Monday, September 19, 2011

இலக்கும் இறுதியும்

இலக்கு தொலை தூரத்தில் இருக்கிறது.
இயற்கைக்குப் புறம்பாகவும் இருக்கிறது. ஆனால் அது,
நம்மை எப்போதும் தன்பால் ஈர்த்தபடியே இருக்கிறது!
அதனை அருகாமையில் வரச் செய்ய வேண்டும்.
அருகே அருகே என அருகாமையில் வர வர:
வானத்தின் இறைவன் இயற்கையில் தெரிகிறான். பின்னர்,
இயற்கையில் தெரிந்த இறைவன் இயற்கையாகவே மிளிர்கிறான்.
அடுத்து, உடலாகிய கோயிலில் உறைகிறான்.
பின்னர், உடலில் உறைந்த இறைவன் உடலாகவே ஆகிறான்.
இறுதியாய் அவனே அதன் ஆன்மாவாகிறான்.
அது வரை இலக்கானது நமக்கு கற்பித்துக் கொண்டே இருக்கிறது.
எங்கெங்கெலாமோ தேடப்பட்டவன்
இங்கேயே இதயக் கமலத்திலேயே இருக்கிறான்.
தத்வமஸி. நீயே அவன், ஓ மனிதா, நீயே அவன்.

- சுவாமி விவேகானந்தர்
மேற்கோள் : சகோதரி நிவேதிதாவின் "The Master as I saw Him"

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
     கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
     டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
     பெரும்பொருளாய்ப் புன்மை தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய்
     நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.

- மகாகவி பாரதி



2 comments:

  1. நல்ல பதிவு

    ReplyDelete
  2. இலக்கு, இன்னும் தொலைவிலேயே... :(

    தமிழாக்கம் செய்திருக்கீங்க போல. மிக அழகா இருக்கு.

    ReplyDelete