ஒளிச்சேர்க்கையில்
வளர்ந்த இலைகள்
இப்போது இங்கே
ஒளியால் மிளிர
ஒளி பிடிப்பானில்
ஒரு நிமிடத்திற்குள்
'பிடித்ததை' பிடித்ததில்
நிழற்படமா, ஒளிப் படமா?
நிழலும் ஒளியும்
வெவ்வேறானாலும்
ஒன்றோடு ஒன்று
தொடர்பானதல்லவோ?
ஒளியில்லாமல் நிழலேது?
வெற்றியும் தோல்வியும்
உயர்வும் தாழ்வும்
மேன்மையும் சிறுமையும் கூட
நிழலும் ஒளியும் போலத்தான் -
இதை உணராத மனிதர்பால்தான்
எத்தனை மயக்கங்கள்?