Wednesday, March 26, 2008

சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே! : தியாகராஜர்

சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே!

ஸ்ரீ தாயார் துணைவா, ஸ்ரீ தியாகராஜரால் போற்றப்பட்டவனே!

உன்னை உபசரிக்க பலர் இருப்பதால்
உன் அருள் வேண்டி
உன் புகழை பாடிக் கொண்டிருக்கும்
என்னை மறந்துவிடாதே!

உன் வாயிலிலே நிலையாக வாயு மைந்தன் உள்ளான் என்றாலும்,

உன் தம்பியர் உன்னுடன் சேர்ந்துள்ளனர் என்றாலும்,

உன் ஏகாந்தத்திற்காக ஜானகிதேவி காத்திருக்கிறார் என்றாலும்,

ஸ்ரீ தாயார் துணைவா, தியாகராஜரால் போற்றப்படுபவனே,

உன்னை உபசரிக்க இப்படியெல்லாம் பலர் இருந்தாலும் என்னை மறந்துவிடாதே!

-----------------------------------------------------------------------
இராகம்: பைரவி
தாளம்: ரூபகம்
இயற்றிவர்: தியாகராஜர்
மொழி: தெலுங்கு

பல்லவி
உபசாரமு ஜேஸேவா ருன்னாரனி மரவகுரா

அனுபல்லவி
க்ருப காவலெனனி நே நீ
கீர்தினி பல்குசுனுண்டக (உபசாரமு...)

சரணம்
வாகிடனே பதிலமுக வாதாத்மஜுடுன்னாடனி
ஸ்ரீகருலகு நீ தம்முலு சேரியுன்னாரனி
ஏகாந்தமுனனு ஜானகி யேர்படியுன்னதனி
ஸ்ரீகாந்த பருலேலனி ஸ்ரீதியாகராஜ வினுத (உபசாரமு...)

------------------------------------------------------------------
வயலினில் பைரவி ஆலாபனை:
upacharamu-violin-...


பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் செவி இனிக்கும் அமுதக் குரலில்:
upacharamu-kjj.mp3



சஞ்சய் சுப்ரமணியம் பாடிட இங்கு கேட்கலாம்.

இந்தப் பாடலின் பைரவி ஆலாபனையை நாதஸ்வர வாசிப்பில் இங்கு கேட்டு நாத மழையினில் நனையலாம்.

Sunday, March 23, 2008

கே ஆர் எஸ் - கேடு கெடுத்தவர்

பதிவர் KRS - கே.ஆர்.எஸ் -
அவரைப் பற்றி நான் சொல்லும் ஏதும் புதிதாய் இருக்காது.
குன்றிலிட்ட விளக்கினை அறியாதவரும் உண்டோ?

கே ஆர் எஸ் - ஆம், கேடு கெடுத்தவர் - இவர்
ஆன்மீகத்திற்கு வரும் கேட்டினைக் கெடுத்தவர்.
எப்படி என்கிறீர்களா, இப்படித்தான்:

அண்ணல் இவர் பதிவில்தான் எத்தனை வகை -
எனினும் எதிலும் குன்றாது சுவை.
தாலாட்டும் பாடுவார் - துயில்
எழுப்பலும்
பாடுவார்.
அரங்கன் பதிவு மட்டுமல்ல ,
சிவராத்திரிப் பதிவும் இவரிடம் உண்டு.
இவர் பதிவுகளில்
ஆழ்வார் பாசுரம் ஏதும்
ஆச்சரியமல்ல - தியாகப் பிரம்மமே
தமிழில்
பாட்டிசைக்கும்போது!
திருமால் பாடல்களை தொகுப்பார் - அவன்
மருகன் முருகன் பாடல்களை வகுப்பார்.

இவர் வாசகர் வட்டத்தினை தன்பக்கம்
வசமாக கவர்ந்திழுக்கும் காந்தம்!
கவர்ச்சியான தலைப்புகளால்
வந்து விழுமே ஒராயிரம் பின்னூட்டம்!

புராணக் கதைகளோடு சேர்த்து
புதிரும் போடுவார் - உடன் வாசகரைத்
தேடவும் வைத்து தன்பக்கமே திருப்பிடுவார்.
இந்தக் கண்ணபிரானும் உன்னைத்
தேடவைத்தது என்னபிரானே?

புராணப்பதிவு மட்டுமல்ல,
புதுமைகளும் படைப்பவர்.
சீர்திருத்தம் தேவையென
சீர்குரல் கொடுப்பவர்.
சமூக விழிப்புணர்வை
சலிக்காமல் சொல்பவர்.
சிகுவையும் நகையும் சிந்தனையும்
சீராய்ப்பெற்ற செம்மல்.

ஆதவனாய் ஒளிவிடும் ரவிசங்கர்,
வாழ்க வளமுடன் - எங்கள்
பதிவுலக நெஞ்சங்களிலெல்லாம்.
சிறப்புகள் பல பெற்று ஒளிர்விட
எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கே!