
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.(குறள் 249)
ஞானம் என்பது என்ன? ஞானம் என்பது வெற்று கற்பதனால் வரும் அறிவில்லை. அது புதிதாகக் கற்கும் வெளியறிவும் இல்லை. அது தன்னறிவு. தான் உண்மையில் மெய்ப்பொருள் எனத் தெளியும் மெய்யறிவு. பக்தி இல்லாமல் எத்தனை கற்றாலும், அது வெறும் ஏட்டறிவாக இருப்பதனால், படிப்பது மட்டும் பயன் தருவதில்லை. பக்தியில்லாமல் ஞானமில்லை. ஞானமில்லாமல் முக்தியில்லை. பக்தி, ஞானம் - இவ்விரண்டிலும் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையில்லை.
ஞானம் பெற பக்தி கருவி என்றால், பக்திக்கு கருவிகள் யாது? பக்தி பண்ண ஒன்பது வழிகள் இருக்கின்றன - இதனை நவவிதபக்தி என்பார்கள் - சிரவணம் முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்) ஒன்பது வழிகளைச் சொல்கிறார்கள். இவற்றில் நமக்குப் பிடித்த 'கீர்த்தனம்' என்கிற வழியில் இந்தத் தொடரில் அவன் பரப்பி வைத்த மூர்த்திகளைப் பாடிப் பணிந்து பக்தி பண்ணும் பாடல்களைப் பார்க்கப் போகிறோம், இந்தத் தொடரில்.
வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி மதி விகற்பால்வேதாந்தம் எல்லாவற்றுக்கும் மேலான மிக உயர்ந்த இறை நிலையை 'பிரம்மம்' எனச் சொல்கிறது. ஆனால் அது எப்படி இருக்கும் என எந்தப் படத்திலும் பார்த்ததில்லையே. பின் அதை எப்படிப் பாடுவது. 'சிவன்' என்றால் 'பித்தா, பிறைசூடி' எனலாம். 'திருமால்' என்றால், 'நெடியோனே, வேங்கடவா' எனலாம். பிரம்மம் எப்படி இருக்கும் என கண்டவர் யார், விண்டவர் யார்? யாரிடம் கேட்பது?
பிணங்கும் சமயம் பலப்பல ஆக்கி அவை அவைதோறும்
அணங்கும் பலப்பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே!- நம்மாழ்வார்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.-பெரியபுராணம்.
பெரிய புராணத்தின் இந்த துவக்கச் செய்யுளைப் பார்த்தோமேயானால்:
முதல் வரியில் : ஓதற்கு அரியவன் - அது நிர்குண பிரம்மத்தினை குறிப்பது.
அடுத்த வரியில் : நிலவை அணிந்தவன் - குணங்களைக் கொண்ட சகுண பிரம்மத்தினைக் குறிப்பது.
அதற்கு அடுத்த வரியில் : அலகிலாதவன் - மீண்டும் நிர்குண பிரம்மம்.
இப்படியாக, மாற்றி மாற்றி இவன் இரண்டுமாய் இருப்பவன் என்பதை சுட்டிக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்.

கணபதி : 27பெரும்பாலும் 'குருகுஹ' என்ற முத்திரையோடு அமைந்த இக்கீர்த்தனைகள் அத்வைத சாரத்தை எடுத்துச் சொல்லுவதோடு, நமது மறைகள், பிரபந்தங்கள் மற்றும் புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை இசையோடு சேர்த்து ஊட்டுகின்றன.
சிவன் : 131
சக்தி : 176
முருகன் : 36
திருமால் : 41 (27 +14)
சூரியன் உட்பட நவகிரகங்கள் : 9
இந்த தெய்வங்களைப் போற்றுவதில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லாத் தெய்வங்களும் ஒன்றாக கருதப்படும். "We can have preferences, but no exclusions." என்பார்கள். தனக்குப் பிடித்த இஷ்ட தெய்வமாக, ஒரு தெய்வத்தை பற்றிக் கொள்ளலாம். கண்ணன் கீதையில், "என்னைப் பற்றிக்கொள். உனக்குத் தேவையான ஞானத்தை நான் தருகிறேன்", சொல்வதை நினைவில் கொண்டு, பக்தி என்னும் கருவி கொண்டு சகுண பிரம்ம உபாசனை செய்து உயர் ஞானம் பெற்று முக்தி என்னும் வீடுபேறினை பெற்று உய்யும் உபாயத்தினை நம் பெரியவர்கள் நமக்கு காட்டிச் சென்றுள்ளார்கள். ஆயினும், பக்தியும் ஞான மார்க்கமும் வெவ்வேறானது, தொடர்பில்லாதது என்கிற ஐயப்பாட்டு பலரிடம் நிலவத்தான் செய்கிறது.
மேலே சொன்ன ஆறு இறைகளையும் எடுத்துக்கொண்டு, முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் வழியாக பக்தி பண்ணிப் பாடிப்போற்றி இந்தத் தொடரில் பயணிக்கப் போகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு இறையை எடுத்துக்கொண்டு, தீக்ஷிதரின் கிருதிகளை முன்னிருத்தி, அதிலிருந்து பக்தி செய்வதற்கான உந்துதலைப் பெற முனைவோம்.
அடுத்த பகுதியில் முமுதற் கடவுள் கணபதியைப் பாடித் துவங்க இருக்கிறோம்...
ஆரம்பமே அருமை! பக்தியும் ஞானமும் பாதைகள் தான்! ஞானம், உயர்ந்த மலைப் பாதை, எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ? எல்லோருக்கும் எளிதாய்க் கிடைப்பது பக்தியில் விளையும் ஞானக் கீற்றுக்கள் தான்!
ReplyDeleteவாங்க எஸ்.கே சார்!
ReplyDeleteசிலர் இன்னமும் குறிப்பிட்டுச் சொல்வதற்காக - ஞான மார்க்கம் எனச் சொல்லாமல் யோக மார்க்கம் என்பார்கள்.
அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லுவது இன்னும் பொருத்தமாகத் தோன்றுகி
றது.
இரமண மகரிஷியிடம் இதைப்பற்றிக் கேட்டபோது "பக்தியில்லாமல் ஞானம் எப்படி வரும்? மேலும் ஞானமில்லாமல் பக்தியும் எப்படி வரும்?" என்று திருப்பிக் கேட்டாராம்.
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜீவா.
ReplyDeleteஅஸ்திவாரம் பலமாக அழகாக ஆழமாகப் போடப்பட்டிருக்கிறது என்பது சாதாரணப் பார்வைக்கேத் தெரிகிறது.
ReplyDeleteஅதில் எழும்பக் கூடிய கட்டிடத்தின் சீர்மையையும் சிறப்பையும் இதுவே நிச்சயப்படுத்துவதாகவும் தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
வாங்க கவிநயாக்கா மற்றும் ஜீவி ஐயா.
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!
ஜீவா என்றாலே
ReplyDeleteஜீவனுள்ள வாக்கியங்கள்.
ஆகாஷாத் பதிதம் தோயம்
யதா கச்சதி ஸாகரம்
ஸர்வ தேவ நமஸ்காரஹ
கேசவம் பிரதிகச்சதி
என கீதையில் பகவானே கூறும்பொழுது
அப்பீலுக்கு இடமில்லை.
இருப்பினும், ஸர்வ தேவ என்னும் சொல்லில்
சகுணமும் அடங்கும், நிர்குணமும் அடங்கும்.
நிர்குணமும் அடங்கும் என ஒப்புக்கொண்டபின்,
பிரும்மனை நிர்குணமாகச் சித்தரிக்கும் உலகத்தே உள்ள ஏனைய
அன்ய மதங்களில், அவரவர்
தர்ம வழிகளிற் செய்யப்படும் இறை வழிபாடும்
அந்த கேசவனையே அடைகிறது.
ஸர்வ தர்ம ஸமன்வயம் இதுவல்லவோ !!
சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com
அருமையாகச் சொன்னீர்கள் சுப்புரத்தினம் ஐயா,
ReplyDeleteஒன்றே குலம், ஒருவனே தேவன்!
really excellent that is all i can say and i am forwarding this to all my friends in face book and my blogs
ReplyDeletehttp://2011newattitudes-balayogi.blogspot.com/
Welcome and Thanks a bunch balayogi,
ReplyDeleteHappy new Year!
சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!!!!!!
ReplyDeleteஇந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
your postings are great and needs to be preserved, read and understood. Thanks--Ramani R V
ReplyDelete