Showing posts with label மொழியாக்கம். Show all posts
Showing posts with label மொழியாக்கம். Show all posts

Friday, March 25, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 4 (நிறைவுப்பகுதி)

குளிர்காலம் முற்றுப்பெற்ற மறுநாளே, நானும், பெர்கெரும் க்ரேண்ட் டெட்டான் தேசிய பூங்காவின் தென் முனைய நோக்கி, நடைபயணமாய் கிளம்பினோம். கழுத்தைச்சுற்றி வளையம் போன்ற பட்டையுடன் மூஸ் மாடொன்றும், நான்கு எருதுகளும், மேலும் ஒரு மாடும் வெண்பச்சை நிற புல்வெளியில் அமர்ந்திருந்தன. நாங்கள் அதன் அருகாமையை அடைந்தவுடன், பெர்கெர் திடீரென, தன் கைகளை வாயில் குவித்துக்கோண்டு ராவென் பறவையப்போல் ஒலி எழுப்பினார். மூஸ் மாடோ அதில் கவனம் இழ்ந்ததாகக்கூடத் தெரியவில்லை. பின் நரியைப்போலவும் ஊளையிட்டார். மூஸ் மாடோ அவரைப்பார்த்து என்னை ஏன் இப்பட் போரடிக்கிறீர்கள் என்று கேட்பதுபோல் தோன்றியது.
பின்னர் பெர்கெர் என்னிடம் சொல்கிறார். ஒருகாலத்தில், நரிகள் மூஸ் கன்றுகளுக்கு ஆபத்து விளைவித்ததால், நரிகளின் ஊளைச்சப்தமே மூஸ் மாடுகளை பயமுறுத்தி வந்தது. ஆனால் இப்போதோ, அது பழங்கதையாகி விட்டது. இந்த மூஸ் மாடுகளுக்கு, இவற்றின் மூதாதாயரின் பய உணர்வு தொடரவில்லை போலும். மூஸ் மாடு அவருக்கு 'சாம்பிள்' ஒன்றை 'ஈந்த'உடன், அதை கவனமாக ஒரு ஜிப்லாக் பையில் போட்டுக்கொண்டார். பின்னர் நடைபாதைக்கு திரும்புகையில் அவர் சொல்கிறார். "நான் இதை எனக்கு நினவு தெரிந்த் காலம் முதல் செய்து வருகிறேன். ஏனெனில், வனம் மற்றும் இயற்க்கையின் மீது நம்மவர்களின் தாக்கம் எவ்வளவு என்பதை அறிவதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு" என்று. தொடர்ந்து, புன்னகையுடன் "அதே சமயத்தில் வனம் மற்றும் இயற்க்கையினால், மனிதர்களின்மேல் எவ்வளவு தாக்கம் உண்டு என்றறிவதிலும் ஆர்வம் உண்டு. ஆனால் அதை எண்களால் வரையருப்பது கடினம்" என்று.
எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தனிமையில் நீண்ட குளிர்காலத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டு இருப்பது எவ்வளவு கடினம் என்று - மூஸ் மாடுகள், க்யோட்டே நரிகள், மேக்பை வகை பறவைகள் மற்றும் அன்னம் ஆகியவற்றின் நிர்ணயக்கத்தக்க துணையில்லாமல். சப்தம் மிகுந்த வசந்தகாலத்தின் வருகயைப்பற்றி தன் ரிங்காரத்தினால் முன் அறிவிப்பு செய்யும் (சிவப்பு இறக்கை கொண்ட) கறுப்பு பறவையோ, அல்லது மலர்களில் தித்திக்கும் தேன் சுவையை கண்டுகொண்டு, அந்தரத்தில் ஊசாலடிக்கொண்டே தன் சிறகுகளை வியக்கவைக்கும் வேகத்தில் வீசவைக்கும் ஹம்மிங் பறவைகளோ, அல்லது நீர்வெளிகளில் படபடவென தன் சிறகுகளை அடித்துக்கொள்ளும் வாத்துக்களையோ, அல்லது விழுந்துபோன ஆஸ்பன் மரத்தைச்சுற்றி வரும் எல்க் மானின் இளம் குட்டியையோ, இவற்றில் எதை ஒன்றையையும் விடுவது என்பது மனதிற்கு மிக மிகக் கடினமேயாகும்.

எல்க் மான்

Elk Posted by Hello

அன்னம்

Swan Posted by Hello

உறைபனிக்கு நடுவே நீர்வீழ்ச்சி

Falls Posted by Hello

முற்றும்.

இதுவரை 'நேஷனல் ஜியோகிராபிக்' பத்திரிக்கையில் அலெக்ஸ்ஸாண்டர் ஃபுல்லர் என்பவர் 'அளவிடமுடியா பரிசுகள்' என்ற தலைப்பில் எழுதி வெளிவந்த ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம் படித்தீர்.
இது குளிர்காலத்தின் இறுதியில் யெல்லோஸ்டோனைப்பற்றிய கட்டுரை. மற்ற காலங்களில் யோல்லோஸ்டோன் போனீர்கள்லானால், இந்தக்கட்டுரையில் விளக்கியதைக்காட்டிலும் வேறு உலகததைக்காண்பீர்!

கடந்த பகுதிகளின் சுட்டிகள்
பகுதி 1
பகுதி 2
பகுதி 3

Thursday, March 24, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 3

க்ராண்ட் டெட்டான் மற்றும் யெல்லோஸ்டோன் பூங்காவின் எல்லைகளாக முதலில் அதன் பார்வைக்கு அழகு தரும் இடங்கள் வரை இருந்தது. இதனால், சென்ற அரை நூற்றாண்டில், அது மட்டும் போதாதென்றும், இங்கு வாழும் வனவிலங்குகளுக்கு தேவையான இடத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென உணர்ந்துள்ளனர். 1970களில், ஜான் மற்றும் பிரான்க் கிரைக்ஹெட் என்போர், க்ராண்ட் டெட்டான் மற்றும் யெல்லோ ஸ்டோன் பூங்காவின் முழுமையை கணக்கிட வெறும் நிலப்பரப்பின் அளவுகளையும், வேலிகளையும் கொள்ளாது, கரடிகள் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கென்று தனி விதிகளை ஏற்படித்திக்கொண்டு உலவி வருவதையும், அதனோடு மனித அருகாமையின் விளைவுகளையும் கணக்கில் கொண்டனர். அவர்கள்தான் முதன்முதலில், இங்கு வாழும் விலங்கினங்களின் எண்ணிக்கையும், வகைகளும் இந்த நூற்றாண்டையும் தாண்டி வளருமென்றும், குறிப்பிட்ட விலங்கினங்களை எடுத்துக்கொண்டு, இவற்றை மட்டும் தனியாக காப்பாற்றி விட முடியாது என்றும் சொன்னார். ஏனெனில், அவ்விலங்குகளை காப்பாற்றும் திட்டத்தில் அவை சார்ந்திருக்கும் சுற்றுசூழலை மேலாண்மை செய்வதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

யொல்லோஸ்டோன் மற்றும் கிரேண்ட் டெட்டானில், நரைத்தமுடிக் கரடியையும், (இவை சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, அவற்றின் முன் கோபத்திற்கும் எடுத்துக்காட்டு), ப்ராங்ஹார்ன் எனப்படும் ஒருவகை கொம்புமானையும் சேர்த்துக்கொண்டால், இந்த பூங்காவின் எல்லைகள் முழுவதும் ஓட்டைகள் இருப்பதாகத்தான் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு, பூங்காவின் உள்ளிருந்து வெளியேவும், வெளியிருந்து உள்ளேயும் இந்த விலங்குகள் இடம்பெயர்ந்தவாறு இருக்கும்.

கோடைக்ககாலத்திற்கும் குளிர்காலத்திற்கும் மிக முக்கியமான பாலமாகத்திகழ்வது யல்லோஸ்டோனைச் சுற்றி இருக்கும் நிலப்பகுதியானது - இப்போது இவை 'புற யல்லோஸ்டோன் சுற்றுசூழல் பகுதி' (GYE) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான எவரும், அதன் எல்லைகளை தோராயமானதுதான் என்று ஒத்துக்கொள்வார்கள். உதாரணத்திற்கு, ஹம்மிங் பறவைகளை எடுத்துக்கொண்டால், GYE - னது, மத்திய மற்றும் தென் அமெரிக்காவரை நீளக்கூடும்!. னால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஃப்ரான்ஸ் கேமன்ஜிந்த் எனும் உயிரியல் வல்லுனர் என்னிடம் சொன்னார் "கடைசியாக, வேறுவழியில்லாமல், பொருள்படவேண்டி, யெல்லோஸ்டோனின் வனப்பகுதியை பூங்காவாக அறிவித்தோம்" என்று.

என்னுடைய கேபினிலிருந்து, எந்த திசையில் சென்றாலும், GYE-க்குள் செல்லலாம். கேமன்ஜிந்த் சொல்லுவதுபோல், அமெரிக்காவில் காப்பாற்றப்பட்ட இயற்கை வனச்சூழலில் இதுவே மிகப்பெரியதாகும். ஆனால், வரைபடத்தில் பார்த்தாலோ, இதன் மேல் பறந்துபோனாலோ, அவ்வளவு பெரிதானதல்ல என்று தேன்றும். சரிதான், ஆனாலும், அமெரிக்காவில் இருப்பதில் இதுவே மிகப்பெரியது.
குறைந்துவரும் அளவினால், GYE தாக்குப்பிடிப்பதற்கு, நட்சத்திர அந்தஸ்து பெற்ற (நரைமுடிக் கரடிகள், நரிகள், பைசன் எருதுகள்) விலங்குகளை கவனிப்பது மட்டுமல்லாமல், நமது எதிர்பார்ப்புகளில் ஏற்படும் திடீர் மாறுதல்களை தணிக்கவும் வேண்டும். நாம் நம்முடன் வாழ எதிர்பார்க்கும் விலங்குகளின் வலிகளை புரிந்துகொள்ளவேண்டும்.

ஜோயல் பெர்ஜர் என்பவர் (பார்ப்பதற்கு ஒல்லியான, வெள்ளையடித்த நபர்), இரண்டு மொழி கற்றவர். இதென்ன பிரமாதம் என்கிறிறீர்களா? நான் சொன்னதில் இரண்டாவது மொழி, விலங்கின மொழி. சென்ற ஒன்பது வருடங்களில் அவர் சந்தித்தவை – அதிர ஓடி வரும் மூஸ் மாடுகளையும், திடீரெனத் தோன்றும் கரடிகளையும் மட்டுமல்ல – ராக்கி மலைதொடர்களின் கடுங்குளிரையும், கால்களைப் படரும் காட்டுப்புதர்களின் நடுவே மூஸ் மாடுகளின் சமீபத்தைய சாணம் தேடும் (அய்யே) வெட்டையயும்தான்!. மூஸ் மாடுகளின் சமீபத்திய தலைமுறைகள் காட்டு நரிகளை பார்த்திருக்காது. இந்த சூழ்நிலையில், இந்த காட்டு நரிகள், இங்கே மீண்டும் அனுமதிக்கப்பட்டவுடன், அவற்றால், மூஸ் மாடுகளில் எதேனும் மாறுதல் உள்ளதா என்றரியும் ஆராய்சியில் ஈடுபட்டுள்ளார், வன பாராமரிப்பு இயக்கத்தைச் சேர்ந்த இந்த உயிரியியல் வல்லுனர். இவர், மூஸ் மாடுகளின் கருவுரும் விகிதங்களையும் (சாணம் தேடிப்போனது இதற்காகத்தான் – சாணத்தில் இருக்கும் ஹார்மோன்கள் – கருவுரும் தன்மைக்கு அளவுகோல்), மாட்டின் கன்றுகள் எவ்வளவுநாள் தாக்குப்பிடிக்கின்றன என்ற விகிதத்தையும், காட்டு நரியின் ஊளை மற்றும், மற்ற இயற்க்கை சப்தங்களினால் மூஸ் மாடுகளின் போக்கு போன்றவற்றையும் கூட பதிவு செய்துள்ளார். இந்த ஆய்வுகளினால், எல்லோரும் பயந்த்ததுபோல் அல்லாமல், மூஸ் மாடுகளின் எண்ணிக்கை குறைவிற்கு, காட்டு நரிகளின் மறு அனுமதி காரணமில்லை என கண்டறிந்துள்ளார். கடினமான கோடக்காலத்தின் இறுதியில், குறைவான மாடுகளே கருத்தரிப்பதும், குறைவான கன்றுகளே தாக்குப்பிடிப்பதாலுமே காரணம் என்கிறார்.

யெல்லோஸ்டோன் மற்றும் க்ராண்ட் டெட்டான் - நிலப்படம்


Map of Yellowstone & Grand Tetton Park Posted by Hello

(அடுத்த பகுதியில் முடிப்பேன்)

பகுதி 1 பகுதி 2

Wednesday, March 23, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 2

அமெரிக்காவின் இயற்கை வளங்களில் முக்கியமானதான யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவைப்பற்றிய ஆங்கிலக்கட்டுரையை தமிழில் மொழி பெயர்க்கிறேன். முதலாம் பகுதியின் சுட்டி இங்கே.

இந்த அமெரிக்க நாட்டிலேயே இரண்டு வகை வெவ்வேறு பருவங்களுண்டு. எளிதில் உடையக்கூடிய குளிர்காலம் ஒரு உலகம். எதற்கும் கவலைப்படாத கோடைக்காலம் இன்னோரு உலகம். இந்த இரண்டு உலகங்களுக்கு இடையே பாலமாக இருப்பது, என்றும் மெலிந்து கொண்டிருக்கும் இடமாற்ற வழிகள் - பறவைகளும், விலங்குகளும் வான் வழியாகவும், நிலம் வழியாகவும் கோடையில் இந்த தேசிய பூங்காவிற்குள் நுழைந்து, குளிர்காலமென்னும் அடுத்த உலகை அடையும். ஜேக்ஸனைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் ப்ரான்ஸ் கேமசைந் சொல்கிறார்: "யெல்லோஸ்டோன் & கிராண்ட் டெட்டானின் பல்வேறு வகை உயிரினங்கள் எங்கே போய்ச்சேருகின்றன என்று பார்த்தால் - ஸ்வெய்னின் கழுகளும் சிட்டுக்குருவிகளும் மத்திய மற்றும் தென் அமெரிக்கா வரை சென்றடையும்" என்று.

நீங்கள் நினைக்கக்கூடும் - இந்த இரண்டு பூங்காக்களின் ஈடுபாடு தேசிய எல்லைகளை கடக்கிறதா என்று. நான் சொல்வேன் - இந்த பூங்காக்களின் நிஜ எல்லை மட்டுமே எல்லையாக இருந்தால், இவ்வளவு வியக்கத்தக்க பூங்கா இருந்திடினும், இங்கு வாழும் உயிரினங்களால் தாக்குப்பிடிக்க இயலாது. இயற்கையின் எதிர்பாரா சீண்டுதல்லால்லோ அல்லது மனிதனின் அஜாக்கிரதையோ, இந்த இடத்தில் வாழும் உயிரினங்களை அகற்றிவிட முடியும். அப்படியே இவை அனைத்தும் இங்கு இல்லாமல் போனால், கடினமான உயிரற்ற பொருட்களின் காட்சி (செத்த காலேஜ்?) - இந்த அழகான, இளமையான இடத்தில் ஓர் கொடூரமெனத் தோன்றும். இதை நன்குணர்ந்த நம் முன்னோர்கள், இந்த எழில் கொஞ்சும் வனத்தை உலகின் முதல் தேசிய பூங்காவாக உருவாக்கும் முயர்ச்சியில், 1872-லேயே அமெரிக்க காங்கிரஸில் சட்டம் கொணர வழி வகுத்தார்கள் - "இதன் எழிலை அனுபவிக்கவும், அதனால் வளமடையவும்" என்பதே அவர்களின் தாரக மந்திரம். இன்றய கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா 1950-இல் 310,000 ஏக்கர் கொண்ட காட்டு நிலமாக உருவாக்கப்பட்டது. ராக்கி மலைத்தொடர்களின் முதுகுத்தண்டுவடத்தில் தொடங்கி, 'ஜாக்ஸன் ஹோல்' சமவெளிவரை பரவியிருந்தது.

இந்த இரண்டு பூங்காக்களையும் சேர்த்தால் (இவை இரண்டையும் இணைப்பது, ஜான் டி. ராக்கெபெல்லர் ஜூ. மெமோரியல் பார்க்வே) 2.5 மில்லியன் ஏக்ராவிற்கும் மேல் ஆக, அவற்றின் கடைசி ஏக்ராவரை அழகிற்கு பஞ்சமேதும் கிடையாது.

அமெரிக்க வரை படத்தில், ஒரு விரல் வைத்தாலே மறைந்துபோகும் இடத்தில், காடுகளும், மலைத்தொடர்களும், வெந்நீர் ஊற்றுகளும், மண் பானைகளும், நதிநீர் சமவெளிகளும் கலந்தவாறு காட்சியளிக்கின்றன. அமெரிக்காவின் மத்தியமேற்கின் தலை சுற்ற வைக்கும் தட்டை நிலங்களை ஈடுகட்டுவதுபோல இந்த பசுமை நிறைந்த சமவெளிகள் இனிமை தருகின்றன.

இப்படியொரு நிலப்பரப்பு ஏற்பட்ட காரணமென்ன தெரியுமா?. ஏறக்குறைய 13 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் (அம்மாடி!), அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களின் காரணத்தால் ஏற்பட்ட நிலநகர்வுகளால், தற்போது டெட்டான் மலைத்தொடர்களும் சமவெளிகளும் அருகருகே அமைந்தன. 12,000 வருடங்களுக்குமுன் நகரும் பனிமலைகளால் செதுக்கப்பட்டு நீள்செங்குன்றுகளாக கிராண்ட் டெட்டானில் தோன்றின. யெல்லோஸ்டோனின் மத்திய சமவெளியோ, வெகு முன்பாகவே, ஏறக்குறைய 600,000 ண்டுகளுக்கு முன் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்த எரிமலை வெடிப்புகளின் விளைவாக பிறந்ததாகும்.

இது மிக அழகான இடம். ஆனால் அதே சமயம் இது அமைதியான இடமென்று யாரும் குறை கூற முடியாது. இங்கே நிலம் பொறுமையின் சின்னம் இல்லை. அது யெல்லோஸ்டோனின் வென்னீர் ஊற்றுகளில் வெளிவறும் சாம்பல் புகைகளில் மட்டுமல்ல, புல்வெளிகளின் வீறல்களில் உற்றுப்பார்த்தாலும் பூமி விம்மிக்கொண்டுதான் இருப்பது தெரியும். எரிமலை நிகழ்வுகளால் ஏற்பட்ட மண்ணானது, யெல்லோஸ்டோனின் உயரமான இடங்களிலும், கிராண்ட் டெட்டானின் சரிவுகளிலும் வெளிப்படையாகவே உள்ளது. இங்கு 'வளரும் பருவம்' என்று சொல்லப்போனால், ஆல்பைன் மரக்காடுகளில் இரண்டு மாதம்முதல், பள்ளத்தக்குகளில் மூன்று முதல் நான்கு மாதம் வரைதான். செப்டம்பர் மாதம் வந்தால் போதும். காற்றுக்கே வேலி வந்துவிடும். கசப்பான காற்று அமைதியை நிரந்தரமாக தந்துவிடும். இருந்தும், வனவிலங்குகள் மற்ற இடங்களில் எல்லாம் மனித நடமாட்டம் இருப்பதால், இந்த இடத்தை தங்கள் வீடாக கொள்ள வேண்டியுள்ளது. இருந்தும், வனவிலங்குகள்தான் இந்த இடத்திற்கு உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது. புல்வெளிகளில் விலங்குகள் மேய்ந்தும், பறவைகள் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொறித்தும், மாமிச உண்ணிகள் மற்ற விலங்குகளை வேட்டையாடியும், புல்வெளிகளுக்கும், நீரோடைகளுக்கும், இவை தினம்தினம் ஒவ்வோர் வடிவத்தை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. ஏதாவது ஒரு விலங்கின் பழக்கத்தை லேசாக பிடித்து நிறுத்தினாலும், மொத்த சூழ்நிலை மண்டலமும் இடிந்து விழுவதுபோலாகி விடும். ஜான் முயிர் சொல்வதுபோல், இந்த உலகத்தில் ஒவ்வொன்றும் மற்றொன்றோடு கொண்ட தொடர்பினால், எந்த ஒரு தொடர்பினை அறுத்தாலும், மற்ற எல்லாம் உடைந்துபோகும்.

போவோமா ஊர்கோலம்? - பைசன் எருதுகள்


Bison Posted by Hello

செந்நரி


RedFox Posted by Hello

(அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...)

Friday, March 18, 2005

யெல்லோஸ்டோன் - பகுதி 1

நவம்பர் 2003 - நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிக்கையில் வந்த ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கிறேன். இன்னமும் முழுவதாக, முடிக்காததால், பகுதிகளில், ஒரு தொடரைப்போல் வெளிவரும். அமெரிக்காவின் வித்யாசமான, அதே சமயம் வியத்தகு இயற்கை வனப்பை, அனுபவித்தவர்களும், கேள்வியால் மட்டுமே அறிந்தவர்களும், கேள்விப்படாதவர்களும் ஒருசேர படித்து நுகருங்கள்.

யெல்லோஸ்டோன் கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா, அமெரிக்கா - அளவிடமுடியா பரிசுகள்


கிராண்ட் டெட்டானில் எங்கள் கேபினிலிருந்து ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தால் எப்படி இருந்தது தெரியுமா? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனிவெளி. அவற்றுக்கப்பால் வெளிர்ஊதா நிறத்து ஆஸ்பன் (Aspen) மரங்கள். அவற்றுக்கும் அப்பால் வெள்ளைவெளிர் சூரிய கதிர்கள். அதையும் தாண்டினால் மீண்டும் பூமியில் விண்ணைப்பிளந்து நிற்கும் ராக்கி மலைத்தொடர்கள். இந்த அழகிய பிரதேசம் பல கவிதைகளை மட்டுமல்ல, முதன்முறையாக தேசிய பூங்கா ஒன்றை அமைக்கும் அமெரிக்க சட்டத்தையும் உருவாக்கியது என்றால் பாருங்களேன். ஆனால் நானோ உங்களுக்கு இவ்விடம் தரும் அன்றாடப்பரிசுகளை அளவிடப்போகிறேன்.

இது மார்ச் மாதம். சூடு என்னும் சொல்லே மிகத்தொலைவில் இருந்தது - நாங்களோ குளிர் காலத்தின் இருக்கமான பிடிகளில். என் குதிரைகளோ தங்கள் தோள்களை சிலிர்த்துக்கொண்டும், தங்கள் வாலை வயிற்றுக்கடியில் இழுத்துக்கொண்டும் இருந்தன. அவற்றுக்காக, காய்ந்த புல்லை வெளியே எடுக்க, படர்ந்திருந்த பனியை அகற்றியபோது, என் திடீர் செய்கையை எதிர்பாராத நீல நிற ஹெரான் பறவை ஒன்று (இந்த சீசனில் இதுதான் முதல்முறை பார்க்கிறேன்) விண்ணுக்குப் பறந்து, சில்லென்ற எதிர்காற்றில் விரைந்தது, ஜுராசிக் காலத்து பறவை - டெர்ரோடாக்டெல் போலத்தோன்றியது எனக்கு. இதுதான் முதல் பரிசு.

பகலில் வயோமிங் வானொலியில் எச்சரிக்கைகள் வந்தவண்ணமாய் இருந்தன. நீண்ட குளிர்கால ஓய்விற்குப்பின் கரடிகள் வெளிவரக்கூடுமாம். பசியில் உணவு தேடிக்கொண்டிருக்கும் விலங்குகளிடம் நாங்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கை செய்தனர். அதே சமயம், கேபினிலில் ஓர் ஓரத்திலிருந்த விறகுகளிலிருந்து வெளிவந்த ஈக்கள், நீண்ட நாள் வாழ்வோமென்ற நம்பிக்கையில் மேலே பறந்து, ஜன்னல் கதவுகளில் மோதி, என் தேனீர் கோப்பையில் வந்து விழுந்தன. வாழ்க்கை இருக்கிறதே - மிக அபாயகரமான, சிக்கலான மற்றும் சிறிது நெருடலுடன் கூடிய பெருமையுடன், உலகத்தின் இந்த மூலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது எனக்கு. இது இரண்டாவது பரிசு.

பின்னர், நாளின் முடிவினை பூமியின் சோர்வான மூச்சில் தெரிந்தது. அதில் சென்ற ஆறு மாதங்களாக காய்ந்த இலை, தழை, காய்ந்த புல் மற்றும் உரைந்துபோன குளத்தில் நான்கு அடிக்கு கேழே செத்துப்போன கியோட் ஓநாய் ஆகியவை மக்கி உரமாகியது தெரிந்தது. இருந்தாலும், குளிர்காலம் முழுதும் சேர்ந்துபோன குப்பைகளிலும், குதிரை லாயத்திலும் புதிதாக துளிர்க்கப்போகும் உயிர்களின் வாடை நன்றாகத் தெரிகிறது. இதுவோ கணக்கிட இயலா பரிசு.

நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் குளிர் காலத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொண்டிருக்கிறோம். செப்டம்பரின் இறுதி முதல் நேற்றுவரை இங்கு இருப்பது நான் ஒருவன் மட்டும்தான் என்பதுபோல உணர்ந்தேன். நானும் எனது கியோட் ஓநாய்களும், எல்விஸின் வளைவுகளை இடுப்பில் கோண்ட கறுப்பு மூஸ் எருது, இளம் குட்டியுடம் இரண்டு அமெரிக்க கழுகுகள் (பால்ட் ஈகிள்) மற்றும் பத்து ட்ரம்பீடர் வாத்துகளும். அன்றாடம் இந்த உயிரினங்களில் எத்தனை மிஞ்சுகிறது என்பதை தவறாமல் கவனித்தேன், நான் வாழ்வானா சாவேனா என்பதற்கும் அவைகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதுபோல். ஆனால், இன்னும் இரண்டே மாதத்தில் (மார்ச் மாதமும் ஏப்ரல் மாதமும் கரைந்து உருகி மே மாதம் ஆகும் வரை!) மீண்டும் பனி உரையத் தொடங்குமுன், ராக்கி மலைகளில் பல்வேறு உயிர்கள் பல்கிப்பெறுகும் என்று தெருவில் நடந்து போகும் ஒருவர் என்னிடம் வந்து சொன்னால், அதில்சந்தேகம் ஏதும் எனக்கு இருக்காது.

கோடைக்காலம் வந்தால் போதும், இங்கு காடுவாழ் உயிரினங்களின் வளர்ச்சி கொந்தளிக்கும். விலங்கினங்கள் காட்டில் சிந்திச்சிதறும் இடங்கள் - மனிதர்கள் நமக்கோ சாதாரண இடங்கள், ஆனால் மான் போன்ற விலங்குகளுக்கோ இவை காப்பிடங்கள். தற்போது உயிரினங்கள் அதிகமாக அடர்ந்திருப்பது தேசிய பூங்காக்களுக்கு அருகாமையில் இருக்கும் காப்பிடங்களில்தான். அவற்றில் யெல்லோஸ்டோன் & கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா - தங்கள் பங்கிற்கு நம் மனதில் அகலா இடத்தை பிடிக்கின்றது. இதைப்போன்று வட அமெரிக்காவில் இன்னும் மிக சில இடங்களே உள்ளன - அதுவும் ஐரோப்பியர்கள் வருவதற்குமுன் எப்படி இருந்ததோனவோ அப்படியே இன்றும் இருக்கும் இடங்கள். அவற்றில் இதுவும் ஒன்று. ஜான் கால்டர் (லெவிஸ் & க்ளார்க் எக்ஸ்பெடிஷனச் சேர்ந்த) 1807-இல் இந்த வழியேதான் சென்றாராம். 200 வருடங்கள் கழித்து இன்னமும் அவர் பார்த்த உயிரினங்களை இன்னமும் பார்க்கமுடியும். கிராண்ட் டெட்டானில் மட்டும், கோடைக்காலத்தில் 18 வகை மாமிசஉண்ணி வகை விலங்கினங்கள் இருந்தது. அவற்றில் ஊல்வெரென்கள், ஓநாய்கள், கறுப்பு மற்றும் பழுப்பு நிற கரடிகளும் அடங்கும். இதைத் தவிர, குட்டியிட்டு பால் கொடுக்கும் அமெரிக்க விலங்குகளில் 7 வகைகள், 22 வகை எலி இன விலங்குகள், 6 வகை ஒளவால்கள், 5 வகை தவளை இன விலங்குகள், 16 வகை மீன்கள், 300க்கும் மேற்பட்ட பறவையினங்கள், 900 வகை மலர் தரும் தாவரங்கள், 7 வகை ஊசி இனத் தாவரங்களும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

(அடுத்த பகுதியில் தொடர்கிறேன்...)