ஓம்கார நாதத்தின் உச்சரிப்பு பற்றி பதஞ்சலி தன் யோக சூத்திரத்தில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?
ஓ+ம் = ஓம்
’ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டாதகவும் இருக்க வேண்டும்.
ஓம், ஓம், ஓம்,… என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம்.
ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.
இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு.
மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், வெகு சீக்கிரமாக தாங்கள் எண்ணத்தில் நிறுத்திய பொருள் அல்லது இஷ்ட தேவதையினை மனதில் ஒருமுகப்படுத்தும் சித்தி கிடைக்கும். வேறு மாற்று சிந்தனைகள் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கவிடாமல் நெருங்கிய பொருள் கைக்கிடைக்கும். அந்த நெருங்கிய பொருள் நீங்கள் யாரென்ற தன்னறிவானால், மீளாத் துயர்களில் இருந்து விடுதலை பெறும் பாதை உங்கள் கையில்!
Friday, December 08, 2006
Sunday, November 19, 2006
பாதி மதி நதி...
சமீபத்தில் கேட்ட திருப்புகழ் பாட்ல்.
கேட்ட பொழுது முதல் நெஞ்சை விட்டு நீங்கா பாடல்.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.
பாடல் வரிகள்:
(பாடல் வரிகள் சீர்களாக அல்லாமல் படிப்பதற்கு எளிதான சொற்களாக)
பாதி மதி நதி போதும் அணி சடை
நாதன் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காதும் ஒருவிழி காகம் உற
அருள் மாயன் அரி(ஹரி) திரு மருகோனே
காலன் எனை அணுகாமல்
உனதிரு காலில் வழிபட அருளாயே
ஆதி அயனோடு தேவர்
சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினில் ஏறி
அமரர்கள் சூழவலம்வர வரும் இளையோனே
சூத மிகவளர் சோலை மருவும்
சுவாமிமலைதனில் உறைவோனே
சூரன் உடல் உற வாரி சுவரிட
வேலை விடவல பெருமாளே.
பாடலைக் கேட்க
கேட்ட பொழுது முதல் நெஞ்சை விட்டு நீங்கா பாடல்.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.
பாடல் வரிகள்:
(பாடல் வரிகள் சீர்களாக அல்லாமல் படிப்பதற்கு எளிதான சொற்களாக)
பாதி மதி நதி போதும் அணி சடை
நாதன் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காதும் ஒருவிழி காகம் உற
அருள் மாயன் அரி(ஹரி) திரு மருகோனே
காலன் எனை அணுகாமல்
உனதிரு காலில் வழிபட அருளாயே
ஆதி அயனோடு தேவர்
சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினில் ஏறி
அமரர்கள் சூழவலம்வர வரும் இளையோனே
சூத மிகவளர் சோலை மருவும்
சுவாமிமலைதனில் உறைவோனே
சூரன் உடல் உற வாரி சுவரிட
வேலை விடவல பெருமாளே.
பாடலைக் கேட்க
Subscribe to:
Posts (Atom)