
பக்திமான் சந்த் துக்காராமின் இந்த அபங்கம், வஞ்சகப் புகழ்ச்சியில் கண்ணனைப் பாடுகிறது.
விட்டல் உறையும் பண்டரிபுரம் போக வேண்டாம், போக வேண்டாம் என்று சொல்வார்கள்.
ஆம், அங்கே செல்ல வேண்டாம், தயவு செய்து செல்ல வேண்டாம்.
அங்கே பெரியதொரு பூதம் இருக்கிறது.
பண்டரிபுரம் சென்றவர்கள் திரும்பியதே இல்லை. அந்த பூதம் அவர்களை அப்படியே சாப்பிட்டு விடுகிறதாம்!.
துக்காராம், இதையெல்லாம் கேட்பவரா என்ன, அவரது கிருஷ்ண ப்ரேமைதான் அளவிடற்கரியதே!
துக்காராம், துணிந்து பண்டரிபுரம் சென்றார்.
எல்லோரும் பயந்தது போலவே, துக்காராமும் திரும்பவில்லை.
ஆனால், என்ன, துக்காராம் இந்த நிலையில்லா உலகுக்கு திரும்பிடவில்லை.
பாண்டுரங்கன் பதமெனும் உயர்நிலையை அடைந்தபின்,
இந்த உலகும் ஒரு பொருட்டோ?
-----------------------------------------------------
பாடல் : பண்டரிசே பூத மோடே
மொழி : மராத்தி
ராகம் : சந்ரகௌன்ஸ்
பாடுபவர் : ரஞ்சனி, காயத்ரி
பண்டரி சே பூத மோடே
ஆல்யா கேல்யா தடபி வாடே
பஹூ கேதலிச ராணா
பகஹே வேடே ஹோய மானா
தீதே சவுனகா கோணி
கேலே நஹி ஆலே பரதோணி
துக்கா பண்டரி சே கேலா
புண்ஹ ஜன்ம நஹி ஆலா
----------------------------
தொடர்புடைய சுட்டிகள்:
துக்காரம்.காம்
ரஞ்சனி-காயத்ரி.காம்
விட்டல விட்டல: தி.ரா.ச அவர்களின் பதிவு