Sunday, May 26, 2019

நாராயண திவ்ய நாமம்

இராகம் : மோகனம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

எடுப்பு
நாராயண திவ்ய நாமம்
நான் மறை சொல்லும் நாயகன் திருநாமம்
நாவிற்கினிய நாராயண திவ்ய நாமம்

தொடுப்பு
ஆராவமுதாய் ஆறு வயதிலே அன்பு செய்
துருவன் உணர்ந்த மந்திரம்

முடிப்பு
நாரதாதி முனிவரும் சனகாதி யோகியரும் பிரக்லாதனும் எந்நாளும்
மனோலயமுற வாயாற பஜிக்கும் ஆனந்த நாமம் பேரானந்தம்
இருந்தாலும் கோர பவசாகரத்தில் ஆழ்ந்துழலும் நம்மை மிக
ப்ரேமையுடன் கைதூக்கி அபயமருள் வேத சார தாரக நாமம்
பூரணன் திருமகள் மணவாளன் பாற்கடலில் அரவணைதுயில் வரதன்
புனித கருட வாகனன் நீல முகில்போலும் மேனி அழகன் திருநாமம்
மாரஜனகன் கருணாலயன் அன்பர் துன்பம் அகல மங்களம் அருள்வோன்
வைகுண்டபதி பாவன நாமம் வணங்கும் ராமதாசன் கண்டுகொண்ட
(நாராயண திவ்ய நாமம்)

 நாராயண! நாராயண!

எம்.எஸ்:
 
சஞ்சய் சுப்ரமணியம்:






2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமையான பாட்டு .பாபநாசம் சிவன் பாடல்கள் எல்லாமே அருமையான வரிகளாக இருக்கும். சஞ்சய் சுப்பிரமணியமும் அருமையான பாடகர். இங்கு மீண்டும் கேட்டு ரசித்தேன்..

    பாபநாசம் சிவன் அவர்களின் பாடலில் நம்பிக்கெட்டவர் எவரையா பாடல் வரிகள் மிக மிக பிடிக்கும் அத்தனை அர்த்தமுள்ள வரிகள்...

    கீதா

    ReplyDelete