| மகா காளியின் புகழ் | ||
| ராகம்-ஆனந்த பைரவி தாளம்-ஆதி காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது காளிசக்தி என்றபெயர் கொண்டு-ரீங் காரமிட்டு உலவுமொரு வண்டு-தழல் காலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும் கால்கள் ஆறுடையதெனக் கண்டு-மறை காணுமுனி வோருரைத்தார் பண்டு. மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி விணணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழ வேதமாய் அதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக வேண்டும் நித்தம் எந்தனேழை யுள்ளம் அன்புவடி வாகிநிற்பள் துன்பெலாம் அவளிழைப்பள் ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை-இதை ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண்டு உய்கை-அவள் ஆதியாய் அநாதியாய் கண்டவறி வாவளுன்தன் அறவுமவவள் மேனியிலோர் சைகை-அவள் ஆனந்தத்தின் எல்லை அற்ற பொய்கை. இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள் இஃதெலாம் அவள்புரியம் மாயை-அவள் ஏதுமற்ற மெய்ப் பொருளின் சாயை-எனில் எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம் எய்துவார்மெய்ஞ் ஞானமெனும் தீயை-எரித்த எற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை. ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான் அங்குமிங்கும் எங்குமுள வாகும்-ஒன்றே யாகினால் உலகனைத்தும் சாகும்-அவை அன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லை ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்த அறிவுதான் பரமஞான மாகும். நீதியாம் அரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர் நீண்டகாலம் வாழ்வர்தரை மீது-எந்த நெறியுமெய்துவர் நினைத்தபோது-அந்த நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத நீழலடைந் தார்க்கு இல்லையோர் தீது-என்றும் நேர்மைவேதம் சொல்லும்வழி யீது. மகாகளியின் புகழ் என்று தலைப்பிட்டு மகாகவி பாரதி வடித்த இந்த காவடிச்சிந்தினை இங்கே பாடிக் கேட்கலாம்: 1. எம்.எஸ் அம்மா 2. ராஜ்குமார் பாரதி ஆதியாய், ஆதியின் சோதியாய் அன்னையவள் இருப்பள்! பாதியாய் வேணியனின் மேனியதில் ஏகினாளோ! அங்கும் இங்கும் எங்கும் உள்ளாளே! எனினும் ஏதுமற்ற மெய்பொருளின் சாயையாமே! மெய்ஞானமென்று மேதினியில் இதனைச் சொல்வார்: சக்தியவள் இல்லாத பொருளுமில்லை. சக்தியவள் இல்லாமல் ஏதுமில்லை. இதையறியும் அறிவேதான் பரம ஞானமாகும்! எல்லாத் துயரமும் இதையறிந்தால் இல்லாமல் ஆகும். | ||
Sunday, December 04, 2011
மெய்ப்பொருளின் சாயை
Monday, November 21, 2011
தில்லை விளாகம்
திருவாரூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தில்லைவிளாகம் திருத்தலம். இங்கே அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் தெய்வீகப் பொலிவுடன் திகழும் இராம விக்ரகம் - மிகவும் பிரசித்தம். தில்லைச் சிதம்பரத்தில் நடராஜரோடு சேர்ந்து கோவிந்தராஜருக்கும் சன்னிதி இருப்பதுபோல, இங்கு நடராஜருக்கு சந்நிதி உண்டு. இத்தலத்திற்கு "ஆதி தில்லை" என்றும் பெயருண்டு.
"ராம சரம்" என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் "தில்லை சித்ரகூடம்" என இத்தலம் வழங்கப்படும்.
என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் "தில்லை சித்ரகூடம்" இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.
"எம்பார்" கோவிந்த தாசர், இராமனுஜருடைய "திருவடி நிழல்"(இராமனுஜ கோவிந்த தாசர்) எனப்பெயர் பெற்றவர். "சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை", "மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை"ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.
இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்
பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே
அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை
சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை
"ராம சரம்" என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் "தில்லை சித்ரகூடம்" என இத்தலம் வழங்கப்படும்.
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னைஎல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறாகொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்தநல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.
என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் "தில்லை சித்ரகூடம்" இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.
"எம்பார்" கோவிந்த தாசர், இராமனுஜருடைய "திருவடி நிழல்"(இராமனுஜ கோவிந்த தாசர்) எனப்பெயர் பெற்றவர். "சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை", "மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை"ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.
இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்
பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே
அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை
சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை
Subscribe to:
Posts (Atom)
