Sunday, August 19, 2007

நிழற்படமா, ஒளிப் படமா?



ஒளிச்சேர்க்கையில்

வளர்ந்த இலைகள்

இப்போது இங்கே

ஒளியால் மிளிர

ஒளி பிடிப்பானில்

ஒரு நிமிடத்திற்குள்

'பிடித்ததை' பிடித்ததில்

நிழற்படமா, ஒளிப் படமா?



நிழலும் ஒளியும்

வெவ்வேறானாலும்

ஒன்றோடு ஒன்று

தொடர்பானதல்லவோ?

ஒளியில்லாமல் நிழலேது?



வெற்றியும் தோல்வியும்

உயர்வும் தாழ்வும்

மேன்மையும் சிறுமையும் கூட

நிழலும் ஒளியும் போலத்தான் -

இதை உணராத மனிதர்பால்தான்

எத்தனை மயக்கங்கள்?

Tuesday, August 14, 2007

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று!



ஆம், ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!

இந்த இனிய சுதந்திர தினத்தில் பாரதியின் பாடல்களில் மலர்ந்த -


ஒரு இனிய இசை நிகழ்ச்சி - மலரும் நினைவுகளாக மலரட்டும்.



மா-நிலத்தில் நம் பெருமை உயரட்டும்!



MahakaviBharathiSp...


விடுதலை வேள்வியில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியாக

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!



அனைவருக்கும் இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்!