புதிர்கள் ஜாவா ப்ரோகிராமிங் மொழியில்! வாங்க, வாங்க, வந்து புதிர்களுக்கான விடைகளை கண்டு பிடிங்க பார்க்கலாம்!
மொத்தம் எட்டு புதிர்கள் உள்ளன.
கீழே உள்ள கூகிள் வீடியோவில் இந்த புதிர்கள் ஒவ்வொன்றாக கேட்கப்படுகிறது. பார்வையாளர்கள் விடைகளை கண்டு பிடிக்கிறார்கள். நீங்களும் முயலுங்களேன்!
Autoboxing போன்ற "ஜாவா JDK 1.5" சம்பந்தப்பட்ட புதிரும் அடங்கும்.
மொத்தம் 1 மணி நேரம் ஆகிறது, இந்த வீடியோ முடிய. நல்ல நகைச்சுவையாகவும் உள்ளதானால், அவ்வளவாக போரடிக்கவில்லை!
Tuesday, July 31, 2007
Sunday, July 29, 2007
டாடா தொழிற்சாலையும் சந்தர்ப்பவாத அரசியலும்
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளில் டாடாவின் புதிய டைட்டானியம் டை ஆக்ஸைட் தொழிற்சாலை நிறுவும் பணியில் பல்வேறு சர்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதில் உண்மை நிலை என்ன? என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கிறது.

டாடா என்ன சொல்கிறது?
2,500 கோடி செலவில் உருவாகும் இந்த தொழிற்சாலை, 1000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 3000 பேருக்கு ஏனைய வழிகளிலும் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்கிறது.
ஏனைய வழிகளில், மேலும் 3000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது உண்மையானால் நல்லதே!
தொழில் சம்பந்தமான நுட்ப அறிவு தேவைப்படாத வேலைகளுக்கெல்லாம், உள்ளூர் மக்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்வோம் என்கிறது. அதிலும் தொழிற்சாலைக்காக தங்கள் நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்போவதாக சொல்கிறது.
மொத்தம் 10,000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தவிருக்கிறது. அவை தற்போதைய மார்க்கெட் விலையில் நிலத்தை வாங்கிக் கொண்டு, உரிமையாளர்களுக்கு பணம் கிடைக்க வழி வகுக்கிறது என்கிறது. மேலும் குடியிருப்புப் பகுதிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்கிறது.
குடியிருப்பு பாதுக்கப்படும் என்று சிலர் சொல்வது எப்படி என்று தெரியவில்லை.
தற்போதைய மார்கெட் விலை இது போன்ற இடங்களில் குறைவாக இருக்கும். தொழிற்சாலைக்காக வாங்கும் நிலத்திற்காக, டாடா, மார்க்கெட் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை தர முன் வர வேண்டும். குடியிருப்பு பாதிக்கப்படும் பட்சத்தில் மேலும் அந்த ஊரிலேயே தொடர்ந்து வாழ விரும்புபவர்களுக்கு தரமான குடியிருப்பு கட்டித் தரவேண்டும்.
கடல் நீரை சுத்தகரிக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டு அதன் மூலமாக சுத்தகரிககப்படும் நீரை மட்டுமே தொழிற்சாலை பயன்படுத்தும். நிலத்தடி நீர் நிலமை இதனால் முன்னேருமே தவிர பாதிக்கப்படாது என்கிறது.
மேலும், சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு எந்த ஒரு கேடும் ஏற்படாத வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று சொல்கிறது.
இதெல்லாம் நியாயமாகத்தான் தெரிகிறது. ஆனால் எந்த அளவிற்கு இதெல்லாம் உண்மையாக நிறைவேற்றப் படும்?, எந்த அளவிற்கு இது ஆளும் கட்சி மற்றும் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் பணம் ஈட்டும் வழியாக மட்டும் செயல் படப்போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.
அதே சமயத்தில் எதிர் கட்சிகள், இதுதான் கிடைத்தது சந்தர்ப்பம் என்று கண்மூடித் தனமாக எதிர்ப்பது, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் தோல் உரித்துக் காட்டுகிறது.
என்ன குறைகள் இருக்கின்றன என்பதை பட்டியல் இடட்டும். டாடா நிறுவனமும், அரசும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பாடாது என்று எழுத்து மூல உத்தரவாதத்துடனும், தகுந்த பண காப்பீடுடனும், எந்த தரப்பும் சாராத நடுநிலையாளர்களின் கண்காணிப்புடனும் திட்டத்தை செயல் படுத்தினால் என்ன?
எத்தனை க்காலம் தான் இந்தப் பகுதி மக்கள் விளைச்சலற்றுப் போன நிலங்களிலும் விவசாயம் செய்வதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்? நம்மிடம் மனித வளம் ஏராளம். அதை மாற்றுவோம் தொழில் வளமாய்!
இதில் உண்மை நிலை என்ன? என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கிறது.

டாடா என்ன சொல்கிறது?
2,500 கோடி செலவில் உருவாகும் இந்த தொழிற்சாலை, 1000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 3000 பேருக்கு ஏனைய வழிகளிலும் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்கிறது.
ஏனைய வழிகளில், மேலும் 3000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது உண்மையானால் நல்லதே!
தொழில் சம்பந்தமான நுட்ப அறிவு தேவைப்படாத வேலைகளுக்கெல்லாம், உள்ளூர் மக்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்வோம் என்கிறது. அதிலும் தொழிற்சாலைக்காக தங்கள் நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்போவதாக சொல்கிறது.
மொத்தம் 10,000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தவிருக்கிறது. அவை தற்போதைய மார்க்கெட் விலையில் நிலத்தை வாங்கிக் கொண்டு, உரிமையாளர்களுக்கு பணம் கிடைக்க வழி வகுக்கிறது என்கிறது. மேலும் குடியிருப்புப் பகுதிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்கிறது.
குடியிருப்பு பாதுக்கப்படும் என்று சிலர் சொல்வது எப்படி என்று தெரியவில்லை.
தற்போதைய மார்கெட் விலை இது போன்ற இடங்களில் குறைவாக இருக்கும். தொழிற்சாலைக்காக வாங்கும் நிலத்திற்காக, டாடா, மார்க்கெட் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை தர முன் வர வேண்டும். குடியிருப்பு பாதிக்கப்படும் பட்சத்தில் மேலும் அந்த ஊரிலேயே தொடர்ந்து வாழ விரும்புபவர்களுக்கு தரமான குடியிருப்பு கட்டித் தரவேண்டும்.
கடல் நீரை சுத்தகரிக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டு அதன் மூலமாக சுத்தகரிககப்படும் நீரை மட்டுமே தொழிற்சாலை பயன்படுத்தும். நிலத்தடி நீர் நிலமை இதனால் முன்னேருமே தவிர பாதிக்கப்படாது என்கிறது.
மேலும், சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு எந்த ஒரு கேடும் ஏற்படாத வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று சொல்கிறது.
இதெல்லாம் நியாயமாகத்தான் தெரிகிறது. ஆனால் எந்த அளவிற்கு இதெல்லாம் உண்மையாக நிறைவேற்றப் படும்?, எந்த அளவிற்கு இது ஆளும் கட்சி மற்றும் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் பணம் ஈட்டும் வழியாக மட்டும் செயல் படப்போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.
அதே சமயத்தில் எதிர் கட்சிகள், இதுதான் கிடைத்தது சந்தர்ப்பம் என்று கண்மூடித் தனமாக எதிர்ப்பது, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் தோல் உரித்துக் காட்டுகிறது.
என்ன குறைகள் இருக்கின்றன என்பதை பட்டியல் இடட்டும். டாடா நிறுவனமும், அரசும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பாடாது என்று எழுத்து மூல உத்தரவாதத்துடனும், தகுந்த பண காப்பீடுடனும், எந்த தரப்பும் சாராத நடுநிலையாளர்களின் கண்காணிப்புடனும் திட்டத்தை செயல் படுத்தினால் என்ன?
எத்தனை க்காலம் தான் இந்தப் பகுதி மக்கள் விளைச்சலற்றுப் போன நிலங்களிலும் விவசாயம் செய்வதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்? நம்மிடம் மனித வளம் ஏராளம். அதை மாற்றுவோம் தொழில் வளமாய்!
Subscribe to:
Posts (Atom)