழுதிய ஜீவா பெயர் கூடப் போட்டுக்கொள்ளாத அடக்கம் அருமை.
    எழுதியதை எழுதியவாறு பாடுதல் கொஞ்சம் சிரமம் இல்லையா.. சூரி சார் இசைக்கேற்ப வளைத்து உற்சாகத்துடன் தான் பாடியிருக்கிறார்.
    இருவரின் முயற்சிகளுக்கும் பாராட்டுகள்.
    எனக்கு ஒரே ஒரு குறை:
    ஆதியவன் ஜோதியாம் என்று ஜீவாவும் எழுதவில்லை. 'சோதியாம்'-- என்னவோ போலிருக்கிறது. அந்த 'ஜோதி' ஜ்வலிப்பு உணர்வில் ஜொலிக்கவில்லை.
    சூரி சாரும் அப்படியே 'சோதியாம்' என்று பாடுகையில்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றிகள் ஐயா.
      ஜோதி என்று மட்டும் சொல்லாமல், ஜோதி ஜ்வலிப்பு என்று சேர்த்துச் சொன்னது அழுத்தமாக இருந்தது!

      Delete