
(படம் மூலம்: ப்ராஸ் எக்ஸ் கோஹல்ஹாஃப்)
கூரையில் கண்ணாடி ஜன்னலை நிர்மாணித்தது இப்படி ரம்யமானதொரு வானத்தை கையருகே கொண்டுவந்து நிறுத்தும என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. சூரிய ஒளியை பகல் நேரத்தில் பெருவதற்குத்தான் இந்த ஏற்பாடு. ஆனால், எதிர்பார்ப்பின் இன்னொரு பக்கம், எதிர்பாராமல் இதம் தந்தது.

(படம் மூலம்: அமீர் ஹோஸைன் அபோல்ஃபா)
நிலத்தை நடந்தோ, ஊர்தியில் பயணித்தோ அளவிட முடியும். நீந்தத் தெரிந்தவர்கள், நீர்ப்பரப்பிலும் அதன் ஆழங்களிலும் அதன் எண்ணிலடங்கா வளங்களை அருகில் சென்று பார்க்க முடியும். விண்வெளியை மட்டும் வெகு தொலைவில் இருந்து கண்டுணர, அதில்தான் எத்தனை எத்தனை விந்தைகள்!
இப்போதைக்கு நட்சத்திரங்கள் மட்டும் இல்லாமல், வெள்ளி கோளும் கண்ணுக்குத் தெரிகிறது.
நள்ளிரவு நகர நகர நிலவு இல்லாத புதன் கிரகமும் கண்ணுக்குத் தெரியுமாம். அவ்வளவு நேரம் விழித்திருப்போமா தெரியவில்லை. இப்போதைக்கு கண்ணுக்கு தெரியும் நட்சத்திரங்களை கோர்த்து ஒருவம் ஏதாவது வருகிறதா? ஆ, இரட்டையர்கள் கொண்ட ஜெமினியோ?

No comments:
Post a Comment