Sunday, November 10, 2013

சிலையில் இருந்து சிவரூபம்!

பல வருடங்களுக்கு முன் ஜேசுதாஸ் பாடிக் கேட்டிருந்த இந்த மலையாளப் பாடலை, இங்கே பதிவு செய்கிறேன்.

பாடலை இயற்றியவர் யாரென்று தெரியவில்லை.

சிலையே கைக்கொண்டு சிவரூபம் ஆக்குன்ன
கலையுடே கால்களே கைத்தொழுனேன்

முளையே சும்பிச்சு முரளியாய் மாட்டிய
முரஹர பத பாதம் கைத்தொழுனேன்

மூகன்னு சுவரமேழுக்கும் முக்தி பிரதாஹினியாம்
மூகாம்பிகே நின்னே கைத்தொழுனேன்

காலில் சிலங்கையோடடு ஆனந்த நடனமாடும்
கனகசபாபதியே கைத்தொழுனேன்

கல்லேலே கலைவண்ணம் கண்டு
கண்களில் சிலைவண்ணம் காண,
கண்களும் காணா சிவரூபம் காண,
கைகளும் அவன் காற் தொழுமே.

மூங்கிலை ஒடித்து குழலாக மாற்றி
முரளீகானம் இசைத்திடும்
முரஹரனாம் கண்ணனின் தாமரை
மலர் பாதங்களைக் கைத் தொழுமே.

தித்திக்கும் சுவரம் ஏழுக்கும்
முக்தி அளித்தவளாம்
மூகாம்பிகை அன்னையை என்
கைகளும் பணிந்து தொழுமே.

காலிற் சதங்கைகள் ஒலிக்க அம்பலத்தில்
ஆனந்த நடனம் ஆடும்
கனக சபாபதியை என்
கைகளும் போற்றித் தொழுமே.

3 comments:

  1. super song by Yesudoss.
    Equally immaculate translation.
    subbu rathinam.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  2. அருமையான மொழிபெயர்ப்பு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. வழி மொழிகிறேன். நன்றி ஜீவா.

    ReplyDelete